The post ரஷ்யா செல்லும் விஜய்! appeared first on Touring Talkies.
]]>வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட கடைசிகட்டத்தை எட்டியுள்ளது.தி கோட் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட்டன.
தி கோட் படப்பிடிப்பிற்காக கேரளா திருவனந்தபுரத்திற்கு சென்ற நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அங்கு அவர் செல்லும் இடமெல்லாம் அன்பு மழை பொழிந்தனர்.பதிலுக்கு அவரும் அடிக்கடி தன்னை காண வரும் ரசிகர்களுக்கு மத்தியில் பேசி தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் ரஷ்யா செல்ல இருக்கிறார். ரஷ்யாவில் ஏப்ரல் 7ம் தேதி முதல் 17 தேதி வரை தி கோட் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்புகள் நடக்கின்றன.அதேசமயம் ஏப்ரல் 19ம் தேதி முதல் பாரளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்ப திட்டமிட்டுள்ளார்.
The post ரஷ்யா செல்லும் விஜய்! appeared first on Touring Talkies.
]]>The post அன்று பணப்பையோடு கெத்தாக சென்றவர் 13 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி – யாஷ்மின் பொன்னப்பா… appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆரண்ய காண்டம். இவருடைய இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், சம்பத், குரு சோமசுந்தரம் ஆகியோருடன் யாஸ்மின் பொன்னப்பாவும் நடித்திருப்பார். திரைப்படத்தின் இறுதியில் கிளைமாக்ஸ் கட்சியில் கெத்தாக பணப்பையுடன் சென்ற அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை கண்ட பலரும் நிச்சயமாக கோலிவுடில் இவர் வலம் வருவார் என எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் போனார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் எங்கேயும் செல்லவில்லை காணாமல் போனவர்கள் பட்டியலில் என்னை சேர்க்காதீர்கள் என்னுடைய சொந்த ஊர் பெங்களூரில் தான் நான் இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த வேலைகளை செய்து செய்து கொண்டிருந்தேன் நான் ஒரு யோகா டீச்சர் என்று பதில் அளித்தார். நான் பெங்களூரில் யோகா சென்டர் நடத்துகிறேன் நான் எப்போதும் அங்கு மிகவும் பிசியாகவே இருந்து விட்டேன் இதிலேயே 13 வருடங்கள் கடந்து விட்டது.
கடைசியாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததோடு பிறகு ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, நான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு கதை பிடித்திருக்க வேண்டும். என்னை தேடி எனக்கு பிடித்தது போல் எந்த எந்த கதையும், கதாபாத்திரமும் வரவில்லை அப்படி தேடி வருபவர்கள் எல்லாம் ஆரண்ய காண்டத்தில் நடித்த அதே மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றார்கள் ஆனால் அது ஒரு கிளாசிக் படம் மீண்டும் அதே போல எடுத்தாலும் அதன் அந்த அளவிற்கு அதே உயரத்தை எட்ட இயலாது எனவே நான் மறுத்து விட்டேன்.
கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் ரீ என்ட்ரி கொடுக்க காரணம் என்று கேள்வி எழுப்பிய போது, இடி மின்னல் காதல் என்ற படத்தில் இயக்குனர் பாலாஜி மாதவன் என்னை நடிக்க கேட்டிருந்தார் ஆனால் நான் முதலில் முடியாது என்று மறுத்து விட்டேன் ஆனால் அவர் என்னை நேரில் தேடி வந்து முழு கதையும் கூறினார் பிறகு எனக்கு அந்த கதையின் மீது ஈர்ப்பு இருந்தது எனக்கு பிடித்திருந்தது அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டேன். புதிய தலைமுறைய இயக்குனர்கள் புதிய குழுவுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் தனியாக தெரியும் என்று நம்புகிறேன் என்றார்.
தமிழ் சினிமாவில் தற்போது உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டபோது, நான் சொல்ல ஆரம்பித்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகும் குறிப்பாக விஜய் சேதுபதி நன்றாக நடிக்கிறார் அவர் மிகவும் டேலண்ட் ஆனவர் என கூறினார்.
ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு நீங்கள் காணாமல் போனது போல இந்த படத்திற்கு பிறகும் காணாமல் போய்விடுவீர்களா என்ற கேள்விக்கு, அப்படி இல்லை இனிமே சினிமா ஸ்கிரீன்கள் வழியாக நான் கண்டிப்பாக உங்களுக்கு தென்பட்டுக் கொண்டே இருப்பாள் என்றால் யாஸ்மின் பொன்னப்பா. இந்த இடி மின்னல் காதல் படம் செகண்ட் இன்னிங்ஸ் தான் என்று தெரிவித்துள்ளார்.
The post அன்று பணப்பையோடு கெத்தாக சென்றவர் 13 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி – யாஷ்மின் பொன்னப்பா… appeared first on Touring Talkies.
]]>The post சினிமா இந்த வாரம்! விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? appeared first on Touring Talkies.
]]>பிரபலமான தமிழ் நடிகர்கள், தமிழ்ப்பட இயக்குனர்களை விடுத்து பெரும்பாலும் தெலுங்கு பட தயரிப்பாளர்களுக்கு தான் படம் பண்ணுகிறார்கள் என்ற கேள்விக்கு, தமிழ் சினிமாவின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்து உள்ளது அதுமட்டும் இன்றி தமிழ் நடிகர்களை எளிதாக அணுகமுடிகிறது என்றார் G.தனஞ்செயன்.
அதே போல விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்விக்கு இவ்விரு திரைப்படங்களும் வருகின்ற…மேலும் அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடியூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்…
The post சினிமா இந்த வாரம்! விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? appeared first on Touring Talkies.
]]>The post ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>ஆர்ஆர்ஆர் ராஜமெளலி இயக்கத்தில் மிகப்பெரிய படமாக அமைந்தது.அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து ஆஸ்கார் வரை சென்று அசத்தினார் ராம் சரண்.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் ராம் சரண் தனது 16வது படத்தினை துவங்கியுள்ளார்.ராம் சரணின் ஒவ்வொரு படமும் பிரமாண்டமாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன்.துருவா முதல் மகதீரா, ஆர்ஆர்ஆர் என அத்தனை படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தான்.
தெலுங்கு மொழியில் 2018-ல் ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா தான் இந்த RC16 படத்தினை இயக்கவுள்ளார். விஜய்சேதுபதி, க்ரித்தி ஷெட்டி நடித்த உப்பென்னா படத்தை இயக்கியவரும் இவர்தான்.இரண்டாவது முறையாக ராம் சரண் உடன் கைக்கோர்க உள்ளார் இயக்குனர் புச்சி பாபு சனா.இந்த படத்தில் ஜான்வி கபூர் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.படப்பிடிப்பு பூஜையில் கலந்து கொண்ட ராம்சரண் மற்றும் ஜான்வி கபூர் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசையமையப்பாளராகவும் இந்த RC16 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க தேர்வு செய்திருக்கின்றனர். விரைவில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படம் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு பூஜையின் போது சிறு புன்னகையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
The post ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜாவாக தனுஷ்? இன்று வெளியாகும் அந்த அப்டேட்… appeared first on Touring Talkies.
]]>1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் துவங்கிய இசை பயணம் 1500 படங்களை தாண்டி இசையமைத்து இசைமணம் வீச செய்து கொண்டு இருப்பவர் தான் இவர். பட்டிதொட்டி முதல் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மனதிலும் இன்றும் இசை ராஜாவாக உள்ளவர் தான் இளையராஜா. பத்ம பூசன் மற்றும் பத்ம விபூசண் என பல விருதுகளை அள்ளியவர். காலம் கரைந்தாலும் அவரின் இசை கரைந்ததாய் சரித்திரம் இல்லை.இளைஞர்களின் இசை ராஜா இன்றுவரை இளையராஜா தான்.
இந்நிலையில் இவர்கடந்து வந்த பாதையை மையமாக கொண்டு இந்த பயோபிக் உருவாகும் என்றும் இதை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.பிரபல பாலிவுட் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தனுஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு வயலின் புகைப்படத்தோடு அற்புத பயணம் தொடக்கம் என்றும் இன்று மதியம் 12.30 அளவில் அறிவிப்பு வெளியாகும் என பதிவு ஒன்றை வெளியிட்டார். இப்பதிவு வெளியானது முதல் இளையராஜா ரசிகர்களும் மற்றும் தனுஷ் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளார்கள். நடிகர் தனுஷ் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post இளையராஜாவாக தனுஷ்? இன்று வெளியாகும் அந்த அப்டேட்… appeared first on Touring Talkies.
]]>