The post ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் உருவான கதை… பாடல் கொடுக்காமல் தாமதம் செய்த யுவன்… appeared first on Touring Talkies.
]]>பில்லா படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இருந்தது அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “மை நேம் இஸ் பில்லா” பாடல் தான். ஆனால் அந்த பாடல் உருவான விதம் தான் பலரையும் வியக்க வைத்தது என்றால் மிகையாகாது. அதாவது நாளைக்கு பாடலுக்கான படபிடிப்பு என்றால் அதற்கான செட்டெல்லாம் போட்டு தயாராக இருந்த நிலையில் யுவன் இந்த பாடலை கொடுக்காமல் காலம் தாழ்த்தி இருக்கிறார்.
இதைக் கண்டு விஷ்ணுவர்தன் பாடல் எங்கே என்ன ஆச்சு என்று கேட்டுள்ளார்.அதற்கு யுவன் “இதோ வந்துடும்” என்று சொல்லியே கடைசி வரை பாடலை கொடுக்கவே இல்லையாம். அதனால் அந்த பாடல் இல்லாமலேயே அந்த பாடல் காட்சியை விஷ்ணு படமாக்கியுள்ளார்.இதற்கு டான்ஸ் மாஸ்டர் கல்யாண் எப்படி மியூசிக் இல்லாமல் டான்ஸ் ஆட வைப்பது என்று கேட்டு தயங்கியிருக்கிறார்.
விஷ்ணுவர்தன் அஜித்துக்காக யோசித்த ஸ்டைலை மியூசிக் இல்லாமல் அஜித்தை வைத்து எடுத்து விட்டாராம். அதற்குப் பிறகு யுவன் துண்டு துண்டாக பாட்டை அனுப்ப இதை பார்த்த அஜித் என்ன விஷ்ணு இது என்று கேட்டிருக்கிறார், அதற்கு விஷ்ணு சார் இன்னும் பாடல் ரெடி ஆகல என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அஜித் சரி ஓகே பரவாயில்லை என்று சொல்ல இப்படியே துண்டு துண்டாக அந்த பாடல் காட்சியை எடுத்து படமாக்கினார்களாம். ஆனால் திரையில் பார்க்கும்போதுதான் அந்த பாடலுக்கு எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சி கொண்டுள்ளார் விஷ்ணுவர்தன்.
The post ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் உருவான கதை… பாடல் கொடுக்காமல் தாமதம் செய்த யுவன்… appeared first on Touring Talkies.
]]>The post கதையே கேட்காமா இந்த படத்துல கமிட்டானேன்… கவர்ச்சி உடையில் வந்து கவர்ந்த ராஷி கண்ணா – அரண்மனை 4 ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி appeared first on Touring Talkies.
]]>ராஷி கண்ணா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு போன்றோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மே 3 அன்று வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு தொடர்ந்து பிரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு ரசிகர்களை கவரும் விதமாக பிரமோஷன் நடத்தப்பட்டது.
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தமன்னா ஹோம்லியாக சேலை அணிந்து கலந்துகொண்டார். ஆனால், ராஷி கண்ணா கவர்ச்சியான உடையில் வந்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தார். அவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் பேசிய ராஷி, அரண்மனை 4 படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், அதனால் கதை பற்றி எதுவும் கேட்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். மேலும், இந்தப் படம் சிறப்பான கொண்டாட்டமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post கதையே கேட்காமா இந்த படத்துல கமிட்டானேன்… கவர்ச்சி உடையில் வந்து கவர்ந்த ராஷி கண்ணா – அரண்மனை 4 ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி appeared first on Touring Talkies.
]]>The post ஒற்றை போஸ்டர் சொல்லும் கதை என்ன? வெப்பம் குளிர் மழை! appeared first on Touring Talkies.
]]>அதில் அவர், என் படத்தின் முக்கிய மைய கருத்தே குழந்தையின்மை தான். இந்த பிரச்சனை பல வருடங்களாக நடந்து வருகிறது. ஒரு கட்டத்திலே நம் குழந்தை நாம் நமக்காக பெரும் குழந்தையா? அல்லது சமுதாயம் கொடுக்கும் நெருக்கடியால் நாம் பெற்றுக் கொள்ளும் குழந்தையா என ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடுகிறது. இப்படிப்பட்ட நெருக்கடிகளை கலைத்தாலே திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் என கூறினார்.
மேலும் என் பூர்வீகம் சிவகங்கை, தேவகோட்டை அருகே பள்ளி படிப்பு முடித்து லயோலா கல்லூரியில் முதுகலை படிப்பை முடித்தேன். பிழைப்புக்காக சென்னை வந்த குடும்பம் தான் என் குடும்பம்.வெப்பம் குளிர் மழை படத்தின் சிவகங்கையில் படப்பிடிப்பை நடத்தினோம்.
படிப்பை முடித்து எழுத்து மீது ஆர்வம் வந்து கதை எழுதி ஒரு குறும்படம் இயக்கினேன். கதை மட்டுமே எழுத தெரிந்த எனக்கு வேறு எதுவும் தெரியாது.அப்பொழுது தான் குற்றம் கடிதல் படத்தில் டைரக்டர் பிரம்மாவிடம் துணை இயக்குனராகவும் மற்றும் மகளிர் மட்டும் 2 படத்திலும் வேலை செய்தேன். இப்போது வெப்பம் குளிர் மழை படத்தை இயக்கி உள்ளேன் விரைவில் வெளியாகவுள்ளது.
எப்படி மழை பெய்ய இயற்கை முக்கியமானதாக உள்ளதோ அப்படித்தான் குழந்தை பேர் என்பதிலும் இயற்கை முக்கியமானதாக உள்ளது,என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் எந்தவொரு மருத்துவ அரசியலையும் வாழ்க்கைமுறையை குறை சொல்ல முன்வரவில்லை. குழந்தை பெறுவது என்பதை நெருக்கடியாக மாற்றி சமுதாயத்திற்கானதாக மாற்றுவது என்பதை நிறுத்தினால் தான் இங்கு சமூக மாற்றம் நிகழும்.வெளிநாடுகளிலும் இதே பிரச்சனை இருக்கிறது இதைப்பற்றி அழுத்தமாக வலிமையாக பேசும் படம் தான் இந்த வெப்பம் குளிர் மழை என கூறினார்.
The post ஒற்றை போஸ்டர் சொல்லும் கதை என்ன? வெப்பம் குளிர் மழை! appeared first on Touring Talkies.
]]>The post படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல் appeared first on Touring Talkies.
]]>ஒரு இடத்துல ஒரு கார் விபத்து நடக்குது அதை சுத்தி நடக்குற சம்பவம் எல்லாமும் தான் படத்தோட கதையா இருக்கு.இந்த கதையோட மையமா ஆறு கேரக்டர் இருக்கும். அந்த ஆறு பேருமே இந்த விபத்துனால பாதிக்கப்பட்டவங்களா இருப்பாங்க ஏதோ ஒரு விதத்துல. இந்த ஆறு பேர சுத்தி தான் கதை ஓடும். ஒரு வாரத்துல நடக்குற கதைதான் இந்த இடி மின்னல் காதல் படம். நவம்பர் 7ஆம் தேதி ஆரம்பிக்கிற கதை 14ஆம் தேதி முடியுது ஆனால் அப்படி தேதி படியே கத போகாது என்றார்.
எல்லாருக்கும் நல்லாவே தெரிஞ்சா பிக் பாஸ் சிபி, அப்புறம் ஜோ படத்துல நடிச்சிருந்த பவ்யா த்ரிகா, ஆரண்ய காண்டம் யாஸ்மின், பாலாஜி சக்திவேல், ராதா ரவி, ஜெகன் இந்த ஆறு பேரும் தான் அந்த ஆறு விதமான கேரக்டர். சிபி இந்த படத்துல ஹீரோவா நடிச்சிருக்காரு ஆனா அவர் என்னவா நடிச்சிருக்காரு அப்டின்றது தான் இந்த படத்துல இருக்குற சஸ்பென்ஸ்.
இவருக்கு அப்புறம் பவ்யா ஆர்கிடெக் அப்படி என்ற கேரக்டர்லயும், பல வருடங்களுக்கு அப்புறம் ஆரண்ய காண்டம்ல நடிச்சிருந்த யாஸ்மின் நடிச்சு இருக்காங்க, அவங்களுக்கு இது இரண்டாவது படம். இவங்க ஹீரோவோட பக்கத்து வீட்டுக்காரராவும், ஹெட் கான்ஸ்டபிளா பாலாஜி சக்திவேல், சர்ச் பாதராக ராதாரவி, ஜெகன் வந்து மெக்கானிக்காகவும், கயல் படத்தில நடிச்ச வின்சென்ட் தான் இந்த படத்தோட வில்லன் ரோல். இவங்க கூட ஒரு குட்டி பையனும் நடிச்சிருக்கான் அவன் பெயர் தான் ஆதித்யா.
இந்த கதையில பார்த்தீங்க அப்படின்னா சென்னையில் தான் முழுசா இந்த கதை நடக்குது. வல்லநாடு மலையிலிருந்து வில்லன் குரூப் ஒன்னு சென்னைக்கு வராங்க.சென்னையில போர் நினைவுச்சின்னம் இருக்கிற இடம் தான் முக்கியமான ஸ்பாட்டா இந்த கதையில இருக்கும். அந்த ரவுண்டானால தான் கார் விபத்து நடக்குது இதுவரைக்கும் எந்த படத்தோட ஷூட்டிங்ம் இந்த இடத்துல நடந்தது இல்ல ஆனா நாங்க இராணுவத்துகிட்ட எந்த அளவுக்கு விதத்தில இந்த கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் விளக்குனதுக்கு அப்புறம் தான் ராணுவம் அனுமதி கொடுத்தாங்க….
சுவாரசியமா இருக்கிற விஷயம் இந்த படத்துல என்னன்னா, ஆறு கேரக்டருமே ஆடியன்சை ஈசியா எமோஷன்ஸ கனெக்ட் பண்ணிடுவாங்க. எல்லாமே ஒன்னோடு ஒன்னு சேருரப்ப இது ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும் அதனால தான் இந்த படத்துக்கு இடி மின்னல் காதல் டைட்டில். ஆண் பெண் காதல் அப்படினு மட்டும் இல்லாம ஒட்டுமொத்தமா மனுஷங்க மேல இருக்கிற காதலை சொல்லி இருப்போம் மனிதநேயத்தை பத்தி கண்டிப்பா இந்த படம் பேசும் உணர்த்துர விதமாக இருக்கும் என தெரிவித்தார் .
அவரின் திரைப்பயணத்தை பற்றி கேட்டபோது, நான் இயக்குனர் மிஷ்கின் கிட்ட தான் முதன் முதலில் சேர்ந்து அவரோட 4 வருஷம் வர்க் பண்ணேன். அப்புறம் கோ டைரக்டரா ‘ரிச்சி’ அப்டின்ற படத்துல வொர்க் பண்ண அதுக்கப்புறம் சாய்பல்லவி நடிச்ச ‘கார்கி’ படத்துல ஸ்கிரிப்ட் ரைட்டிங் டீம் ஓட வேல செஞ்சேன் .அது மட்டும் இல்லாம மாதவன் சார் ஓட ராக்கெட் படத்துல அசோசியேட் டைரக்டர் வொர்க் பண்ணி தமிழ் இங்கிலீஷ் வெர்சனுக்கு இன்சார்ஜ் நான் இருந்தேன். இப்போ இயக்குனரா ஆக கரெக்ட்டான சந்தர்ப்பம் கிடச்சது நானும் கேமரா மேன் ஜெயச்சந்திரன் சேர்ந்து தான் இந்த இடி மின்னல் காதல் படத்தை தயாரிச்சிருக்கோம் என்று பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பாலாஜி மாதவன்.
The post படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல் appeared first on Touring Talkies.
]]>