The post தலைவர் 171 மற்றும் கைதி 2 லோகேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்! appeared first on Touring Talkies.
]]>இனிமேல் பாடலை அற்புதமாக பாடி இயக்கியுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த பாடலுக்கு வரிகளை எழுதிய கமலஹாசன் இப்பாடலை தயாரித்தும் உள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வெற்றி படைப்புகளை தொடர்ந்து இனிமேல் இப்பாடலில் நடித்துள்ளது தொடர்ந்து வியப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
விஜய்யின் லியோ படத்தை வெற்றிகரமாக இயக்கி வெளியிட்டதை தொடர்ந்து ரஜினியின் தலைவர்171 மற்றும் கார்த்தியின் கைதி2 போன்ற படங்களை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். தலைவர்171 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இனிமேல் பாடலின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது.ரசிகர்கள் பலரும் டீசரை கண்டு லோகேஷ்க்குள் இப்படி ஒரு ரொமான்டிக் நடிப்பு இருக்கிறதா என வியந்து இருந்தனர்.ஸ்ருதிஹாசனுக்கும் லோகேஷ் கனகராஜ்-க்கும் நல்லதொரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றனர்.
இனிமேல் பாடல் நேற்று வெளியான நிலையில் பாடல் வெளியீட்டிற்கு பிறகு லோகேஷ் கனகராஜ்-ம் ஸ்ருதிஹாசன்ம் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ் வருகின்ற ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக நான்கு முதல் ஐந்து மாதங்களை தாங்கள் எடுத்துக் கொண்டதாக கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒன்றரை ஆண்டுகள் நடக்கவுள்ளதாகவும் தலைவர் 171 படத்தின் சூட்டிங் நிறைவடைந்த ஒரே மாதத்தில் கைதி 2 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.இந்த அப்டேட்-ஐ கேட்டது முதல் ரசிகர்கள் உற்சாகத்தில் காத்திருக்கின்றனர்.
The post தலைவர் 171 மற்றும் கைதி 2 லோகேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்! appeared first on Touring Talkies.
]]>The post அன்று பணப்பையோடு கெத்தாக சென்றவர் 13 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி – யாஷ்மின் பொன்னப்பா… appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆரண்ய காண்டம். இவருடைய இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், சம்பத், குரு சோமசுந்தரம் ஆகியோருடன் யாஸ்மின் பொன்னப்பாவும் நடித்திருப்பார். திரைப்படத்தின் இறுதியில் கிளைமாக்ஸ் கட்சியில் கெத்தாக பணப்பையுடன் சென்ற அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை கண்ட பலரும் நிச்சயமாக கோலிவுடில் இவர் வலம் வருவார் என எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் போனார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நான் எங்கேயும் செல்லவில்லை காணாமல் போனவர்கள் பட்டியலில் என்னை சேர்க்காதீர்கள் என்னுடைய சொந்த ஊர் பெங்களூரில் தான் நான் இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த வேலைகளை செய்து செய்து கொண்டிருந்தேன் நான் ஒரு யோகா டீச்சர் என்று பதில் அளித்தார். நான் பெங்களூரில் யோகா சென்டர் நடத்துகிறேன் நான் எப்போதும் அங்கு மிகவும் பிசியாகவே இருந்து விட்டேன் இதிலேயே 13 வருடங்கள் கடந்து விட்டது.
கடைசியாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததோடு பிறகு ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, நான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு கதை பிடித்திருக்க வேண்டும். என்னை தேடி எனக்கு பிடித்தது போல் எந்த எந்த கதையும், கதாபாத்திரமும் வரவில்லை அப்படி தேடி வருபவர்கள் எல்லாம் ஆரண்ய காண்டத்தில் நடித்த அதே மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றார்கள் ஆனால் அது ஒரு கிளாசிக் படம் மீண்டும் அதே போல எடுத்தாலும் அதன் அந்த அளவிற்கு அதே உயரத்தை எட்ட இயலாது எனவே நான் மறுத்து விட்டேன்.
கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் ரீ என்ட்ரி கொடுக்க காரணம் என்று கேள்வி எழுப்பிய போது, இடி மின்னல் காதல் என்ற படத்தில் இயக்குனர் பாலாஜி மாதவன் என்னை நடிக்க கேட்டிருந்தார் ஆனால் நான் முதலில் முடியாது என்று மறுத்து விட்டேன் ஆனால் அவர் என்னை நேரில் தேடி வந்து முழு கதையும் கூறினார் பிறகு எனக்கு அந்த கதையின் மீது ஈர்ப்பு இருந்தது எனக்கு பிடித்திருந்தது அதனால் நான் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டேன். புதிய தலைமுறைய இயக்குனர்கள் புதிய குழுவுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் தனியாக தெரியும் என்று நம்புகிறேன் என்றார்.
தமிழ் சினிமாவில் தற்போது உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேட்டபோது, நான் சொல்ல ஆரம்பித்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகும் குறிப்பாக விஜய் சேதுபதி நன்றாக நடிக்கிறார் அவர் மிகவும் டேலண்ட் ஆனவர் என கூறினார்.
ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு நீங்கள் காணாமல் போனது போல இந்த படத்திற்கு பிறகும் காணாமல் போய்விடுவீர்களா என்ற கேள்விக்கு, அப்படி இல்லை இனிமே சினிமா ஸ்கிரீன்கள் வழியாக நான் கண்டிப்பாக உங்களுக்கு தென்பட்டுக் கொண்டே இருப்பாள் என்றால் யாஸ்மின் பொன்னப்பா. இந்த இடி மின்னல் காதல் படம் செகண்ட் இன்னிங்ஸ் தான் என்று தெரிவித்துள்ளார்.
The post அன்று பணப்பையோடு கெத்தாக சென்றவர் 13 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி – யாஷ்மின் பொன்னப்பா… appeared first on Touring Talkies.
]]>The post கல்யாணம் ஆனவருக்கு கூட ரொமான்ஸ்ஸா நடிச்சது தயக்கம் இல்லையா? பிரேமலு மமிதா பைஜூ Open Talk!!! appeared first on Touring Talkies.
]]>பிரேமலு கேரளாவை தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஹிட் கொடுத்ததால் தமிழிலும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இப்பட ஹீரோயின் மமிதா பைஜூ துருதுருவென இருக்கும் இவர் சரசரவென மூன்று மாநில இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார்.
சென்னை வந்த கேரளத்து தேவதை பேட்டி அளித்த போது, தமிழ் நாட்டில் பிரேமலு படம் இந்த அளவுக்கு கொண்டாடப்படும் என்று நினைத்தீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லவே இல்லை, நாங்கள் கேரளாவில் ஹிட் கொடுக்கும் என்று நினைத்தோம். தமிழ்நாட்டில இந்த படத்த பத்தி சுத்தமா ஐடியாவே இல்லை. ஆனா தமிழ்நாட்டில் இருக்கிற மலையாள மக்களுக்காக சில ஸ்கிரீன்ல மட்டும் ரிலீஸ் ஆச்சு.ஆனா என்னாச்சு பாருங்க படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆகியும் தமிழ்நாட்டிலேயும் சரி கேரளாவுலையும் ஹவுஸ் ஃபுல்லா படம் ஓடிட்டு இருக்கு.இதெல்லாம் பாக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
பிரேமலு பட வெற்றில நீங்க என்ன கத்துக்கிட்டிங்க ?
ஏற்கனவே சூப்பர் சரண்யா படத்துல நானும் இந்த படத்தோட ஹீரோ நஸ்லனும் நடிச்சிருக்கோம் இந்த படத்த இயக்குனதும் இதே பிரேமலு டைரக்டர் க்ரிஷ் எ.டி தான்.இந்த படம் ஷூட் பண்ண ஆரம்பிக்கும் போது டெக்னீசியன் என எல்லாரும் ஃபேமிலி மாதிரி ஆயிட்டோம். இந்த படம் ஹிட் ஆகணும்னு குடும்பமா நினைச்சோம் உழைச்சோம் ஹிட் ஆகிடுச்சு…
முன்னாடியே தமிழ் படத்துல நடிக்கிற ஆசை இருந்ததா? சேன்ஸ் கிடச்சதுனால ரிபெல் படத்துல நடிச்சீங்களா?
தமிழ் படத்துல நடிக்கணும் ஆசை முன்னாடியே இருந்துச்சு. எனக்கு தமிழ் மொழியும் தமிழ் படங்களும் ரொம்ப பிடிக்கும். குடும்பமா உக்கார்ந்து மலையாள படங்கள் எந்தளவுக்கு பக்குறோமே அதே அளவுக்கு தமிழ் படங்களையும் பாப்போம்.சூர்யா விஜய் தனுஷ் அஜித் ஹீரோயின்ல அசின் ரொம்ப பிடிக்கும். அப்புறம் நயன்தாரா இவர்கள் எல்லாம் பார்க்கும் போது தமிழ் உலகத்துல நடிக்கணும் ஆசை சின்ன வயசுலயே வந்துடுச்சு. தமிழ் படத்துல நடிக்கணும் நான் ஆசைப்பட்டேன் சான்ஸ் கிடைக்குமான்னு எதிர்பார்த்தேன் அதுக்கேத்த மாதிரி சான்ஸ் கிடைச்சிருச்சு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.
உங்க முதல் தமிழ் படத்தோட எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சு?
எல்லாரும் என்ன கம்ஃபர்டபிளா பாத்துகிட்டாங்க. டைரக்டர் நிதேஷ்க்கு இது முதல் படமாக இருந்தாலும் அவரு ரொம்ப மெச்சூர்டா எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற அளவுக்கு நல்லா நடந்து கொண்டாரு. காலேஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏகப்பட்ட பேர் இருந்தாங்க எல்லாரையும் பயங்கர குல ஹேண்டில் பண்ணார். இந்த படத்துல நான் இருந்து மலையாள பொண்ணாவே நடிச்சிருக்கறதுனால எனக்கு மொழி பிரச்சனையும் இல்லை தமிழ்ல பேசும்போது மலையாள டச் இருந்தா பிரச்சினை இல்லனு சொன்னதுனால ஷூட்டிங் ஸ்பாட் நல்லாவே போச்சு.
ஜி.வி யோட ஒன்னா நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு? கல்யாணம் ஆனவருக்கு கூட ரொமான்ஸ்ஸா நடிச்சது எதும் தயக்கம் இல்லையா?
நான் ஜி.வி.யோட மிகப்பெரிய ரசிகை அவரோட மியூசிக் ரொம்ப பிடிக்கும் குறிப்பா சொல்லனும்னா அவருடைய எமோஷனல் பாடல் பிஜிஎம் இன்னும் முடியுமா சொல்லணும்னா பிறை தேடும் இரவிலே பாட்டு என்னோட ஆல் டைம் ஃபேவரைட் ‘வாவ் என்ன வாய்ஸ்’ எனக்கு எமோஷனலா எப்போதுமே கனெக்ட் ஆகுற பாட்டு. அப்புறம் திரிஷா இல்லனா நயன்தாரா படத்துல கயல் ஆனந்தியை பார்க்கும்போது ஒரு பிஜிஎம் வரும் அந்த பிஜிஎம் திருப்பி திருப்பி கேட்பேன். ஜஸ்ட் நடிப்பு தானே அதுனால தயக்கம் இல்லை. ஜிவி. நல்ல மனுஷன் என்ன கம்ஃபர்டபிளா இருக்க வச்சாரு.அவர் சமூக விஷயங்களுக்காக குரல் கொடுக்கிறது எல்லாம் மிகப்பெரிய விஷயம் என்றார்.
The post கல்யாணம் ஆனவருக்கு கூட ரொமான்ஸ்ஸா நடிச்சது தயக்கம் இல்லையா? பிரேமலு மமிதா பைஜூ Open Talk!!! appeared first on Touring Talkies.
]]>The post விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>“மூத்த நடிகை தேனி குஞ்சரம்மாள் இறந்தபோது, இறுதிச் சடங்கை செய்வதற்கு கூட காசு இல்லாமல் குடும்பத்தினர் தவித்தனர். இந்தத் தகவல் விஜயகாந்துக்கு தெரிய வந்தது. உடனே அவர், என்னை அழைத்து 10000 ரூபாயை கையில் கொடுத்தார். குஞ்சரம்மாளின் மகளிடம் இதைக் கொடுத்து வா என்றார். அதைவிட முக்கியமாக, இந்த விசயம், யாருக்கும் தெரியக்கூடாது என்றார். இதுவரை இந்த விசயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் இப்போது நெகிழ்ச்சியில் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.
The post விஜயகாந்த் செய்த அந்த உதவி! நெகிழ்ச்சியான சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>