The post வெளியானது தேவாரவின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள்! appeared first on Touring Talkies.
]]>ஜூனியர் என்.டி.ஆர் நடித்துவரும் 30-வது படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்திற்கு “தேவரா பாகம்-1” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து உள்ளார். இதில் ஜான்வி கபூர், சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
அதோடு, படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “Fear Song” என்ற இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார் மற்றும் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “தேவரா பாகம்-1” திரைப்படம் வரும் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
The post வெளியானது தேவாரவின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள்! appeared first on Touring Talkies.
]]>The post இந்தியன் 2 படத்தில் காத்திருக்கும் இந்தியன் 3 சர்ப்ரைஸ்! என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அதன்படி, இந்தியன் 2 படத்தின் டிரைலர் விரைவில் மிகப் பிரமாண்டமாக வெளியிடப்படும் என்றும், இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்திற்கான டிரைலரும் இணைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியன் 2 படத்தின் கதை நீண்டதன் காரணமாக அதை இரண்டு பாகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால் தான் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதாகவும் அதுமட்டுமின்றி பாடல் காட்சி ஒன்றை படமாக்குவதில் ஏற்பட்ட இழுபறி தான் காரணமாக கூறப்பட்டது. தற்போது எதுவாக இருந்தாலும் சரி சேனாபதியை திரையில் மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
The post இந்தியன் 2 படத்தில் காத்திருக்கும் இந்தியன் 3 சர்ப்ரைஸ்! என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post 8 தோட்டாக்கள் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த சித்தார்த்! appeared first on Touring Talkies.
]]>ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 180 படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தோன்றினார்.அதன்பிறகு காதலில் சொதப்புவது எப்படி மற்றும் உதயம் என் ஹெச் 4 ஆகிய படங்களில் நடித்தார், ஆனால் இவை போதிய வரவேற்பை பெறவில்லை. எனினும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் சித்தார்த் தன்னை மீண்டும் நிலைநாட்டிக் கொண்டார்.
மேலும், சித்தா என்ற வெற்றி படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார்.சினிமா மட்டுமின்றி, சமூக கருத்துக்களை வெளியிட்டு சில சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது, 8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் சித்தார்தின் 40-வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில், சித்தார்தின் 40-வது படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கவிருப்பதாகவும், இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதையைக் கொண்டிருக்கும் என்றும், அனைவரது இதயங்களிலும் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 8 தோட்டாக்கள் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த சித்தார்த்! appeared first on Touring Talkies.
]]>The post ஃபகத் பாசில்லை கொத்தாக தூக்கிய ஜீத்து ஜோசப்…ஃபகத் செய்ய போகும் சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனை (ஃபகத்) சந்திக்கின்ற மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் ஏற்படும் பிரச்சினைகளைக் கதை மையமாகக் கொண்டது.இந்த படம் முதல் 5 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்து சாதனை படைத்தது, மேலும் சமீபத்தில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்தது. தற்போது ரூ.150 கோடியை எட்டியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பகத் பாசில் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதையை சாந்தி மாயதேவி எழுதியுள்ளார். இவர் முன்னதாக திரிஷ்யம் 2 மற்றும் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.பகத் பாசில் ஜீது ஜோசப்புடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். திரிஷ்யம் பட இயக்குனர் பகத் பாசலை வைத்து உருவாக்கும் இந்த புதிய படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஃபகத் பாசில்லை கொத்தாக தூக்கிய ஜீத்து ஜோசப்…ஃபகத் செய்ய போகும் சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post விடுதலை 2-ல் கேமியோ ரோலில் நடிக்க போகும் பிரபலம்? வெளியான சுவாரஸ்ய தகவல்… appeared first on Touring Talkies.
]]>இந்த திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக கொண்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. ‘விடுதலை பாகம் 1′ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.’விடுதலை பாகம் 2’ சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதியை வைத்து இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு செய்ய வேண்டியதுள்ளது.
அவர் பல மொழிகளில் பல படங்களில் நடிப்பதால், 20 நாட்கள் கால்ஷீட் வழங்க முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு தாமதமாகும் என தகவல் வெளியாகிய நிலையில், தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.இந்நிலையில், படத்தைப் பற்றிய இன்னொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
‘விடுதலை 2’ படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எஸ்.ஜே சூர்யா எந்த விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post விடுதலை 2-ல் கேமியோ ரோலில் நடிக்க போகும் பிரபலம்? வெளியான சுவாரஸ்ய தகவல்… appeared first on Touring Talkies.
]]>The post இந்த கதைய தயாரிப்பாளர் ஓகே சொல்வாருனு நினைக்கவே இல்ல – ஹிப் ஹாப் தமிழா #PTSir appeared first on Touring Talkies.
]]>அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, “நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளராக அரண்மனை 4-ல் மீண்டும் களமிறங்கியபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
குறிப்பாக, இந்தப்படத்தின் ‘குட்டிப் பிசாசே’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று கூறினார்.”இந்த படம் உங்களுக்கு முழுமையான திருப்தியை அளிக்கும். இப்படியொரு கதையை உருவாக்கிய கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஆரம்பத்தில் இந்த கதையை தயாரிப்பாளர் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கவே இல்லை.
ஆனால், இந்த கருத்தை நாம் சொல்லவேண்டும் என்று அவர் உறுதியாக கூறினார்,” என்றும் அவர் தெரிவித்தார்.”பிடி சார் வெகு சிறப்பாக வந்துள்ளது. இதில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. எனது மீது நம்பிக்கை வைத்து இப்படியொரு பிரமாண்ட படத்தை உருவாக்கிய வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள், கண்டிப்பாக மகிழ்வீர்கள். அனைவருக்கும் நன்றி,” என்றார்.
The post இந்த கதைய தயாரிப்பாளர் ஓகே சொல்வாருனு நினைக்கவே இல்ல – ஹிப் ஹாப் தமிழா #PTSir appeared first on Touring Talkies.
]]>The post வெற்றி மாறனோடு கைக்கோர்த்த கவின்… கவினோட இணையும் ஆண்ட்ரியா! appeared first on Touring Talkies.
]]>விகர்ணன் அசோக் இப்படத்தை இயக்குகிறார். இவர் தனது குறும்படமான ‘தருமி’ க்கு சிறந்த குறும்படத்திற்கான கோல்ட் மெடல் விருதைப் பெற்றவர்.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். அவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், வி.ஜே. அர்ச்சனா, சந்தோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஆர்.டி. ராஜசேகர் கவனிக்க, படத்தொகுப்பை ராமர் மேற்கொள்கிறார். கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளர்களாக பூர்த்தி மற்றும் விபின் பணிபுரிகின்றனர். பூஜையுடன் துவங்கிய மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.
The post வெற்றி மாறனோடு கைக்கோர்த்த கவின்… கவினோட இணையும் ஆண்ட்ரியா! appeared first on Touring Talkies.
]]>The post நான் அவர நடிக்க கூடாதுனு சொல்லல இல்லை ஆனா…சிம்பு பற்றி ஐசரி கணேஷ் பேச்சு! appeared first on Touring Talkies.
]]>மேலும், பாக்யராஜ், பாண்டியராஜன், பிரபு, தியாகராஜன், பட்டிமன்ற ராஜா மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த வாரம் மே 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.வேல்ஸ் நிறுவனம் மூன்று படங்களை நடித்து தருவதாக சிம்பு உறுதி அளித்ததாக, கொரோனா குமார் படத்தில் இருந்து விலகியது பஞ்சாயத்தை ஏற்படுத்தியதாகவும் சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்பதாக ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் தற்போது சிம்பு நடித்து வருவதாகவும், அதில் அவர் நடிக்கவே கூடாது என்றும் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கூறியதாகவும், ஆனால் நேற்று நடைபெற்ற பிடி சார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
நேற்று நடந்த பிடி சார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐசரி கணேஷ், சிம்பு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். சிம்பு நடிக்கவே கூடாது என தானே கூறவில்லை என்றும், தனது படத்தை முடித்து கொடுத்துவிட்டு தக் லைஃப் படத்தில் நடிக்கட்டும் என தான் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post நான் அவர நடிக்க கூடாதுனு சொல்லல இல்லை ஆனா…சிம்பு பற்றி ஐசரி கணேஷ் பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post என்னை தேடி வந்த கன்னட பட வாய்ப்பு – Radha Bharathy | Chai With Chithra | Part 9 appeared first on Touring Talkies.
]]>The post என்னது நாட்டாமை படத்துல சிவாஜியா? குஷ்பு எப்படி இந்த படத்துல நடிச்சாங்க தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>1990-ம் ஆண்டில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.எஸ். ரவிக்குமார், அதன் பின்னர் சேரன் பாண்டியன், புத்தம் புதுப்பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்யம், புருஷ லட்சணம், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
‘நாட்டாமை’ படத்தில் விஜயகுமார் நடித்த வேடத்தில் முதலில் சிவாஜி நடிக்க வேண்டும், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த படத்தில் விஜயகுமார் நடித்ததாக சமீபத்திய பேட்டியில் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் சிவாஜி கணேஷனை நடிக்க வைத்தவர் கே.எஸ். ரவிக்குமார்.
‘நாட்டாமை’ படத்தில் குஷ்பூ நடித்த முதிய கதாபாத்திரத்தில் முதலில் லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஒரு சூட்டிங் போது குஷ்பு நடிக்கும்போது, ‘நாட்டாமை’ படத்தில் நான் நடிக்கிறேனே என்று கூறியதால், அவர் அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்று கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
The post என்னது நாட்டாமை படத்துல சிவாஜியா? குஷ்பு எப்படி இந்த படத்துல நடிச்சாங்க தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>