Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
superstar rajinikanth – Touring Talkies https://touringtalkies.co Fri, 12 Apr 2024 09:42:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png superstar rajinikanth – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரமாண்ட செட் ரெடி, சாங் ரெடி! அனல் பறக்கும் போகும் ரஜினியின் ஓபனிங் சாங்… https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b0/ Fri, 12 Apr 2024 09:18:32 +0000 https://touringtalkies.co/?p=40918 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.இந்நிலையில் இப்படத்தில் ஓபனிங் சாங் ஒன்றிற்காக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு‌ வருகின்றது. இயக்குனர் ஞானவேல் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஜெய்பீம் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.வேட்டையன் படத்தில் இந்தி ஸ்டார் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர […]

The post பிரமாண்ட செட் ரெடி, சாங் ரெடி! அனல் பறக்கும் போகும் ரஜினியின் ஓபனிங் சாங்… appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.இந்நிலையில் இப்படத்தில் ஓபனிங் சாங் ஒன்றிற்காக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு‌ வருகின்றது.

இயக்குனர் ஞானவேல் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஜெய்பீம் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.வேட்டையன் படத்தில் இந்தி ஸ்டார் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்திற்காக நடிகர் ராணா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் 25-ம் தேதி இந்தப் படத்தின் ஓபனிங் பாடல் காட்சியைப் படமாக்க தயாராகி கொண்டு இருக்கிறது படக்குழு. பூந்தமல்லி அருகே இந்தப் பாடல் காட்சி படமாக்க பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வேட்டையன் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கான அப்டேட்கள் ஒவ்வொன்றாக வந்தவண்ணம் உள்ளன‌.இதன் டைட்டில் டீஸர் வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். வேட்டையன் படமும் தலைவர்171 படத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

The post பிரமாண்ட செட் ரெடி, சாங் ரெடி! அனல் பறக்கும் போகும் ரஜினியின் ஓபனிங் சாங்… appeared first on Touring Talkies.

]]>
மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! https://touringtalkies.co/the-superstar-who-turned-the-knee-verse-into-mass/ Thu, 06 Oct 2022 11:57:45 +0000 https://touringtalkies.co/?p=24910 இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில்  ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் 1995-ம் வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘பாட்ஷா’. இப்படத்தில் ரஜினி பேசும், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் டயலாக் இன்றும் பிரபலம். இந்த வசனத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் இப்போதுவரையிலும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் மேடைகளிலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ஒரு சேர இந்த டயலாக்கைச் […]

The post மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.

]]>

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில்  ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் 1995-ம் வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘பாட்ஷா’.

இப்படத்தில் ரஜினி பேசும், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் டயலாக் இன்றும் பிரபலம். இந்த வசனத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் இப்போதுவரையிலும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் மேடைகளிலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ஒரு சேர இந்த டயலாக்கைச் சொல்லி வருகிறார்கள்.

ஆனால், இந்த வசனம் முதலில் ஷூட்டிங்கிற்குத் தயாராகியிருந்தபோது இப்படியில்லை. படப்பிடிப்பின்போது இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொன்னதே வேறு. “நான் ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி” என்றுதான் அவர் எழுதியிருந்தார். இந்த டயலாக்கை பலமுறை தனக்குள் பேசிப் பார்த்த ரஜினிக்கு இதில் ஏதோ ரிதம் குறைவதாகப் பட்டது. யோசித்த அவர், அதிலிருந்த ‘வாட்டி’ என்பதை ‘தடவை’ என மாற்றினார். பிறகுதான், “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற வசனம் பிறந்தது.

The post மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.

]]>
என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Wed, 15 Sep 2021 09:30:46 +0000 https://touringtalkies.co/?p=17981 The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.

]]>

The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் ‘அண்ணாத்த’ தீபாவளியன்று வெளியாகிறது https://touringtalkies.co/rajinis-annatha-is-released-on-diwali/ Thu, 01 Jul 2021 13:16:54 +0000 https://touringtalkies.co/?p=15920 சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் இந்த வருடத் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்தாலும் இன்னமும் டப்பிங் பணிகள் முடிவடையவில்லை. ரஜினி இன்னமும் தன்னுடைய டப்பிங் போர்ஷனை முடிக்கவில்லை. ரஜினி அமெரிக்காவில் இருந்து ஜூலை 2-வது வாரத்தில் சென்னைக்குத் திரும்பியவுடன் ‘அண்ணாத்த’ படத்திற்கு டப்பிங் பேசிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பணிகள் முழுவதும் முடிவுற செப்டம்பர் மாதம் […]

The post ரஜினியின் ‘அண்ணாத்த’ தீபாவளியன்று வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் இந்த வருடத் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்தாலும் இன்னமும் டப்பிங் பணிகள் முடிவடையவில்லை. ரஜினி இன்னமும் தன்னுடைய டப்பிங் போர்ஷனை முடிக்கவில்லை.

ரஜினி அமெரிக்காவில் இருந்து ஜூலை 2-வது வாரத்தில் சென்னைக்குத் திரும்பியவுடன் ‘அண்ணாத்த’ படத்திற்கு டப்பிங் பேசிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு அதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பணிகள் முழுவதும் முடிவுற செப்டம்பர் மாதம் ஆகிவிடும்.

ஆனாலும் அதன் பின்பும் பொறுமையாக காத்திருந்து விடுமுறை தினமான தீபாவளி தினத்தன்று அத்திரைப்படம் வெளியாகும் என்று அந்தப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்றைக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டரில்தான் படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ரஜினியின் ‘அண்ணாத்த’ தீபாவளியன்று வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
“ரஜினிக்கேற்ற கதை என்னிடம் உள்ளது…” – இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவிப்பு..! https://touringtalkies.co/i-have-a-story-for-rajini-director-alphonse-puthirans-announcement/ Tue, 18 May 2021 09:30:44 +0000 https://touringtalkies.co/?p=15152 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு ஏற்ற கதையை தயார் செய்து வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன். மலையாள மொழியில் ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தற்போது ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘பாட்டு’ என்று பெயர் வைத்துள்ளார் அல்போன்ஸ். இந்தப் புதிய படத்தில் பகத் பாஸில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரனின் பேஸ்புக் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “ரஜினியை […]

The post “ரஜினிக்கேற்ற கதை என்னிடம் உள்ளது…” – இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு ஏற்ற கதையை தயார் செய்து வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன்.

மலையாள மொழியில் ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தற்போது ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு பாட்டு’ என்று பெயர் வைத்துள்ளார் அல்போன்ஸ். இந்தப் புதிய படத்தில் பகத் பாஸில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரனின் பேஸ்புக் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “ரஜினியை வைத்துப் படம் இயக்குவதற்காகக் கதை வைத்துள்ளீர்களா..?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ”ரஜினி சாருக்குக் கதை வைத்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு அவரைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை சந்திக்க இயலவில்லை. ரஜினி சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும். நேரம் சரி ஆகட்டும். நாம் பாதி வேலை செய்துவிட்டால் மீதி வேலையைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை உள்ளது. கடவுள் கரோனாவை அழிப்பதில் பிஸியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு திரும்பவும் முயற்சி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது ரஜினி ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியுள்ளது. மலையாள இயக்குநராக இருந்தாலும் மோகன்லால், மம்மூட்டியிடம்கூட முயற்சி செய்யாமல் இருந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிக்கு கதை எழுதி வைத்திருப்பது அவரது பெருமையைக் குறிக்கிறது என்று ரஜினியை பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

The post “ரஜினிக்கேற்ற கதை என்னிடம் உள்ளது…” – இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
‘படையப்பா’ படத்தில் நடித்தவர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் போனஸ் தொகை வழங்கிய ரஜினி..! https://touringtalkies.co/superstar-rajini-gave-a-bonus-amount-to-actors-and-techinicians-of-padayappa-movie/ Wed, 24 Mar 2021 09:28:11 +0000 https://touringtalkies.co/?p=13870 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘படையப்பா’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அந்தப் படத்தின் வெற்றியினால் மனம் குளிர்ந்த ரஜினி அந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறார். இந்தத் தகவலை அந்தப் ‘படையப்பா’ படத்தில் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றிய பி.எல்.தேனப்பன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பி.எல்.தேனப்பன் இது பற்றிப் பேசும்போது, “படையப்பா’ படம் வெளியாகி நான்கு அல்லது ஐந்து நாட்கள் […]

The post ‘படையப்பா’ படத்தில் நடித்தவர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் போனஸ் தொகை வழங்கிய ரஜினி..! appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘படையப்பா’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அந்தப் படத்தின் வெற்றியினால் மனம் குளிர்ந்த ரஜினி அந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறார்.

இந்தத் தகவலை அந்தப் ‘படையப்பா’ படத்தில் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றிய பி.எல்.தேனப்பன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

பி.எல்.தேனப்பன் இது பற்றிப் பேசும்போது, “படையப்பா’ படம் வெளியாகி நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஆகியிருக்கும்போது ரஜினி ஸார் என்னைத் தொடர்பு கொண்டார். “ஸார் நான் இப்போ வெளியூரில் இருக்கிறேன்…” என்று சொன்னேன்.

“படத்தில் பணியாற்றியவர்களின் முழு விபரம் மற்றும் அவர்களுக்குக் கொடுத்த சம்பளம் இந்த டீடெயில்ஸை எடுத்துக்கிட்டு நாளைக்கு வர முடியுமா..?” என்று கேட்டார். “அதெல்லாம் என் மைண்ட்ல மனப்பாடமா இருக்கு ஸார். நாளைக்கு வந்து பார்க்குறேன்…” என்று சொன்னேன்.

சொன்னதுபோலவே மறுநாள் அவரது வீட்டிற்குப் போனேன். வீட்டு மொட்டை மாடியில் தயாராக கையில் பேடுடன் காத்துக் கொண்டிருந்தார். அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் பெயர்களை எழுதி, அவர்கள் வாங்கிய சம்பளத்தையும் எழுதச் சொன்னார்.

எழுதிய பிறகு அதை அவர் வாங்கிப் படித்துவிட்டு.. “இந்தப் ‘படையப்பா’ படத்துல எனக்கு நல்ல லாபம் கிடைச்சிருக்கு. அதனால.. இவங்க எல்லாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரிச்சுக் கொடுத்திருங்க” என்று சொல்லி பணத்தை என்னிடம் ஒப்படைத்தார்.

“அன்றைய இரவிலேயே அதை முழுவதும் பட்டுவாடா செய்ய வேண்டும்…” என்றும் சொன்னார். அதற்கு “துணைக்கு உங்களுடன் இருக்கும் ஒருவரை நான் அழைத்துப் போகிறேன்…” என்றேன். “அதெல்லாம் வேண்டாம். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீங்களே கொண்டு போய் கொடுங்க…” என்றார்.

அதேபோல் அன்றைய இரவிலேயே சம்பந்தப்பட்ட அத்தனை நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பலரிடமும் வீட்டுக் கதவைத் தட்டி ரஜினி கொடுத்தப் பணத்தை செட்டில் செய்தேன். இந்தப் படத்தில் நடித்ததற்காக ரம்யா கிருஷ்ணனுக்கு டபுள் மடங்கு சம்பளம் கொடுத்ததுதான் ஹைலைட்டான விஷயம்..” என்றார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

The post ‘படையப்பா’ படத்தில் நடித்தவர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் போனஸ் தொகை வழங்கிய ரஜினி..! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் ‘அண்ணாத்த’ 2021-ம் ஆண்டின் தீபாவளியன்று வெளியாகிறது..! https://touringtalkies.co/annathea-movie-will-release-on-2021-deepavai-day-november-4/ Mon, 25 Jan 2021 15:01:49 +0000 https://touringtalkies.co/?p=12446 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் இந்த வருடத் தீபாவளின்று அதாவது நவம்பர் 4-ம் தேதி வியாழக்கிழமையன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, […]

The post ரஜினியின் ‘அண்ணாத்த’ 2021-ம் ஆண்டின் தீபாவளியன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படம் வரும் இந்த வருடத் தீபாவளின்று அதாவது நவம்பர் 4-ம் தேதி வியாழக்கிழமையன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தபோது படக் குழுவினர் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பதும் அதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஒரு சில மாதங்களுக்குப் பின்னர்தான் துவங்கும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வருட தீபாவளியை ’தலைவர் தீபாவளி’ என ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

The post ரஜினியின் ‘அண்ணாத்த’ 2021-ம் ஆண்டின் தீபாவளியன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் என்னால் கேட்க முடியும்-மன்றத்தினருக்கு அதிர்ச்சியளித்த ரஜினி..! https://touringtalkies.co/rajini-speech-at-makkal-mandra-sexretaries-meeting/ Mon, 30 Nov 2020 10:43:02 +0000 https://touringtalkies.co/?p=10469 சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். “காசு சம்பாதிக்கணும்னு வர்றவங்க என்னை நம்பி வராதீங்க. மன்றத்துலேயும் இருக்காதீங்க. வேண்டாம்… போயிடுங்க. ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்ய முடியும். மன்ற நிர்வாகிகள் பலரும் […]

The post மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் என்னால் கேட்க முடியும்-மன்றத்தினருக்கு அதிர்ச்சியளித்த ரஜினி..! appeared first on Touring Talkies.

]]>
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

“காசு சம்பாதிக்கணும்னு வர்றவங்க என்னை நம்பி வராதீங்க. மன்றத்துலேயும் இருக்காதீங்க. வேண்டாம்… போயிடுங்க.

ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்ய முடியும்.

மன்ற நிர்வாகிகள் பலரும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். எனக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்.. அவங்களோட லிஸ்ட்டு என்னிடம் இருக்கு. இனிமேல் நான் கடுமையான  நடவடிக்கை எடுப்பேன். சரியில்லாத மாவட்ட நிர்வாகிகளை மாற்றப் போகிறேன். புதிய மாநில நிர்வாகிகளை நியமிக்கப் போகிறேன்.

நான் உங்களை அழைத்தால் இங்கே வந்து நன்றாகப் பேசுகிறீர்கள். ஆனால், ஃபீல்டுக்குப் போனால்… சொதப்பி விடுகிறீர்கள். உங்களுக்கு அரசியலில் அனுபவம் போதாது. உங்களில் 15 சதவிகிதம் பேரின் செயல்பாடுகள்தான் சரியாக இருக்கின்றன. இன்னும் பலரது செயல்பாடுகள், வேலைகளில் எனக்குத் திருப்தியில்லை.

மக்கள் நலத் திட்டப் பணிகளைத் தீவிரமாக செய்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் சரி வரச் செய்யலை. இப்போ இந்த ஒரு வருஷமா நான் அரசியலுக்கு வர மாட்டேன்னு நினைச்சு பலரும் மன்ற வேலைல இருந்த ஒதுங்கீட்டீங்க.

அப்படியே நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் மிக அதிபட்சமாக 15% ஓட்டுகளை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இப்படி 10-15% ஓட்டு வாங்குவதால் எந்தப் பயனுமே இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் ஜெயித்திருக்கிறேன். அதனால் அரசியலுக்குப் போனாலும் தேர்தலுக்குப் போனாலும் நான் ஜெயித்தாக வேண்டும். அது சாத்தியமே இல்லை என்கிறபோது எதற்காகக் கட்சியை தொடங்க வேண்டும்..?

நான் தெருவுக்கு வந்து பிரசாரம் செய்தால்தான் ஜெயிக்க முடியும்னு நினைக்கிறேன். கொரோனா சீஸன் என்பதாலேயே யோசிக்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.

இதற்கு நிர்வாகிகள் “சமூக வலைதளங்களில் விஷுவல் மீடியாவில் பிரசாரம் செய்யலாம்… என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ரஜினி ஏற்றுக் கொள்ளவில்லையாம். “அதெல்லாம் சரிப்பட்டு வராது. மக்கள் என்னை நேரில் எதிர்பார்ப்பார்கள். அத்தனை தொகுதிகளுக்கும் நேரில் போகத்தான் வேண்டும்..” என்றாராம்.

கடைசியாக, “நீங்கள் அரசியலில் கால் வைக்கச் சொன்னால் வைக்கிறோம்.. வேண்டாம் என்றால் இதுவரையிலும் எப்படியிருந்தோமே அது போலவே இருந்து கொள்கிறோம்…” என்று பெருவாரியான மாவட்டச் செயலாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனால் அரசியலில் இறங்கலாமா.. வேண்டாமா.. என்பது பற்றி முடிவெடுக்கம் அதிகாரத்தை ரஜினியிடமே விட்டுவிட்டார்கள்.

ரஜினியின் இன்றைய வெளிப்படையான பேச்சுக்களால் ஆடிப் போயிருக்கிறார்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள்.

The post மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் என்னால் கேட்க முடியும்-மன்றத்தினருக்கு அதிர்ச்சியளித்த ரஜினி..! appeared first on Touring Talkies.

]]>
திரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..! https://touringtalkies.co/actress-reluctant-to-beat-rajini-in-movie/ Tue, 24 Nov 2020 14:22:14 +0000 https://touringtalkies.co/?p=10356 ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் கன்னத்தில் அறைவதை போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்தாராம் நடிகை சுஹாசினி மணிரத்னம். ரஜினி குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்துப் பேசும்போது, “தர்மத்தின் தலைவன்’ படத்தில் நடிக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. இன்னிவரைக்கும் என்னால மறக்க முடியாதது. ஒரு காட்சில நான் ஓவியம் வரைஞ்சுக்கிட்டிருப்பேன். அந்த நேரத்துல ரஜினி அந்த ஓவியத்துக்குப் பின்னாடி […]

The post திரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..! appeared first on Touring Talkies.

]]>
‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் கன்னத்தில் அறைவதை போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்தாராம் நடிகை சுஹாசினி மணிரத்னம்.

ரஜினி குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்துப் பேசும்போது, “தர்மத்தின் தலைவன்’ படத்தில் நடிக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. இன்னிவரைக்கும் என்னால மறக்க முடியாதது.

ஒரு காட்சில நான் ஓவியம் வரைஞ்சுக்கிட்டிருப்பேன். அந்த நேரத்துல ரஜினி அந்த ஓவியத்துக்குப் பின்னாடி இருந்து வருவார். நான் கோப்பட்டு அவரை கன்னத்துல அறையணும். இதுதான் காட்சி.

டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஸார் இந்தக் காட்சியை சொன்னதும் எனக்குப் பயம் வந்திருச்சு. நான் ‘முடியாது’ன்னுட்டேன். அவர் எவ்ளோ பெரிய நடிகர். ‘நான் அடிச்சிட்டேன்னா அவ்ளோதான்.. வெளில என்னை எல்லாரும் திட்டுவாங்க. வெளில தலைகாட்ட முடியாது. வேணாம் ஸாரு’ன்னு சொன்னேன். எஸ்.பி.எம். ‘அதெல்லாம் முடியாது. நீ அடிச்சுத்தான் ஆகணும்’ன்னாரு. ‘வேண்ணா தள்ளி விடுறேன்’ என்றேன். ‘ம்ஹூம்.. முடியாது. நான் சொன்னதைச் செய்யு’ன்னாரு எஸ்.பி.எம். ஸார்.

அந்தச் சமயம் ரஜினி ஸார் பக்கத்துல ‘வந்து என்ன.. என்ன நடக்குது இங்க..?’ என்றார். அப்போ, அவர்கிட்ட எஸ்.பி.எம். விஷயத்தைச் சொல்லிட்டாரு.. உடனே ரஜினி என்கிட்ட.. “எப்படி.. எப்படி என்னை அடிக்க மாட்டியா.. ‘தாய் வீடு’ படத்துல மட்டும் என்னைத் திட்டுத் திட்டுன்னு திட்டிட்டு த்தூன்னு என்னைப் பார்த்து துப்பின..?” என்றார்.

“அப்போ நான் பீல்டுக்கு புதுசு.. உங்களைப் பத்தி அதிகம் எனக்குத் தெரியாது. இப்போ நீங்க எவ்ளோ பெரிய ஸ்டார்.. உங்களைப் போய் நான் அடிக்க முடியுமா..? எனக்குப் பயமா இருக்கு..’ என்றேன். ‘ம்.. அதெல்லாம் முடியாது. நீ அடிக்கிற.. டைரக்டர் சொல்றதை செய்யி’ என்று என்னைச் சமாதானப்படுத்தி அந்தக் காட்சியை எடுத்தாங்க…” என்றார் சுஹாசினி மணிரத்னம்.

The post திரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை https://touringtalkies.co/cinema-history-21-k-balachander-advise-to-rajini/ Thu, 22 Oct 2020 10:40:03 +0000 https://touringtalkies.co/?p=9122 ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கான ஆரம்ப வேலைகளில் பாலச்சந்தர் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியை நடத்திக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் பெங்களூரிலிருந்து வந்த ஒரு மாணவர் பயின்று கொண்டிருந்தார்.  அவர் பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட். இரண்டாண்டு பயிற்சி முடிந்ததும் அந்த பள்ளி மாணவர்களின் திறமையை எடை போட இரண்டு திரைப்பட இயக்குநர்கள் அந்த பயிற்சிப் பள்ளிக்கு வந்தார்கள். ஒருவர் சித்தலிங்கையா என்ற கன்னடப் பட இயக்குனர். அற்புதமான பல கன்னடத் […]

The post சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை appeared first on Touring Talkies.

]]>

‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கான ஆரம்ப வேலைகளில் பாலச்சந்தர் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியை நடத்திக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் பெங்களூரிலிருந்து வந்த ஒரு மாணவர் பயின்று கொண்டிருந்தார்.  அவர் பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட்.

இரண்டாண்டு பயிற்சி முடிந்ததும் அந்த பள்ளி மாணவர்களின் திறமையை எடை போட இரண்டு திரைப்பட இயக்குநர்கள் அந்த பயிற்சிப் பள்ளிக்கு வந்தார்கள். ஒருவர் சித்தலிங்கையா என்ற கன்னடப் பட இயக்குனர். அற்புதமான பல கன்னடத் திரைப்படங்களைத் தந்த அவருடைய மகன்தான்  நடிகர் முரளி.

இன்னொருவர் எணணற்ற வித்தியாசமான படைப்புகளால் தமிழ்ப் படங்களின் போக்கையே மாற்றிய இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்.

பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய இரண்டு படங்களும் சிவாஜிராவ் மனதிற்குள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படங்கள்.

பாலச்சந்தரை எப்படியாவது ஒருமுறை சந்தித்துவிட வேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருந்தபோதுதான் அவரே தனது நடிப்புப் பள்ளிக்கு வரப் போகிறார் என்ற செய்தி சிவாஜிராவை எட்டியது.

பாலச்சந்தர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், “பாலச்சந்தர் சார் இருபது நிமிடம்தான் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். நேரம் குறைவாக இருப்பதால் உருப்படியான கேள்விகளை மட்டும் அவரிடம் கேளுங்கள்…” என்றார் கல்லூரி முதல்வர் ராஜாராம்.

அந்தக் கேள்வி நேரத்தின்போது  தன்னிடம் கேள்வி கேட்ட சிவாஜிராவோடு கை குலுக்க கையை நீட்டினார் கே.பாலச்சந்தர்.

அவர் கை நீட்டியது அவரோடு  கை குலுக்க அல்ல – கை பிடித்து அவரைத் திரையுலகத்தில் வழி நடத்திச் செல்ல என்பது அன்று சிவாஜிராவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாலச்சந்தரும், சிவாஜிராவும் கை குலுக்கிக் கொண்டிருக்கும்போது அந்த நடிப்புப் பயிற்சி பள்ளியின் ஆசிரியரும், சிவாஜிராவின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்ககறை கொண்டவருமான  கோபாலி அங்கே வந்தார்.

“உங்களுடைய படம்னா இவன் உயிரை விடுவான் சார்” என்று  பாலச்சந்தரிடம் சிவாஜிராவ் பற்றி அவர் சொன்னபோது “தமிழ் தெரியுமா..?” என்று சிவாஜிராவைப் பார்த்து கேட்டார் பாலச்சந்தர்.

“கொஞ்சம், கொஞ்சம் தெரியும்” என்று சிவாஜிராவ் சொல்ல “அது நீ தமிழ் பேசற அழகிலேயே  தெரியுது…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் பாலச்சந்தர்.

அப்போது ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடிக்க ஒரு நடிகரைத் தேடிக் கொண்டிருந்தார் பாலசந்தர்.

அந்த நடிகர் தெரிந்த முகமாக இருந்தால் எடுபடாது. அதே சமயம் ஒரு சாதாரண நடிகரை ஸ்ரீவித்யாவிற்கு ஜோடியாகவும் போட முடியாது. அதனால் ஒரு புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பாலச்சந்தர் சிந்தித்துக் கொண்டிருந்தபோது பிலிம் சேம்பர் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் பார்த்த சிவாஜிராவ் மின்னல் மாதிரி அவரது நினைவுக்கு வந்தார்.

உடனே தயாரிப்பு நிர்வாகி ராமுடுவை அழைத்து “அன்னிக்கு அந்த பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பார்த்த அந்த பையன் எங்கே இருக்கான்னு பாரு. அவனை தேடிப் பிடிச்சி உடனே கூட்டிக்கிட்டு வா..” என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் சிவாஜிராவைக் கண்டு பிடித்து பாலச்சந்தர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார் ராமுடு.

“வாப்பா” என்று சிவாஜிராவை வரவேற்ற பாலச்சந்தர் “நான் இப்போ ‘அபூர்வ ராகங்கள்’ன்னு ஒரு படம் பண்ணப் போறேன். அதில் ஒரு ரோல் இருக்கு. நீ பண்றியா..?” என்று சிவாஜி ராவைப் பார்த்து கேட்டார். “பண்றேன் சார்” என்று அடுத்த நிமிடமே சொன்ன சிவாஜி ராவ் அத்தோடு நிற்கவில்லை. “கொஞ்சம் நடிச்சிக் காட்டவா?” என்று கேட்டார். சிவாஜிராவின் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாமல், ”சரி.. நடித்துக் காட்டு” என்றார் பாலச்சந்தர்.

“வரி வட்டி, கிஸ்தி..

யாரைக் கேட்கிறாய் வரி..

எதற்கு கேட்கிறாய் வரி..

வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.

உனக்கேன் கட்ட வேண்டும் வரி”

“வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில் சிவாஜி பேசிய வசனங்களை சிவாஜிராவ் முழங்கத் தொடங்கியபோது “போதும்” என்று கை காட்டினார் பாலச்சந்தர்.

“ஏன் அவர் மாதிரி நீ நடிக்கறே…? உனக்குன்னு ஒரு தனி பாணி இருக்கணும். அதுதான் உனக்கு அடையாளமா இருக்கணும்…” என்று அழுத்தம்திருத்தமாக சொல்லிவிட்டு “உன் பேர் என்னன்னு சொன்னே..?” என்று  கேட்டார்.

“சிவாஜி, சிவாஜிராவ்” என்று வர்தா புயலைப்போல நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பதில் பறந்து வந்தது அவரிடமிருந்து.

“நீ வேகமாகப் பேசறது.. வேகமாக நடக்கிறது.. வேகமாக திரும்பறது எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால், உன் தமிழ் உச்சரிப்புதான் கொஞ்சம் தடுமாறுது. அதில நீ கவனம் செலுத்தணும். நல்லா தமிழ் பேச கத்துக்க..” என்று சொன்ன அவர் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அவருடைய பாத்திரம் பற்றி விளக்கமாக சொன்னார்.

“இந்தப் படத்தில உன் ரோல் சின்ன ரோலாக இருந்தாலும் ரொம்ப முக்கியமான ரோல். படத்தில் நீதான் ஸ்ரீவித்யாவோட புருஷன். பொண்டாட்டியைக் கைவிட்டுட்டு ஓடிப் போய் அப்புறம் திரும்பி வருகின்ற ஒரு கணவனின் பாத்திரம். படத்தோட கிளைமாக்சே இந்தக் கேரக்டராலதான். சின்ன ரோல்ன்னு நினைக்காதே. என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் நல்ல ரோலாக  தர்றேன். இதை அதுக்கு ஆரம்பமாக  நினைச்சுக்க…” என்று பாலச்சந்தர் சொல்லச் சொல்ல சிவாஜி ராவின் முகத்திலே  அப்படி ஒரு ஆனந்தம்.

அவருடைய படத்தில் ஒரே ஒரு காட்சி என்றாலும்கூட சிவாஜிராவுக்கு சம்மதம்தான். அப்படியிருக்க பாலச்சந்தர் ஒரு புதுமுகமான தன்னிடம் அப்படிப் பேசியதும், அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சிவாஜி ராவ்.

தொடர்ந்து மூன்று படங்களுக்கு சிவாஜி ராவை ஒப்பந்தம் செய்தார்  பாலச்சந்தர். ஒரே ஒரு சந்திப்பிலேயே சிவாஜி ராவின்  திறமை மேல் பாலச்சந்தர் எந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம். 

முதல் நாள் படப்பிடிப்பிற்காக சிவாஜி ராவை ஏற்றிக்கொண்டு சென்ற கார் நேராக கலாகேந்திரா நிறுவனத்துக்குச் சென்றது. இவர் அங்கே போன அடுத்த ஓரு  மணி நேரத்தில் கமல்ஹாசன் அங்கே வந்தார்.

“எவ்வளவு அழகாக இருக்கிறார்” என்று கமல்ஹாசனைப் பார்த்து வியந்த சிவாஜி ராவ் “ஐயாம். சிவாஜி ராவ் பிரம் பெங்களூர் உங்களுடைய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பார்த்தேன். பிரமாதம் அசத்திட்டீங்க…” என்று கமலஹாசனைப் பாராட்டினார். புன்னகையோடு சிவாஜி ராவின் பாராட்டை ஏற்றுக் கொண்டார் கமல்ஹாசன்.

லொகேஷனுக்குப் போனதும் “சார் நான் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு அப்படியே வாயில் கவ்விப் பிடிப்பேன். என் நண்பர்கள் எல்லோரும் அதை ரொம்ப ரசிப்பாங்க. அதைப் படத்தில் செய்யட்டுமா?” என்று பாலச்சந்தரிடம் கேட்ட சிவாஜி ராவ் அவரது  பதிலுக்காகக் காத்திருக்கவில்லை.

ஒரு சிகரெட்டைத் தூக்கிப் போட்டார். ஸ்டைலாக அதை வாயில் கவ்வினார். அதைப் பார்த்துவிட்டு மொத்த யூனிட்டும் கை தட்டிப் பாராட்டியது. பாலச்சந்தரும் ரசித்தார்.

“இதில நீ நடிக்கப் போறது கேன்சர் பேஷன்ட் வேடம். அதுக்கு சிகரெட் பிடிப்பது எல்லாம் சரியா வராது. அதனால அடுத்த படத்தில் அதையெல்லாம் வைச்சிக்கலாம்…”என்றார்அவர்.

சிவாஜிராவுக்கு பாலசந்தர் யூனிட்டின் நிரந்தர ஒப்பனையாளரான சுந்தரமூர்த்தி மேக்கப் போட்டார். முகத்தில் தாடி ஒட்டப்பட்டது. ஒரு நைந்த கோட்டை மாட்டிவிட்டார்கள்.

‘சிவாஜி’ என்னும் பெயர் தமிழ் ரசிகர்கள் எல்லோரது உள்ளங்களிலும் ஏற்கனவே குடி கொண்டிருக்கும் பெயர் என்பதால் ‘சிவாஜி’ என்ற பெயரோ ‘சிவாஜி ராவ்’ என்ற பெயரோ அவருக்கு சரியாக அமையாது என்று முடிவெடுத்த பாலச்சந்தர், ‘ரஜினிகாந்த்’ என்று கம்பிரமான ஒரு பெயரை சிவாஜி ராவுக்கு சூட்டினார்.

அடுத்து ஸ்ரீவித்யாவின் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு ரஜினிகாந்த், அந்த வீட்டுக்கு உள்ளே வரும் காட்சி அவர் நடித்த  முதல் காட்சியாகப் படமாக்கப்பட்டது.

அன்று படமாக்கப்பட்ட அந்தக் காட்சி அந்தத் திரைப்படத்திற்கான காட்சியாக மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு ரஜினிகாந்த் என்னும் மாபெரும் கலைஞன் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் காட்சியாகவும்அமைந்தது.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது இந்தப் படத்துடன் முடிந்துவிடவில்லை. உன்னைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று ரஜினிகாந்தின் கைகளைப் பற்றியபடி உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார் பாலச்சந்தர்.

‘பேசும் படம்’ பத்திரிகை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தைப்  பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. அதற்காகத் தன் கைப்பட சில குறிப்புகளை எழுதித் தந்தார் பாலச்சந்தர்.

அந்த வரிகள் பாலச்சந்தர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை எடுத்துச் சொல்கின்ற வரிகள்.

ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்” படத்தில் நடித்தக் காட்சிகள் மொத்தமாகச் சேர்த்து பத்து நிமிடம்கூட இருக்காது. அப்படி அந்தப் பத்து நிமிட காட்சிகளில் ‘பாண்டியன்’ என்ற பாத்திரத்தில் நடித்த ரஜினியைப்  பற்றி ‘அவரிடம் நல்ல நடிப்பைப் பார்க்கலாம்’ என்று பாலசந்தர் எழுதியிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், ‘நல்ல எதிர்காலத்தைப் பார்க்கலாம்’ என்று அவர் எழுதினார் என்றால் அவர் மனதிற்குள் ‘ரஜனிகாந்த்’ என்ற நடிகரின் ஆற்றல் மீது எந்த அளவு நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும்…?

ஆலமரமாக விரிந்து திரையுலகில் தழைக்கப் போகும் ‘ரஜினிகாந்த்’ என்ற மாமனிதருக்கு வித்தாக ‘அபூர்வ ராகங்கள்’ அமையப் போகிறது என்பது   தெரிந்துதான் அவர் கதவுகளைத் திறந்து கொண்டு வரும் முதல் காட்சியை பின்னால் பிரம்மாண்டமாக இருந்த ஆலமரத்துடன் சேர்த்து  படமாக்கியிருந்தார் பாலச்சந்தர். அதுதான் அவரது தனித் திறன்.

The post சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை appeared first on Touring Talkies.

]]>