The post காஃபி வித் காதல் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>இதில் மூத்த மகனான ஸ்ரீகாந்த், உள்ளூர் பள்ளியில் மியூஸிக் டீச்சராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சம்யுக்தாவுடன் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.
பெங்களூருவில் ஐ.டி.யில் வேலை பார்க்கும் ஜீவா, அங்கேயே தன் காதலி ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டு-கெதர் உறவில் இருந்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா இவருக்குத் துரோகம் செய்துவிட்டு இன்னொரு பாடகருடன் சென்று விடுகிறார். மன விரக்தியில் கொடைக்கானல் திரும்புகிறார் ஜீவா.
ஜெய் வாரத்துக்கு ஒரு பெண்ணை காதலிப்பதுபோல் நடித்து டைம் பாஸ் செய்து வருகிறார். இவர் மீது இவர்களது குடும்ப நண்பரான விச்சுவின் மகளான அம்ரிதாவுக்குக் காதல். ஆனால் இந்தக் காதலை புரியாமலேயே இருந்து வருகிறார் ஜெய்.
இந்த நிலையில் ஜெய்க்கும், ஜீவாவுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணான மாளவிகா சர்மாவை ஜெய்க்காக பேசி முடிக்கிறார்கள் குடும்பத்தினர்.
இந்த நேரத்தில் ஜெய் அம்ரிதா மீது காதல் கொள்கிறார். ஆனால் அம்ரிதாவோ ஜெய் தன் மீதான காதலை சொல்லாததால் வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்து நிச்சயதார்த்தமும் செய்து கொள்கிறார்.
ஜெய்யை மணப்பதற்காக அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் மாளவிகா மீது ஜீவாவுக்கு காதல் வருகிறது. மாளவிகாவும் ஜீவாவை காதலிக்கிறார். ஆனால், இதை எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள் இருவரும்.
அந்த நேரத்தில் ஜீவாவுக்கு ரைசாவை பெண் பார்க்கின்றனர் பெற்றோர். ஆனால், ரைசாவுடன் ஸ்ரீகாந்த் கள்ளத் தொடர்பில் இருக்கிறார். இதனால் தன் தம்பிக்கும், ரைசாவுக்குமான திருமணத்தைத் தடை செய்ய தன்னாலான முட்டுக்கட்டைகளைப் போடுகிறார் ஸ்ரீகாந்த்.
இப்படியொரு குழப்பமான காதல்களுடன் இருக்கும் அந்த வீட்டில் கல்யாண ஏற்பாடுகளை செய்வதற்காக யோகிபாபுவும், அவரது உதவியாளர் ரெடின் கிங்ஸ்லியும் வருகிறார்கள்.
இவர்களுக்கு இந்தக் குழப்பக் காதல்களும், கள்ளக் காதல்களும் தெரிய வர.. வீடே குழப்ப மயமாகிறது. இறுதியில் யார், யாரோடு இணைந்தார்கள்..? என்பதுதான் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்.
ஸ்ரீகாந்த் மனைவிக்குத் துரோகம் செய்யும் கதாப்பாத்திரம். தானே வலியப் போய் ரைசாவிடம் மாட்டிக் கொண்டாலும் பின்பு மனைவியிடம் இதை மறைக்காமல் சொல்லி பிரியவும் செய்கிறார். இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் ஓகே என்றாலும் இதற்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் நடித்திருக்கிறார். திருமணத்தை நிறுத்த வேண்டி இவர் செய்யும் சில ஜிம்மிக்ஸ் காட்சிகள் ஓகேதான்.
படத்தில் ஜெய்க்கும், ஜீவாவுக்கும்தான் அதிகப்படியான காட்சிகள் உள்ளன. குழப்பமான மனதுடையவராக ஜெய். வாழ்க்கைத் துணையாக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே தெரியாத கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார் ஜெய். சும்மாவே அவர் நடிப்பு இப்படித்தான் இருக்கும். நடிப்புக்கேற்ற கேரக்டரும் கிடைத்தால் விடுவாரா ஜெய்.. குழப்பமான முட்டாள் கேரக்டரை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார் ஜெய்.
தன் காதலியின் துரோகத்தை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஜீவா, இதேபோல் புதிதாக வந்த காதலையும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். டிடியிடம் மட்டுமே தன் காதலை சொல்லிவிட்டு காதல் தானாக கனிந்து தன்னிடம் வரும் என்று திரைக்கதையின் மூலமாகக் காத்திருந்து காதலில் ஜெயிக்கிறார். நடிப்பில் வேறொன்றுமில்லை.
ஐஸ்வர்யா தத்தாவும், ரைசா வில்சனும் சூடான காட்சிகளுக்காகவே வந்து சென்றிருக்கிறார்கள். சம்யுக்தா கணவனின் பாரமுகத்தை நினைத்து வருந்தும் சராசரி மனைவியாக சென்டிமெண்ட் காட்சிகளுக்கு வலு கொடுத்திருக்கிறார்.
படம் முழுவதும் வயிற்றைத் தள்ளிக் கொண்டு கர்ப்பிணி கதாப்பாத்திரத்தில் டிடி திரைக்கதையை நகர்த்துவதற்காகப் பயன்படு்த்தப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் வரும் காட்சிகளில் கவர்ந்திழுக்கிறார். மாளவிகாவின் காதல் எதிர்பார்ப்பும், நடிப்பும் சுமார்.
அம்ரிதாதான் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடித்திருக்கிறார். ஜெய் வந்து தன்னிடம் காதலை சொல்லும்போது, “நீ நினைச்சா நிச்சயதார்த்தத்தை நிறுத்தியிருக்கலாம்.. ஆனால் என்னைவிட வசதியான பெண்ணை ஏற்றுக் கொள்ள நினைச்சீல.. இதான் உன் காதலா?..” என கேட்பது நெத்தியடி கேள்வி.
யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி கூட்டணி சில காட்சிகளில் ரசிக்கவும் வைத்து, சிரிக்கவும் வைக்கிறார்கள். பல காட்சிகளில் அதுவும் இல்லை.
பாடல்களில் ரம்பம் ரம்பம்பம் பாடலை தவிர மற்ற பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை. ஒரு பாடலை பாதியோடு முடித்திருப்பது ஏனோ..? ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் நகைச்சுவையைத் தூண்டும் வகையில் இசையைத் தூவியிருக்கிறார் யுவன்.
ரம்பம் ரம்பம்பம் பாடலை படத்தின் ஊடேயே வருவதுபோல வைத்திருந்திருக்கலாம். இந்தப் பாடலில் ஆடியிருக்கும் நடிகர், நடிகையர் கூட்டணியில் தயாரிப்பாளர் குஷ்பூவும் இருந்திருந்தால் பாடலுக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கிடைத்திருக்கும்.
யூத்தான, அழகான ஹீரோக்கள்.. அழகழகான ஹீரோயின்கள் என்று கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளில் இளமை கொப்பளிக்கும்வகையில் கேமிரா கோணங்களை வைத்து ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் மகள் தன் பள்ளி விழாவில் நடனமாடுவதைப் பார்த்து அந்த சைனிங் ஸ்டார் கோபப்படுவது ஏன்..? அந்தக் காட்சியில் தர்க்க ரீதியாக உண்மையில்லை.
“ஐஸ்வர்யா தத்தா என்னால்தான் கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான் நாங்கள் மீண்டும் சேர்ந்துவிட்டோம்” என்கிறார் ஜீவா. ஆனால், அதன் பின்னர் அந்த சைனிங் ஸ்டாருடன் திடீர் காதலாகி ஐஸ்வர்யா சென்றுவிட, “நல்ல வேளை போயிட்டா.. இல்லேன்னா யார் புள்ளைக்கோ நீ அப்பாவாகி இருப்ப..” என்று டிடி சொல்வது ஏன்..? இதுவொரு தேவையில்லாமல் திணிக்கப்பட்ட காட்சியாகவே தெரிகிறது.
நகைச்சுவை காட்சிகள் குறைவாக இருப்பதும் சுந்தர்.சி.யின் ரசிகர்களுக்கு பெரும் குறையாக இருக்கிறது. மற்றபடி லாஜிக்கெல்லாம் பார்க்காமல் எப்போதும்போல் என் படம் என்று நினைத்து வந்து படம் பார்த்து சிரித்துவிட்டு வீட்டுக்குப் போங்க.. என்பது போலவே இந்தப் படத்தையும் தந்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
RATING : 3.5 / 5
The post காஃபி வித் காதல் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் சுந்தர்.சி-க்கு கவுரவ டாக்டர் பட்டம்..! appeared first on Touring Talkies.
]]>அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’.
இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக் கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது, “நானும் சுந்தர்.சியும் ‘ரிஷி’ பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில்தான் சந்தித்தோம். அப்போதிலிருந்து எங்களிடையே நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது.
‘அரண்மனை-3’ படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக ‘காபி வித் காதல்’ படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப் பெரிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் ‘ரம்பம்பம்’ பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.
இந்தப் இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள 200 தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும்விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டுகளை வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சைவரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.
அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குநர் சுந்தர்.சி-யின் பன்முகத் தன்மை கொண்ட உழைப்பையும், பணியையும் பாராட்டி அவருக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.Our Score
The post இயக்குநர் சுந்தர்.சி-க்கு கவுரவ டாக்டர் பட்டம்..! appeared first on Touring Talkies.
]]>The post “பொண்டாட்டி நினைப்பே இல்லை” – சுந்தர்.சி-யை கடிந்து கொண்ட குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழகமெங்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. வரும் அக்டோபர் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு பேசும்போது, ‘நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க, எனது கணவர் சுந்தர்.சி.தான் காரணம். ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன். அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.
இந்தப் படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள்கூட என்னை “படப்பிடிப்பிற்கு வா” என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. சுத்தமா பொண்டாட்டியை மறந்திட்டாரு. என்னுடைய கல்யாண நாள் வருதேன்னு நினைச்சு நானாத்தான் அவருக்கு போன் செய்து நான் கண்டிப்பா ஊட்டி வர்றேன்.. மூணு நாள் தங்கப் போறேன்னு சொல்லிட்டுத்தான் ஊட்டிக்கு வந்தேன்.
இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்தப் படத்தில் நான் நடித்த ‘ரம்பம்பம்’ பாடலை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள்தான் இந்தப் பாடலை படமாக்கப் போகிறோம் என்றார் சுந்தர்.சி.
அப்போது மேடையின் கீழிருந்து குறுக்கிட்ட டிடி, “நாங்க ஏற்கெனவே சுந்தர் ஸார்கிட்ட கேட்டப்போ நீங்கதான் வரலைன்னு சொல்லிட்டீங்கன்னு சொன்னாரு…” என்று உண்மையை உடைத்தார். தொடர்ந்து பேசிய நடிகைகள் “மேடமும் நடிச்சிருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்…” என்று சொல்ல குஷ்பூ மேடையிலேயே துள்ளிக் குதித்தார்.
இதையடுத்து மேடைக்கு வந்த சுந்தர்.சி. “அவங்க அந்தப் பாட்டுக்கு ஆடுனதை ஏற்கனவே எல்லாரும் பார்த்துட்டாங்க.. அதனால்தான் வேணாம்ன்னு நினைச்சேன். இப்போ என்ன.. மறுபடியும் அவங்களை ஆட வைச்சு மீடியாவைத் தவிர மத்தவங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..” என்று கூறினார்.
The post “பொண்டாட்டி நினைப்பே இல்லை” – சுந்தர்.சி-யை கடிந்து கொண்ட குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>The post “என் ஆசை இந்தப் படத்தில்தான் நிறைவேறியது” – சுந்தர்.சி-யின் சந்தோஷம் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். ‘உள்ளத்தை அள்ளித் தா’ படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மாதான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின்னர் கதை வேறுவிதமாக மாறிவிட்டது.
அதேபோல்தான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தையும் அதேபோல் பீல் குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை இந்த ‘காபி வித் காதல்’ படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.
மூன்றுவிதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவடரை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்தப் படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ யாரென்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.
இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தாதான். இந்தப் படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர்போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மைவிட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக் கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்.
அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும். அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மாதான். டேமேஜ் ஹீரோயின் என்றுகூட சொல்லலாம். அவர் ஒரு நாள் இருந்தாலும்கூட அது பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
இந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம்தான் படத்தின் திருப்பு முனை கதாபாத்திரம். நானும் யோகிபாபுவும் பேசிக் கொள்ளும்போதுகூட அந்த குழந்தையின் அப்பா, அம்மா நமக்காகவே புள்ளைய பெத்திருக்காங்களோ என்றுதான் பேசிக் கொள்வோம்.
படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிடி. இந்தக் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் நான் யோசிக்கவில்லை. காலில் அடிபட்டு இருந்த நிலையிலும்கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.
The post “என் ஆசை இந்தப் படத்தில்தான் நிறைவேறியது” – சுந்தர்.சி-யின் சந்தோஷம் appeared first on Touring Talkies.
]]>The post பட்டாம்பூச்சி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>தான் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஜெய் நாளைய தினம் தூக்கிலிடப்பட இருக்கும் நிலையில் ‘மாலை முரசு’ பத்திரிகையின் பெண் ரிப்போர்ட்டரான ஹனிரோஸை சந்திக்க விரும்புகிறார்.
தன்னைக் காண வந்த ஹனிரோஸிடம், “இத்தனை நாட்களாக வெளியில் போலீஸ் தேடி வரும் ‘பட்டாம் பூச்சி’ என்ற சீரியல் சைக்கோ கொலைகாரன் நான்தான்” என்ற உண்மையைச் சொல்கிறார் ஜெய்.
இந்தச் செய்தி வெளியில் பரவ.. போலீஸ் துறை பரபரக்கிறது. ஜெய்யின் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டு, அவர் செய்த சீரியல் கொலைகளைக் கண்டறிய போலீஸ் அதிகாரியான சுந்தர்.சி நியமிக்கப்படுகிறார்.
ஜெய் தந்திரமாக பல வழிகளில் சுந்தர்.சி-யை ஏமாற்றி மேலும் ஒரு கொலையை செய்து போலீஸை குழப்பி வைக்கிறார். இதனாலேயே நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி இல்லை என்று சொல்லி தப்பிக்கவும் செய்கிறார்.
ஆனால் உண்மையில் கொலையாளி ஜெய்தான் என்பதை நம்பும் சுந்தர்.சி எப்படியாவது ஜெய்க்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக போலீஸ் ஏட்டுவான இமான் அண்ணாச்சி மூலமாக ஜெய்யின் கோபத்தைத் தூண்டிவிட.. அது விபரீதமாகிறது.
இதென்ன விபரீதம்..? ஜெய் என்ன ஆனார்..? சுந்தர்.சி தனது பணியை செய்து முடித்தாரா..?” என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் படத்தின் திரைக்கதை.
சுந்தர்.சி மிக அளவான நடிப்பை கொடுத்தும், தேவைப்பட்ட இடங்களில் படத்தை சிறிது தூக்கி நிறுத்துவதைப் போல, தனது நடிப்பினை கச்சிதமாகச் செய்திருக்கிறார். பூனை-எலி துரத்தல் கதை என்பதால் திரைக்கதை ஓடிக் கொண்டேயிருப்பதால் சுந்தர்.சி.யும், ஜெய்யும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு ஓடி நடித்திருக்கிறார்கள்.
வழக்கமாக இல்லாமல் புதிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெய்க்கு தனி பாராட்டுக்கள். தனது மேனரிசமான தோள்பட்டையையும், கழுத்தையும் அவ்வப்போது திருப்பிக் கொள்ளும் அந்த நடிப்புக்கே தனியாக பாராட்ட வேண்டும். சைக்கோ கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை கடைசிவரையிலும் அவர் காண்பித்திருக்கிறார்.
இதுவரையிலும் பார்த்திருக்காத அவரது நடிப்பை போலீஸ் விசாரணையிலும், குற்றங்களை செய்யும்போதும், கிளைமாக்ஸ் காட்சியிலும் பயங்கரமாக செய்து காட்டியிருக்கிறார் ஜெய். இந்தப் பயங்கரவாதியை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறக்க முடியாதுதான்.
நிச்சயமாக தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளெல்லாம் இந்தக் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்தான். இதனால் மலையாளத்தில் இருந்து ஹனிரோஸ் என்ற அழகு தேவதையை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பத்ரி.
கிளைமாக்ஸ் காட்சியில் இவர் படும் பாட்டை பார்த்தபோது நமக்கு பகீரென்கிறது. அழகு தேவதையாக இருந்தவரை இந்தப் பாடு படுத்துகிறாரே என்று ஜெய் மீது நமக்கு வெறியே ஏற்படுகிறது. ஹனிரோஸின் தவிப்பான அந்த நடிப்பு, படத்திற்கு இறுதியில் கொஞ்சம் ஆக்சிஜனை கூட்டியிருக்கிறது.
இமான் அண்ணாச்சியின் நடிப்பும், அவரது மகளான மானஸ்வியின் சிறப்புக் குழந்தைக்கான நடிப்பும் சிறப்புதான். படத்தில் அநியாயமாக ஜெய்யின் கைகளால் செத்துப் போகும் அந்த அப்பாவிகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.
இந்த அளவுக்கு கொடூரத்தை வெளிப்படையாக காட்ட வேண்டுமா இயக்குநரே என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது. சைக்கோ கொலைகாரன் என்பதற்கான அறிமுகத்தை புகைப்படங்களாலும், வசனத்தாலுமே காட்டியிருக்கலாம்.
இந்தக் கதை1986-ல் நடப்பதாகச் சொல்லியிருப்பதால் அதற்காகவே வேலை மெனக்கெட்டு பல காட்சிகளில் அம்பாசிடர் கார்களைத் தவிர வேறு எதையும் காட்டாமல் தவிர்த்து பெரும்பாடு பட்டிருக்கிறார் இயக்குநர்.
சண்டை காட்சிகளை வடிவமைத்த சண்டை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. கிளைமாக்ஸ் சண்டை காட்சி பயத்தைத் தந்தது.. கொடூரமும்கூட. படம் நெடுகிலும் ஒளிப்பதிவை கலராகவே வழங்கியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுக்கள். ஜெய் சம்பந்தப்பட்ட கொலை காட்சிகளை மட்டும் சிவப்பு லைட்டுகள் சிந்திய வெளிச்சத்தில் வைத்து பதற்றத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.
படத் தொகுப்பாளர் சண்டை காட்சிகளில் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார் போலும். பின்னணி இசையில் கொடுத்திருக்கும் பில்டப்பும், வேகமும் படத்திற்கும் வேகத்தைக் கூட்டியிருக்கிறது.
இந்தப் படம் இதற்கு முன்னால் வெளி வந்த பல தமிழ்ப் படங்களின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது என்பதும் உண்மைதான். முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் சற்று தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
“ஜெய்யின் பட்டாம்பூச்சி வேடத்தை வெளிப்படுத்தி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் போகிறேன்…” என்பதை சுந்தர்.சி சவாலாக சொன்னாலும் அதற்குத் துணையாக போலீஸும் இருப்பது போலவே திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் ஹீரோயிஸ கதையாக தனியொரு மனிதனாக ஜெய்யை எதிர்த்து சுந்தர்.சி போராடுவதுபோல திரைக்கதை அமைத்ததினால் சுந்தர்.சி.யும், ஹனிரோஸும் கஷ்டப்பட்டு, அவரது மகளும் கஷ்டப்பட்டு.. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் இழுக்கப்பட்டதுபோல தோன்றுகிறது. கொஞ்சம் முன்னதாகவே ஜெய்க்கு முடிவுரை தந்திருக்கலாம்.
முதல் பாதியை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பத்ரி, இரண்டாம் பாதியில் இன்னும் அடித்து ஆடியிருக்க வேண்டும்.
படத்தில் வரும் சில ட்விஸ்ட்களை கச்சிதமான இடத்தில் பொருந்தி வரும் அளவுக்கு, இன்னும் சுவாரஸ்யமாக திரைக்கதையை அமைத்திருந்தால் படம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
பட்டாம்பூச்சி – பயங் கொள்ள வைக்கிறது..!
RATING : 3 / 5
The post பட்டாம்பூச்சி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “சில நடிகர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்” – இயக்குநர் சுந்தர்.சி.யின் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>இவர் இயக்கிய ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை-2’ போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும், குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள்.
அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சுந்தர்.சியின் இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் ‘அரண்மனை-3’ திரைப்படம் உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பு இந்தப் படத்தைத் தயாரிக்க C.சத்யா இசையமைக்கிறார்.
ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படங்கள்தான். படத்தை பார்க்கின்ற சிறுவர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.
‘அரண்மனை’ படத்தின் 2 பாகங்களும் நீங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. ‘அரண்மனை’ படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால், உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும் நடிகர்கள், தொழில் நுட்பக் குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.
‘அரண்மனை’ படத்தின் முதல் 2 பாகங்களைவிடவும் இந்த அரண்மனை-3 படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
எல்லோரும் சொல்வார்கள் “அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள்” என்று..! ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏற்கனவே உள்ள விஷயங்களைவிட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும்.
‘அரண்மனை’ படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரங்கள்தான்.
‘அரண்மனை பாகம்-1’-ஐ உதயநிதிதான் வெளியிட்டார். தற்போது இந்த ‘அரண்மனை-3’ படத்தையும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்தப் படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி மட்டும்தான்.
‘அரண்மனை-1’ படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான். தற்போது ‘அரண்மனை-3’ படத்தைப் பார்த்துவிட்டு “அருமையாக இருக்கிறது” என்று சொன்னவரும் அவர்தான்.
இப்படத்தில் ஆர்யா உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். ஆர்யா, தயாரிப்பாளர்களின் நடிகர். இந்த நிமிடம்வரை பிஸினஸ்வரை இன்வால்வ் ஆகி அக்கறையுடன் கேட்பார், உதவி செய்வார். பெரிய பக்க பலமாக இருக்கிறார். நடிகராகவும் சிறப்பாக பணி புரிந்தார். கடுமையான காட்சிகளைக்கூட புன்னகையுடன் எதிர்கொள்வார். நிறைய நடிகர்கள் மொத்த சம்பளத்தில், எண்பது சதவிகிதத்தை வாங்கிக் கொண்டு, எப்படா படப்பிடிப்பு முடியும் என நினைத்து ஓடுவதிலேயே இருப்பார்கள். ஆனால் ஆர்யா அப்படி அல்ல…” என்றார்.
The post “சில நடிகர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்” – இயக்குநர் சுந்தர்.சி.யின் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>The post V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை ரைட் ஐ தியேட்டர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக V.Z.துரை, S.M.பிரபாகரன் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
இயக்குநர் V.Z.துரை தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது
ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, வசனம் – மணிஜி, இணை தயாரிப்பு – RS வெங்கட், APV மாறன்.
இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் துரை, நாயகன் சுந்தர்.சி மற்றும் படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
The post V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவரப் போகும் ‘அரண்மனை-3’ appeared first on Touring Talkies.
]]>இவர் இயக்கிய ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை-2’ போன்ற பேய் படங்கள் நகைச்சுவையை புகுத்தி, குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது.
‘அரண்மனை’ படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது ‘அரண்மனை-3’ படமும் தயாரிக்கப்பட்டு ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது.
இந்த ‘அரண்மனை-3’ படம் முதல் இரண்டு பாகங்களைவிட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி மூவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவ்வருடம் நம்மை விட்டுப் பிரிந்த நகைச்சுவை மன்னன் விவேக் அவர்கள் இப்படத்தில் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்கம் – சுந்தர்.சி, ஒளிப்பதிவு – U.K.செந்தில்குமார், இசை – C.சத்யா, படத் தொகுப்பு – ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் – குருராஜ், சண்டை இயக்கம் – பீட்டர் ஹெய்ன், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு நிறுவனம் – ஆவ்னி சினிமேக்ஸ், தயாரிப்பாளர் – குஷ்பு.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்தக் கிளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே 6 மாதங்கள் நடைபெற்றது.
முந்தைய இரு படங்களைவிட, பிரம்மாண்டமான பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
The post இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவரப் போகும் ‘அரண்மனை-3’ appeared first on Touring Talkies.
]]>The post வித்தியாசமான அனுபவங்களைத் தரும் கொரோனா காலத்திய படப்பிடிப்புகள்..! appeared first on Touring Talkies.
]]>தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.
சுந்தர்.சி,யின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார்.
இப்படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் காக்குமனு, யோகிபாபு, ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் ரோஸ் கார்டன் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு அருகிலுள்ளது.
26-வது நாளாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு அனுபவம் பற்றி அஸ்வின் காக்குமனு பேசும்போது, ”இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது. வழக்கமாக பட செட்டில் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கை குலுக்கி கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்திக் கொள்வோம். இப்போது அதற்கெல்லாம் இடமில்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அரசின் பாதுகாப்பு முறைகளோடு நடக்கிறது. முதலில் வெப்ப சோதனை நடத்துவதில் இருந்து கிருமி நாசினி பயன்படுத்துவதுவரை எல்லாமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு சுந்தர்.சி சார் வந்தார். எல்லோரிடமும் கலகலப்பாக பேசி ஊக்கப்படுத்தினார். பிரசன்னாவுடன் பேசியது நல்ல அனுபவமாக இருந்தது .அவர் தனது திரை வாழ்க்கையைப் பற்றியும் அதில் அவர் கற்ற பாடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
யோகி பாபு அனைவருடனும் ஜாலியாக பேசி படப்பிடிப்புத் தளத்தைக் கலகலப்பாக மாற்றினார். சரியான சமூக இடைவெளியுடன் பழக வேண்டி இருந்ததால் தள்ளி நின்று பேசவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் பழகினோம்…” எனறார்.
கதைப்படி கதாநாயகியின் வீட்டில் நடப்பதாக ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
நாயகியாக நடிக்கும் ரித்திகா சென் அன்றுதான் முதல் நாளாக படப்பிடிப்புக்கு வந்திருந்தார்.
அவர் தனது படப்பிடிப்பு அனுபவம் பற்றி பேசும் போது, “முதலில் எனக்குப் பயமாக இருந்தது. இந்தச் சூழலுக்கு பொருந்துவது கடினமாக இருந்தது. ஆனால், போகப் போக எல்லாம் சரியாகி விட்டது. அந்த சமூக இடைவெளி என்கிற அந்த அசௌகரியத்தை உணர முடியாதபடி அனைவரும் நல்ல ஒத்துழைப்போடு படப்பிடிப்பு நடத்தினார்கள். எனவே, முதலில் பயந்திருந்த நான் மெல்ல மெல்ல அந்த சூழலோடு ஒன்றிவிட்டேன்…” என்கிறார்.
யோகி பாபு பேசும்போது, “அண்ணன் சுந்தர்.சி எனது குடும்ப நண்பர் போன்றவர். அவரது நிறுவனம் எனது குடும்ப நிறுவனம் போன்ற உணர்வு எனக்கு உண்டு. அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் வந்து விடுவேன். கதையெல்லாம் கேட்க மாட்டேன். அப்படித்தான் இந்தப் படத்திலும் கதை கேட்காமல் நடிக்க வந்து விட்டேன். பிறகு வந்து கதையைக் கேட்டபோது அருமையான கதையாக இருந்தது..” என்றார்.
இயக்குநர் பத்ரி பேசும்போது, ”குறைந்த ஆட்களைக் கொண்டு 70 பேருக்குள் இருக்குமாறு படப்பிடிப்பு நடத்துவது முதலில் சிரமமாக இருந்தாலும், அதற்கான முன் தயாரிப்புகளைச் சரியாகச் செய்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம்.
இதற்குக் காரணம் சுந்தர்.சி சார் அவர்களிடம் கற்றுக் கொண்ட அந்த திட்டமிடலும் சரியான நேரம் பராமரிப்பதும்தான். அதுமட்டுமல்லாமல் படக் குழு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சரியாகத் திட்டமிட்டு இந்த படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இன்று 26-வது நாள். எல்லாவற்றையும்விட பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் எல்லா சிரமங்களையும், அசௌகர்யங்களையும் மறந்துவிட்டு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்..” என்கிறார்.
26-வது நாளான அன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு நள்ளிரவு 2 மணிவரை தொடர்ந்து முடிவடைந்தது.
செப்டம்பரில் தொடங்கிய இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது.
The post வித்தியாசமான அனுபவங்களைத் தரும் கொரோனா காலத்திய படப்பிடிப்புகள்..! appeared first on Touring Talkies.
]]>