The post சூப்பர் ஹிட் இயக்குனருக்கு வலைவீசும் சியான் விக்ரம்? appeared first on Touring Talkies.
]]>ஆனால், இவர்கள் சந்திப்பு அவரது மகன் துருவ்விக்ரம் படத்திற்காகவே என்று அனைவரும் நம்பும் நிலையில், விக்ரம் புதிய படத்தில் கமிட் ஆக போவதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் விக்ரமின் மகன் துருவ்விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் கபடியை மையமாக கொண்ட படக்கதையில் நடிக்க இருக்கிறார்.
நடிகர் சூர்யா, கங்குவா படத்தைத் தொடர்ந்து புறநானூறு படத்தில் நடிக்க இருந்தார்.சுதா கொங்காரா மற்றும் சூர்யா இருவரும் புறநானூறு படத்திற்கு கமிட் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின், இந்த படம் தற்போதைக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்போது சுதா கொங்காராவிற்கு விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் அடுத்த புராஜெக்ட்டில் இணைவதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படத்தில் விக்ரம் நடிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் இவர்கள் கூட்டணி குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post சூப்பர் ஹிட் இயக்குனருக்கு வலைவீசும் சியான் விக்ரம்? appeared first on Touring Talkies.
]]>The post புறநானூறு படத்தை அப்புறம் பாத்துக்கலாம்… துருவ் விக்ரமை நோக்கி நகர்ந்த சுதா கொங்கரா… appeared first on Touring Talkies.
]]>அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இறுதி சுற்றுபடத்தை இயக்கி இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாது அந்தப்படம் மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்தது. அப்படத்தில் ரித்திகா சிங் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இதுவே மிகப் பெரிய திருப்பு முனையாக அவரை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல அமைந்தது.
மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்கவிருந்தார் அப்படம் சில காரணங்களால் தள்ளிபோனது. இந்நிலையில் விக்ரமின் மகனான துருவ் விக்ரமிற்கு ஒரு கதையை கூறியிருக்கிறார் என தகவல் வெளி வந்துள்ளது.விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்திற்கு பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் இப்படத்தில் கபடி வீரராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
The post புறநானூறு படத்தை அப்புறம் பாத்துக்கலாம்… துருவ் விக்ரமை நோக்கி நகர்ந்த சுதா கொங்கரா… appeared first on Touring Talkies.
]]>The post சூரரைப்போற்று சூரியாவுக்கு அப்போ சிம்புவுக்கு? சிம்புவின் 50 படத்தை இயக்க போவது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>சில காலங்களுக்கு முன்பு சிம்பு நடிப்பில் கவனம் செலுத்தாமல் கால் ஷீட் கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு போகாமல் பல கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.அதன் பிறகு உடல் எடையை குறைத்து ஃபிட்டாக எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்பை பூர்த்தி செய்யவில்லை இருந்தாலும் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து அப்படம் ப்ளாக் பஸ்டர் ஆனது.மாநாடு படத்தின் ஹிட்டிற்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்க அப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் பத்து தல படத்தில் நடித்திருந்தார் அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.அதேசமயம் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேச்சுப் பொருள் ஆகியது.
இந்த சூழலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.இதன் பின்னர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர்.அஸ்வத் இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் .அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிம்புவின் படத்தை தொடங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சிம்புவின் 50ஆவது படத்தின் இயக்குனர் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தை இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றி படங்களை கொடுத்து சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவிடம் சுதா கொங்கரா சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரரைப்போற்று படத்துக்காக தேசிய விருதை பெற்ற சுதா கொங்கரா சிம்புவின் 50வது படத்தை இயக்க போவதாக தகவல் பரவும் நிலையில் சிம்புவின் 50வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
The post சூரரைப்போற்று சூரியாவுக்கு அப்போ சிம்புவுக்கு? சிம்புவின் 50 படத்தை இயக்க போவது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post இந்தி படத்தில் நடிக்கும் சூர்யா! அப்போ புறநானூறு வராதா? appeared first on Touring Talkies.
]]>இப்படி கூட்டணி அமைத்ததின் அறிவிப்பு வந்தது மட்டுமே மிச்சம் படப்பிடிப்போ தொடங்கப்பட்டாமல் ஊசலாடி கொண்டு இருக்கிறது.மனதில் பட்டத்தை எல்லாம் அவரவர் பாணியில் இந்த படம் வெளிவராது அப்படி இப்படி என கிளப்பி விட சுதாரித்து கொண்ட சுதா கொங்கராவும் சூர்யாவும் கூட்டாக ஒரு அறிக்கை விட்டார்கள் அதில் புறநானூறு படத்தை இயக்க மேலும் காலம் அவகாசம் தேவைப்படுகிறது என்று.
சரி இப்படத்தின் கதை தான் என்ன? இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நடந்த கதையாகவும் அதில் சூர்யா இந்தி எதிர்ப்புப் போராட்டாத்தில் கலந்துகொண்டு குரல் கொடுப்பவராக கதையை அமைத்துள்ளார் சுதா கொங்கரா.இதற்கேற்றவாறு காட்சிகளை அமெரிக்கன் கல்லூரியில் படம் பிடிக்கலாம் என பார்த்தால் அங்கு கல்லூரி தேர்வும் அதைதொடர்ந்து தேர்தலும் வருவதால் படபிடிப்பை நடந்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார் இயக்குனர்.
அதேசமயம் மும்பை வாசியாக மாறியுள்ள சூர்யா ஜோதிகாவின் விருப்பத்தின் பேரில் ஒரு இந்தி படத்தில் நடிக்க போகிறார்.அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் இருந்தவாறு இந்தி திரைப்படங்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இன்னொருபக்கம் 1960ல் நடந்த மொழி உரிமை போராட்ட காட்சிகளை இன்றைய காலக்கட்டத்தில் படமாக்க மிகப்பெரிய அரங்குகள் செட்கள் அமைத்து அதில் நூற்றுக்கணக்கானவர்களை நடிக்க வைக்க எக்கச்சக்க செலவு பிடிக்கும் என்பதால் பட்ஜெட் எகிறும் என்று கண்டித்துள்ளார்கள். கதைக்கு தேவையான காட்சிகள் பல உள்ளதால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக திரைப்படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக டாப் நட்சத்திரங்கள் நடிக்கும் படம் என்றால் ஒருநாளைக்கு சுமாராக ரூ.35 லட்சம் முதல் 40 லட்சம் வரை செலவாகும் என கணக்கிட்டால் படப்பிடிப்புக்கு மட்டுமே 40 கோடி ஆகும் என்ற பதட்டத்தால் படத்தின் கதையை இரண்டு அரை மணி நேரமாக சுருக்கிய பிறகு படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என சூர்யா தரப்பில் சொல்ல அதற்கு கதையில் கைவைத்தால் கதையின் சாராம்சம் கெட்டுவிடும் என்று சொல்லி இருக்கிறார் சுதா கொங்கரா.அப்படி கதையை சுருக்க வேண்டும் என்றால் அதற்கு மேலும் கால அவகாசம் தேவை என கூறியிருக்கிறார் சுதா கொங்கரா தரப்பு.
இந்தநிலையில் இப்படி மாறி மாறி விவாதங்கள் நடக்க ஷூட்டிங் தேதியை முடிவு செய்ய முடியாமல் அமைதியாக காத்துகொண்டு இருக்கிறது புறநானூறு.
The post இந்தி படத்தில் நடிக்கும் சூர்யா! அப்போ புறநானூறு வராதா? appeared first on Touring Talkies.
]]>The post சூர்யாவின் புறநானூறு தள்ளி போகிறதா? ட்ராப் ஆகிறதா? சுதா கொங்கரா கொடுத்த அப்டேட் appeared first on Touring Talkies.
]]>கடைசியாக 2022-ல் வெளிவந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பெரிதளவில் ரசிகர்களை ஈர்காமல் போனது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் வெளியாகியது படத்தின் அறிவிப்பு முதலே தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது கங்குவா திரைப்படம்.
இந்நிலையில் சில காலங்களுக்கு முன் புறநானூறு படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், புறநானூறு படத்திற்கு இன்னும் நேரம் தேவைப்படுவதாகவும் ரொம்ப ஸ்பெஷலான இந்த கூட்டணி எங்களின் இதயத்திற்கு நெருக்கமானது. எங்களது பெஸ்ட் கொடுக்க விரும்புகிறோம் இந்தப்படத்தை விரைவில் துவங்குவோம் என குறிப்பிடப்பட்டு அதில் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இருவரின் கையெழுத்துகளும் இடம்பெற்று இருந்தது.
ஆனால் சினிமா வட்டாரங்களின் தகவல்படி கதையில் சூர்யா சில மாற்றங்கள் செய்ய கேட்டார் அதற்கு சுதா கொங்கரா சம்மதிக்கவில்லை இப்பிரச்சினை சில காலமாகவே இருவருக்குள் நிலையவியதாகவும் அதனால் இப்படம் ட்ராப் ஆகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.முன்னரே வணங்காண் திரைப்படம் ட்ராப் நிலையில் இப்படமும் ட்ராபா என ரசிகர்கள் மிகவும் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
The post சூர்யாவின் புறநானூறு தள்ளி போகிறதா? ட்ராப் ஆகிறதா? சுதா கொங்கரா கொடுத்த அப்டேட் appeared first on Touring Talkies.
]]>The post “விடுதலை பெற்றேன்!”: இயக்குனர் சுதா நெகிழ்ச்சி appeared first on Touring Talkies.
]]>தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. ‘சூரரைப் போற்று’ சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் “சிறந்த வலி. சிறந்த எரிச்சலூட்டும்! ஒரு மாத இடைவெளியில்! இது நான் விரும்பிய இடைவேளை அல்ல” என்று ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “என் இருண்ட இடைவெளியில் இருந்து விடுதலை.என் நண்பனின் “கடைசி நாள்” படப்பிடிப்பு! ” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post “விடுதலை பெற்றேன்!”: இயக்குனர் சுதா நெகிழ்ச்சி appeared first on Touring Talkies.
]]>The post பாலிவுட்டில் தயாரிப்பாளராகிறார் நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.
]]>சுதா கொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.
ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சூரரைப் போற்று’ திரையாக்கம் செய்யப்பட்டிருந்தது.
இதில் கோபிநாத்தின் கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த ‘மாறா நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கதாப்பாத்திரமாகவே நாயகன் சூர்யா, படத்தில் வாழ்ந்திருந்தார்.
அந்த கதாப்பாத்திரத்தின் வாழ்க்கைப் பயணமே ‘சூரரைப் போற்று’ படமாக உருப்பெற்றது. ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே ‘சூரரைப் போற்று’ என கொண்டாடப்பட்டது.
78-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில் 10 இந்திய மொழி திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டன. அதில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. மேலும் 93-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான போட்டியிலும் ‘சூரரைப் போற்று’ திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
IMDB தளம் தொடங்கப்பட்ட கடந்த முப்பது ஆண்டுகளில் 9.1 சதவீதம் அளவிற்கு அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஒரே இந்திய மொழித் திரைப்படம் ‘சூரரைப் போற்று’ மட்டுமே. ‘சஷாங் ரிடம்ஷ்ன்’, ‘காட் பாதர்’ என்ற உலகத் திரைப்பட வரிசையில் மூன்றாவதாக ‘சூரரைப் போற்று’ இடம் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், தற்போது பிரம்மாண்டத் தயாரிப்பாக இந்தியிலும் வெளிவர இருக்கிறது.
‘சூரரைப் போற்று’ இந்தி பதிப்பை சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க, நடிப்பில் தேர்ந்த பிரபலமான நடிகர் நடிகையர் நடிக்க இருக்கிறார்கள்.
இந்தி ரீமேக் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில், “சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் கேட்டது முதலே இது தென்னக ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அந்தக் கதையில் ஜீவன் அத்தகைய வலிமை வாய்ந்ததாக இருந்தது.
உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில் தயாரிப்பதும், தரமான படங்களை தொடர்ந்து தந்துவரும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது…” என சூர்யா தெரிவித்தார்.
இந்த படத்தின் நிஜ, நாயகரான கேப்டன், ஜி.ஆர்.கோபிநாத் குறிப்பிடும்போது, “படத்தின் இயக்குநர் சுதா ‘என் கதையைச் சொல்ல வேண்டும்’ என்று என்னை அணுகியபோது நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவருக்கு இருந்த அக்கறையும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணமும் என்னை ஒப்புக் கொள்ள வைத்தன..!
சிறு நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தங்கள் கனவுகளைத் துரத்த குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. தற்போது இந்தி ரீமேக்கையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்..” என்றார்.
The post பாலிவுட்டில் தயாரிப்பாளராகிறார் நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.
]]>