The post கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய தமிழ்ப் படம்…! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தினை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கிறார்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழக கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதைதான் இந்த ‘அட்ரஸ்’ திரைப்படம்.
இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின் டீஸரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து இயக்குநர் இராஜமோகன் பேசும்போது, “நான் இயக்குநர் விஜய் மில்டனிடம் பல திரைப்படங்களில் உதவியாளராக வேலை பார்த்தவன். திரையுலகில் அவர்தான் என் குரு. இயக்குநராக மாறிய பின்னரும் அவர் அழைக்கும்போது அவர் படங்களில் வேலை பார்ப்பேன்.
விஜய் மில்டன் சார் இப்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அவர்களை வைத்து, படம் இயக்கி கொண்டிருக்கிறார். அதில் நானும் வேலை பார்த்தேன். எனக்கு சிவராஜ் குமார் அவர்களை முன்பிருந்தே தெரியும்.
அவர் என்னை குறித்து விசாரித்தபோது, என் படத்தின் டீஸரை காட்டினேன். ஆச்சர்யப்பட்டு படத்தை குறித்து அனைத்து விசயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். என்னை வெகுவாக பாராடியதோடு படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடத்திலும் இந்த படம் குறித்து பாரட்டி பேசினார்.
ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு மெனக்கெடலுடன் அனைவர் முன்னிலையிலும் பாரட்டியது பெரும் மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அவர் அத்தோடு நில்லாமல் டீஸரை கேட்டு வாங்கி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.
மேலும், படத்தையும் படக் குழுவினரையும் பாராட்டி ஒரு வீடியோ பதிவு செய்து கொடுத்து, “இதை வெளியிடுங்கள்…” என்றும் கேட்டுக் கொண்டார். மிக உச்சத்தில் இருக்கும் நடிகர், எங்கள் படத்தை இந்தளவு பாராட்டியது எங்களுக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்துள்ளது.
எங்களது ‘அட்ரஸ்’ படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடமிருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஜனரஞ்சகமான படைப்பாக இருக்கும்…” என்றார்.
The post கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய தமிழ்ப் படம்…! appeared first on Touring Talkies.
]]>The post கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் appeared first on Touring Talkies.
]]>இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தை விஜய் மில்டனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் நிறுவனம், பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
தனது முதல் படத்திலேயே கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ் குமாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் விஜய் மில்டன்.
இப்படத்தில் சிவராஜ் குமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய் மில்டன். படத்துக்கு ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். மக்கள் தொடர்பு – ஜான்சன்.
இப்படத்தின் பூஜை பெங்களூரில் நேற்று நடந்தது. வரும் நவம்பர் 23-ம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள இசைக் கல்லூரியில் ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
The post கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் appeared first on Touring Talkies.
]]>