The post தெலுங்கு வாடை வருது – நாடகங்களில் நடித்து விட்டு வா.! appeared first on Touring Talkies.
]]>பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நாயகியாகவும் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தவர் பி.ஆர் வரலட்சுமி.அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகளில் இதுவரை 600 திரைப்படங்களில் நடித்துள்ளார். பூர்வீகம் தெலுங்கு என்பதால் சினிமாவில் தமிழ் பேசும் போது தெலுங்கு கலந்த தமிழில் பேசியுள்ளார்.
இதைப் பார்த்த இயக்குனர் உனக்கு தெலுங்கு வாடை வருகிறது அதனால் நீ நாடகங்களில் நடித்து விட்டு வா எனக் கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.வீடியோ கீழே….
The post தெலுங்கு வாடை வருது – நாடகங்களில் நடித்து விட்டு வா.! appeared first on Touring Talkies.
]]>The post நிஜயமாகவே நாடகம் நடத்தி சிவாஜியை மீட்ட எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>அவர் வெளியூரில் இருந்தபோது, பொன்னுசாமியை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. அப்போது பொன்னுசாமி, “பரமக்குடியில் நாடகம் நடத்திய போது காண்ட்ராக்டர் பிரச்சினை செய்துவிட்டார். நமது குழுவினரையும், பொருட்களையும் அவரது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை” என்றார்.
அந்த குழுவில் அப்போது சிவாஜியும் இருந்தார்.
உடனே பரமக்குடி சென்ற எம்.ஆர்.ராதா, அந்த காண்ட்ராக்டரை சந்தித்தார். நாடகத்தில் கூட நடக்காத ஒரு சம்பவத்தை நடத்தினார்.
நாடகக் குழுவினரையும், பொருட்களையும் மீட்டு வந்தார்.
அப்படி எம்.ஆர்.ராதா என்ன செய்தார்.. அந்த சுவையான சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நிஜயமாகவே நாடகம் நடத்தி சிவாஜியை மீட்ட எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>The post சொந்தக்குரலில் சிவாஜி கணேசன் பாடிய பாடல் எது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அந்த காலகட்டத்தில், மதுரை பால கான சபா என்ற பிரபலமான நாடக கம்பெனி இருந்தது. அந்த நிறுவனம், திருச்சியில் நாடகங்களை நடத்திக்கொண்டு இருந்த நேரம்…
அந்த கம்பெனியில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இளைஞர் கணேசனுக்கு ஏற்பட்டது. நாடக கம்பெனியினர் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு நடந்தது அந்த சுவாரஸ்யமான சம்பவம்.. அப்போதுதான் இளைஞர் கணேசன் பாடினார்..
அது என்ன சுவாரஸ்ய சம்பவம்… அவர் பாடிய பாடல் எது..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post சொந்தக்குரலில் சிவாஜி கணேசன் பாடிய பாடல் எது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post சிவாஜியின் ஒரிஜினல் கேரக்டர் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>“எந்த அளவுக்கு நடிகராக சிவாஜி ஜெயித்து காட்டினாரோ, அதே அளவுக்கு நல்ல மனிதனாகவும் வாழ்ந்து காட்டினார்.
எத்தனையோ படங்கள் நடித்து, பண செல்வாக்கு இருந்தாலும் வீட்டு சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாராம் சிவாஜி. அதே போன்று எப்போதுமே தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவாராம். நடிகர் நாகேஷ் போன்ற முக்கிய நடிகர்கள் நடு இரவில் வீட்டிற்கு வந்தாலும், அப்போது கூட தோசை ஊற்றி, தேங்காய் சட்னி வைக்க சொல்லி சாப்பாடு கொடுப்பார்.
ம். அவர்களுடனே அமர்ந்து பேசி, தரையில் பாய் போட்டு தூங்குவார்.
அதே போன்று தான் நடித்து கொண்டிருந்த காலம் வரைக்கும், படப்பிடிப்புக்கு 1 மணி நேரத்திற்கு முன்பே சென்று விடும் பழக்கமுடையவர் சிவாஜி. அவரை பார்த்து நிறைய நடிகர்கள் இந்த பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். மேலும் தினமும் வீட்டில் அசைவ உணவு சமைக்க சொல்லி , 10 பேருக்கான சாப்பாட்டுடன் தான் செல்வாராம். எல்லாருடனும் சாப்பாடை பகிர்ந்து சாப்பிடுவார்.
அதே போன்று யார் உதவி என்று சிவாஜியிடம் சென்றாலும் யோசிக்காமல் உதவி செய்ய கூடியவர் இவர். மேலும் உதவி பெறுபவர்களிடம் இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம், அது தான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி என்று கேட்டு கொள்வார். இதனாலேயே சிவாஜி செய்த பல உதவிகள் வெளியில் தெரியாமலேயே போயிருக்கிறது.
சிவாஜிக்கு இருந்து பெயர் மற்றும் புகழுக்கு அவரை தேடி நிறைய பதவிகள் வந்திருக்கின்றன. அவர் நினைத்திருந்தால் தமிழக அரசியலில் எப்படிபட்ட பதவியையும் கேட்டு வாங்கியிருக்கலாம். ஆனால் சிவாஜி அதற்கு எல்லாம் ஆசை படவே இல்லையாம். என்றுமே எளிமையாக வாழவே விரும்பியிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” என்றார் மணி.
The post சிவாஜியின் ஒரிஜினல் கேரக்டர் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post கடைசிவரை நிறைவேறாத சிவாஜியின் ஆசை! appeared first on Touring Talkies.
]]>உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது இயக்குனர் மணிரத்தினமும் ஹார்ட் பிரச்சனையால் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டு இருந்தார்.
இதை கேள்விப்பட்ட சிவாஜி மணிரத்னத்தின் மகன் நந்தனை சந்தித்து பேசி இருக்கிறார். பொதுவாக சில விஷயங்களை பேசிய அவர் திடீரென, ‘உன் அப்பாவிடம் சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுடா’ என்று கேட்டிருக்கிறார். இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த நந்தன் தன் அப்பாவிடம் இதை அப்படியே கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட மணிரத்தினம், ‘சிவாஜி போன்ற ஒரு ஜாம்பவானை வைத்து படமெடுப்பது என் பாக்கியம். விரைவில் அவருக்கான கதையை தயார் செய்வேன்’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த சம்பவம் நடந்த மறுநாளே சிவாஜி இறந்து விட்டார். அந்த வகையில் நடிகர் திலகத்தின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
இதையடுத்து மணிரத்னம், ‘சிவாஜி மட்டும் இன்னும் வாழ்ந்திருந்தால், யாரும் இதுவரை பார்க்காத ஒரு கேரக்டரில் வேறு மாதிரி காட்டி இருப்பேன்’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
The post கடைசிவரை நிறைவேறாத சிவாஜியின் ஆசை! appeared first on Touring Talkies.
]]>The post பெரிய வீடு கட்டாதே!: பாரதிராஜாவிடம் சிவாஜி சொன்னது ஏன்? appeared first on Touring Talkies.
]]>“மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் சிவாஜி கணேசன். அவரை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா சென்றார்.
அப்போது சிவாஜி, ‘அன்று மதியம் சாப்பிட்ட பிறகு நெஞ்சு அடைத்தது. பிரபு, ராம் என கத்தி கத்தி கூப்பிட்டேன். ஆனால் ஒருத்தரும் வரவில்லை. அதனால உதவிக்கு யாரையாவது அழைத்தால், அவர்கள் வரும் அளவிற்கு சிறிய அளவில் வீட்டை கட்டு. பெரிய வீடாக கட்டாதே’ என்றார் சிவாஜி” என்று கூறினார் பவா.
The post பெரிய வீடு கட்டாதே!: பாரதிராஜாவிடம் சிவாஜி சொன்னது ஏன்? appeared first on Touring Talkies.
]]>The post இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்! appeared first on Touring Talkies.
]]>அவர், “தமிழில் தங்கப்பதக்கம் படத்தில் போலீஸ் கமிஷனர் சௌத்ரியா நடித்த சிவாஜிதான் ஹீரோ. அவரது மகனாக – வில்லனாக வரும் ஸ்ரீகாந்த்துக்கு காட்சிகள் குறைவு.
இதே கதையை இந்தியில் ரமேஷ் சிப்பி, சக்தி என்ற பெயரில் ரீ மேக் செய்தார். அங்கே மகன் வேடத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, அவரது கேரக்டரை வில்லனாக காட்டாமல், சந்திர்ப்ப சூழலால் தவறான வழிக்குச் சென்றதாக கதை மாற்றப்பட்டது. தவிர, இறுதியில் வில்லன்களை அவரே புரட்டி எடுப்பார்.
இந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது” என்றார் செல்வராஜ்.
The post இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்! appeared first on Touring Talkies.
]]>The post “சிவாஜியை காப்பி அடிக்கவில்லை!”: ஜெயம்ரவி appeared first on Touring Talkies.
]]>இதில் நடிகர் ஜெயம் ரவி பங்கேற்று பேசும்போது, “திரைப்படங்களில் நல்லவன் கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்புவது இல்லை. காரணம் அதில் ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்த முடியும். வில்லன் வேடங்கள் அப்படி அல்ல. கெட்டவனாக நடிக்கும்போது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.
பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக எப்படி நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் யாரையும் காப்பி அடிக்கவில்லை. ஏற்கனவே சிவாஜி கணேசன் ராஜராஜசோழனாக நடித்து இருக்கிறார். அந்த படத்தை பார்க்காமல்தான் நடித்தேன். அதை பார்த்து இருந்தால் அவருடைய நடிப்பின் தாக்கம் எனக்குள் வந்து இருக்கும். எனது நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடு ஆகாது. என்னால் எப்படி முடியுமோ அப்படி நடித்தேன்” என்றார்.
The post “சிவாஜியை காப்பி அடிக்கவில்லை!”: ஜெயம்ரவி appeared first on Touring Talkies.
]]>The post விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? சொல்கிறார் சந்திரசேகர் appeared first on Touring Talkies.
]]>கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார். உடல் நலிந்த அவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே உணரமுடியாத நிலையில் அவர் இருப்பதுதான் சோகத்தை இந்நிலையில், விஜயகாந்தின் பல வருட நண்பரும், நடிகருமான வாகை சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவரது உடல்நிலை பற்றி பேசும்போது ‘எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களெல்லாம் காலத்திற்கும் வயதாகாமல் அப்படியே இருப்பார்கள் என நினைத்தேன். அதேபோலத்தான் விஜயகாந்தையும் நினைத்தேன்.
அவன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவன் இல்லை. நன்றாக உழைத்த உடம்பு அது. கடைசிவரை அவன் அப்படித்தான் இருப்பான் என நினைத்தேன். அதனால்தான் அவன் உடல்நலம் பாதிக்கப்பட்ட பின் அவனை நான் நேரில் சென்று பார்க்கவில்லை. அவனை பார்த்து 10 வருடம் ஆகிறது. அவன் உடல்நிலைக்கு காரணம் கெட்டப்பழக்கம் என்கிறார்கள். எத்தனையோ கெட்ட பழக்கம் கொண்ட நடிகர்களெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள். விஜயகாந்துக்கு வேறு என்னமோ நடந்துவிட்டது. இந்த நிலையில் இருக்கும் விஜயகாந்தை நேரில் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அதனால் பார்ப்பதை தவிர்த்து வருகிறேன்’ என பேசியுள்ளார்.
The post விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? சொல்கிறார் சந்திரசேகர் appeared first on Touring Talkies.
]]>The post மூணு வேளை சோத்துக்கு இப்படி ஒரு திண்டாட்டமா?… சிவாஜி கணேசன் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரே!! appeared first on Touring Talkies.
]]>அதாவது சிவாஜி கணேசன், ஸ்ரீபாலகானசபா என்ற நாடக சபையில்தான் நடிகராக இருந்தார். அப்பபோது காலை 5 மணிக்கே எழுப்பிவிட்டிடுவார்களாம். அதன் பின் குளித்துவிட்டு கடவுள் வாழ்த்து பாடிவிட்டு நடனப்பயிற்சியிலும் வசனப்பயிற்சியிலும் ஈடுபட தொடங்கிவிடுவார்களாம்.
எனினும் அங்கே சாப்பாட்டிற்கு மட்டும் பிரச்சனை இருந்ததாம். சாம்பார், கூட்டுப் பொரியல் என்றெல்லாம் சாப்பாடு இருக்காதாம். மோர், ரசம் என்றுதான் சாப்பாடு இருக்குமாம்.
அந்த அளவுக்கு சிரமப்பட்டாலும், நடிப்பில் தொய்வு இன்றி தனது முத்திரையைப் பதித்ததால் அத்தனை உயரத்துக்கு வந்தார் சிவாஜி.
The post மூணு வேளை சோத்துக்கு இப்படி ஒரு திண்டாட்டமா?… சிவாஜி கணேசன் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரே!! appeared first on Touring Talkies.
]]>