The post ஓங்கி அறைந்த சில்க்! ஷகிலா சொன்ன ஷாக் சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>அதில், “நானும் சில்க் ஸ்மிதாவும், ஒரு படத்தில் அக்கா தங்கையாக நடித்தோம். அப்போது,சில்க் ஸ்மிதா அறைவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது நான், சில்க் ஸ்மிதாவிடம், ‘அக்கா, எப்படி அடிப்பீங்க, மெதுவா அடிப்பீங்களா’ என்று கேட்டேன். அதற்கு சில்க் ஸ்மிதா, ‘அது ஷாட்ல வந்துடும்.. அது ஒன்னும் டென்சன் இல்ல..’ என்றார்.
ஆனால், அந்த ஷாட்டின் போது இயக்குனர் ஆக்க்ஷன் சொன்னதும் சில்க் ஸ்மிதா, என் கன்னத்தில் ஓங்கி பளார் என்று உண்மையாகவே அடித்துவிட்டார். வலி தாங்காமல், நான் அழுதே விட்டேன். அப்படி ஒரு அடி!
பலர் முன்னிலையிலும் சில்க் ஸ்மிதா என்னை அடித்தது தனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதில் இருந்து எனக்கு சில்க் ஸ்மிதா என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால், அவர் இறந்த பிறகு அவரை பற்றி எனக்கு புரிகிறது அவரை போல ஒரு அழகி கிடையாது, மிகவும் திறமைசாலி” என்று ஷகீலா அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
The post ஓங்கி அறைந்த சில்க்! ஷகிலா சொன்ன ஷாக் சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்? appeared first on Touring Talkies.
]]>இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகள்..
@ சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை தொடராக எடுப்பதாக அறிவித்தீர்களே.. என்ன ஆனது?
@ கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இசையும் அமைத்து உள்ளார். அவர் பாடல் எழுதி இருக்கிறாரா?
@ கொரோனா குமார் படத்துக்கு பெரும் தொகை அட்வான்ஸ் வாங்கிவிட்டு, படப்பிடிப்புக்கு சிம்பு செல்லவில்லை. இது சரிதானா?
@ முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறாரா?
@ ரஜினியின் தோல்வி படங்கள் என்னென்ன?
@ விஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார்?
@ மறைந்த நடிகர்நாகேசின் நிறைவேறாத ஆசை என்ன?
@ ராமர், கிருஷ்ணர் வேடத்தில் நடித்த என்.டி.ராமாராவை, இன்றும் கடவுளாகவே தெலுங்கு மக்கள் வணங்குகிறார்கள்; மறைந்த பிறகும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
கடவுள் வேடங்களில் என்.டி.ஆர். அப்படியே பொருந்திப் போனதற்குக் காரணம் என்ன?
# இந்த கேள்விகளுக்கு விடை தெரிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்? appeared first on Touring Talkies.
]]>The post சில்க் செய்த காரியம்! நொந்துபோய் சொல்லும் ஷகிலா appeared first on Touring Talkies.
]]>ஒரு நாள், ஷகிலாவிற்கு ஒரு ஸ்விம்மிங் ஃபுல் உடை மாதிரியான டிரெஸ்ஸை கொடுத்திருந்தார்களாம். அதை அணிந்து கொண்டிருக்க பாத்ரூம் போவதற்காக இடத்தை தேடி இருக்கிறார். பாத்ரூம் போக வேண்டும் என்றால் முழு ஆடையையும் கழட்டி விட்டு தான் போக வேண்டுமாம். அதனால் ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி தேடி இருக்கிறார் ஷகீலா.
அவர் தங்கியிருந்த அறைக்கு மேல் தான் சில்க் அறை இருந்ததாம். அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என ஷகிலா சில்க் ரூமுக்கு சென்றாராம். ஆனால் இங்கு எல்லாம் வரக்கூடாது என சில்க்கும் அவருடைய உதவியாளர்களும் அவரை வெளியே துரத்தி விட்டார்களாம். இந்த ஒரு சம்பவத்தால் ஷகிலா “தயவு செய்து சில்க் மாதிரி மட்டும் வரவே கூடாது” என யோசித்தாராம்.
அதிலிருந்து இன்று வரை ஷகிலா அவருடைய உதவியாளர்கள் யாராக இருந்தாலும் தனக்கு சமமாக தான் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
The post சில்க் செய்த காரியம்! நொந்துபோய் சொல்லும் ஷகிலா appeared first on Touring Talkies.
]]>The post திருமணத்திற்கு கெஞ்சிய சில்க் ஸ்மிதா.. கடைசியில் உயிர் போன பரிதாபம்! appeared first on Touring Talkies.
]]>விதிவிலக்காக, நடன இயக்குநர் புலியூர் சரோஜாவிடம் மட்டும் ஓரளவு பேசுவார் சில்க் ஸ்மிதா.
இந்த நிலையில் ஸ்மிதா குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் சரோஜா.
“ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு புலியூர் சரோஜாவின் மகன் வந்தான். அவனைப் பார்த்ததும் சில்க்கிற்கு ரொம்பவும் பிடித்து போனது. உடனே அனிரிடம் ‘நீ என்னை திருமணம் செய்து கொள், நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.
இதை அதிர்ச்சியுடன் என்னிடம் என் மகன் சொன்னான். உடனே நான் ஸ்மிதாவிடம், ‘அவன் உன்னை விட சின்ன பையன், இப்போதுதான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். இனிமேல் தான் அவன் வேலைக்கு எல்லாம் போக வேண்டும். உனக்கு நானே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வருகிறேன்’ என்று சொன்னேன். சில்க் ஸ்மிதா உடனே கோபித்துக் கொண்டார். சில நாட்கள் வரை என்னிடம், பேசவில்லை. பின்பு பழையபடி நட்புடன் பழகினார்.
அதன் பின்னர் தான் யாரோ ஒரு டாக்டரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. சில்க் இதையும் என்னிடம் சொன்னார். அதிலிருந்து ஒரு வாரத்திலேயே திருப்பதி சென்று இருந்தேன். அப்போதுதான் சில்க் ஸ்மிதா இறந்த செய்தி பேப்பர்களில் வெளியாகி இருக்கிறது. அதைக் கண்டு ரொம்பவும் மனம் உடைந்து போனேன்” என சரோஜா கூறியிருக்கிறார்.
The post திருமணத்திற்கு கெஞ்சிய சில்க் ஸ்மிதா.. கடைசியில் உயிர் போன பரிதாபம்! appeared first on Touring Talkies.
]]>The post சிலுக்குக்கு கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்த அந்த நடிகர்! appeared first on Touring Talkies.
]]>சில்க் ஸ்மிதா நடிக்க வந்த நேரம். தமிழ் தெரியாது. ‘தமிழில் வணக்கம்.. நன்றி.. ஆகியவற்றுக்கு என்ன வார்த்தை’ என தெலுங்கில் கேட்டார் அவர்.
உடனே அந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர், ஆபாசமான வார்த்தைகளைக் கூற, அதை நம்பிவிட்டார் ஸ்மிதா.
அந்த வார்த்தைகளையே பிறரிடம் அவர் கூற.. மற்றவர்கள் அதிர்ந்துவிட்டார்கள். பிறகுதான் அவருக்கு விசயம் தெரிந்தது.. இதனால் மிகவும் வருத்தப்பட்டார் ஸ்மிதா.
The post சிலுக்குக்கு கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்த அந்த நடிகர்! appeared first on Touring Talkies.
]]>The post சில்க் ஸ்மிதா கூறிய அதிர்ச்சி பதில்! appeared first on Touring Talkies.
]]>ஒரு காலத்தில், ‘ஹீரோ ஹீரோயின் கால்சீட் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாகிட்ட டேட் வாங்குங்க’ என்ற குரல்தான் தமிழ்த் திரையுலகில் ஒலித்தது. அவரது கவர்ச்சி நடிப்பில் தமிழ்நாடே கட்டுண்டு இருந்தது. ஊஹூம்.. தமிழ் மொழி தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அவரது ரசிகர் வட்டம் இந்தியா முழுதும் பரவி இருந்தது.
கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், அவர் மனதில் உறுதியானவர். அவரிடம் ஒருமுறை, ‘நீங்கள் நடிக்க வந்திராவிட்டால் என்ன ஆகி இருப்பீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘நக்சலைட் தீவிரவாதி ஆகியிருப்பேன்’ என்று கூறி அதிரவைத்தார்.
கவர்ச்சிக்குள் கண்ணிவெடி!
The post சில்க் ஸ்மிதா கூறிய அதிர்ச்சி பதில்! appeared first on Touring Talkies.
]]>The post சில்க் ஸ்மிதா தொடையை கிள்ளியது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அந்த வரிசையில் முக்கியமானது சகலகலாவல்லவன் படத்தில் அவர் கமலுடன் ஆடிய `நேத்து ராத்திரி யம்மா’ பாடல்.
அந்த பாடலுக்கு நடனம் அமைத்த புலியூர் சரோஜா, அப்பாடல் படமாக்கப்பட்ட போது நடந்த சம்பவத்தை சமீபத்தில் கூறினார்:
“அப்போது எல்லாம் ஃபிலிம் ரோலில்தான் படமாக்குவோம். ஆகவே ரோலை விரயமாகக் கூடாது. ஆனால் இந்த பாடலின் போது சில்க் ஸ்மிதாவுக்கு பேஸ் ரியாக்சன் சரியா வரலை. ரெண்டாவது டேக் போயிடுச்சு. இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார் என்னைப் பார்த்து முறைச்சார்.
அடுத்த டேக்ல ஸ்மிதாவோட தொடையில கிள்ளிட்டேன். அந்த வலியிலேயே அவர் சிணுங்கலா முகபாவம் கொடுக்க.. டேக் ஓகே ஆகிடுச்சு” என்றார் புலியூர் சரோஜா.
The post சில்க் ஸ்மிதா தொடையை கிள்ளியது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post சில்க் ஸ்மிதாவிக்கு அறிவுரை கூறிய எம்.ஜி.ஆர்..! appeared first on Touring Talkies.
]]>சில்க் ஸ்மிதா தனது 17 வருட திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். உலக அளவில் தனக்கு என்று ரசிகர் பட்டாளமே அவருக்கு அந்த காலத்தில் உண்டு. கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்திருந்தாலும் குணசித்திர வேடம் மற்றும் ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்திருந்தார்.
பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாரவிக்கு மனைவியாக நாயகி ராதாவுக்கு அண்ணியாக நடித்திருப்பார் சில்க் ஸ்மிதா. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அந்த படத்தை பார்த்து விட்டு பாரதிராஜாவை நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எம்.ஜி.ஆர் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.இதில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர், நடிகைகளுக்கு பாராட்டை தெரிவித்தார்.
குறிப்பாக இதில் நடித்த சில்க் ஸ்மிதா கதாபாத்திரம் பற்றி எம்.ஜி.ஆர் கூறும்போது குடும்பப்பாங்காக இருந்தது சிறப்பாக நடித்திருந்தார். இனி கிளாமராக நடிப்பதை சில்க் ஸ்மிதா குறைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். இப்படி நடிப்பதையே விரும்புவதாக ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதாவும் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post சில்க் ஸ்மிதாவிக்கு அறிவுரை கூறிய எம்.ஜி.ஆர்..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகைகள் தற்கொலை-பொது காரணம் என்ன? – Psychologist Dr.Karthikeyan | Chai With Chithra | Part 4 appeared first on Touring Talkies.
]]>The post சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது..! appeared first on Touring Talkies.
]]>எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.
அவருக்கு முன்னால் பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட ‘விஜயலட்சுமி’ என்ற ‘சில்க் ஸ்மிதா’ தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்.
கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் காயத்ரி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ் எச்.முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
“சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் இப்படத்தின் இயக்குநரான மணிகண்டன்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.
The post சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது..! appeared first on Touring Talkies.
]]>