Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
silambarasan – Touring Talkies https://touringtalkies.co Tue, 30 Apr 2024 06:16:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png silambarasan – Touring Talkies https://touringtalkies.co 32 32 தக் லைஃப் பட ஷூட்டிங்க்கு தாமதமாக வந்த கமல்…மணிரத்னத்திற்கும் கமலுக்கும் கருத்து மோதலா? https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b7%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Tue, 30 Apr 2024 06:16:50 +0000 https://touringtalkies.co/?p=41744 முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் சில தினங்கள் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் கமல்ஹாசன் இல்லாமல் சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுடன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாகவே கமல் டெல்லி ஷூட்டிங்கில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்கள் தாமதமாக அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், கமல் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கமல் ஷூட்டிங்கில் […]

The post தக் லைஃப் பட ஷூட்டிங்க்கு தாமதமாக வந்த கமல்…மணிரத்னத்திற்கும் கமலுக்கும் கருத்து மோதலா? appeared first on Touring Talkies.

]]>
முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் சில தினங்கள் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் கமல்ஹாசன் இல்லாமல் சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுடன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாகவே கமல் டெல்லி ஷூட்டிங்கில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நாட்கள் தாமதமாக அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், கமல் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கமல் ஷூட்டிங்கில் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், டெல்லி ஷூட்டிங்கிலும் கமல் தாமதமாக வந்திதிருக்கிறாராம்.

அவர் ஷூட்டிங்கில் தாமதமாக கலந்துகொண்டதற்கு வேறொரு காரணம் இருப்பதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. முன்பு விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதி பாடியது போலவே, இந்தப் படத்திலும் தற்போது அவரே ஒரு பாடலை எழுதி பாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாடல் பணிகளுக்காகவே கடந்த மூன்று நாட்களாக அவர் பாடல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

அதோபோல் இரண்டு மணி நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் பாடலை பதிவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்குள் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை என தகவல்களை கிளப்பி விட்டனர்.

The post தக் லைஃப் பட ஷூட்டிங்க்கு தாமதமாக வந்த கமல்…மணிரத்னத்திற்கும் கமலுக்கும் கருத்து மோதலா? appeared first on Touring Talkies.

]]>
“வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு https://touringtalkies.co/i-am-waiting-for-vendu-satnuthanu-kadu-part-2-producer-udayanidhi-stalins-speech/ Thu, 10 Nov 2022 16:02:21 +0000 https://touringtalkies.co/?p=26913 Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினில் […]

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷின் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்களின் வரவேற்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் 50-வது நாள் வெற்றி விழா திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் பேசும்போது, “இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஸ்டைலிஷ் இயக்குனருடன், கடின உழைப்பாளி  சிம்பு இணைந்துள்ள இந்த படம் சிறப்பான ஒன்றாக அமைந்தது.  படத்தின் பாடல்களை தாமரை, பிருந்தா, ஏ.ஆர்.ரகுமான் சிறப்பானதாக உருவாக்கியுள்ளனர். படத்தில் பங்கேற்ற நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்.  இப்படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “இந்த படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.  பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு  அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது.  சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இந்த படத்தை பல தடைகளை தாண்டி உருவாக்கிய தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.

கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் எப்பொழுதும் சிறப்பான படத்தை கொடுப்பதற்காக உழைக்கிறார்கள். பல திறமையாளர்களை அவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  இந்த திரைப்படத்தில் பல திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.  அவர்களது கடின உழைப்பில் இந்த படம்  சிறப்பானதாக மாறியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மாறிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.  பல மேடைகளில் அதை கூறியும் இருக்கிறேன். இந்த படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்ற முடிவெடுத்து, அதை விழாவாக எடுத்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக  அமைந்ததற்கு இயக்குநர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசன், சிம்பு ரசிகர்கள்தான் காரணம். அதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  படத்தை முதலில் நான்தான் பார்த்தேன், படம் பார்த்தவுடன் இந்த படம் வெற்றிப் படமாக அமையும் என்று நான் கூறினேன். சிம்பு  இப்படத்தை நீங்கள் வெளியிட வேண்டும் என கூறினார். அவர் கேட்டுக் கொண்டதால்தான் நான் இந்தப் படத்தை வெளியிட்டேன். அவர் கூறிய வார்த்தைகளின்படி படம் மிகப்ப ெரிய வெற்றியடைந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ‘வெந்து தணிந்தது காடு’ பாகம் இரண்டிற்காக  நான் ஆவலாக  இருக்கிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, “இந்தப் படத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை கௌரவிப்பதற்காகத்தான் இந்த விழா நடத்தப்படுகிறது. ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வாங்கியவுடன் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்த படத்தின் சிறப்பம்சமே நடிகர் சிம்புதான். இதுபோன்ற பல வெற்றிகளை நீங்கள் குவிக்க வேண்டும். இயக்குநர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பத்தை கொடுத்துள்ளார். எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்களையும். நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.

The post “வெந்து தணிந்தது காடு பார்ட்-2-வுக்காகக் காத்திருக்கிறேன்” – தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
சிம்பு, கவுதம் மேனனுக்கு பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் https://touringtalkies.co/producer-isari-k-ganesh-gives-gifts-to-simbu-and-gautham-vasudev-menon/ Mon, 26 Sep 2022 07:46:25 +0000 https://touringtalkies.co/?p=24658 ‘வெந்து தணிந்தது காடு’ படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளதால், அப்படத்தின் நாயகன் தனுஷ், இயக்குநர் கவுதம் மேனன் இருவருக்கும் கார் மற்றும் பைக்குகளை வாங்கிக் கொடுத்து பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ். படத்தின் நாயகனான சிம்புவுக்கு 92 லட்சம் மதிப்புள்ள டயோட்டா vellfire காரினை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர். அதேபோல் இயக்குநர் கவுதம் மேனனுக்கு பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கவுதம் மேனனுக்கு அவர் கொடுத்துள்ள புல்லட் பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்கு […]

The post சிம்பு, கவுதம் மேனனுக்கு பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் appeared first on Touring Talkies.

]]>
‘வெந்து தணிந்தது காடு’ படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளதால், அப்படத்தின் நாயகன் தனுஷ், இயக்குநர் கவுதம் மேனன் இருவருக்கும் கார் மற்றும் பைக்குகளை வாங்கிக் கொடுத்து பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்.

படத்தின் நாயகனான சிம்புவுக்கு 92 லட்சம் மதிப்புள்ள டயோட்டா vellfire காரினை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர்.

அதேபோல் இயக்குநர் கவுதம் மேனனுக்கு பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கவுதம் மேனனுக்கு அவர் கொடுத்துள்ள புல்லட் பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்கு மேலான மதிப்புள்ளது.

சமீபத்தில் வெளியான கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றபோது அதன் இயக்குநருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார்.

தற்போது அதே டிரெண்டை தயாரிப்பாளர் ஐசரி கணேசனும், பாலோ பண்ணியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிம்பு, கவுதம் மேனனுக்கு பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் appeared first on Touring Talkies.

]]>
வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/vendhu-thaninthadhu-kaadu-movie-review/ Sun, 18 Sep 2022 05:58:43 +0000 https://touringtalkies.co/?p=24555 ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்து உருவாகும் படம் என பல தயாரிப்பாளர்கள், கதைகள், தலைப்புகள் விவாதிக்கப்பட்ட பிறகு, முடிவு செய்யப்பட்ட படம்தான் இந்த ‘வெந்து தணிந்தது காடு’.   பெரும் வெற்றி பெற்ற ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு வெளியான ‘மஹா’ சரியான கவனத்தைப் பெறாத நிலையில், சிம்புவின் ரசிகர்களும் இந்தப் படத்தையே எதிர்நோக்கியிருந்தனர். கௌதம் தன்னிடம் இருக்கும் காதல் கதை, போலீஸ் கதை இரண்டையும் […]

The post வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்து உருவாகும் படம் என பல தயாரிப்பாளர்கள், கதைகள், தலைப்புகள் விவாதிக்கப்பட்ட பிறகு, முடிவு செய்யப்பட்ட படம்தான் இந்த ‘வெந்து தணிந்தது காடு’.  

பெரும் வெற்றி பெற்ற ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு வெளியான ‘மஹா’ சரியான கவனத்தைப் பெறாத நிலையில், சிம்புவின் ரசிகர்களும் இந்தப் படத்தையே எதிர்நோக்கியிருந்தனர்.

கௌதம் தன்னிடம் இருக்கும் காதல் கதை, போலீஸ் கதை இரண்டையும் விட்டுவிட்டு எழுத்தாளர் ஜெயமோகனின் கதையுடன் புதிய களம் நோக்கி நகர்ந்திருக்கிறார்.

இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது, அவனது வாழ்க்கை மும்பைக்கு சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது. அந்தத் திருப்பத்தினால் விளையும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

திருச்செந்தூர் அருகில் உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் தன் தாய், சகோதரியுடன் ஏழ்மையில் வாழ்ந்து வரும் பி.எஸ்.சி. பட்டதாரியான ‘முத்து வீரன்’ என்ற சிம்பு தற்போதைக்கு ஊரிலேயே கருவேல மரங்களை பாதுகாக்கும் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் கருவேல மரங்கள் தீப்பிடித்து எரிந்துவிட அந்த வேலையும் பறிபோகிறது.

இதனால் வேலை கொடுத்தவருக்கும், சிம்புவுக்கும் மோதல் ஏற்பட இதில் தன் மகனின் வாழ்க்கை வீணாகிவிடுமே என்று நினைக்கும் தாய் ராதிகா, தனது உறவினர் மூலமாக சிம்புவை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.

மும்பையில் ‘செம்பூர்’ பகுதியில் இருக்கும் ‘இசக்கி பரோட்டா கடை’யில் வேலைக்குச்  சேர்கிறார் சிம்பு. காலையில் பரோட்டா கடையில் வேலை செய்யும் சில ஊழியர்கள் இரவானதும், கொலை செய்யும் அடியாட்களாகவும் இருக்கிறார்கள்.

இது தெரியாமல் வேறொரு உலகத்தில் இருக்கும் சிம்புவைக் கவர்கிறார் நாயகி சித்தி இத்னானி, தன்னைவிட நான்கு வயது கூடியிருந்தாலும் சித்தியை விடாது பின் தொடர்ந்து காதலிக்கிறார் சிம்பு. இந்தக் காதல் கை கூடும் நேரத்தில், வீரனின் வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்து தங்களை கொலை செய்ய வந்தவர்களைச் சுட்டுத் தீர்த்ததும் உடனடியாக ஆன் தி ஸ்பாட்டிலேயே தளபதியாகிறார் சிம்பு. இப்போது மும்பையை ஆண்டு கொண்டிருக்கும் கர்ஜி டீம், குட்டி பாய் டீம் என்ற இரண்டு போட்டி குழுக்களில் ஒன்றில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது சிம்புவுக்கு.

கர்ஜி டீமின் தலைவரான கர்ஜிக்கு மெய்க்காப்பாளனாகிறார் சிம்பு. குட்டி பாய் டீம் கர்ஜியை தீர்த்துக் கட்ட போடும் ஒவ்வொரு திட்டத்தையும் முறியடித்துக் கொண்டே வரும் சிம்புவுக்கு முடிவில் என்ன கிடைக்கிறது..? அவரது காதல் என்னவானது..? என்பதைத்தான் இந்த அடர்ந்து விரிந்த கதைப் பரப்பில் சொல்லியிருக்கிறார்கள் கதாசிரியர் ஜெயமோகனும், இயக்குநர் கெளதம் மேனனும்..!

படத்தில் வழக்கமான இயக்குநரான கௌதம் மேனனைப் போலவே, சிம்பு என்ற நடிகரும் நம் கண்ணுக்குத் தென்படவில்லை. ‘முத்து’ என்கிற முத்து வீரனாக மாறுபட்ட தோற்றத்தில் இப்படியெல்லாம், இதுவரையிலும் நடித்ததில்லையே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சிம்பு. நம்ம சிம்புவா இது என வியந்து போகும் அளவுக்கும் உருமாறியிருக்கிறார்.

ஒரு ஏழை அப்பாவி இளைஞனாக அதற்கேற்ற நடை, உடை, பாவனை, உடல் மொழி இவற்றில் முழுவதுமாக தன்னை மாற்றிக் காண்பித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட சிம்புவின் முந்தைய படங்களின் நடிப்பும், அவரது கதாபாத்திரம் நம் மனதிற்குள் வரவில்லை.

தொடக்கக் காட்சிகளில் மெலிந்த நிலையில் பார்ப்பதற்கே பரிதாபத்தை உருவாக்கும் தோற்றத்தில் காணப்படும் சிம்புவுக்கும், கிளைமாக்ஸில் நவீன வேலு நாயக்கராக தோன்றும் காட்சிக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத வித்தியாசங்கள்..!

தாங்கித் தாங்கி நடப்பது, உதடுகளை எப்போதும் பிரித்தே வைத்திருப்பது.. அடிக்கடி இடது கையால் முகத்தைத் துடைப்பது, சட்டை காலரில் முகத்தைத் துடைப்பது, தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் அறிந்திராத நெல்லை தமிழ்ப் பேச்சினை சரளமாகப் பேசியது என்று இந்தக் கிராமத்துக் கதாபாத்திரத்துக்காக நிறையவே உழைத்திருக்கிறார் சிம்பு.  

கொஞ்சம் கொஞ்சமாகக் கதை விரிய, விரிய சிம்பு தற்போதைய சிம்புவாக மாறும் காட்சிகள் வெகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காதல் காட்சிகளில் புரியாத புதிராக நிற்பதும், காதலைச் சொல்வதற்குக்கூட தெரியாமல் சங்கடப்பட்டு நிற்பதும் சிம்புவிடம் புதுமையான நடிப்பைக் காண்பித்திருக்கிறது.

துப்பாக்கியைத் தூக்கிய தளபதியானவுடன் அவரது பேச்சு வேறு லெவலுக்குப் போவதும், காதலிக்கே ஐடியா கொடுத்து தைரியம் சொல்லி தானே சென்று பெண் கேட்கும் அளவுக்குச் செல்வதுமாய் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை ரசித்து, ரசித்து செய்திருக்கிறார் இயக்குநர்.

காதலி, மனைவியான அன்றைய இரவில் நடக்கும் காட்சிகளில் சிம்பு படும் அவஸ்தையும், பதட்டமும், அப்புக்குட்டியை ‘துரோகி’ என்று இனம் கண்ட பின்பும் அமைதியாய் “நீதானண்ணே..?” என்று விரக்தியாய் கேட்கும் காட்சியிலும் நம் மனதைத் தொடுகிறார் சிம்பு.

இடைவேளைக்குப் பின் அப்படியே முழுமையான மாற்றம். ஒரு தாதாவுக்கு அடியாள், பாடிகார்ட் என பல படங்களில் பார்த்த கதாபாத்திரம்தான் என்றாலும் அதிலும் தனித்துத் தெரிகிறார் சிம்பு.

சண்டை காட்சிகளில் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியுமோ அத்தனையையும் காண்பித்திருக்கிறார் சிம்பு. பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் இடைவேளை சண்டைக் காட்சியிலும், என்ன நடந்ததோ, என்ன நடக்கவிருக்கிறதோ என்ற பதைபதைப்புடன் கொண்டு சென்றிருக்கும் இறுதிக் காட்சிகளிலும் சிம்புவுக்கு ஐ லவ் யூ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. நிச்சயமாக சிம்புவுக்கு இந்தப் படம் ஒரு செகண்ட் இன்னிங்ஸ்தான்.

ஹீரோயின் சித்தி இட்னானி கேமிராவுக்கேற்ற முகம். சின்ன வயது சிம்புவைவிடவும் வயதானவராக கதைக்குப் பொருத்தமாகவே இருக்கிறார். சின்ன சின்ன ஆக்சன்களில் இளசுகளைக் கவர்ந்திழுக்கிறார். காதலன்-காதலி பேச்சு ஆண், பெண் உரிமை மீறல் பேச்சாக மாறும் தருணங்களில் தனது பெண்ணுரிமையை ஆணித்தரமாக பதிவு செய்வதுபோல நடித்திருக்கிறார் சித்தி. வெல்கம் டூ கோடம்பாக்கம்..!

முத்துவின் தாயாராக ராதிகா. இந்தக் கதாப்பாத்திரத்திற்கு வேறு யாருமே கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் இல்லை என்பதைப் போலவே தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ராதிகா. மகனின் கோபத்தினால் விரும்பத்தகாதது நடக்கும் என்று நினைத்து மகனை வெளியூருக்கு அனுப்ப நினைக்கும் அந்த இடத்திலிருந்து, சிம்பு மும்பைக்குக் கிளம்பும்வரையிலும் மனதில் நிற்கிறார் சித்தி ராதிகா..!

கட்ஜியாக நடித்திருக்கும் நடிகருக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்டை போட வேண்டும். “என்னை கொலை செஞ்சுருவியா..? அந்த நினைப்பு இருக்கா..? இப்பவும் இருக்கா..?” என்று விதம்விதமாக சிம்புவிடம் கேள்வி கேட்கும் ஸ்டைலில் மனிதர் நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.

குட்டி பாயாக சித்திக். தனது அனுபவ நடிப்பினால் அந்தக் கேரக்டருக்கு உரிய நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஒரு சிறு இடறல்கூட இல்லை. இவரின் உதவியாளராக நடித்திருக்கும் நீரஜ் மாதவ்.. ஒரு அழகான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவரது பரிதாப வாழ்க்கை வேறொரு உலகத்தையும் காட்டுகிறது.

அப்புக்குட்டி நல்லவன்போல் நடிக்கும் நண்பன் என்ற கதாப்பாத்திரத்தில் மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறார். சிம்புவிடம் அனைத்து ஊழியர்களையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே நமக்கு மிகவும் பிடித்துப் போனவராகிவிடுகிறார் அப்புக்குட்டி. இறுதியில் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.

‘விக்ரம்’ படத்தில் குறடு வைத்துக் கொண்டு கால் நரம்பை கட் செய்யும் நபராக நடித்து நம் மனதில் நின்றவர்.. இந்தப் படத்தில் சிறப்புக் கொலையாளி ராவுத்தராக நடித்திருக்கிறார். இவரை நடிக்க வைத்தமைக்காகவே கெளதம் மேனனுக்கு ஒரு ஷொட்டு..! அவ்வளவு அதகளம் செய்திருக்கிறார்.

எப்போதும்போல  தொழில் நுட்பத்தில் சிறப்புக்களையே செய்திருக்கிறார் கெளதம் மேனன். படத்தின் துவக்கத்தில் நடுவக்குறிச்சியில் பொட்டல் காட்டையும், கருவேல மரங்களின் சூழலையும் அழகுற பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.

ஹோட்டல் மாடியில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும், ஹோட்டலுக்குள் நடக்கும் காட்சிகளிலும் சித்தார்தா நுனியின் ஒளிப்பதிவு மிக அருமை. பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளில்கூட மும்பையின் அழகையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘மல்லிப் பூ’ பாடல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. ‘காலத்துக்கும் நீ வேணும்’, ‘உன்னை நெனைச்சதும்’, ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல்கள் கேட்கும் ரகம்தான். பாடல் காட்சிகளில் நாயகனையும், நாயகியையும் பாடல் வரிகளை உச்சரிக்க வைத்தே படமாக்கியிருப்பது வித்தியாசமான அனுபவமாகத் தோன்றுகிறது.

பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் அடித்து ஆடியிருக்கிறார். இடைவேளை காட்சியில் துப்பாக்கியை சிம்பு கையில் எடுக்கும்போது ஒலிக்கும் பின்னணி இசை மாஸாக ஒலிக்கிறது. வழக்கமான டானுக்கான செட்டப் தீம் இசையை போடாமல் டான் முத்து வீரனை இறுதியில் காட்டியிருப்பது வித்தியாசம்தான்..!

இந்தப் படத்தின் கதாசிரியரான ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளர். அவர் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி வட்டார வழக்கு மொழியை லாவகமாக இந்தப் படத்தில் கொணர்ந்திருக்கிறார்.

படத்தின் முதல் சில நிமிடங்கள் நீடிக்கும் அந்தக் கிராமத்துக் கதையில் பேசப்படும் வசனங்களும், சொல்லப்படும் கதையும் அந்த ஸ்டைலான புத்தம் புதிய தமிழால் ரசிகர்களை அதிகம் கவர்ந்திழுத்துள்ளது.

வசனங்களும்கூட கெளதம் மேனனின் படங்களில் எப்போதும் இருக்கும் அதே ஸ்டைலிலேயே அமைந்திருக்கின்றன. அப்புக்குட்டி சக ஊழியர்களை அறிமுகப்படுத்தும் காட்சியிலும், அடியாட்களின் தவறைச் சுட்டிக் காட்டும் கட்ஜியின் உதவியாளர் திட்டும் காட்சியிலும் வசனங்கள் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன.

காதல் காட்சிகளில்கூட மெச்சூர்டான வசனங்களே வந்திருக்கின்றன. ஹோட்டலில் நாயகியைப் பார்த்துவிட்டு சிம்பு சூடாகி தொடர் கேள்விகளைக் கேட்க.. “நீ ஆம்பளை கேட்டுட்ட.. அதே ஹோட்டல்ல நீ என்ன பண்ணிக்கிட்டிருந்தன்னு நானும் கேக்கலாம்ல..” என்று ஆண், பெண் சமத்துவத்தை சுட்டிக்காட்டும் விதமாக நாயகி பேசும் பேச்சும் ரசனைக்குரியது.

கட்ஜி சிம்புவிடம் “நீ என்னை கொல்லப் போறியா.. நான் உனக்கு எவ்ளோ செஞ்சிருக்கேன்.. அதனால நீ என்னைய கொல்ல மாட்டேன்னு நானே என் மனசைத் தேத்திக்கறேன்..” என்று சொல்லுமிடத்திலும், “உன் மன்னிப்பெல்லாம் எனக்கு வேணாம்.. நீ செத்துடு போதும்..” என்று சொல்லுமிடத்திலும் அப்புக்குட்டியை துரோகியென சிம்பு அழைக்கும் காட்சியிலும் வசனங்களில் தனது தனித்தன்மையைக் காட்டி படத்திற்குப் பெரிதும் உதவியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

பொதுவாக இலக்கிய எழுத்தாளர்கள் வெகுஜன மக்கள் விரும்பி, ரசித்துப் பார்க்கும் திரைப்படங்களின் வெற்றிக்கு எப்போதும் உதவ மாட்டார்கள். அவர்களின் கதை சினிமா கதைக்கு உதவாது.. என்ற பல வருட பேச்சினை இன்றைக்கு இந்தப் படத்தின் மூலமாக உடைத்தெறிந்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அவருக்கு நமது பாராட்டுக்கள்..!

இந்த ‘வெந்து தணிந்தது காடு’ கதை, திரைக்கதையின் வழியே சொல்லிக் கொண்டே போய்தான் படமாக விரிந்திருக்கிறது. ஒரு சாதாரண முத்து வீரன் எப்படி அசாதரணமான வீரனாக உருவெடுக்கிறான் என்பதை இந்த வகையில்தான் சொல்ல முடியும். இந்த விரிவான திரைக்கதையாக்கத்தினால்தான் ரசிகர்களாலும் இந்தப் படத்தை ரசிக்க முடிந்திருக்கிறது.  

இது வழக்கமான கேங்ஸ்டர் படமில்லை. ஆனால் ஒரு கேங்க்ஸ்டரின் வாழ்க்கைப் பயணம். அந்தப் பயணத்தைதான் திரைக்கதையில் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

ஆரம்பக் கட்ட காட்சிகள் கொஞ்சம் மெதுவாய் நகர்ந்தாலும், இடைவேளை வரைக்குமான சாதாரண முத்து வீரன், டான் வீரனாக உருவெடுக்கும் காட்சிவரையிலும் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை.

முதல் பாதியில் மும்பைக்கு வேலை தேடிச் சென்ற தமிழகத்து இளைஞர்கள் அங்கே எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.. என்ன துன்பப்படுகிறார்கள் என்பதையும் டீடெயிலிங்காக காட்டியிருக்கிறார். ஊரில் இருக்கும் மனைவியுடன் வீடியோ காலில் பேசி அவரை பாடச் சொல்லி ரசிக்கும் கணவனின் வலியை உணர்த்தும் அந்தக் காட்சி ஏ கிளாஸ் ரகம்.

இரண்டு போட்டிக் குழுக்களுக்கு இடையே தொடரும் பல வருட மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலை திரைக்கதையில் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் பாதியில் இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம் என்றும் சொல்லத் தோன்றுகிறது.  

படம் முடிவடைந்துவிட்டது என்று நினைத்தபோது திடீரென ‘ஐந்து வருடங்களுக்குப் பிறகு’ என்று சொல்லி இரண்டாம் பாகத்திற்கான முன்னறிவிப்புடன் சிம்பு  வேறு கெட்டப்பில் தோன்றும் காட்சி அவரது ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சிதான். இரண்டாம் பாகத்துக்கான லீட் என்பதிலும் கவனமாக இந்த டான் எப்படி தனது டான் வாழ்க்கையைத் தொடர்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டி முன்னுரையை முடித்திருக்கிறார் இயக்குநர்.

சிம்புவின் நடிப்புக்காகவும், சுவையான கதைக்காகவும், சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும், கெளதம் மேனனின் அழுத்தமான நடிப்புக்காகவும் இந்த வெந்து தணியும் காட்டில் நாம் அவசியம் பயணம் செய்யலாம்தான்..!

ஆனால், இது அத்தனையும் ஒரேயொரு கேள்வியில் அடிபட்டுவிடும் அளவுக்கு லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்பதுபோல, மும்பையில் போலீஸ் டிபார்ட்மெண்ட்டே இல்லையா..? என்ற கேள்வியை இயக்குநர், எழுத்தாளர் இருவரிடமும் நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

இத்தனை கொலைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு நடந்திருக்கின்றன. இசக்கி ஹோட்டல் மற்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் படுகொலைகளை பார்த்தும் போலீஸையே படத்தில் காட்டாமல் அது பற்றிய நினைப்பே படம் பார்க்கும் நேரத்தில் நம் நினைவுக்கு வராத அளவுக்கு படத்தில் ஒன்ற வைத்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனனின் இயக்கத் திறமைக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!!!

RATING : 4 / 5

The post வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“வேட்டையாடு விளையாடு’-2-ம் பாகம் உருவாகும்” – நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு..! https://touringtalkies.co/actor-kamal-haasan-announces-vettayadu-vilaiyaadu-2nd-part-will-be-produced/ Sat, 03 Sep 2022 16:16:06 +0000 https://touringtalkies.co/?p=24274 ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2-ம் பாகம் தயாராகவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் நேற்றைக்கு அறிவித்தார். சிலம்பரசன் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது இதைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.. அது போல் இந்தப் படத்திலும் அந்த […]

The post “வேட்டையாடு விளையாடு’-2-ம் பாகம் உருவாகும்” – நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2-ம் பாகம் தயாராகவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் நேற்றைக்கு அறிவித்தார்.

சிலம்பரசன் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது இதைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.. அது போல் இந்தப் படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன்.

வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம்தான். நான் தனியாக ஏதும் செய்யவில்லை.

நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க, கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். தமிழ்ப் படங்களைத் தூக்கி நிறுத்துவது தமிழ்ப் படங்கள்தான். தமிழ்ப் படங்களைக் கெடுப்பதும் தமிழ்ப் படங்கள்தான். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. நல்ல படங்களுக்கு மக்கள் நிச்சயமாக ஆதரவு தருவார்கள்.

சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பேயே கௌதம் என்னிடம் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸ்ல் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.  

The post “வேட்டையாடு விளையாடு’-2-ம் பாகம் உருவாகும்” – நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.

]]>
“இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு https://touringtalkies.co/i-dont-know-what-the-story-of-this-film-is-gautham-menons-shocking-speech/ Sat, 03 Sep 2022 15:51:25 +0000 https://touringtalkies.co/?p=24265 Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’ எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் […]

The post “இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’

எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), G.பாலாஜி (வண்ணக் கலைஞர்), சுரேன் G, அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), சுரேன்.G (ஒலி கலவை), மற்றும் ஹபீஸ் (உரையாடல் ரெக்கார்டிஸ்ட்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, ரசிகர்களின் முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மிகப் பிரம்மாண்டமான ஐசரி வேலன் அரங்கத்தில் கோலகலமாக நடைபெற்றது.

திரைப் பிரபலங்கள், படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் கௌதம் மேனன் பேசும்போது, “முதலில் இந்தப் படத்திற்கு ‘நதிகளில் நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். திடீரென ஜெயமோகன் ஒரு புது லைன் சொன்னார். ஆனால், “இது புது ஹீரோ பண்ணக் கூடிய கதை” என்றார். ஆனால் நான், “சிம்பு புது ஹீரோபோல் உழைப்பார்” என்று அந்தக் கதையை படமாக்க ஆரம்பித்தேன். சிம்புவிடம் கதை சொன்னவுடன் ஓ.கே. சொல்லிவிட்டார். ஐசரி ஸார் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்டார்.

இதுல கதை என்னன்னு எனக்கே தெரியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்தான் படம். எனக்கே இந்தப் படம் ஒரு புது விசயமாக இருந்தது. ஜெயமோகன், “ஒரு இயக்குநர் அவர் வட்டத்தை விட்டு வெளியே வந்து ஜெயித்தால்தான் இயக்குநர். இதில் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்” என்றார்.

ஒரு நல்ல படம் செய்துள்ளோம் என நம்புகிறோம். அவர் கதையைத் தந்தபோது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப் போவதுபோல் ஒரு காதலை வைத்துள்ளேன்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனக்குமான உறவு மிக அழகானது. இரவு 2 மணிக்கு போன் செய்து கதை கேட்டு, டியூன்களைப் போட்டுக் காட்டி விவாதிப்பார். அவருடன் வேலை செய்யும் அனுபவமே வித்தியாசமாக இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் அந்தக் கதைக்கு 3 பாடல்களை தந்திருந்தார். பின்னர் இந்தக் கதையை சொன்னபோது புதிய பாடல்களை தந்தார். இவர்களால்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது…” என்றார்.

The post “இந்தப் படத்தின் கதை என்னன்னே எனக்குத் தெரியாது” – கெளதம் மேனனின் அதிர்ச்சி பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“ஒரு மேஜிக் இந்தப் படத்தில் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது” – சிலம்பரசன் பேச்சு https://touringtalkies.co/a-magic-awaits-the-audience-in-this-film-silambarasan-talks/ Sat, 03 Sep 2022 11:18:56 +0000 https://touringtalkies.co/?p=24251 Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’ எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் […]

The post “ஒரு மேஜிக் இந்தப் படத்தில் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது” – சிலம்பரசன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில், சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு.’

எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி (படத் தொகுப்பு), தாமரை (பாடல் வரிகள்), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர்-யானிக் பென் (சண்டை பயிற்சி இயக்குநர்கள்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), G.பாலாஜி (வண்ணக் கலைஞர்), சுரேன் G, அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), சுரேன்.G (ஒலி கலவை), மற்றும் ஹபீஸ் (உரையாடல் ரெக்கார்டிஸ்ட்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, ரசிகர்களின் முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் மிகப் பிரம்மாண்டமான ஐசரி வேலன் அரங்கத்தில் கோலகலமாக நடைபெற்றது.

திரைப் பிரபலங்கள், படக் குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “கௌதம் ஒரு இசைக் காதலன். அவர் எந்த டியூன் தந்தாலும் எடுத்துக் கொள்வார். அதனால் அவரின் நம்பிக்கைக்காக நான் நிறைய உழைப்பேன். நல்ல பாடல்கள் தர முயல்வேன்.  தாமரை வரிகள் எழுதும்போது அந்த பாடல்கள் ஸ்பெஷலாக மாறிவிடும். கௌதம் படத்தை நன்றாக எடுத்து விடுவார் என தெரியும். அதனால்தான் அவருடன் தொடர்ந்து வேலை செய்கிறேன். அப்புறம் சிம்புவையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காகவும்தான் இந்தப் படத்திற்கு இசையமைத்தேன். பாடல்களும், படமும் நன்றாக வந்துள்ளது…” என்றார்.

நடிகர் நாசர் பேசும்போது, “கௌதம் மேனன் நிறைய ஆச்சர்யங்களை தருவார். இந்தப் படத்திலும் கண்டிப்பாக அசத்துவார் என்று நம்புகிறேன். கௌதம் மேனனிடம் எப்போதும் சிறப்பானது டைட்டில்தான். இந்தப் படத்திலும் டைட்டில் நன்றாக இருக்கிறது. சிம்பு மிக நன்றாக நடிப்பவர். இந்தப் படம் அவருக்கு நல்ல வெற்றியை தரும். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகர் R.J.பாலாஜி பேசும்போது, “சிம்பு என் நண்பர். அவர் திறமைக்கு இன்னும் மிகப் பெரிய விசயங்களை அவர் செய்யலாம் என அவரிடம் பேசும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். இப்போது மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என்று அவர் நிறைய புதுமையான படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தை கௌதம் மிக நன்றாக இயக்கியிருக்கிறார். கௌதம் இப்பொதெல்லாம் எல்லா படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். எல்லா படங்களிலும் இருக்கிறார். வேல்ஸ் அங்கிள் என் தந்தைபோல். அவருக்கு சினிமா மீது இருக்கும் காதல் மிகப் பெரியது. சினிமா துறையை சேர்ந்த நிறைய பேருக்கு பல உதவிகள் செய்து வருகிறார். நான் கேட்டே பல விசயங்கள் செய்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “இவ்வளவு பிரம்மாண்டமான விழாவை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம்ஸ்  தரமான படங்களை தேர்வு செய்து அசத்தி வருகிறார்கள். ஜீ.வி.எம்., எஸ்.டி.ஆர்., ஏ.ஆர்.ஆர். கூட்டணி அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி.  கண்டிப்பாக படம் புதுமையான ஒன்றாகத்தான் இருக்கும். கௌதமுடன் நான் வேலை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தரமான இயக்குநர். நல்ல படங்களை உருவாக்கும் ஆர்வமுள்ளவர். இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகை ராதிகா பேசும்போது, “ஐசரி கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்று இங்கு ரெண்டு நாயகர்கள் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ஆர்., சிம்பு. சிம்புவை சின்ன வயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். அவனை உரிமையோடு திட்டுவேன். திறமையை வைத்து கொண்டு வீணாக்காதே என்பேன். இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். நடிப்பில் அசத்திவிட்டார். ஆடியன்ஸ்க்கு நிறைய சர்ப்ரைஸ் இந்தப் படத்தில் இருக்கிறது. நிச்சயமாக படம் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

நாயகி சித்தி பேசும்போது, “ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு மிகப் பெரியது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு முதலில் வந்தபோது ஜீ.வி.எம்., எஸ்.டி.ஆர்., ஏ.ஆர்.ஆர். கூட்டணியில் நடிக்கும் நாயகி லக்கியஸ்ட் கேர்ள் என நினைத்தேன். அதிர்ஷடவசமாக அந்த வாய்ப்பு எனக்கு வந்தது.

கௌதம் படத்தில் நாயகியாக நடிப்பது எல்லோருக்கும் கனவு. அவர் படங்களில் நாயகிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். சிம்பு மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடித்ததும் மிக அற்புதமான அனுபவம். ஏ.ஆர்.ஆர். என் வாழ்க்கையில் முக்கிய கட்டங்களில் இசையாக உடனிருந்துள்ளார். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்…” என்று கேட்டுக் கொண்டார்.

தயாரிப்பாளர் Dr ஐசரி K கணேஷ் பேசும்போது, “கமல்ஹாசன் சார் என் கலையுலக குருவாக இருப்பவர். அவர் இந்த விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. தம்பி சிம்பு இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து, மிக கடினமாக உழைத்துள்ளார்.

இந்தப் படத்தை கௌதம் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தை Red Giant Movies சார்பில் உதயநிதி வெளியிடுகிறார். அது இந்தப் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. உதயநிதி அவர்களுக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் டி.ஆர்.சிலம்பரசன் பேசும்போது, “எனக்கு இந்த மாதிரி பிரம்மாண்டமான விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிரம்மாண்டத்தை பார்த்ததும் நம் விழாதானா என்று சந்தேகமே வந்துவிட்டது. இங்கு கமல் சார் வந்திருக்கிறார். அவர் எனது ‘விண்ணை தாண்டி வருவாயா’ விழாவிற்கும் வந்திருந்தார். அந்தப் படம்போல் இதுவும் ஹிட்டாகும் என நம்புகிறேன்.

தயாரிப்பாளர் வேல்ஸ் என்னை மகனை போல் பார்த்து கொண்டார். என் அப்பாவை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கூட்டிப் போனதிற்கு முழு காரணம் அவர்தான்.

கௌதம் வாசுதேவ் மேனனுடன் நான் இணையும் மூன்றாவது படம் இது. நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்து விடும். படத்தில் ஏதாவது புதிதாக செய்வோம். இந்தப் படத்திலும் அது இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு எப்போதும் நல்ல பாடல்களைதான் தருவார். அவருக்கு நன்றி.

சித்தி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உழைத்திருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.

முதலில் ஒரு காதல் கதையாக செய்வதாகத்தான் இருந்தது. “இந்தப் படத்தில் வேறு ஏதாவது புதுசாக செய்யலாம்…” என்றேன். அப்போதுதான் ஜெயமோகனின் கதை வந்தது. இதில் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன். படம் பற்றி நாம் பேசக் கூடாது. ரசிகர்கள்தான் படத்தைப் பார்த்து சொல்ல வேண்டும். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்..” என்றார்.

The post “ஒரு மேஜிக் இந்தப் படத்தில் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது” – சிலம்பரசன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
மாநாடு – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/maanaadu-movie-review/ Fri, 26 Nov 2021 04:29:15 +0000 https://touringtalkies.co/?p=19587 ‘டைம் லூப்’ எனப்படும் ஒரு நாளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு மனிதருக்குள் திரும்பத் திரும்பத் தோன்றும் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. துபாயில் வேலை செய்து வரும் நாயகன் ‘அப்துல் காலிக்’ என்ற சிம்பு தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு விமானத்தில் வருகிறார். இதே கல்யாணத்திற்காக அதே துபாயில் இருந்து நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில், சிம்புவுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி வந்து கொண்டிருக்கிறார். விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிம்புவுக்கு […]

The post மாநாடு – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘டைம் லூப்’ எனப்படும் ஒரு நாளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒரு மனிதருக்குள் திரும்பத் திரும்பத் தோன்றும் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

துபாயில் வேலை செய்து வரும் நாயகன் அப்துல் காலிக்’ என்ற சிம்பு தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு விமானத்தில் வருகிறார். இதே கல்யாணத்திற்காக அதே துபாயில் இருந்து நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில், சிம்புவுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி வந்து கொண்டிருக்கிறார்.

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிம்புவுக்கு திடீரென்று சில சம்பவங்கள் நடப்பதாக அவரது மூளையில் பதிவாகிறது.

அதே நாளில் கோவையில் ஆளும் கட்சியின் 12-வது மாநில மாநாடு அந்தக் கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின்போது முதல்வரை கொலை செய்துவிட்டு, கோவையில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டு.. சத்தமில்லாமல் அடுத்த முதல்வராக முயல்கிறார் அந்தக் கட்சியில் 30 ஆண்டுகளாக நம்பர் டூ’-வாக இருந்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன்.

இதற்காக ரபீக் என்ற இஸ்லாமிய அப்பாவி இளைஞனை பகடைக் காயாக பயன்படுத்துகிறது போலீஸ். ரபீக்கின் குடும்பத்தினரை பிடித்து வைத்துக் கொண்டு தாங்கள் சொல்வதை செய்தால்தான் அவர்களை விடுவிப்போம் என்று மிரட்டுகிறது போலீஸ்.

அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வரும் ரபீக்கைக் காப்பாற்றப் போய் போலீஸிடம் சிக்குகிறார்கள் சிம்பு அண்ட் டீம். இப்போது மொத்த சிம்பு டீமையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போலீஸ் அதிகாரி சூர்யா, தங்களுடைய கொலை அஸைன்மெண்ட்டை செய்து கொடுத்தால்தான் சிம்புவின் நண்பர்கள் உயிர் பிழைப்பார்கள். இல்லையேல் அவர்களை கொலை செய்வோம் என்று மிரட்டுகிறார்.

போலீஸின் மிரட்டலால் சிம்பு முதல்வரை படுகொலை செய்ய.. அடுத்த நொடியே போலீஸ் சிம்புவைச் சுட்டுக் கொல்கிறது. உடனேயே மதக் கலவரம் வெடிக்கிறது. முஸ்லீம்கள் போர்வையில் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். இதுவரையிலான சம்பவங்கள் சிம்புவின் மூளையில் பதிவாகி சொல்லப்படுகிறது.

ஆனால், அவர் கண் விழித்தவுடன் இதெல்லாம் நடக்குமா என்று பயப்படுகிறார். அடுத்த முறை தூங்கும்போது இதிலேயே மேலும் சில விஷயங்கள் நடக்கிறது. முதலில் நடக்கும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வழிகளை இரண்டாம் முறை கனவு காணும்போது அவர் நினைக்கிறார். அதையும் தாண்டி மீண்டும், மீண்டும் இந்தக் கொலை பிரச்சினையில் சிம்பு சிக்கிக் கொள்கிறார்.

தான் கனவில் காண்பது நிஜமாகவே கோவையில் அன்றைக்கு நடக்கவிருப்பதை உணர்கிறார் சிம்பு. இதைத் தடுப்பதற்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் துடிக்கிறார் சிம்பு.

ஆனால், அதே சமயம் சிம்புவின் முயற்சிகளை தடுக்க நினைக்கிறார் இந்தச் சதி வேலையின் சூத்திரதாரியான போலீஸ் அதிகாரி தனுஷ்கோடி’ என்ற எஸ்.ஜே.சூர்யா. இதில் யார் வெற்றி பெற்றார்கள்.. எப்படி வென்றார்கள் என்பதுதான் இந்த சுவாரஸ்யமான படத்தின் மீதமான கதை.

சிம்புவுக்கு நிச்சயமாக இதுவொரு கம் பேக் படம்தான். இத்தனை நடிப்பையும் வைத்துக் கொண்டு வெளிப்படுத்த ஒரு நல்ல பிளாட்பார்ம் கிடைக்காமல் மனிதர் தவித்துக் கொண்டிருக்கிறார் போலும்.. வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் கைகளில் கிடைத்ததால்தான் இந்த நடிப்பெல்லாம் வெளியில் வருகிறது.

சாந்த சொரூபியாக அறிமுகமாகி.. பின்பு எப்படியாவது இந்தப் படுகொலையைத் தடுத்தாக வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கும் சிம்புவுக்கு பெரிதும் துணை நின்றிருப்பது இயக்குநரும், திரைக்கதையும்தான்.

டைம் லூப்பில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தனது பரிதவிப்பை அழகாகக் காட்டியிருக்கிறார் சிம்பு. அவ்வப்போது அவர் டெலிவரி செய்யும் ஒற்றை வரி வசனம்கூட சிரிப்பலையை உண்டு செய்கிறது.

ஒய்.ஜி.மகேந்திரனிடம் மாட்டிக் கொண்ட நிலையில் தப்பிப்பதற்காக எஸ்.ஜே.சூர்யாவை மாட்டிவிடும் அந்தக் காட்சியில் அவரது தத்ரூபமாக நடிப்பு வெளிப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் ஒரு பிரேமைகூட நாம் மிஸ் செய்துவிடக் கூடாது. அப்படியொரு சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் சிம்பு.

அவர் ஓடுகின்ற ஓட்டம்.. வேகமாக செயல்பட்டு முடிவெடுக்கும் தருணங்கள், சூர்யாவை ஏமாற்றும் வேலைகள்.. தன் பேச்சை யாருமே நம்ப மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர் கொட்டித் தீர்ப்பவைகளில் சிம்புவின் சிறந்த நடிப்பும் ஒன்றாகிவிட்டது.

நாயகனுக்கேற்ற வில்லனாக நடிப்பில் ஒன்றியிருக்கிறார் எஸ்.ஜே..சூர்யா. அவருடைய முகம், குரலும் அவருடைய வில்லத்தனத்திற்கு மிகவும் உதவிகரமாக உள்ளன. கோபத்தில் அவர் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் நடிப்பு தெறிக்கிறது.

ஒய்.ஜி.மகேந்திரனிடம், போனில் அவர் பேசுகின்ற காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. அதேபோல கிளைமாக்ஸ் காட்சியிலும் ஒய்.ஜி.மகேந்திரன் தான் சொல்வது புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரே என்ற நினைப்பில் சூர்யா காட்டும் முகபாவனைகளும் அபாரம்.

டைம் லூப் தற்போது தன்னையும் தொற்றிக் கொண்டதை தாமதமாகப் புரிந்து கொண்ட சூர்யா.. ஒவ்வொரு முறையும் எழுந்திருக்கும்போதும், ஒவ்வொரு பிரச்சினையையும் தாண்டித் தாண்டி சிம்பு போவதை உணரும்போதும் நடிப்பில் சிம்புவை வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

ஒய்.ஜி.மகேந்திரன் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகச் சிறந்த நடிப்பினை இந்தப் படத்தில்தான் வழங்கியிருக்கிறார். நாடக மேடையில் அவர் சிவாஜி கணேசன் என்று போற்றப்படுபவர்என்பதால் வசனங்களை ஏற்ற, இறங்கத்துடன் கச்சிதமான மாடுலேஷனில் உச்சரிக்கும்போது ரசிகர்களுக்கு மிக இயல்பாகவே சிரிப்பு வருகிறது.

காரில் வந்து கொண்டிருக்கும் சூர்யாவிடம் அவர் பேசும்போது நம்மால் கை தட்டாமல் இருக்க முடியவில்லை. இதற்கு வெங்கட் பிரபு எழுதியிருக்கும் அசத்தலான வசனங்களும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.

நாயகி கல்யாணி பிரியதர்ஷன் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். பெரிதாக வேடம் இல்லையென்றாலும் பிரேமில் அவர் இருப்பதே அழகாக இருக்கிறது.

மேலும் முதலமைச்சர் எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பஞ்சு சுப்பு, கருணாகரன், பிரேம்ஜி என்று பெரிய பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இதில் பிரேம்ஜிக்கும், கருணாகரனுக்கும் சிறந்த காட்சிகள் கிடைத்திருக்கின்றன. மற்றவர்களுக்கு ஓரிரு காட்சிகள்தான்..!

இருந்தாலும் யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. அந்த அளவுக்கு மிகச் சிறப்பான முறையில் இயக்கத்தை செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவும், கே.எல்.பிரவீனின் படத் தொகுப்பும் அற்புதம் என்றே சொல்ல வேண்டும். அத்தனை பெரிய கூட்டத்தை எப்படி கச்சிதமாகக் கையாண்டு படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அதோடு கார் சேஸிங் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் கேமிராமேன் பெரிய சாகஸமே செய்திருக்கிறார்.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை கச்சிதமாக நறுக்கித் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர். உடைகள் வடிவமைப்பையும், கலை அரங்கத்தை நிர்மாணித்தவரையும் பாராட்ட வேண்டும். இரண்டு பணிகளும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஸ்டண்ட் சில்வாவின் சண்டை காட்சிகள் இன்னொரு பக்கம் சிம்புவை ஆக்சன் ஹீரோவாக்குகின்றன.

பின்னணி இசையில் ஒரு பெரும் கலவரத்தையே உண்டு செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. சிம்புவுக்கு அவர் போட்டிருக்கும் தீம் மியூஸிக் சிம்புவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கையை நிச்சயமாக அதிகரிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் படம் முழுவதும் ஒரு கதாபாத்திரமாகவே இசை இருந்து வருகிறது.  

இடைவேளைக்குப் பின்னான கதை, திரைக்கதையில் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் இருந்ததால் பரபரவென ஓடுகிறது படம். கூடவே சூர்யாவின் நடிப்பும், நகைச்சுவையும் சேர்ந்து கொள்ள.. ஒவ்வொரு டாஸ்க்கையும் சிம்பு முறியடிக்க.. அந்தத் திட்டத்தை சூர்யா மாற்றியமைக்க.. இப்படியே போகும் இந்த திருடன்-போலீஸ் விளையாட்டு செம ஜோர்..!

இது போன்ற ‘டைம் லூப்’ கதைகள் தமிழுக்கு அன்னியமானவை. பி அண்ட் சி ரசிகர்களுக்கு இது மிகவும் புதியது. போன வாரம் வெளியான ‘ஜாங்கோ’ திரைப்படம் இதனால்தான் பெரிதாகப் பேசப்படாமல் போனது. இந்தப் படத்தில் முதல் பாதியிலும் இந்தக் குழப்பம் நீடிக்கிறது.

குறிப்பால் உணர்த்துவதெல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு ஓகே. தமிழ்ப் படங்களுக்கு செட் ஆகாது. ‘டைம் லூப்’ பற்றிய பல வசனங்களை முன் வைத்திருக்க வேண்டிய சூழலில் அதை சொல்லாமல் தவிர்த்துவிட்டதால்தான் முதல் பாதி கொஞ்சம் அயர்ச்சியை தந்துவிட்டது.

வசனங்களுடன் இந்த ‘டைம் லூப் தியரி’யை சொல்லிவிட்டு படத்தைத் துவக்கியிருந்தால்கூட அதில் நிச்சயமாக தப்பில்லை. சிம்புவைத் தொடர்ந்து சூர்யாவுக்கும் இந்த ‘டைம் லூப்’ தொற்றிக் கொண்டுள்ளது என்பதை முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஆனால், சிறிது நேரம் கழித்து சொன்னதால் இடைவேளைக்கு பின்பு கதையுடன் ஒன்றிணைய சிறிது கால தாமதம் ஆகிறது.

அதே சமயம் தமிழகத்தின் இன்றைய அரசியல், அரசியல் கட்சிகளின் நிலைமையை அப்படியே பிரதிபலிக்கும்வகையில் கதையை எழுதியிருப்பதற்கும், அதற்கேற்ற வசனங்களை தைரியமாக எழுதியிருப்பதற்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு நமது பாராட்டுக்கள்.

அதிலும் குறிப்பாக ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அவருடைய குடும்ப அரசியலைப் பற்றிப் பேசும்போது தியேட்டரே கரவொலியில் அதிர்கிறது. இன்றைய அரசியல் என்றால் என்ன என்பது பற்றி சில வசனங்கள் மூலமாக இன்றைய இளைய சமுதாயத்திற்கும் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அதே சமயம் இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டு அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மதக் கலவரத்தை உண்டு செய்ய நினைக்கும் அரசியல்வியாதிகளின் போலித்தனமான அரசியலையும் சிம்பு மூலமாக சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவும் இயக்குநருக்கு இன்னுமொரு பாராட்டுக்கள்.

எப்படியிருந்தாலும் இந்த ‘மாநாடு’ படம் ஒரு மாநாடு போலவே பிரம்மாண்டத்தையும், ஆச்சரியத்தையும், பரவசத்தையும் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை..!

RATINGS : 4 / 5

The post மாநாடு – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! https://touringtalkies.co/i-will-fast-in-front-of-stalins-house-t-rajender-warns/ Wed, 20 Oct 2021 17:53:00 +0000 https://touringtalkies.co/?p=18932 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார். சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு. இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு […]

The post “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார்.

சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு.

இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு ஜனநாயக முறைப்படி இல்லாமல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

சிலம்பரசனை வைத்து ‘அன்பானவன், அசராவதவன், அடங்காதவன்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்தப் பணமும் கொடுக்க வேண்டியதில்லை. சிம்பு அந்தப் படத்தில் தனக்கு வர வேண்டிய சம்பளத்தைக்கூட விட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார். அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய டி.ராஜேந்தர், “தமிழ் சினிமாவில் சிலர் ஜனநாயகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பணம் கொடுக்க தேவையில்லை. மேலும் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் அருள்பதி, மைக்கேல் ராயப்பனுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி, ராதாகிருஷ்ணன், மன்னன், சந்துரு பிரகாஷ் ஜெய்ன், கதிரேசன், தினேஷ் ஆகியோர் மறைமுகமாக உதவுகின்றனர்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதனால் பல சினிமா கலைஞர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். இந்தக் கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீதும், ரெட் கார்டு போடும் கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

இது மாதிரியான கட்டப் பஞ்சாயத்து கும்பலை களையெடுக்க ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விசாரணை ஆணையம் ஏன் கிடப்பில் உள்ளது..? இந்தக் கட்ட பஞ்சாயத்து கும்பல் நீதிமன்றம் மற்றும் எந்த சட்ட திட்டங்களையும் கண்டு கொள்வதில்லை.

நான், சிம்புவுக்காக மட்டும் பேசவில்லை. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இந்தப் பிரச்சினையை இத்தோடு விடப் போவதில்லை. டெல்லிவரை கொண்டு போய் சேர்க்க உள்ளேன்.

சிம்புவின் மாநாடு’ படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறேன்…” என்று தெரிவித்தார்.

The post “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட் பிரபு..! https://touringtalkies.co/venkat-prabhu-held-a-conference-in-the-pouring-rain-with-simbus-cooperation/ Tue, 22 Dec 2020 13:49:50 +0000 https://touringtalkies.co/?p=11348 ‘ஈஸ்வரன்’ படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘மாநாடு’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப் […]

The post சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட் பிரபு..! appeared first on Touring Talkies.

]]>
‘ஈஸ்வரன்’ படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘மாநாடு’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.

கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

அதேசமயம் அந்த சமயத்திலும்கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒரு நாளைகூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு,

அதன் பின்னும் மழை விடாமல் தொடர்ந்தததால்தான், ‘மாநாடு’ படக் குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு கிளம்புகிறது மாநாடு’ படக் குழு.

‘ஈஸ்வரன்’ படம் மிக விரைவாக  முடிக்கப்பட்டது.. அதேபோல் மிகப் பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் கூட்டம் என இருந்தாலும்கூட, ‘மாநாடு’ படமும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைந்து உரிய நேரத்தில் ரிலீஸுக்கும் தயாராகிவிடும் என்று படக் குழுவினர் கூறியுள்ளார்கள்.

இந்த சுறுசுறுப்பையும், வேகத்தையும் சிலம்பரசன் தொடர்ந்தார் என்றால், நிச்சயமாக வருடத்திற்கு மூன்று படங்களை அவரால் கொடுக்க முடியும் என்பது திரையுலகத்தினரின் கணிப்பு.

The post சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட் பிரபு..! appeared first on Touring Talkies.

]]>