The post இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடலில் தாத்தா வரரு என்ற வரிகள் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடல் எண்ணூர் உட்பட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.
இதில் சேனாபதியின் ஓவியங்கள் உள்ளன.ரசிகர்களிடம் இதன் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பது விரைவில் தெரியவரும். சேனாபதி கதாபாத்திரத்தாக கமல்ஹாசன் ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரத்தை மேக்கப்காக செலவழித்துள்ளார்.
இந்தியன் 2 இல், கமல்ஹாசன் ஒரு தனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,இது இந்த படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்களால் நிச்சயம் கொண்டாப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post இந்தியன் 2 டெய்லி ஆறுமணி நேரம் மேக்கப்… கமல் போட்ட உழைப்பு… appeared first on Touring Talkies.
]]>The post வருங்கால புதுமண ஜோடிகளுக்கு விருந்து வைத்த கமல்! மெக்ஸிகன் இயக்குனர் பங்கேற்பு… appeared first on Touring Talkies.
]]>மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் நடித்துவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் 2 படத்தில் இணையவில்லை ஆனால் தக் லைஃப் படத்தில் கமலோடு இணைந்துள்ளார்.தக் லைஃப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகி உள்ளன.
சில வாரங்களுக்கு முன்னதாக நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் தாங்கள் என்கேஜ்ட் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்கள். இவர்கள் மகா சமுத்திரம் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். அதற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க விட்டாலும் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் நிச்சயம் செய்துக்கொண்டார்கள்.
இந்நிலையில் சித்தார்த் அதிதி ராவ் மட்டுமின்றி கமல்ஹாசனுடன் மெக்ஸிகன் இயக்குநரான அல்ஃபோன்ஸோ குரான் இவர்கள் அனைவரும் ஒன்றாக உணவு உண்ணும் போட்டோக்கள் இணையத்தில் பரவின.கிராவிட்டி, ரோமோ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்தவர் தான் அல்ஃபோன்ஸோ குரான்.கமல்ஹாசன் அவர் நடித்த மருதநாயகம் படத்தின் புகைப்படங்களை மெக்ஸிகன் இயக்குனரிடம் காட்டி அதைப்பற்றி விளக்கும் புகைப்படங்கள் வெளியாகின.இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில் அவற்றின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வருங்கால புதுமண ஜோடிகளுக்கு விருந்து வைத்த கமல்! மெக்ஸிகன் இயக்குனர் பங்கேற்பு… appeared first on Touring Talkies.
]]>The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.
]]>சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் தெலுங்கானாவில் வனபத்திரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக செய்தி பரவி சினிமா உலகில் பரபரப்பையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அவர்களுக்கு திருமணம் நிச்சயமானதை இன்ஸ்டாகிராம்-ல் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ENGAGED என தெரிவித்துள்ளார் சித்தார்த்.
நடிகர்கள் சம்பளமும் உயர்ந்து கொண்டே போவது போல இயக்குனர்களின் சம்பளமும் உயர்ந்து கொண்டே போகிறது. ஜவான் மூலம் பாலிவுட்-ல் டாப் இயக்குனராக மாறிய அட்லி விஜய்-ன் அடுத்த படத்தை இயக்க போவதாக செய்திகள் உலவுகின்றன.அப்படத்தில் விஜயின் சம்பளம் 200 கோடியாகவும் அட்லியின் சம்பளம் 100 கோடியாக உயரும் என சொல்லப்படுகிறது.
மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.இதன் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு மே முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தொகுப்பாளர் ஜாக்குலின்-க்கு பிக்பாஸ் சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் போனது இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாப் போட்டியாளராக பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய மாயா ஆனால் டைட்டில் கைப்பற்ற முடியாமல் போனது.பிக்பாஸ் பெரிதும் கைக்கொடுக்காத போதிலும் தற்போது ஹீரோயின் வாய்ப்பு அவருக்கு அமைய உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் மாயா.ஆனால் தமிழ் படத்தில் அல்ல தெலுங்கு படத்திலாம்.
2011-ல் நண்பன் திரைப்படம் வெளிவந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான் நண்பன் படம்.இதன் ரீமேக்கை முதலில் பார்த்திபன் இயக்குவதாக இருந்ததாம்.இதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, விஜய் 3 இடியட்ஸ் ரீமேக் கதைக்கு செட் ஆகமாட்டார் எனவும் ரீமேக் படங்களை நான் இயக்குவது இல்லை என வாய்ப்பை உதறி தள்ளினாராம் பார்த்திபன்.
The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.
]]>The post “ காதலிக்க கத்துக்குங்க.!”: முத்தமழை பொழிந்த சித்தார்த் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.
அதில் அவர் தனது செல்ல நாய்க்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கும்படி காட்சிகள் இருக்கின்றன. மேலும், ‘காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும். உங்களுக்கு உதவும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல்தான் வாழ்க்கையில் எல்லாம்” எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
The post “ காதலிக்க கத்துக்குங்க.!”: முத்தமழை பொழிந்த சித்தார்த் appeared first on Touring Talkies.
]]>The post அதிதி ராவ் பிறந்தநாள்: ட்விட்டரில் கவிதை வெளியிட்ட சித்தார்த்.! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தும், ஆங்கில கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலை தளப்பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதில் அவர் அதிதியை ‘பார்ட்னர்’ என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த அதிதி ராவ், ‘நீங்கள் கவிஞர் என்பது தெரியாது. திறமையான உங்களைப் பற்றி நான் தெரிந்திருக்க வேண்டும்’ என்று கமென்ட்டில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது
The post அதிதி ராவ் பிறந்தநாள்: ட்விட்டரில் கவிதை வெளியிட்ட சித்தார்த்.! appeared first on Touring Talkies.
]]>The post “சித்தா படத்தைபார்க்கத் துணிவு இல்லை!”: திருச்சி சிவா எம்.பி. appeared first on Touring Talkies.
]]>தன் அண்ணன் மகளுக்கும் சித்தார்த்திற்கும் இடையிலான பாசத்தையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் சித்தார்த்தின் போராட்டத்தையும் கதைக்களமாகக் கொண்டுள்ள இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைத்துறையில் உள்ள பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
அவ்வகையில் மாநிலங்களவை எம்.பி-யான திருச்சி சிவா, ‘சித்தா’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர், “சித்தா” படம் பார்த்துவிட்டு தாமதமாக உறங்கி விடியற்காலையில் படத்தின் நினைப்பு வந்து மீண்டும் தூக்கம் வராமல் எழுதியது இது!
சமுதாயத்தில் படர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபாதகத்தைப் பார்ப்பவர்கள் மனம் பதறப் பதற உணர்த்தியிருக்கும் படம் சித்தா. தூக்கம் தொலைவதற்குக் காரணமான இந்த சினிமாவை மீண்டும் பார்க்கத் துணிவு இல்லை… அவசியமும் இல்லை. ஆனால் மற்றவர்கள் ஒருமுறையாவது இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சித்தார்த் என்ற ஒரேயொரு அறிமுகமான நடிகரைத் தவிர அனைவரும் புதுமுகங்கள், ஒன்று கூட சினிமா முகம் கிடையாது. ஆனால் நடிப்பினால் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள்.
இயக்குநரை ஆரத்தழுவி இதே தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு பாலசந்தர் என நெற்றியில் முத்தமிட வேண்டும். கொஞ்சம் சிரமம்தான். ஆனால் யதார்த்தம் என்பதால் எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் தேவை என்பதால் பெற்றோர் அவசியம் பிள்ளைகளோடு சென்று பார்த்து வந்தால் படத்தை அங்கீகரித்துப் பாராட்டியதாக அமையும்” என்று தெரிவித்திருக்கிறார்.
The post “சித்தா படத்தைபார்க்கத் துணிவு இல்லை!”: திருச்சி சிவா எம்.பி. appeared first on Touring Talkies.
]]>The post தாய்லாந்து பீச்சில் சித்தார்த் செய்த தரமான சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் தாய்லாந்து கடற்கரையில் அவர் இருக்கும் படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இது பழைய படம். தவிர இது குறித்து சித்தார்த் அப்போதே பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த வருடம் தாய்லாந்துக்கு சென்றார். அப்போது ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் பீச்சுக்கு சென்றார். இரவு நேரத்தில் அங்கு இருந்த லோக்கல் மீனவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை.
நள்ளிரவு ஆகிவிட்டதால், அந்த மீனவரிடம் சித்தார்த் இங்கே தூங்க இடம் இருக்கா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த மீனவர், இது உன்னுடைய பீச்தான் இங்கேயே படுத்து தூங்கு என சொல்ல; அவரும் அங்கேயே தூங்கிவிட்டார்.
மறுநாள் காலை எழுந்து தனது ஓட்டல் அறைக்கு வந்தார்.
இதை அவரே குறிப்பிட்டு இருக்கிறார். இந்த படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.
The post தாய்லாந்து பீச்சில் சித்தார்த் செய்த தரமான சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post தயாரிப்பாளர் சங்கம் கண்டுக்கலை!: சித்தார்த் கோபம்! appeared first on Touring Talkies.
]]>மேலும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சித்தா ப்ரஸ் மீட்டை, கன்னட அமைப்பினர் சிலர் வந்து தடுத்தது குறித்தும் பேசினார்.
அப்போது அவர், “நான் கர்நாடகாவில் ஒரு அரங்கில் பர்மிஷன் வாங்கித்தான் பிரஸ் மீட் நடத்தினேன். அன்றைக்கு எந்த பந்த்தும் நடக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் தான் பந்த் அறிவித்து இருந்தனர். ஒரு அமைப்பை சேர்ந்த 10 பேர் தான் உள்ளே வந்து மிரட்டுனாங்க, அவங்களுடன் தான் பிரச்சனை.
மத்தபடி கன்னட சினிமா துறைக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அந்த பத்துபேரின் செயலுக்காக, சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் மாதிரி பெரியவங்க, மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
கன்னட மக்கள் என் படத்தை ரசித்து பார்க்கிறாங்க” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் பணம் போட்டு தயாரித்த படத்தை முடிந்த வரை மக்களிடம் கொண்டு செல்ல போராடி வருகிறேன். பாதிக்கப்பட்ட தயாரிப்பாளராக நான் இருக்கிறேன், இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த யாருமே என்னை தொடர்பு கொண்டு இது பற்றி பேசவில்லை. நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு இப்படி நடக்கக் கூடாது” என பேசினார்.
The post தயாரிப்பாளர் சங்கம் கண்டுக்கலை!: சித்தார்த் கோபம்! appeared first on Touring Talkies.
]]>The post “என் படத்தை யார் பார்ப்பார்கள் என்றனர்!” கண்கலங்கிய சித்தார்த் appeared first on Touring Talkies.
]]>அதற்கான காரணம் குறித்து படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் சித்தார்த், “தமிழகம் மற்றும் கேராளவின் முதன்மையான விநியோகஸ்தர்களான ரெட்ஜெய்ன்ட் மூவிஸ், ஸ்ரீ கோகுலம் சினிமாஸைச் சேர்ந்தவர்கள் இந்தப்படத்தை பார்த்து பாராட்டினர்.
கர்நாடகாவில் ‘கேஜிஎஃப்’ தயாரிப்பாளர்கள் படத்தை பார்த்துவிட்டு உரிமையை பெற்றுக்கொண்டனர்.
இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் வெளியாக வேண்டியது. ஆனால் பலரும், ‘சித்தார்த் படத்தை யார் திரையரங்குக்கு வந்த பார்க்க போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினர். நான் அவர்களிடம் என்னுடைய படம் சிறந்த படமாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று கூறினேன்.
இறுதியாக ஏசியன் பிலிம்ஸின் சுனில் ‘சித்தா’ படத்தை பார்த்து அதன் தரத்தை உணர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து வாங்கினார்” என்றார்.
இதற்கிடையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post “என் படத்தை யார் பார்ப்பார்கள் என்றனர்!” கண்கலங்கிய சித்தார்த் appeared first on Touring Talkies.
]]>The post “குழந்தையை பிடித்து கடலில் தள்ளுகிறார்கள்!”: சித்தார்த் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>
The post “குழந்தையை பிடித்து கடலில் தள்ளுகிறார்கள்!”: சித்தார்த் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>