The post தாய்க்காக கோவில் கட்டிய நடிகர் விஜய்… appeared first on Touring Talkies.
]]>தி கோட் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் போன மாதம் கேரளா திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட்டது.இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பிற்காக சில தினங்களுக்கு முன்பு விமானம் மூலம் துபாய் மூலமாக ரஷ்யா சென்றார் விஜய். இன்னும் ஓரிரு நாட்களில் படபிடிப்பு முடிய உள்ள நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க நாடு திரும்புவார் எதிர்பார்க்கப்படுகிறது.
தி கோட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி69 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்த திரைப்படத்தை எடுத்தபின் முழுநேரமும் அரசியலில் மக்களுக்காக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.அதற்காக கட்சியை வலுப்படுத்துவது போன்ற பல விஷயங்களை எப்போதோ தொடங்கிவிட்டார்.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு சாய் பாபா கோவிலில் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.அவர் சென்ற கோவில் சீரடி சாய்பாபா கோவில் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இதுவென தகவல் பரவியது.
அதேசமயம் நடிகர் விஜய் அவருக்கு சொந்தமான நிலத்தில் அவருடைய தாய் ஷோபாவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் சாய் பாபா கோவில் இருக்கிறார்.அந்த கோவிலை சென்னை கொரட்டூர் பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டியுள்ளார். அவர் கட்டியுள்ள கோவிலுக்கு சென்ற பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அந்தசமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது என தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post தாய்க்காக கோவில் கட்டிய நடிகர் விஜய்… appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினியை, நான் அப்படி சொல்லவே இல்லை!”: ஷோபனா விளக்கம் appeared first on Touring Talkies.
]]>தளபதி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் ரஜினிகாந்த். சாதாரண உடை அணிந்து நடிக்க வேண்டும். ஆனால் அவர், காஸ்ட்லியானஇறுக்கமான உடை அணிந்து செட்டுக்கு வந்தார். பிறகு இதை மாற்றச் சொல்லி இருக்கிறார் மணிரத்னம்.
படப்பிடிப்பின் இடைவேளையில், நாயகியாக நடித்த ஷோபனா, “நீங்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் கமல்ஹாசனை ஹீரோவாக்க திட்டம் போடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
The post “ரஜினியை, நான் அப்படி சொல்லவே இல்லை!”: ஷோபனா விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினியுடன் நடித்த படத்தில் மறக்க முடியாத சம்பவம்!”: சொல்கிறார் சோபனா appeared first on Touring Talkies.
]]>“1989இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நான் நடித்த திரைப்படம் சிவா. இந்த படத்தில் ‘இரு விழியின் வழியே நீயா வந்து போனது’ என்ற ஒரு பாடல் இருக்கும். அந்த படப்பிடிப்பின் போது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஒரு டிரான்ஸ்பரன்ட் சேலையை கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் பாடல் காட்சி எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்கள். நான், அந்த சேலையை பார்த்தே இது மழையில் எடுக்கப்படும் பாடல் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
கைவசம் வேறு எந்த துணியும் என்னிடம் இல்லை, 10 நிமிடத்திற்குள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்.
என்ன செய்வது என யோசித்த நான், அங்கிருந்த மேஜையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து உள்ளே கட்டிக்கொண்டு அதற்கு மேலே புடவை கட்டினேன். ஒரு வழியாக இப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன்” என கூறினார் சோபனா.
The post “ரஜினியுடன் நடித்த படத்தில் மறக்க முடியாத சம்பவம்!”: சொல்கிறார் சோபனா appeared first on Touring Talkies.
]]>The post மண்வாசனை படத்தில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>1983ல், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான, மண்வாசனை திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் ரேவதி. தொடர்ந்து “புதுமை பெண்”, “மௌன ராகம்”, “புன்னகை மன்னன்”, “கிழக்கு வாசல்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.
அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி ரேவதி கூறியிருக்கிறார்.
அவர், “என் அப்பா கெலுண்ணி நாயர் ராணுவத்தில் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது நண்பர் ஒருவர் மூலம், பாரதிராஜாவுக்கு என் புகைப்படம் சென்றது.
உடனடியாக என்னை அழைத்து மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். ஆஷா என்ற என் பெயரை ரேவதி என மாற்றினார்.
இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஷோபனா. அப்போது அவர் பிளஸ் டூ தேர்வு இருந்த நேரம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்தே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது” என ரேவதி கூறியிருக்கிறார்.
The post மண்வாசனை படத்தில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>