The post சிவாஜி கணேசனால் வருத்தமான எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>ஒரு கட்டத்தில் அவருக்கும், நாடக சபாவின் உரிமையாளர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது எம்.ஆர்.ராதா, அந்த நாடகக் கம்பெனியில் இருந்து விலக நினைத்தார்.
இதையடுத்து, சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்களிடம், “நான் இந்த கம்பெனியைவிட்டு விலகுகிறேன்.. யார் யார் என்னுடன் வருகிறீர்கள்” என்று கேட்டார்.
அப்போது சிவாஜிகணேசன் உள்ளிட்ட நடிகர்கள் மவுனமாக இருந்தனர்.
இதனால் எம்.ஆர்.ராதா மிக வருத்தத்துடன் சென்றார்.
ஏன் சிவாஜி கணேசன் மவுனமாக இருந்தார்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post சிவாஜி கணேசனால் வருத்தமான எம்.ஆர்.ராதா! appeared first on Touring Talkies.
]]>The post சிவாஜியை பற்றி தெரியமாமலே போன விசயம்! appeared first on Touring Talkies.
]]>“பொதுவாக சிவாஜி கணேசன் என்றால் மிக சிக்கனமானவர்.. எளிதில் யாருக்கும் உதவி செய்துவிட மாட்டார் என்கிற பிம்பம் உண்டு. ஆனால் அள்ளிக்கொடுப்பதில் அவரை மிஞ்ச முடியாது.
அவரது நாடகங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வீரபாண்டிய கட்டபொம்மன். இந்த நாடகம் நூற்றுக்கும் அதிகமான தடவை மேடையில் அரங்கேற்றப்பட்டது. அப்போது நாடக கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்தது போக, மீதம் இருந்த 32 லட்சத்தை தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு வழங்கினார்.
தவிர, மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போதும் அள்ளிக்கொடுத்து இருக்கிறார். ஆனால் தான் செய்த உதவிகளை இவர் விளம்பரப்படுத்திக் கொள்ள வில்லை” என்றார்.
The post சிவாஜியை பற்றி தெரியமாமலே போன விசயம்! appeared first on Touring Talkies.
]]>The post “சிவாஜியை கருணாநிதி எப்படி பாராட்டுவார் தெரியுமா?”: கனிமொழி appeared first on Touring Talkies.
]]>இந்த படம்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படம்.
இது குறித்து பேசிய கனிமொழி, “சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கருணாநிதி. எப்படி நடிக்கிறான் பாரு என, படம் ஓடிக்கொண்டிருக்கும்போது எழுந்து சென்று தொலைக்காட்சியில் முத்தம் கொடுப்பார் கலைஞர்” என்றார்.
The post “சிவாஜியை கருணாநிதி எப்படி பாராட்டுவார் தெரியுமா?”: கனிமொழி appeared first on Touring Talkies.
]]>The post வீரபாண்டிய கட்டபொம்மன்: எதிர்த்து நின்று ஜெயித்த சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>இப்படம் குறித்த சுரவாஸ்யமான தகவலை சிவாஜியே ஒரு முறை பேட்டியில் கூறியிருக்கிறார்.
அவர், “சிறு வயதில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை பார்த்த எனக்கு, கட்டபொம்மனாக நடிக்க என்ற ஆசை பிறந்தது. வெகுகாலம் கழித்து திரைத்துறையில் முக்கிய நடிகராக மாறினேன். பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். . அப்போது மிகப் பிரபலமான எழுத்தாளராக திகழ்ந்த சக்தி கிருஷ்ணசாமி என்ற எழுத்தாளரை அழைத்து “வீரபாண்டிய கட்டபொம்மன்” வரலாற்றை நாடகமாக வடிவமைக்கச் சொன்னேன்.
அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்தேன். அந்த நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து ரசித்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு, இந்த நாடகத்தை நான் படமாக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன், நீங்கள்தான் அதில் நடிக்க வேண்டும் என கூறினார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். இப்படித்தான் “வீரபாண்டிய கட்டபொம்மன்” என்ற பிரம்மாண்ட படைப்பு உருவானது.
ஆனால் பல தடைகள் எழுந்தனய ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து ஒரு கதை வெளிவந்துகொண்டிருந்தது. அதன் அடிப்படையில் ஒரு படத்தை தயாரிக்கலாம என என ஆனந்த விகடனின் நிறுவனரும், ஜெமினி ஸ்டூடியோஸின் உரிமையாளாருமான எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டிருந்தார்.
அவரை நேரடியாக சந்திதது,“நீங்கள் எங்களுக்காக பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்கவேண்டும்” என கோரிக்கை விடுத்தேன். அவரும் விட்டுக்கொடுத்தார்.
படப்பிடிப்புக்கு செல்லும் நேரத்தில், பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் “வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு தெலுங்கர். அவரது படத்தை எப்படி தமிழில் எடுக்கலாம்” என இத்திரைப்படத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். இதையெல்லாம் மீறி படம் உருவாகி பெரும் வெற்றி பெற்றது” என்று கூறியிருக்கிறார் சிவாஜி கணேசன்.
The post வீரபாண்டிய கட்டபொம்மன்: எதிர்த்து நின்று ஜெயித்த சிவாஜி! appeared first on Touring Talkies.
]]>