The post ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி செய்த காரியம்! அதிர்ந்த கன்னட சூப்பர்ஸ்டார்! appeared first on Touring Talkies.
]]>நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிலும் இப்படி எளிமையாகவே இருக்கிறார்.
இந்த படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார் நடித்து வருகிறார். அவருக்கு என தனியாக ஒரு கேரவான் கொடுத்துள்ளனர். அவருக்கு வெயில் ஆகாது என்பதால் நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கேரவானில் ஓய்வெடுத்துவந்துள்ளார்.
ஆனால், ரஜினி அப்படி இல்லாமல் வெளியே அமர்ந்திருப்பதை பார்த்த அவர், நாம் மட்டும் இப்படி இருப்பது சரியில்லை என நினைத்து அவரும் வெளியே அமர்ந்துள்ளார். ஆனால், வெயில் தாங்காமல் உடல் சோர்வாகி அடிக்கடி குளுக்கோஸ் குடித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் மிகவும் சோர்வடைந்துள்ளார். இதை பார்த்த ரஜினி அவரிடம் சென்று உங்களுக்கு என்ன பிரச்சனை? என கேட்டார்.
சிவ ராஜ்குமார் எல்லாவறையும் சொன்னதும் கோபமடைந்த ரஜினி ‘எனக்கு இதுவெல்லாம் செட் ஆகும். உங்கள் உடல்நிலைக்கு நீங்கள் கேரவானில்தான் இருக்க வேண்டும் எனக்கூறி அவரை ரஜினியே அழைத்து சென்று கேரவானில் விட்டாராம். மேலும், சிவராஜ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து அவர் கிளம்பும் வரை ரஜினியும் கேரவானிலேயே இருந்தாராம். ரஜினியின் செயலை சிவ ராஜ்குமார் பார்ப்பவர்கள் எல்லோருடம் வியந்து பேசி வருகிறாராம்.
The post ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி செய்த காரியம்! அதிர்ந்த கன்னட சூப்பர்ஸ்டார்! appeared first on Touring Talkies.
]]>