The post ரம்யாவின் பார்ட்டி ஷூட்! வைரலாகும் கவர்ச்சி படம்! appeared first on Touring Talkies.
]]>தவிர இவர், போட்டோ ஷூட்டிற்கு பெயர் போனவர். குறிப்பாக இவரது மொட்டை மாடி போட்டோ ஷூட் ரொம்பவே பிரபலம். ஆனால், சமீப காலமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவுடுவதை நிறுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ட்டி உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவை ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
The post ரம்யாவின் பார்ட்டி ஷூட்! வைரலாகும் கவர்ச்சி படம்! appeared first on Touring Talkies.
]]>The post ரம்யா பாண்டியன், ஷிவதா நாயர் நடிக்கும் ‘இடும்பன்காரி’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>தற்போது, ‘இடும்பன்காரி’ என்னும் புதிய திரைப்படத்திற்காக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் பி.டி.அரசகுமாரின் பி.டி.கே. பிலிம்ஸுடன் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மென்ட் கை கோர்த்துள்ளது.
புதுமுக இயக்குநர் அருல் அஜித் இயக்கும் இந்த ‘இடும்பன்காரி’ படத்தில் ஷிவதா நாயர் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் அனுபமா குமார், ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், இயக்குநர் வேலு பிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை அமீன் செய்ய, ‘தடம்’ புகழ் அருண்ராஜ் இசையமைக்கிறார். இக்னேஷியஸ் அஸ்வின் படத் தொகுப்பை கையாள்கிறார்.
பார்வையாளர்களை அவர்களது இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் பிரத்யேக அனுபவத்தைத் தரும் பரபரப்புமிக்க துப்பறியும் திரில்லராக இந்த ‘இடும்பன்காரி’ திரைப்படம் இருக்கும் என்று படக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பறியும் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டன.
தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இது நிறைவடைந்தவுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று, ‘இடும்பன்காரி’ விரைவில் திரைக்கு வரவுள்ளது.
The post ரம்யா பாண்டியன், ஷிவதா நாயர் நடிக்கும் ‘இடும்பன்காரி’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post சூர்யா தயாரிக்கும் 14-வது படம் பூஜையுடன் இன்று ஆரம்பமானது..! appeared first on Touring Talkies.
]]>’36 வயதினிலே’ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று’ படம் வரை இந்த நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு அனைவருக்கும் தெரியும். தற்போது தங்களுடைய 14-வது படத்தைத் துவக்கியிருக்கிறது சூர்யாவின் 2-டி நிறுவனம்.
இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் வாணி போஜனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இவர்களுடன் இணைந்து ‘கோடங்கி’ வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. பல்வேறு படங்களுக்கு தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். தன் குரலால் கிறங்கடித்த க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். தன் இசையாலும் கிறங்கடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தயாரிப்பாளர் – சூர்யா, இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், எழுத்து, இயக்கம் – அரிசில் மூர்த்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், இசை – க்ரிஷ், படத் தொகுப்பு – சிவ சரவணன், கலை இயக்கம் – சி.கே.முஜிப்பூர் ரஹ்மான், ஆடை வடிவமைப்பு – வினோதினி பாண்டியன், பாடல்கள் – யுகபாரதி, விவேக், மதன்குமார், சண்டை வடிவமைப்பு – ராக் பிரபு, தயாரிப்பு நிர்வாகம் – செந்தில் குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று ஆரம்பமானது.
இந்த நிகழ்ச்சியில் படக் குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி B.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குநர் ஜே.ஜே,ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் பார்வையாளர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
The post சூர்யா தயாரிக்கும் 14-வது படம் பூஜையுடன் இன்று ஆரம்பமானது..! appeared first on Touring Talkies.
]]>