The post விஜய் சேதுபதியை திடீரென சந்தித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா… விஜய் சேதுபதி குறித்து இணையத்தில் போட்ட அந்த ட்வீட்… appeared first on Touring Talkies.
]]>மணிரத்னத்தின் திருடா திருடா படத்தின் கதை ஆசிரியராகவும் இவர் இருந்தார். ரங்கீலா, சத்யா, சர்க்கார், ரத்த சரித்திரா போன்ற பல முக்கியமான படங்களை இயக்கியுள்ளார்.கில்லிங் வீரப்பன், வீரப்பன், லட்சுமி என்டிஆர் போன்ற அரசியல் சர்ச்சை படங்களை இயக்கிய வர்மா, திடீரென ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’, கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் போன்ற படங்களை எடுத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்நிலையில், ராம்கோபால் வர்மா திடீரென விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு வந்து அவரை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், விஜய் சேதுபதி திரையில் இருப்பதை விட நேரில் ரொம்பவே அழகாக உள்ளார் என தனது தனித்துவமான பாணியில் ட்வீட்டும் போட்டுள்ளார். இருவரும் இணைந்து விரைவில் படம் எடுக்க உள்ளார்களா என்பது குறித்து திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
The post விஜய் சேதுபதியை திடீரென சந்தித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா… விஜய் சேதுபதி குறித்து இணையத்தில் போட்ட அந்த ட்வீட்… appeared first on Touring Talkies.
]]>The post “மன்னிப்பு கேட்க மாட்டேன்!”: கொலை மிரட்டல் விடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், உலகளவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் ராஜமௌலிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ராம்கோபால் வர்மா.
தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜமௌலி சார் உங்களின் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். உங்கள் மீது பொறாமையில் இருக்கும் இயக்குனர்கள் உங்களை கொலை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவின் நானும் ஒருவனாக இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் உண்மையை உளறிவிட்டேன்”என பதிவிட்டுள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மா இது போன்ற ஒரு கொலை மிரட்டலை சோசியல் மீடியாவில் பகிர்ந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் இதை ராம் கோபல் வர்மா கண்டுகொள்ளவில்லை.
The post “மன்னிப்பு கேட்க மாட்டேன்!”: கொலை மிரட்டல் விடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா! appeared first on Touring Talkies.
]]>The post வெப் சீரீஸால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம்கோபால் வர்மா & இஷா கோபிகர்! appeared first on Touring Talkies.
]]>இந்த தொடரை ராம்கோபால் வர்மா தயாரிக்க அகஸ்தியா மஞ்சு இயக்கியுள்ளார்.
இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அஸ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண், சாயாஜி ஷிண்டே, அபிலாஷ் சவுத்ரி, பிரதீப் ராவத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
டிரெய்லரின் வழியே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த தொடர், தற்போது ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகியுள்ள தொடர்களில் ஒன்றாகும்.
தகனம் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர், தன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கும் ஒரு மகன். பழி வாங்குதல், இரத்தக் களரி மற்றும் ஒடுக்கு முறைக்கான எதிர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் அமைக்கப்பட்ட திரில்லர் தொடராகும்.
மிகச் சிறப்பான நிஜ வாழ்க்கை சித்தரிப்புகள் மற்றும் வலுவான அழுத்தமான உள்ளடக்கத்திற்காக அனைவராலும் விரும்பப்படும் இயக்குநர் ராம்கோபால் வர்மா, பார்வையாளர்களை எப்போதும் இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும் பரபர விறு விறு கதைகளை தருவதில் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
பல திரைப்படங்களில் ஒன்றாகப் பணியாற்றிய வர்மாவும், நடிகை இஷா கோபிகரும் மீண்டும் இணைந்து, பணியாற்றுவதன் மூலம் ‘தகனம்’ தொடருக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர்.
இஷா கோபிகர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக இந்த தொடரில் அவதாரம் எடுத்துள்ளார். அஞ்சனா சின்ஹா அவருடைய கதாபாத்திரத்தில் க்ரைம் அதிகமாக இருக்கும் நகரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அமைதியைக் கொண்டுவருகிறார், மேலும் அவர் இத்தொடரின் சூத்திரதாரராகவும் அவரே இருக்கிறார்.
பவானி வேடத்தில் நடிக்கும் நடிகை நைனா கங்குலி, பல பெங்காலி மற்றும் தென்னிந்திய படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் இந்தத் ‘தகனம்’ தொடரில் பழி வாங்கும் நக்சலைட் வேடத்தில், பன்முகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
திறமையின் வடிவமாக விளங்கும் நடிகர் அபிஷேக் துஹான், தகனத்தில் ‘ஹரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நிச்சயமாக தனது திறமைமிகு நடிப்பால் பார்வையாளர்களால் கவனிக்கப்படுவார்.
தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் அபிலாஷ் சவுத்ரி, அவரது நிஜ வாழ்க்கை ஆளுமைக்கு முற்றிலும் எதிரான ஒரு அதிரடியான நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே, ‘தகனம்’ தொடரில் சென்னா ரெட்டியாக நடித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள இந்தத் தொடரை பற்றி தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா பேசுகையில்… “எனது முதல் OTT தொடரான ‘தகனம்’ தொடரை MX Player, உடன் இணைந்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மகாத்மா காந்தி சொன்ன ‘கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும்’, மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ‘பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி’ என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளதுதான் இந்த கதை.
இந்தத் ‘தகனம்’ வெறும் பழி வாங்கும் கதையல்ல. பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல. ஆனால் இது உங்களை உறைய வைக்கும். உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும் குற்றங்களைப் பற்றியது.
இந்தத் தொடருக்காக, கதையின் வன்முறைகளை நிகழ்த்திக் காட்டும் இத்தொடரின் கதைக்கு நியாயம் செய்யும், தீவிரமான மெத்தட் ஆக்டிங் நடிகர்களை தேடித் தேடி தேர்ந்தெடுத்துள்ளோம். இத்தொடருக்கு பார்வையாளர்கள் தரும் வரவேற்பை காண எங்கள் குழு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது..” என்றார்.
இத்தொடரில் நடித்தது குறித்து நடிகை இஷா கோபிகர் கூறுகையில்.. “திரையில் இந்த சீருடையை அணிய முடிந்ததை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் நம்பிக்கையுடன் கிடைத்துள்ளது.
இந்த சீருடையில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் அயராது வேலை செய்கிறார்கள். ஏராளமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இதனால்தான் நாம் அனைவரும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் இருக்க முடிகிறது. அவர்கள் உழைத்த அனைத்து கடின உழைப்பையும் நான் பாராட்டுகிறேன். அதற்காக, நான் அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
அவர்களை திரையில் சித்தரிக்க முடிந்தது எனக்கு பெருமை. கடினமாக உழைத்து, க்ரைம் அதிகமாக இருக்கும் நகரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அமைதியைக் கொண்டுவரும் பாத்திரத்தில் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன்.
இந்தக் கதாப்பாத்திரம் உண்மையில் ஒரு நடிகராகவும், பெண்ணாகவும் என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தியது மற்றும் ராம்கோபால் வர்மாவின் உருவாக்கத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்…” என்றார்.
முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இந்தி மற்றும் தமிழிலும் டப் செய்யப்படுகிறது.
இன்று, ஏப்ரல் 14, 2022 முதல் MX Player-ல் பிரத்தியேகமாக அனைத்து அத்தியாயங்களையும் இலவசமாக பாருங்கள்.
The post வெப் சீரீஸால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம்கோபால் வர்மா & இஷா கோபிகர்! appeared first on Touring Talkies.
]]>The post “நமது முன்னோர்கள் சொன்ன முட்டாள்தனம்தான் திருமணம்” – இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் கருத்து appeared first on Touring Talkies.
]]>இந்த நேரத்தில் சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மா தனது பங்குக்கு பொதுவாக திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது டிவீட்டரில் சில கருத்துக்களை சிதற விட்டிருக்கிறார்.
அதில், ”பிரபலங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகள் குறித்து இளைஞர்களை எச்சரிப்பதற்கான நல்ல ட்ரெண்ட் செட்டர்களாக இருக்கின்றன. திருமணத்தைவிட எதுவும் காதலை விரைவாகக் கொல்வதில்லை. காதல் நீடித்திருக்கும்வரை காதலிப்பதே மகிழ்ச்சிக்கான ரகசியம். அதன் பிறகு திருமணம் என்னும் சிறைக்குள் சிக்காமல் கடந்து போய்விட வேண்டும்.
திருமணத்தில் உள்ள காதல், அவர்கள் அந்தக் காதலைக் கொண்டாடும் நாட்களைவிடக் குறைந்த நாட்களே நீடிக்கும். அதாவது 3 முதல் 5 நாட்கள் மட்டுமே. புத்திசாலிகள் காதலிக்கிறார்கள். முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
விவாகரத்துகள்தான் விஷேச நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட வேண்டும். காரணம் அதில் இருக்கும் விடுதலை. இருவரது ஆபத்தான குணாதிசயங்களைப் பரிசோதிப்பதால் திருமணங்கள் மிகவும் அமைதியாக நடத்தப்பட வேண்டும்.
மகிழ்ச்சியின்மை மற்றும் சோகம் ஆகியவற்றின் தொடர்ச்சியை அறிவிப்பதில் நம்முடைய மோசமான முன்னோர்களால் சமூகத்தில் திணிக்கப்பட்ட மிகவும் மோசமான சடங்குதான் திருமணம்” என்று சொல்லியிருக்கிறார்.
The post “நமது முன்னோர்கள் சொன்ன முட்டாள்தனம்தான் திருமணம்” – இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் கருத்து appeared first on Touring Talkies.
]]>