The post ரகுவரனுடன் இணைந்து நடிக்காத பெரிய ஹீரோ.: யார், ஏன்? appeared first on Touring Talkies.
]]>இந்த வரிசையில் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து பலருக்கும் தெரியாத சுவையான செய்திகளை கூறினார்.
நிழல்கள் ரவி மற்றும் சத்யராஜுடன் ரகுவரனுக்கு இருந்த நட்பு, ரோஹினியை அவர் திருமணம் செய்தபோது திரைத்துறையினர் மகிழ்ச்சியுடன் மனநிறைவு அடைந்தது, ரஜினிக்கும் ரகுவரனுக்கும் இருந்த ஒற்றுமை, புரிதல்… இப்படி பல விசயங்களை சித்ரா லட்சுமணன் கூறினார்.
பிறகு, மிகப்பெரிய நடிகர் ஒருவர் ரகுவரனுடன் நடித்ததே இல்லை என்பதையும் கூறினார்.
அந்த நடிகர் யார்… ஏன் இணைந்து நடிக்கவில்லை..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post ரகுவரனுடன் இணைந்து நடிக்காத பெரிய ஹீரோ.: யார், ஏன்? appeared first on Touring Talkies.
]]>The post மிட் நைட்.. மது பார்.. ரகுவரன் செய்த சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>ரகுவரனின் அர்ப்பணிப்பான நடிப்பு, அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை, திரையுலகில் அவரது நண்பர்கள்.. என பல தகவல்களை கூறினார்.
அப்போது, “சத்யராஜ் நாகயனாக நடித்த
சின்னப்பதாஸ் படத்தை தயாரித்தேன். ஒரு நாள் படப்பிடிப்பு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் நடந்தது. இரவு 11.30க்கு படப்பிடிப்பு முடிந்தது.
அதன் பிறகு நான், சத்யராஜ் உள்ளிட்ட நண்பர்கள், பக்கத்தில் இருக்கும் சோழா ஓட்டலுக்குச் சென்று கொஞ்சம் மது அருந்தலாம் என முடிவு செய்தோம். எங்களில் ஒருவர், “டைம் ஆயிருச்சே..இந்நேரத்துக்கு பாரை மூடியிருப்பார்களே” என்றார்.
அதற்கு சத்யராஜ், “ரகுவரனுக்கு எல்லா பார்லயும் செல்வாக்கு இருக்கு… தைரியமா வாங்க” என்று அழைத்துச் சென்றார்.
நாங்கள் சோழா ஓட்டலுக்குச் செல்லும்போது, உள்ளே இருந்து ரகுவரன் வெளியே வந்தார். அவரிடம் விசயத்தைச் சொன்னோம்.
பார் உள்ளே சென்றோம். லைட் எல்லாம் அனைக்கப்பட்டு இருந்தது. யாரையும் காணோம்.
அதன் பிறகு நடந்த சம்பவம்..” என்று தொடர்ந்தார் சித்ரா லட்சுமணன்.
அது என்ன சம்பவம்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post மிட் நைட்.. மது பார்.. ரகுவரன் செய்த சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post தனுஷ் என் பிள்ளை: ரகுவரன் உருகியதற்கு காரணம் இதுதான்! appeared first on Touring Talkies.
]]>அவர் நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்ட போது அனைவரும் மகிழ்ந்தனர். காரணம் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவர், அதன் பிறகு மாறிவிடுவார் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
அதே நேரம் ரகுவரன் நெகிழ்ந்த மனதுடையவர். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் நடிப்பதை அவர் பெரிதும் விரும்பினார்.
“தனுஷ் என் பையன் மாதிரி! என் மகன் என்னை எப்படி பார்த்துக்குவானோ, அப்படி பார்த்துக்கிட்டான்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
ரகுவரன் குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்…
https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8
The post தனுஷ் என் பிள்ளை: ரகுவரன் உருகியதற்கு காரணம் இதுதான்! appeared first on Touring Talkies.
]]>The post “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவானது இத்திரைப்படம்.
ரகுவரன், நிழல்கள் ரவி, எஸ். பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் முக்கய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு வித்தியாசமான திரைப்படம் இது.
அது என்ன வித்தியாசம்…
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8
The post “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்! appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரன், ‘ஐ நோ.. ஐ நோ..’ என திரும்பத்திரும்ப சொல்லும் காட்சி மிக பிரபலம். வித்தியாசமான முகபாவணையில், தொணியில் அதே வார்த்தையை கூறி அசத்தி இருப்பார்.
இந்த காட்சியை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கெனவே திட்டமிடவில்லை.
ரகுவரன் கொடுத்த கோளாறுதான் இந்த காட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
அப்படி ரகுவரன் கொடுத்த கோளாறு என்ன..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்! appeared first on Touring Talkies.
]]>The post ரகுரவன் எடுத்த ரிஸ்க்! பயந்த கே.எஸ்.ரவிக்குமார்! appeared first on Touring Talkies.
]]>“படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ரகுவரன், இறந்துவிடுவது போல் காட்சி உள்ளது. இந்த காட்சியில் அவரது மனைவியாக நடித்த ரேகா பீரோவின் கதவை திறக்கும்போது அதில் இருந்து ரகுவரன் இறந்து விழுவார். அவரது கழுத்து அறுந்து ரத்தம் வரவேண்டும் இதுதான் காட்சி.
இந்த காட்சிக்காக ரகுவரனின் கழுத்தில் சிகப்பு சாயம் பூசப்பட்டது. ஆனால் அவருக்கு வியர்வை அதிகம் வந்ததால் சாயம் நிற்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் நிற்காததால், ஒரு கத்தியில் சிகப்பு பவுடரை வைத்து கழுத்தில் தேய்த்துக்கொண்டிருந்தார். இதை பார்த்த நான் அதிர்ச்சியில் என்ன பண்ற என்று கேட்டேன்.
ரத்த சாயம் நிற்கவில்லை. அதனால் கத்தியில் வைத்து கழுத்தியில் தேய்க்கிறேன் என்று சொன்னார். கொஞ்சம் அழுத்தி தேய்ச்சா சொத்துபோய்டுவ… எனக்கு முதல் படம் எதாவது விபரீதம் ஆகிவிட போகிறது என்று சொல்லி கத்தியை பிடுங்கிவிட்டேன். நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்வார் ரகுவரன்” என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
The post ரகுரவன் எடுத்த ரிஸ்க்! பயந்த கே.எஸ்.ரவிக்குமார்! appeared first on Touring Talkies.
]]>The post மகனை நினைத்து கலங்கிய ரகுவரன்! appeared first on Touring Talkies.
]]>பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிரிழந்தார்.
ரகுவரன் இறப்பதற்கு முன்பாக அதாவது 21/02/2007 அன்று, பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
“ஒரு நாள் இரவு காரை எடுத்துட்டு மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குப் சென்றிருந்தேன். வாசலில் ஒரு வயசான கிழவர் அழுக்காபடுத்திக்கிடந்தார். திடீர் என்று முழித்து ‘எம் பொண்டாட்டியக் காண லையே’னு பதறித்திட்டினார் . கொஞ்ச தூரம் தள்ளித்தான் அவர் பொண்டாட்டி இருட்டுக் குள்ளஉடாக்கார்ந்து இருந்தார். பார்த்துட்டு, ‘தெரியாமத் திட்டிட்டேன்டி’ன்னு புலம்பறார். ‘போய்யா! நீதான் சாப்பிடாம படுத் துட்ட’ன்னு கோவிக்குது அந்தக் கிழவி. அப்புறம் ரெண்டு பேரும் துணி மூட்டையைப் பிரிச்சு, சாப்பிட்டுட்டுப்படுத்து விட்டார்கள். பார்க்கும்போதே மனசு மழை விழுந்த மாதிரி பூத்துப் போச்சு. நினைத்து பார்த்தல் அடுத்த ஜென்மத்திலாவது அந்தக் கிழவனா பிறக்கணும்னு மனசு ஏங்கியது.
இன்னொரு நாள், சிக்கனலில் காரில் காத்திட்டிருக்கும்போது ஏழு வயசுக் குழந்தை இந்தியில பேசி என் சட்டையப் புடிச்சு இழுத்தது. ஏதோ ஒரு நினைப்பில் சட்டுடென்று குழந்தை கையைத் தட்டிட்டு வந்திவிட்டேன். ஏனெண்று தெரியவில்லை, திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை முகமே ஞாபகத்துல வந்து கொண்டே இருந்தது. மறுபடி அந்த பையனை போய்த் தேடினேன். அந்தக் குழந்தையைக் காணோம். –
உடனே என் மகன் ரிஷிக்கு போன்செய்து, ‘உன்னைப் பாக்கணும் போல இருக்குடா. நாளைக்கு வர்றியா?’னு கேட்டு, வரச்சொன்னேன்.
இப்படித்தான் நான் இருக்கேன். எல்லாருக் உள்ளேயும் என்னைத் தேடுறேன். நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது” என நெகிழ்ச்சியான சம்பவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
The post மகனை நினைத்து கலங்கிய ரகுவரன்! appeared first on Touring Talkies.
]]>The post ‘அவரையே’ பயமுறுத்தினாரா ரகுவரன்? appeared first on Touring Talkies.
]]>பல நடிகர்களுடன் வில்லனாக தோன்றி இருக்கிறார். குறிப்பாக ரஜினிக்கு வில்லனாக அருணாச்சலம், முத்து,பாட்ஷா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் முத்திரை பதித்து இருக்கிறார்.
ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததில்லை. அந்த காலகட்டத்தில், ‘ரகுவரன் சிறப்பாக நடிப்பதால், தன்னைவிட பெயர் வாங்கி விடுவாரோ என்ற அச்சம் கமலுக்கு இருந்தது. அதுதான் காரணம்’ என சில பத்திரிகைகளில் கிசு கிசுக்கள் வந்ததும் உண்டு.
ஆனால் சமீபத்தில் பேட்டி அளித்த ரகுவரன் மனைவி ரோஹினி இதை மறுத்துள்ளார்.
அவர், “நாயகன் படத்தில் நாசர் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு முதலில் ரகுவரனைத்தான் கமல் அணுகினார். அப்போது வேறொரு படத்திற்காக ரகுவரன் நீளமான முடி வளர்ந்திருந்தார். ஆகவே நடிக்க முடியவில்லை.
கமல், ரகுவரன் இருவருக்குமே சேர்ந்து நடிக்கவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது” என ரோஹினி கூறியிருக்கிறார்.
The post ‘அவரையே’ பயமுறுத்தினாரா ரகுவரன்? appeared first on Touring Talkies.
]]>The post மன நோயாளியை திரையில் அற்புதமாக சித்தரித்தவர் ரகுவரன் – Dr.Karthikeyan | Chai With Chithra | Part 2 appeared first on Touring Talkies.
]]>