The post சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற ‘தள்ளிப் போகாதே’ படம் appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டது. அந்த அழகான படப்பிடிப்பிற்கு (IIFTC) இந்திய சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்றுள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது.
இயக்குநர்-தயாரிப்பாளர் அனுராக் பாசு, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ரோனி லஹிரி, தயாரிப்பாளர் வர்தா கான் நந்தியாத்வாலா, ஆகியோர் முன்னிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஓம்சரண் விருதை பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் பாடகர், இசை தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் யோஹானி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
The post சர்வதேச சுற்றுலா மாநாட்டு விருதை வென்ற ‘தள்ளிப் போகாதே’ படம் appeared first on Touring Talkies.
]]>The post ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் புதிய படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் புரொடக்ஷன் நம்பர் 10-ஆக தயாரித்து, இயக்குகிறார்.
கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் ‘மெட்ரோ’ சிரிஷ், மயில்சாமி, ‘தலைவாசல்’ விஜய், பிரிஜிதா, பவன் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.
படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார்.
இயக்குநர் – ஆர்.கண்ணன், ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம், சண்டைப் பயிற்சி இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.
இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு மூன்று மாதங்களில் முடிவடையும் என்று தயாரிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.
The post ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>The post மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan appeared first on Touring Talkies.
]]>The post மிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிப்பில் ‘காசேதான் கடவுளடா’ படம் இன்று துவங்கியது appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
கண்ணன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
Masala Pix நிறுவனம் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளரும், இயக்குநருமான கண்ணன் இப்படம் பற்றிப் பேசும்போது, “மிகுந்த உற்சாகத்துடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பை துவக்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம்.
நீண்ட கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாக பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்னென்றும் நிற்கும் ‘காசேதான் கடவுளடா’ படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது.
தங்களது அற்புத நடிப்பு திறமை மற்றும் நகைச்சுவை உணர்ச்சியால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழுவினர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த அட்டகாசமான நடிகர் குழுவுடன், திறமை மிகுந்த தொழில் நுட்ப குழுவும் இணைந்து இப்படத்தினை மிகச் சிறந்த படைப்பாக தருவோம் எனும் முழு நம்பிக்கை உள்ளது.
குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக இப்படம் இருக்கும்…” என்றார்.
The post மிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிப்பில் ‘காசேதான் கடவுளடா’ படம் இன்று துவங்கியது appeared first on Touring Talkies.
]]>