The post கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! appeared first on Touring Talkies.
]]>சூர்யாவை வைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ‘அருவா’ படத்தை இயக்க முழுக் கதை, திரைக்கதை, வசனத்துடன் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அவர் அந்தப் படத்தின் கதை சூர்யாவுக்குப் பிடிக்காததால்.. அந்த பிராஜெக்ட்டை அவர் கை கழுவினார். இந்தப் படத்துக்குக் கொடுத்த கால்ஷீட்டை பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம் சூர்யா.
சூர்யா இருக்கும் தைரியத்தில் விஜய்யிடமும், விக்ரமிடம்கூட போகாமல் இருந்த ஹரிக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. இத்தனை மாதங்கள் காத்திருந்தது முழுக்க வீணாகிப் போன கோபத்தில் இருந்தார் ஹரி.
இந்தக் கோபத்தைத்தான் “சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகும்…” என்று சூர்யா சொன்னவுடன், உடனேயே சூர்யாவைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஹரி. இருந்தும் சூர்யா அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இடையில் தான் கையில் வைத்திருக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போன்ற ஹீரோக்களைத் தேடிய ஹரிக்கு ஏமாற்றமே கிடைத்தது. விஜய்யின் பக்கத்திலேயே போக முடியவில்லை. விக்ரமும் இப்போ என் ஸ்டைலே மாறிருச்சு என்று சொல்லி எஸ்கேப்பாக, தனித்து நின்றார் ஹரி.
இப்போது இவருக்குக் கை கொடுத்திருப்பது இவருடைய மைத்துனரான நடிகர் அருண் விஜய். இயக்குநர் ஹரி, தனது இத்தனை வருட கால திரையுலக வாழ்க்கையில் அருண் விஜய்யை வைத்து ஒரு படம்கூட இயக்கியதில்லை. அருண் விஜய்யை ஒரு படத்தில்கூட நடிக்க வைத்ததும் இல்லை.
இப்படியிருக்க நாம் ஏன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று நினைத்த மாமனும், மச்சானும், பட்ஜெட்டை கூற, குறைய மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து இதே ‘அருவா’ படத்தைத் துவக்குகிறார்களாம்.
‘தடம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றியிருக்கும் இடம் நோக்கியெல்லாம் ஓடத் துவங்கியிருக்கிறார் அருண் விஜய்.
வெற்றி கிட்டட்டும்..!
The post கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! appeared first on Touring Talkies.
]]>