The post சூப்பர் ஸ்டார் ரஜினி காட்டிய அக்கறை- தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பெருமிதம் appeared first on Touring Talkies.
]]>‘Pride of Tamil Cinema’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த புத்தகத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடைத்ததையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தபோது நடந்த விஷயங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்
நான் ரஜினியிடம் கொடுத்த புக்தகத்தை புரட்டிப் பார்த்த ரஜினி, “புத்தகத்தை பிரிண்ட் செய்ய எவ்வளவு செலவு ஆச்சு..” என்று கேட்க “14 லட்சம் செலவாச்சு ஸார்…” என்றேன்.
“ஏன்.. இப்படி நீங்களே ரிஸ்க் எடுக்குறீங்க…” என்றார் ரஜினி. “எந்த பப்ளிஷரும் வரலை ஸார். அதுனால் என் வொய்ப்கிட்ட பணம் வாங்கி செலவழிச்சேன்” என்றேன். உடனேயே ரஜினி.. “இல்ல.. இல்ல.. இதையெல்லாம் போட்டா திரும்பி வருமா.. எப்படி வரும்ன்னு பிளான் பண்ணித்தான் செய்யணும்.. இப்படியெல்லாம் இனிமேல் செய்யாதீங்க. வரவே வாரதுன்னு தெரிஞ்சும் ஏன் செய்யணும்..?” என்று கேட்டார்.
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனால் அவர் என் மீதான அக்கறையில்தான் இதைச் சொல்கிறார் என்பதை உணர்ந்தேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி சில வருடப் பழக்கத்தில் இருப்பவரிடமே ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி அட்வைஸ் செய்றாராருன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்..?” என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
The post சூப்பர் ஸ்டார் ரஜினி காட்டிய அக்கறை- தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பெருமிதம் appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ படம் உருவான கதை..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த உண்மையை தனஞ்செயன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் இது பற்றிப் பேசும்போது, “மோசர்பேர் நிறுவனத்தின் சார்பில் நான் தயாரித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தை இயக்குநர் சேரன் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் பாண்டிராஜ். அப்போதே எனக்கு அவரை நன்கு தெரியும்.
அந்தப் படம் தயாரித்து முடித்து ரிலீஸுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்த சூழலில் சேரன்தான் பாண்டிராஜை அழைத்து வந்து ‘பசங்க’ படத்தின் கதையைச் சொன்னார். கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துப் போனது.
“நானே இதைத் தயாரிக்கிறேன்” என்றேன். அப்போது சேரன் அந்தப் படத்தை இயக்குவதாகவும் பாண்டிராஜ் இணை இயக்கம் செய்வதாகவும் பேசி முடித்தோம். அந்தப் பட வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று சேரனுக்கும், பாண்டிராஜூவுக்கும் இடையில் கதை தொடர்பாக ஏதோ கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் சேரன் அந்த பிராஜெக்ட்டில் இருந்து விலகிவிட்டார்.
நானும் ‘ராமன் தேடிய சீதை’ படத்தின் வெளியீட்டில் இருந்த பெரிய சிக்கல்களை களையும் வேலையில் இருந்தேன். இந்த நேரத்தில் பாண்டிராஜ், “பசங்க’ படத்தை உடனேயே துவக்க வேண்டும்” என்று சொன்னார். ஆனால், என்னால் அப்போது அது முடியாமல் இருந்தது. ஏனெனில், அப்போதே ஐந்தே முக்கால் கோடி செலவில் ‘ராமன் தேடிய சீதை’ படத்தை முடித்திருந்தேன். அதை ரிலீஸ் செய்வதில் இருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் வேலையாக இருந்தது. அதனால் பாண்டிராஜூக்கு என்னால் உறுதியளிக்க முடியவில்லை.
திடீரென்று இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இடையில் வந்து பாண்டிராஜிடம் கதை கேட்டிருக்கிறார். அவருக்குக் கதை பிடித்துப் போய் நான் தயாரிக்கிறேன் என்று முன் வரவே.. அந்த ‘பசங்க’ பிராஜெக்ட் என் கையைவிட்டுப் போய்விட்டது.
அந்தப் படத்தில் நான் தயாரிப்பதாக இருந்தபோது அதில் நடிப்பதற்காக நான் தேர்வு செய்திருந்த நடிகர், நடிகைகள் வேறு வேறு ஆட்கள். நாசரின் மகன், அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, விக்ரமின் மகன் துருவ் மூவரையும் நான் பேசி வைத்திருந்தேன்.
நாசரும், விக்ரமும் ஒத்துக் கொண்டார்கள். விக்ரமின் மனைவி இந்தக் கதையைக் கேட்டு மிகவும் இம்ப்ரஸ்ஸாகிவிட்டார். அர்ஜூன் மட்டும் “இவ்ளோ பெரிய பொண்ணு எனக்கு இருக்குன்னு வெளில சொல்லணுமா”ன்னு யோசிச்சிட்டு, அப்புறமா “சரி”ன்னு சொல்லிட்டார்.
ஆனால், கடைசியில் சசிகுமார் கைக்கு போனதும் “நான் புதுமுகங்களை வைத்தே படத்தை எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு கேஸ்ட்டிங்கை மொத்தமாக மாற்றிவிட்டார் பாண்டிராஜ். ஆனாலும், அவர் ஜெயித்துவிட்டார். அந்தப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது.
‘பசங்க’ படத்தை மிஸ் செய்துவிட்டோமே என்ற வருத்தம் இப்போதும் எனக்குள் இருக்கிறது. இந்தப் படத்தை நானே தயாரித்திருந்தால் ‘அந்த மூவரையும் நான்தான் அறிமுகப்படுத்தினேன்’ என்ற பெயராவது எனக்குக் கிடைத்திருக்கும்…” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.
The post இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ படம் உருவான கதை..! appeared first on Touring Talkies.
]]>The post ‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.
]]>G.தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13-ம் தேதி டீசர் வெளியாக உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார்.
திரைப்பட வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் G.தனஞ்ஜெயனின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு ‘கபடதாரி’ வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கபடதாரி’ படத்தின் டீசரை வெளியிடுவதால், அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘கபடதாரி’ தரத்துடன் மற்றும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை வெகுவாக கவரும் படமாக இருக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.
டிசம்பர் மாதம் ‘கபடதாரி’ திரைக்கு வரவிருக்கிறது.
The post ‘கபடதாரி’ டீசரை வெளியிடும் ‘இசைப் புயல்’ பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! appeared first on Touring Talkies.
]]>