The post முத்தக் காட்சியில் நடிக்காதற்கு ‘அவர்’தான் காரணம்!: பிரியாமணி appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர், “முத்தக் காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன். காரணம் வீட்டில் என் கணவருக்கு பதில் சொல்லியாக வேண்டும். அது என் பொறுப்பு என நினைக்கிறேன். இதுபோன்ற காட்சிகள் கொண்ட படங்கள் வந்தன. ஆனால், மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்
The post முத்தக் காட்சியில் நடிக்காதற்கு ‘அவர்’தான் காரணம்!: பிரியாமணி appeared first on Touring Talkies.
]]>The post “விருது படம் வேண்டாம்!”: ப்ரியாமணி அதிரடி appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்தி வீரன் நடித்தார். இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
இந்த நிலையில் முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு சில ஆண்டுகள் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர், படங்களில் நடிக்காமல் இருந்தார்.
மீண்டும் திரையுலகுக்கு வந்துள்ள அவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர், “கமர்சியல் படங்களியே நடிக்க விரும்புகிறேன். ஆர்ட் படம்.. விருதுக்கான படம்.. போன்றவற்றில் நடிக்க விரும்பவில்லை” என அதிரடியாக தெரிவித்து உள்ளார்.
The post “விருது படம் வேண்டாம்!”: ப்ரியாமணி அதிரடி appeared first on Touring Talkies.
]]>The post அட… சேலையலியே இவ்வளவு கவர்ச்சியா! ப்ரியாமணி அதிரடி படங்கள்! appeared first on Touring Talkies.
]]>The post DR-56 – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>கன்னட படமாகத் தயாரிக்கப்பட்டு தமிழ் தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
நகரில் புகழ் பெற்ற மூளை நரம்பியல் நிபுணரான ஒரு மருத்துவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். இவரின் சடலம் கிடந்த இடத்தருகே குடியிருந்த இன்னொரு மருத்துவரும் அடுத்த நாள் கொலையாகிறார். இப்படி சங்கிலித் தொடராக நடக்கும் இந்தக் கொலை வழக்கு சி.பி.ஐ. வசம் வருகிறது.
சி.பி.ஐ.-யில் அதிகாரியாக இருக்கும் பிரியாமணி இந்தக் கொலை வழக்கை விசாரிக்க வருகிறார். கொலை செய்யப்பட்ட மருத்துவர்களிடையே இருக்கும் ஒற்றுமையைக் கண்டறிகிறார்.
தனது முகத்தில் ஒரு பக்கம் முழுவதும் எரிந்த கோரமான நிலையில் இருக்கும் கதையின் நாயகன்தான் இந்தக் கொலைகளை செய்தாரா என்ற சந்தேகம் சி.பி.ஐ.-க்கு வருகிறது. நாயகனோ, 56 நிமிடங்களுக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற சூழலில் தனது வாழ் நாளை எண்ணிக் கொண்டிருப்பவர்.
இவர் கைது செய்யப்படும் சூழலில் மற்றொரு மருத்துவரும் கொலை செய்யப்படுகிறார். இறுதியில் மருத்துவர்களை கொலை செய்து வரும் அந்த மர்ம நபர் யார்.? எதனால் இந்தக் கொலைகள் நடைபெறுகிறது..? என்பதுதான் மீதிக் கதை.
சி.பி.ஐ. அதிகாரியாக மிடுக்கான உடையில், ஸ்டைலாக நடந்து கொண்டேயிருக்கிறார் பிரியாமணி. அவர் கண்டுபிடிப்பதெல்லாம் விசாரணையின் அடு்த்தக் கட்டமாக போய்க் கொண்டேயிருக்கிறது. நடிப்பென்று பார்த்தால் பெரிதாக ஏதுமில்லை என்பதுதான் உண்மை.
நாயகனாக நடித்திருக்கும் பிரவீன் தனது முகத்தில் கோரமான மேக்கப்பை போட்டுக் கொண்டு பரிதாப உணர்வை வரவழைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். பிணமாக அவர் நடித்திருக்கும் அந்த 4 நிமிடக் காட்சிக்காகத் தனி பாராட்டு அவருக்கு..!
மற்றக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள். பிரவீனின் அப்பாவின் அந்த கடைசி நிமிட நடிப்பு ஓகேதான்.
ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். நோபின் பாலின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். கிளைமாக்ஸ் சோகப் பாடலும், அதன் காட்சிகளும் கொஞ்சமாய் நம் மனதைத் தொடுகின்றன. பின்னணி இசை பெரிதான கவனத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் சிறப்புப் பணியாக பூட்ஸ் சப்தத்தை மட்டும் சத்தமாய் கொடுத்து பணி நிறைவு செய்திருக்கிறார் சவுண்ட் என்ஜீனியர்.
பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் அதைச் சொல்லியவிதத்தில்தான் நம்மை ஏமாற்றியிருக்கிறார். அடுத்து என்ன என்பதைத் தூண்டிவிடும் அளவுக்கான திரைக்கதையை ரசிகர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டார் இயக்குநர். கன்னட படம் என்பதால் டப்பிங்கில் பல இடங்களில் வசனங்கள் ஸ்லிப் ஆகிறது. மேலும் தோற்றத்திற்கும், குரலுக்கும் ஒவ்வாதவகையில் டப்பிங் வாய்ஸை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
சி.பி.ஐ.யில் என்ன பதவியில் இருக்கிறார் பிரியாமணி என்பதுகூட சொல்லப்படவில்லை. ஒரேயொரு கொலையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கிறார்கள் என்றால் அதற்கான வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும். அதுவும் இங்கே சொல்லப்படவில்லை. எல்லாவற்றையும் தாண்டி இயக்கம் என்பது ரசிகனை மதிமயங்க வைப்பது. அது இந்தப் படத்தில் மிக, மிக குறைவு என்பதால் படத்தை ரசிக்க முடியாத நிலைமையாகிவிட்டது.
Dr 56 – மருந்து கெட்டுப் போச்சுங்க இயக்குநரே..!
RATING : 2.5 / 5
The post DR-56 – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post CBI அதிகாரியாக பிரியாமணி நடித்திருக்கும் ‘DR-56’ படம் appeared first on Touring Talkies.
]]>தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9-ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாமணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொன்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளரான A.N.பாலாஜியே இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அவரே படத்தை வெளியிட இருக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் பேசும்போது, “இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவி வரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம். ப்ரியாமணி CBI அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தக் கதையை சொல்லும்போதே ப்ரியாமணி மிகவும் பிரமிப்பானார். நேர்த்தியான CBI அதிகாரியாக நடிக்க தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி, மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். ப்ரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது.
இந்தப் படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
The post CBI அதிகாரியாக பிரியாமணி நடித்திருக்கும் ‘DR-56’ படம் appeared first on Touring Talkies.
]]>