The post என்னது பட வாய்ப்பே இல்லாமல் காத்திருக்கும் நயன்தாராவா? appeared first on Touring Talkies.
]]>கடைசியாக நயன்தாரா அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் ஒரு படத்தை எடுக்க ஆசைப்பட்டார் ஆனால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது.தற்போது எல்.ஐ.சி என்ற அந்த படத்தை செவன் ஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோரை வைத்து இய்க்கி வருகிறார்.இதற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சராசரியாக நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 5 கோடி முதல் 8 கோடி வரை சம்பளமாக பெறுவார்.ஆனால் அதிரடியாக அவர் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.எல்.ஐ.சி படத்தில் நடிக்க 10 கோடியை சம்பளமாக கேட்ட போது அதை ஏற்கவில்லை என்பதால் அந்த படத்தில் இருந்து நழுவிக் கொண்டார் என செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன.
இவர் தனது சம்பளத்தை திடீரென உயர்த்த காரணம் இந்தியில் முதல் படத்திலேயே என்ட்ரி ஆகி மாஸ் காட்டினார் அதுமட்டுமல்லாமல் அப்படி 1000 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை நொறுக்கியது இதனால் தனது மார்க்கெட் வேல்யூவை அதிகரிக்க தனது சம்பளத்தை நயன்தாரா உயர்த்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
தனது சம்பளத்தை அதிகமாக கேட்டால் மார்க்கெட் சூடு பிடித்து இருக்கிறது என்பார்கள் எனவே பட வாய்ப்புகள் அதிகமில்லாத சமயத்தை பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது அவசியம் என்ற எண்ணத்தால் தான் தனது சம்பளத்தை டபுளாக அதிகரித்து இருக்கிறார் என தகவல் அடிப்படுகிறது.
The post என்னது பட வாய்ப்பே இல்லாமல் காத்திருக்கும் நயன்தாராவா? appeared first on Touring Talkies.
]]>The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் என்ற அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அவரே இயக்கி அவரே நடித்த லவ் டுடே திரைப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ள நட்சத்திரங்களை வைத்து இயக்கி வெற்றியும் பெற்றார். இவரின் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புகள் பலரையும் கவர்ந்தது.கோமாளி திரைப்படம் புதியதொரு நகைச்சுவை கலந்த அனுபவத்தை தந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படம் அதன் திரைக்கதை மற்றும் ஜெயம் ரவியின் வெகுளித்தனமான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற வசனம் படத்திற்கு அடையாளத்தை கொடுத்தது எனலாம்.
விக்னேஷ்.சிவனின் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் மற்றும் கிருத்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்நிலையில் அவர் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.இந்தப்படத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்தை சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் தொடர்ந்து இந்த கதையை பிரதிப் ரங்கநாதனும் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்ஐசி படத்தில் நடித்துவரும் பிரதீப், விரைவில் இதன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அவர் இணையவுள்ளார்.
The post பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post சசி குமார் இயக்கத்தில் நயன்தாராவா?அட புது காம்பினேஷனா இருக்கே… appeared first on Touring Talkies.
]]>நயன்தாரா தற்போது டெஸ்ட் திரைப்படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள எல்ஐசி படத்திலும் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
இந்த எல்ஐசி படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி, நயன்தாரா 81, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும், அதேபோல் முக்கியமான லீட் கேரக்டரில் ஜெயிலர் 2 படத்திலும் இவர் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகுமார் இயக்குனராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் நடிகர் என வலம் வருபவர். இவர் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக தன் பயணத்தை தொடங்கினார்.பின்னர் தொடர்ந்து படங்களை இயக்கி வந்த சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் சசிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post சசி குமார் இயக்கத்தில் நயன்தாராவா?அட புது காம்பினேஷனா இருக்கே… appeared first on Touring Talkies.
]]>The post பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யா.! appeared first on Touring Talkies.
]]>இதை பெற்றுக்கொண்ட விக்னேஷ் சிவன் ‘தேங்க் யூ ஃபார் தி டேட்ஸ்’ என்பார். இதில் கால்ஷீட் கொடுத்ததற்கு நன்றி என்பதை சூசகமாக வெளிப்படுத்தியிருந்தார். இருவரும் இணையும் இந்த புதிய படத்தை தொடக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் படத்தை ‘லியோ’வை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதில் பிரதீப் ரங்கநாதனுடன், எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
The post பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யா.! appeared first on Touring Talkies.
]]>The post “மக்கள், ‘லவ் டூடே’ படத்தை மறந்திடுவாங்க..”: இயக்குநர் சுசீந்திரன் அதிரடி appeared first on Touring Talkies.
]]>ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் “இந்த லவ் டூடே திரைப்படம் இந்த தலைமுறைக்கு மிகவும் ஈர்ப்பான திரைப்படமாக இருக்கும். இந்த தலைமுறைக்கேற்ற ஒரு ஜாலியான திரைப்படம். ஆனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் லவ் டூடே திரைப்படத்தை நம்மால் கனெக்ட் செய்துகொள்ள முடியாது.
காதல், 7ஜி ரெயின்போ காலனி போல, காலத்துக்கும் நினைவில் நிற்கும் படம் அல்ல.
ஆனால் அதை மீறி ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் ஜெயித்துக் காட்டிய பிரதீப் ரங்கநாதனை நினைக்க எனக்கு பெருமையாக உள்ளது.
லவ் டூடே படத்தோடு ஒப்பிடும்போது பிரதீப் ரங்கநாதனின் கோமாளி திரைப்படம்தான் சிறந்த திரைப்படம்” என சுசீந்திரன் அப்பேட்டியில் தெரிவித்தார்.
The post “மக்கள், ‘லவ் டூடே’ படத்தை மறந்திடுவாங்க..”: இயக்குநர் சுசீந்திரன் அதிரடி appeared first on Touring Talkies.
]]>The post எனது குறும்படமே எனக்கான விஸ்டிங் கார்டு..! இயக்குனர் பிரதீப் appeared first on Touring Talkies.
]]>கோமாளி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். எதார்த்தம் கலந்த கதைக்களத்துடன் ரசிகர்களின் பாராட்டை பெற்ற திரைப்படமாக தற்போது வெளிவந்து வெற்றி நடை போடுகிறது லவ் டுடே.
இளம் வயது இயக்குனராக அறிமுகமாகி இவர் இயக்கிய இரண்டாவது படத்தில் கதாநாயகனாக நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக ஜொலிக்கிறார்.
சமீபத்தில் அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உங்கள் முதல் படத்தில் பெரிய ஹீரோ,பெரிய தயாரிப்பாளர்,இப்போது கதாநாயகன் எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
கல்லூரி படிக்கும் போதே குறும்படம் எடுக்கத் தொடங்கி விட்டேன்.எனது படங்களின் வழியாகவே எனக்கான வாய்ப்பு,அடையாளத்தை கொடுத்தது நான் எடுத்த குறும்படம். சினிமாவில் எனக்கான விஸ்டிங் கார்டாக அமைந்து விட்டது என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
The post எனது குறும்படமே எனக்கான விஸ்டிங் கார்டு..! இயக்குனர் பிரதீப் appeared first on Touring Talkies.
]]>The post “நான் அப்பவே கணிச்சேன்..!”: அர்ச்சனா கல்பாத்தி appeared first on Touring Talkies.
]]>பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள, லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இதே கதையை சில தயாரிப்பாளர்களிடம் சொல்லி, அவை நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, யு டியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவர், “பிரதீப் இந்த படத்தின் கதையைச் சொன்ன போதே, நிச்சயம் இது வெற்றி பெறும் என நம்பினேன். பெரிய பட்ஜெட் படங்கள்தான் வெற்றி பெறும் என நினைப்பது தவறு. படங்களில் செலவை வைத்து பிரம்மாண்ட படம் என நினைப்பதை ஏற்க முடியாது. லவ் டுடே செலவு ரீதியாக சுமாரான பட்ஜெட் படம்தான். ஆனால், கதை என்கிற அளவில் பிரம்மாண்டமான படம்” என்றார்.
உண்மைதானே..!
The post “நான் அப்பவே கணிச்சேன்..!”: அர்ச்சனா கல்பாத்தி appeared first on Touring Talkies.
]]>