The post 100 பாடல்கள் 100 நிமிடங்கள் நடன நிகழ்ச்சி சொதப்பல்-இல் முடிந்த சோகம்… மனமுருகி மன்னிப்பு கேட்ட பிரபு தேவா… appeared first on Touring Talkies.
]]>இவரை சிறப்பிக்கும் விதமாக பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் பிரபு தேவா வராததால் சொதப்பலில் முடிந்துள்ளது.
நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி என்கிற பெயரில், பி.எஸ் ராக்ஸ் என்கிற அமைப்பு, சர்வதேச நடன தினத்தில், நடிகர் தேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்களில் நடனமாடும் நிகழ்ச்சி சென்னை ராஜரத்னம் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இதில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்காக மாணவர்கள் காலை 5 மணிக்கே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். 9 மணி ஆகியும் நிகழ்ச்சிக்கு பிரபு தேவா வராததால், நிகழ்ச்சி தொடங்கப்படமால் சொதப்பலில் முடிந்தது.
இந்நிலையில் தன்னால் வரமுடியாததற்கு மனமுருகி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபு தேவா.அந்த வீடியோவில், என்னால் வர முடியாமல் போனதற்கு மன்னித்து விடுங்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து கலைஞர்கள், நடன இயக்குனர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அங்கு வந்திருந்த பெற்றோர்கள் என அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நிச்சயமாக ஏதாவது ஒரு விதத்தில் நிச்சயம் உங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
The post 100 பாடல்கள் 100 நிமிடங்கள் நடன நிகழ்ச்சி சொதப்பல்-இல் முடிந்த சோகம்… மனமுருகி மன்னிப்பு கேட்ட பிரபு தேவா… appeared first on Touring Talkies.
]]>The post கடைசிகட்டத்தை நெருங்கிய தி கோட்…சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் ஷூட்டிங்? appeared first on Touring Talkies.
]]>பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய்யின் புதிய படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு மாஸ்கோவில் சமீபத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முன்னரே படக்குழு சென்னை திரும்பியது.
கடந்த சில நாட்களாக, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்தப் படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.அடுத்த சில நாட்களில் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்தப் படப்பிடிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அது படத்தின் சண்டைக்காட்சியா அல்லது வேறு எந்தவொரு காட்சியா என்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வாரங்களில் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும், அதன்பிறகு படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தில் இருப்பதால், அடுத்ததாக விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கடைசிகட்டத்தை நெருங்கிய தி கோட்…சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் ஷூட்டிங்? appeared first on Touring Talkies.
]]>The post ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது.படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, சொன்னதைவிடச் சிறப்பாக ‘தி கோட்’ படத்தை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கே சிறப்பான விளையாட்டுத்தனம், காமெடி உள்ளிட்ட அம்சங்களுடன் ஆக்ஷன் காட்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
எடுத்தவரையிலான காட்சிகளை ரஃப் எடிட்டில் பார்த்த விஜய்க்கு படம் மிகவும் பிடித்துள்ளது. ஆனாலும், படத்தின்மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என விஜய் கூறியுள்ளார். அடக்கி வாசிக்கவும் என படக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat appeared first on Touring Talkies.
]]>The post இத கேட்டா பிடிக்காது, கேட்க கேட்க தான் பிடிக்கும்! விசில் போடு பற்றி மதன் கார்க்கி… appeared first on Touring Talkies.
]]>தி கோட் விசில் போடு பாடலில் மதன் கார்க்கி வரிகளில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும் விதமாகவும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி ஸ்டைல் பாடலாகவும் உருவாகியுள்ள இந்த பாடல் கலவையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது எனலாம்.
இந்த பாடலின் வரிகளை எழுதிய மதன் கார்க்கி இப்பாடல் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இப்பாடல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்க கூடிய பாடலாக தான் உருவாக்கப்பட்டது.எப்படி கூகுள் கூகுள், செல்ஃபி புள்ள போன்ற பாடல்கள் எல்லாம் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டு பின்னர் ரசிக்கப்பட்டதோ அதே போல தான் இந்த விசில் போடு பாடலும் ரசிகர்களை நிச்சயம் வெகுவாக இனி கவரும் என்று கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, இப்பாடலில் அஜித், சிம்பு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த படங்களின் ரெஃபரஸ்ன்களும் இடம்பெற்று கவனத்தை பெற்றுள்ளன.
The post இத கேட்டா பிடிக்காது, கேட்க கேட்க தான் பிடிக்கும்! விசில் போடு பற்றி மதன் கார்க்கி… appeared first on Touring Talkies.
]]>The post இத கவனிச்சீங்களா? தி கோட் விஜய் பாட்டுல அஜித் சிம்பு கார்த்தி சூரியா! appeared first on Touring Talkies.
]]>விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான புதிய கீதை படத்தில் அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா என ரஜினிகாந்த் படத்தின் ரெஃபரன்ஸை வைத்து இருப்பார் விஜய் தற்போது அதே போல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யுவன் இசையில் பாட்டுப் பாடி அதிரடி ஆட்டம் போட்ட இப்பாடலில் நடிகர்கள் அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை வைத்து சிறப்பித்துள்ளார்.
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கான லிரிக்ஸ்கள் இப்பாடலில் இடம்பெற்றாலும் அதனை தாண்டி நன்றாக உற்று கவனித்தால் இப்பாடலில் தரமான சம்பவத்தை செய்துள்ளார் வெங்கட் பிரபு.அஜித் சூர்யா மட்டுமின்றி கார்த்தி மற்றும் சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்களின் ரெஃபரன்ஸ்களை சைலன்டாக உள்ளே கொண்டுவந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.
தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்ல் வீடியோவில் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களின் மினியேச்சர்கள் ரெஃபரன்ஸ்களாக கொண்டு வந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி, பிரியாணி மற்றும் மாநாடு படங்களின் ரெஃபரன்ஸை தான் வெங்கட் பிரபு இந்த பாடலில் வைத்து இருக்கிறார். இவற்றையெல்லாம் பாடலில் இடம்பெறும் முன் கண்டிப்பாக விஜய் இவற்றை பார்த்து சம்மதம் தெரிவித்த பின்னர் தான் இப்பாடல் வெளியாகி இருக்கிறது.இவை அனைத்து ரசிகர்களையும் அரவணைக்க விஜய் செய்த முயற்சியின் தான் என இணையத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
The post இத கவனிச்சீங்களா? தி கோட் விஜய் பாட்டுல அஜித் சிம்பு கார்த்தி சூரியா! appeared first on Touring Talkies.
]]>The post அஜித்தைவிட அதிக சம்பளம் கேட்ட பிரபுதேவா! appeared first on Touring Talkies.
]]>இப்படம் உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இந்தப் படத்தில் முதலில் பிரபு தேவாவைத்தான் நடிக்க வைக்க இருந்தேன். அவர் சம்பளம் குறைவாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் அஜித் நடித்தார்” என்றார்.
அதே போல இந்த படத்தில் மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கதாபாத்திரங்களிலும் வேறு நடிகர்கள் நடிக்க இருந்தனர் என்ற தகவலையும் தாணு கூறினார்.
# அவர்கள் யார்… அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=einGSjWzmSY
The post அஜித்தைவிட அதிக சம்பளம் கேட்ட பிரபுதேவா! appeared first on Touring Talkies.
]]>The post முதல் முறையாக பிரபுதேவா – அந்தோணி தாசன் கூட்டணியில் ’முசாசி’ appeared first on Touring Talkies.
]]>அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
‘முசாசி’ என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது. இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையமைப்பில், பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு, நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார்.
இதனிடையே பிரபுதேவாவிற்கு முதன்முறையாக ஃபோக் மார்லி பாடகர் அந்தோணி தாசன் பின்னணி குரல் கொடுத்திருப்பதால் இந்த பாடலுக்கும், பாடலுக்கான காணொளிக்கும் பெரும் எதிர்பார்ப்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post முதல் முறையாக பிரபுதேவா – அந்தோணி தாசன் கூட்டணியில் ’முசாசி’ appeared first on Touring Talkies.
]]>The post ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய பிரபு தேவா! appeared first on Touring Talkies.
]]>தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ படலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
இதையடுத்து படக்குழுவினருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பிரபலங்கள் பலர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் பிரபு தேவா நடன கலைஞர்களுடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
The post ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய பிரபு தேவா! appeared first on Touring Talkies.
]]>The post அடம்பிடித்து விஜயகாந்தை மாற்றிய பிரபுதேவா! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து நடிகர் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, ““பரதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. குறிப்பாக இதில் இடம்பெற்ற “புன்னகையில் மின்சாரம்” என்ற பாடல் இப்போதும் ரசிக்க வைக்கும்.
இந்த படத்துக்கு பிரபுதேவா நடன இயக்குநராக பணியாற்றினார். அதுவரை நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத விஜயகாந்தை, சிறப்பாக நடனமாட வைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கேற்ப ஸ்டெஸ்கள் – நடன அசைவுகளை – உருவாக்கினார்.
ஆரம்பத்தில் விஜயகாந்த், நடனத்துக்கு இவ்வளவு மெனக்கடல் தேவையா என கேட்க, பிரபு தேவா வற்புறுத்தி இருக்கிறார்.
இதனால், விஜயகாந்தும் பயிற்சி எடுத்து சிறப்பாக நடனமாடினார். அதுவரை யாரும் பார்க்காத ஒரு நடனத்தை ஆடியிருந்தார் விஜயகாந்த். மிகவும் ஸ்டைலிஷாக அந்த காட்சியில் இருப்பார்.
அதற்கு முன்பும் பின்பும் அப்படி ஓர் நடனம் விஜயகாந்துக்கு அமைந்ததில்லை” என்றார் பிரபுதேவா.
The post அடம்பிடித்து விஜயகாந்தை மாற்றிய பிரபுதேவா! appeared first on Touring Talkies.
]]>The post மிஸ்டர் ரோமியோ’படத்தில் மன ரீதியாக காயப்பட்டேன்..! மதுபாலா appeared first on Touring Talkies.
]]>கே. எஸ் ரவி இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மிஸ்டர் ரோமியோ. இந்த படத்தில் நாயகனாக பிரபு தேவா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் சில்பா செட்டி, மதுபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
படம் பற்றி மதுபாலா யூடியூப் சேனலில் பேசுகையில் மிஸ்டர் ரோமியோ படத்தின் பாடல் காட்சி எடுத்துக் கொண்டு இருந்தோம். அவருடன் நடனமாட முடியாது. இவங்களுக்கு பயிற்சி கொடுங்கன்னு உதவி நடன கலைஞரிடம் சொல்லிட்டு பாதியில் அரங்கை விட்டு வெளியே போயிட்டார் பிரபு தேவா. அந்த சமயம் எனக்குள் ஈகோவை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் என்னை மன ரீதியாக ரொம்ப காயப்படுத்தி விட்டது என்றார் மதுபாலா.
The post மிஸ்டர் ரோமியோ’படத்தில் மன ரீதியாக காயப்பட்டேன்..! மதுபாலா appeared first on Touring Talkies.
]]>