The post விஜயகாந்திடம் வடிவேலு பேச வேண்டும்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அதேபோல விஜயகாந்திற்க்கும் வடிவேலுவிற்கும் இருந்த கருத்து வேறுபாடுகளை பற்றி கேட்டபோது “என்னதான் பகை இருந்தாலும் விஜயகாந்த்திடம் சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என ஒரு வார்த்தை கேட்டால் தன் மேல் தவறு இருந்தால் உடனே மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் விஜயகாந்த்.ஆனால் அவரிடம் இந்த அளவு பகைத்திருக்கக் கூடாது” என்றும் தெரிவித்தார்.
The post விஜயகாந்திடம் வடிவேலு பேச வேண்டும்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post பணத்தோடு மண்டபத்திற்கு வந்த விஜயகாந்த்! ஏன்? appeared first on Touring Talkies.
]]>“எனது 2-வது தங்கையின் திருமணம். ஆனால் எனக்கு ஷூட்டிங் நடக்க 3 மாதங்கள் இருகிறது. கையில் பணம் இல்லை. அப்போது விஜயகாந்த் சார் என்னை அழைத்து தங்கை கல்யாணம் எப்போ என்று கேட்டார். வரும் 19-ந் தேதி இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவர் பணத்துக்கு என்னடா பண்ணபோற என்று கேட்டுவிட்டு ஒரு ஐடியா சொன்னார். உனக்கு 3 மாதம் கழித்துதான் என்னுடன் சோலோ ஃபைட், இந்த ஃபைட் காட்சியை நாளைக்கே எடுத்துவிடலாம் என்று சொல்லி எடுத்தார்.
மறுநாள் என் தங்கைக்கு கல்யாணம் முன்னாடி நாள் இரவு நானும் விஜயகாந்த் சாரும் ஃபைட் பண்றோம். பகலில் வேறு ஷூட்டிங்கில் இருந்த அவர் நைட் என்னுடன் ஃபைட் பண்ணுகிறார். விடியற்காலை ஷூட்டிங் முடிந்தது. நான் போய் குளித்துவிட்டு வருவதற்குள் விஜயகாந்த் மண்டபத்திற்கு வந்துவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் அந்த ஃபைட் காட்சிக்கான எனது சம்பளம் ரூ50 ஆயிரத்தை எடுத்து வந்தார். அதை வைத்து எனது தங்கை திருமணத்தை நடத்தினேன்” என்று கூறியுள்ளார்.
The post பணத்தோடு மண்டபத்திற்கு வந்த விஜயகாந்த்! ஏன்? appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் பொன்னம்பலத்தை கொல்ல முயன்ற அண்ணன்! appeared first on Touring Talkies.
]]>சமீபத்திய படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்திருந்தார். பின் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
26 வயதில் 7 கார், 3 வீடு என சம்பாதித்த இவர், மொத்த பணத்தையும் இழந்து வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அண்மையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்திருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். இவருக்கு சினிமா பிரபலங்களான சரத்குமார், கமல், சிரஞ்சீவி, கேஎஸ் ரவிக்குமார் என பலரும் உதவிக்கரம் நீட்டினர்.
இதைத்தொடர்ந்து பொன்னம்பலத்தின் சொந்த அக்கா மகனே தன் கிட்னியை கொடுத்து, அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவினார். தற்போது இவர் உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது.
மேலும் பொன்னம்பலத்தின் சிறுநீரகப் பிரச்சனைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என பல்வேறு வதந்திகள் கிளம்பியது. இதற்கு பதிலளித்த பொன்னம்பலம் பல அதிர்ச்சி தகவல்களை கூறி உள்ளார்.
“குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் என் சிறுநீரகம் பாதிப்படையவில்லை. என்னுடைய தந்தைக்கு 4 மனைவிகள். அதில் 3வது மனைவியின் மகனான என் சொந்த அண்ணன் என்னிடம் மேலாளராக சில காலம் பணி புரிந்தார்.
நான் அவரை மிகவும் நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய வளர்ச்சி பிடிக்காத அவர், எனக்கு ஸ்லோ பாய்ஷனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. சினிமாவில் முரட்டு வில்லனாக கலக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என்னுடைய வளர்ச்சியை பார்க்க அவரால் முடியவில்லை.
இதனால் பொறாமையில் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து விட்டார். அதுதான் எனது சிறுநீரக பாதிப்புக்கு காரணம் என்று மருத்துவர் கூறினார்” என பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
The post நடிகர் பொன்னம்பலத்தை கொல்ல முயன்ற அண்ணன்! appeared first on Touring Talkies.
]]>The post பொன்னம்பலத்துக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்த சிரஞ்சீவி! appeared first on Touring Talkies.
]]>அவருக்கு என் உடல்நிலை சரியில்லை. தங்களால் இயன்ற உதவியை எனக்கு செய்யுங்கள் என ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனே பத்தே நிமிடத்தில் எனக்கு சிரஞ்சீவி போன் செய்தார். சரி ஏதோ ஒரு லட்சமோ 2 லட்சமோ உதவி செய்வார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் போனில் ஹாய் பொன்னம்பலம் எப்படி இருக்கீங்க. உங்களுக்கு என்ன ஆச்சு, கிட்னி பிரச்சினையா, நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்களால் ஹைதராபாத் வர முடியுமா என கேட்டார்.
நான் உடனே அண்ணா குடும்பம் எல்லாம் இங்கே இருக்கிறார்கள் என்றேன். உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். சரி டயாலிசிஸ் செய்ய உதவி செய்வார் என நினைத்தேன். ஆனால் என்னிடம் என்ட்ரி ஃபீஸ் ரூ 200 கூட வாங்கவில்லை. கிட்டதட்ட 45 லட்சம் வரை செலவானது. அனைத்தையும் அவரே கவனித்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபாசனா என்னை நேராக வந்து பார்த்து சிரஞ்சீவி சொன்னதாக சொல்லி என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். கடவுள் போல் எனக்கு சிரஞ்சீவி உதவினார் என்று கூறினார்.
The post பொன்னம்பலத்துக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்த சிரஞ்சீவி! appeared first on Touring Talkies.
]]>