The post “திட்டமிட்டு செய்யல..தானா வந்திடுது!” சிவ கார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ‘1947 இது நமது சுதந்திரத்தின் கதை. ஒரு தனி மனிதனின் கதை. சுதந்திரத்துக்காக நிறைய பேர் கஷ்டப்பட்டு உள்ளனர். அதைத்தாண்டி வலி நிறைந்த விஷயங்களை பொன்குமார் கொடுத்துள்ளார். எல்லாருடைய உழைப்பும் இதில் தெரிகிறது. முதல் கதையையே, இப்படி ஒரு கதையாக தேர்வு செய்துள்ள இயக்குனர் பொன்குமார் சவாலை சந்திக்க தயாராக உள்ளார். சவாலை சந்திக்க தயாராக உள்ளவர், சாதிக்க தயாராக உள்ளார் என்று அர்த்தம்.
சினிமாவுக்கு வரும் முன்னர், 1000 மேடைகளுக்கு மேல் ரஜினி சார் போல மிமிக்ரி செய்து தான் வளர்ந்தேன். எனது நடிப்பில் ரஜினிகாந்தின் சாயல் இருக்கிறது. நான் திட்டமிட்டு அதை செய்யவில்லை. தானாகவே வந்து விடுகிறது” என்றார்
The post “திட்டமிட்டு செய்யல..தானா வந்திடுது!” சிவ கார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>