The post சிரித்த பா.ரஞ்சித்….ரஜினியின் முதுகில் குத்திவிட்டார் என ரசிகர்கள் கொந்தளிப்பு! appeared first on Touring Talkies.
]]>ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் தீவிரமாக நடித்துவருகிறார்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த்.இப்பட டைட்டில் ஏப்ரல் 22 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் பாஸிட்டிவ் நெகடிவ் என பல விமர்சனங்களை சந்தித்து உள்ள ரஜினிகாந்த் என்றும் முடங்கி போனதே இல்லை.எல்லா விமர்சனங்களையும் தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு இன்றும் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ரோல்மாடலாக இருந்து வருகிறார்.
இப்படியிருக்க, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் கேட்க்கப்பட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்த விதம் பரபரப்பையும் ரஜினி ரசிகர்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் எக்ஸ்ல் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் நடித்தித்தார் ரஜினிகாந்த். இந்த படங்கள் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திற்கு ஆதரவாக வந்த படங்கள் அவர்களின் வலிகளை பேசும் படங்கள் இப்படங்களில் ரஜினிகாந்த் நடித்தார்.சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் பா ரஞ்சித்திடம், ரஜினியின் கபாலி மற்றும் காலா குறித்து இந்த படங்கள் தலித் சமூகத்திற்கு ஆதரவான படங்கள் என்று தெரியாமல் ரஜினிகாந்த் நடித்தாரா என்று கேள்வி கேட்க அதற்கு பா.ரஞ்சித் நக்கலாக சிரிப்பதாய் தெரிந்தது.
இதை கண்ட ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.இரு படங்கள் நடித்து வாய்ப்பு தந்து வாழ்க்கை தந்தவரை நன்றிக்கெட்ட தனமாக பா.ராஞ்சித் ரஜினிகாந்த் முதுகில் குத்திவிட்டார் என நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக் மூலம் அவர்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
The post சிரித்த பா.ரஞ்சித்….ரஜினியின் முதுகில் குத்திவிட்டார் என ரசிகர்கள் கொந்தளிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post பா. இரஞ்சித் தயாரிப்பில் பத்தாவது படத்தின் டைட்டில் இன்று வெளியீடு! appeared first on Touring Talkies.
]]>பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல திரைப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி என அனைத்து படங்களுமே கவனத்தை ஈர்த்தன. மேலும் தற்போது ஜெ பேபி, பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இரண்டாவது படமாக இயக்கவிருக்கும் படத்தையும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.
இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோ மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவிருக்கிறது. அதோடு, நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
The post பா. இரஞ்சித் தயாரிப்பில் பத்தாவது படத்தின் டைட்டில் இன்று வெளியீடு! appeared first on Touring Talkies.
]]>