The post ‘தங்கலான்’ ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.
]]>இந்தப் படம் ஜன. 26-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் மார்ச் 29-ம் தேதிக்கு இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
The post ‘தங்கலான்’ ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.
]]>The post புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் பா.ரஞ்சித்.! appeared first on Touring Talkies.
]]>’தங்கலான்’ படத்தை தொடந்து புதிய படத்தை பா.ரஞ்சித் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதிநடிப்பில் ‘தங்கலான்’ இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து தயாரிக்கும் ஆந்தாலஜி படத்துக்கு, ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை 4 பெண் இயக்குநர்கள் இயக்குகின்றனர். அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய பெண் இயக்குநர்கள் இயக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
The post புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் பா.ரஞ்சித்.! appeared first on Touring Talkies.
]]>The post “உதயநிதிக்கு துணை நிற்கிறேன்”: இயக்குநர் பா.ரஞ்சித் appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அமைச்சர் உதய ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுக்கும் பேச்சு பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் நிகழும் மனித தன்மையற்ற செயல்களும் தான் சனாதன தர்மத்தில் உள்ளது. புரட்சித் தலைவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அயோத்திதாஸ் பண்டிதர், தந்தை பெரியார், மகாத்மா பூலே, துறவி ரவிதாஸ் போன்ற ஜாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதையே வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சரின் பேச்சை திரித்து இனப்படுகொலைக்கான அழைப்பு என்று தவறாகப் பயன்படுத்தும் கேடுகெட்ட அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைச்சரின் மீது அதிகரித்து வரும் வெறுப்பும் வேட்டையும் மிகவும் கவலையளிக்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் கருத்துக்கு துணை நிற்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
The post “உதயநிதிக்கு துணை நிற்கிறேன்”: இயக்குநர் பா.ரஞ்சித் appeared first on Touring Talkies.
]]>The post “ அற்புத பயணம்”: ‘தங்கலான்’ படப்பிடிப்பு குறித்து விக்ரம் appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “படப்பிடிப்பு நிறைவடைந்தது. என்ன ஓர் அற்புதமான பயணம். அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றினேன். ஒரு நடிகராக உற்சாகமான பல அனுபவங்களை பெற்றேன். முதல் புகைப்படத்துக்கும் கடைசி படத்துக்கும் இடையே வெறும் 118 வேலை நாட்கள் தான் இடைவெளி. ஒவ்வொரு நாளும் இந்த பெருங்கனவில் வாழ வைத்ததற்கு நன்றி பா.ரஞ்சித்” என பதிவிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் படம் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மேமாதம் நடைபெற்ற படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரம் காயமடைந்தார். அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமடைந்தார். இதற்கிடையே அவர் லண்டன் சென்று திரும்பினார். இதையடுத்து கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் ‘தங்கலான்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. தற்போது மொத்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 118 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.
The post “ அற்புத பயணம்”: ‘தங்கலான்’ படப்பிடிப்பு குறித்து விக்ரம் appeared first on Touring Talkies.
]]>The post ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்ரம் வீடியோ! appeared first on Touring Talkies.
]]>கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் உருவாகி வரும் நிலையில், மேக்கிங் வீடியோ புதிதாக வெளியாகி உள்ளது.
ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வரும் விக்ரமின் கெட்டப்பைப் பார்க்கும்போது, படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரமைப் பார்த்து, ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் உள்ளனர்.
The post ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்ரம் வீடியோ! appeared first on Touring Talkies.
]]>The post கழுவேத்தி மூக்கன் படம் பற்ரி இயக்குனர் பா.இரஞ்சித் ! appeared first on Touring Talkies.
]]>ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித், |” இப்படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு ஆழமான படம்னு நான் நினைக்கிறேன். இயக்குனர் ரொம்ப நேர்மையா இந்த படத்தை முயற்சி செய்திருக்கிறார். மிகவும் முக்கியமான பிரச்சினையை பற்றி டிஸ்கஸ் பண்ணுது. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு பார்வையாளர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்” என்றார்.
The post கழுவேத்தி மூக்கன் படம் பற்ரி இயக்குனர் பா.இரஞ்சித் ! appeared first on Touring Talkies.
]]>The post “காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் appeared first on Touring Talkies.
]]>இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு, “படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா” என கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இயக்குநர் லெனின் பாரதி, “பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மனிதனை மலம் அள்ள வைக்கும் இந்து மதத்தின் அடிப்படைவாதத்தை தனது படைப்பின் மூலம் கேள்விக்குள்ளாக்கிய விடுதலை சிகப்பிக்கு துணை நிற்போம்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மேலும் இயக்குநர் சீனு ராமசாமி, “தம்பி விடுதலை சிகப்பியின் மீதான வழக்குகள் வாபஸ் பெற வேண்டுகிறேன். காயம்பட்ட பறவைகள் கதைக்க/ கவிபாட/ இசைக்க/ அட எழுதி கிறுக்க ஊர் உண்டு/ உறவுண்டு/ நிலமுண்டு/ நீண்டு வாழ வாழ்வுண்டு/ உரிமையுண்டு/ அடியேனும் அதற்கு துணையுண்டு.. இழிவு செய்யும் நோக்கமில்லை. இளைஞன் அவன் இன்னல் செய்யாதீர்..” எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post “காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் appeared first on Touring Talkies.
]]>The post விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்ததாகவும், 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வருட இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
The post விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பின் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>The post தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித் புகைப்படம் வைரல் appeared first on Touring Talkies.
]]>இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
The post தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித் புகைப்படம் வைரல் appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: பொம்மை நாயகி appeared first on Touring Talkies.
]]>பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
ஏழை குடும்பத்தலைவனாக யோகி பாபு.. மனைவியிடம் நேசமுள்ள கணவனாக, மகளிடம் பாசமுள்ள தகப்பனாக.. மொத்தத்தில் ஒரு குடும்பத் தலைவனை கண் முன் நிறுத்துகிறார். மகளை இருவர் பலாத்காரப் படுத்த முயல்கிற காட்சியைக் கண்டு பதறுவது, புகார் அளிக்க மறுத்து சராசரி மனிதனின் உணர்வை வெளிப்படுத்துவது, பிறகு அவரே ஆவேசம் கொண்டு நீதி மன்றத்தை நாடுவது, பிறகு விரக்தியில் பேசுவது.. என அற்புதமாக நடித்து உள்ளார்.
யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா, கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
யோகிபாபுவின் அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன் மற்றும் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞராக ஹரி கிருஷ்ணன், யோகி பாபுவின் அப்பாவாக ஜி.எம். குமார், சிறுமி பொம்மை நாயகியான ஸ்ரீமதி உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு –அதிசயராஜின் ஒளிப்பதிவு, சுந்தரமூர்த்தியின் இசை, செல்வா ஆர்.கே.வின் கலை… அனைத்தும் படத்துடன் ஒன்ற உதவுகின்றன.
வசனங்கள் யதார்த்தம்.. சுடும் யதார்த்தம்.
‘பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற’
‘தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன்தான் சீரழியிறான்0’
‘போற உயிரு போராடியே போகட்டும்’ – போன்ற வசனங்கள் நெஞ்சில் தைக்கின்றன.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பெரிய பதற்றத்தைக் கொடுக்கும் வேளையில் ‘பாரத மாதா யார்’ என்கிற கேள்விக்கு பொம்மை நாயகி சொல்லும் பதில் சிந்திக்க வைக்கிறது.
படத்தை பாடமாகவும் எடுத்துள்ளார் இயக்குநர். உதாரணம், குழந்தைகளை விசாரிக்கும்போது காவலர்கள் சீருடையில் வரக்கூடாது என்பதைச் சொல்லலாம். பலருக்கும் தெரியாத விசயம் இது.
அண்ணன் தம்பியாக இருந்தாலும் வாக்கு அரசியல் ஒருவரை எப்படி மாற்றுகின்றன என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷான்.
சாதி உணர்வுடன் செயல்படும் நபர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவும், சாதி உணர்வை தள்ளி வைத்து அநீதிக்கு எதிராக போடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாகவும் காட்சிப் படுத்தி உள்ளார் இயக்குநர் ஷான்.
சமீப காலமாக தொடர்ந்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான திரைப்படங்களும் காட்சிகளும் அதிகரித்து வரும் சூழலில் இப்படம் மிக அவசியமானது. அனைவரும் பார்த்து ரசிக்க அல்ல.. உணர வேண்டிய படம்.
The post விமர்சனம்: பொம்மை நாயகி appeared first on Touring Talkies.
]]>