The post ‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.
‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சர்தாரின்’ இந்த பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
The post ‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>The post “சர்தார் படத்தின் 2-ம் பாகம் நிச்சயமாக உருவாகும்” – நடிகர் கார்த்தி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>சர்தார் படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நேற்று மாலை தி.நகர் ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும், தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.
இப்படத்தின் கதையை சாதாரணமாக கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள்.
இயக்குநர் மித்ரன் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.
சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள்.
மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும்போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.
எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும். ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி.
படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான்.
ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது. லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமையான நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி. நிச்சயமாக இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகும்..” என்றார்.
The post “சர்தார் படத்தின் 2-ம் பாகம் நிச்சயமாக உருவாகும்” – நடிகர் கார்த்தி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post “மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் appeared first on Touring Talkies.
]]>‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இந்தப் படத்துக்காக லைலா மேடத்துடன் நான் முதன்முதலில் தொலைபேசியில் பேசியபோது, என்னை “மேடம் என்று அழைக்காதீர்கள். ‘லைலா’ என்றே அழையுங்கள்” என்றார். “உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை ‘மேடம்’ என்றுதான் அழைப்பேன்” என்றேன். ஆனால், அவர் படம் வெளியான பின்பு என்னை “மேடம்” என்று அழைக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். நானும் இந்தப் படம் வெளியான பின்பு அவரை “மேடம்” என்று அழைக்கப் போவதில்லை.
அவர் ஒரு அற்புதமான நடிகை. நான் சிறு வயதில் ‘கண்ணாலே மியா மியா’ பாடலைத்தான் கேட்டு ரசிப்பேன். முதல்முறையாக அவரை பார்த்தபோதும் அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. இப்படத்தில் லைலா மேடம் நடித்தது எனக்குப் பெருமையாகவுள்ளது..” என்றார் இயக்குநர் மித்ரன்
The post “மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் appeared first on Touring Talkies.
]]>The post “லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி போரம் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்தப் படத்திற்காக இயக்குநர் மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் என்று மித்ரன் கூறினார். அப்போது லைலாவிடம் பேசினேன். அவர் ‘பிதாமகனி’ல் பார்த்தது போலவேதான் இன்னமும் அப்படியே இருக்கிறார். அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்தது படத்திற்கு பெரிய பலம் சேர்த்தது.
பிறகு ராஷி கன்னா வந்தார். அவர் வந்ததும் இப்படத்தை கமர்சியல் என்று சொல்லிவிடக் கூடாது என்ற பயம் வந்தது. ராஷி நம்ம ஊர் பெண்ணாக மாறுவதற்கு கடின முயற்சி எடுத்தார். அவரது கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சௌகார்பேட்டை பெண்ணாக கதையோடு ஒன்றி மாறினார்.
ரெஜிஷா முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவருடைய பாத்திரத்தைப் புரிந்துகொண்டு கதாபாத்திரமாகவே வந்தார். “என்னம்மா.. 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போல, முதல் நாளிலேயே வந்திருக்க?” என்று கேட்கும்படி அழகாக உள்ளே வந்தார்.
முனீஸ்காந்த் சார் அருமையான நடிகர். அவர் அருகில் இருந்து அவரை ரசித்துக் கொண்டே இருந்தேன். வி.கே.ராமசாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எது பேசினாலும் அழகாக இருக்கும். சும்மா நின்று கொண்டிருந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அவரை மாதிரிதான் முனீஸ்காந்த் சாரையும் பார்த்தேன்.
படத்தில் என்னுடைய சித்தப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை அவர் செய்வதே அழகாக இருக்கும். அவருடன் பணியாற்றியதில் உற்சாகமாக இருந்தேன்.
வில்லனாக நடித்த சங்கி சாருக்கு நன்றி. மித்ரன், “முதலில் வில்லன் கதாபாத்திரம் எழுதிவிட்டுத்தான் மற்ற பாத்திரங்களை எழுதுவேன்..” என்றார். வில்லன் பாத்திரம் எப்படி சிந்திப்பான்.. அவனுடைய சித்தாந்தம் என்ன என்பதை கூர்ந்து எழுதியிருக்கிறார். “எனக்கு இரட்டை வேடம் ஆகையால், வில்லனைவிட என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று மித்ரனிடம் கூறினேன்.
திலீப் மாஸ்டருடன் நிறைய ஒத்திகை பார்த்தோம். இறுதியாக படம் பார்க்கும்போது நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.
இப்படம் நன்றாக வருவதற்கு ஜி.வி.யும் முக்கிய காரணம். அவர் அமைத்துக் கொடுத்த தீம் இசை இப்படத்திற்கு ஒரு தரத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பிலும் அவருடைய இசையை கேட்டுத்தான் காட்சிகள் அமைத்தோம்.
ஒவ்வொரு வேடம் போடுவதற்கும் இரவு, பகலாக என்னுடன் பணியாற்றிய பிரவினுக்கு நன்றி. அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. பல பேருக்கு இரவு பகல் பாராது உழைத்ததில் உடல் நலம் சரியில்லாமல்போய் பெரிதும் அவதிப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி.
இது உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்பை த்ரில்லராக இருக்கும். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்…” என்றார்.
The post “லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post ‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போகும் கார்த்தியின் ‘சர்தார்’ appeared first on Touring Talkies.
]]>‘இரும்புதிரை’, ‘ஹீரோ’ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குர் பி.எஸ்.மித்ரன்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “சர்தார்’ என்றால் பெர்சிய மொழியில் ‘படைத் தலைவன்’ என்று பொருள். இந்த ‘சர்தார்’ படம் ஒரு ஸ்பை த்ரில்லர் கதையைக் கொண்டது.
உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடப்பதுதான். ஆனால், நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்துகூட அதை ஆரம்பிக்கலாம்.
ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப் பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல்வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் உள்ளது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதைதான் இது.
நம் அடையாளம். நாம் செய்யும் செயல்கள்தான். உளவாளிகளும் அப்படித்தான். அலெக்ஸாண்டர், ஹிட்லர் உட்பட பெரும்பாலானோர் வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்கு பின்னாடி முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள்தான்.
கார்த்தி, ‘சிறுத்தை’யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன். அலப்பறையாக இருக்கும். வயதான அப்பாவாக கார்த்தி கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.
அந்த மேக்கப்பை போடுவதற்கே மூன்று மணி நேரமாகும். மேக்கப்பை போட்டு டயலாக் பேசி நடிப்பதே கஷ்டம். இதில், கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அதுவும் ரொம்ப கஷ்டம். இப்படி மெனக்கிட்டு நடித்து கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி.
ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில் லைலா நடிச்சிருக்காங்க.
கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட் செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.லட்சுமண்குமார். வரும் தீபாவளியன்று இப்படம் வெளியாகிறது…” என்றார்.
நடிகர் கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்-1’ படங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த ‘சர்தார்’ படமும் வெற்றியடைந்து ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
The post ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போகும் கார்த்தியின் ‘சர்தார்’ appeared first on Touring Talkies.
]]>The post மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘சர்தார்’ appeared first on Touring Talkies.
]]>பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S.லக்ஷ்மன்குமார் இந்த ‘சர்தார்’ படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார். கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். மேலும் சிம்ரன் ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – ஜார்ஜ் C.வில்லியம்ஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – கதிர், எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜி, பிபின் ரகு, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D, பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன், நிர்வாக தயாரிப்பு- J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி, புகைப்படங்கள் – ஜி.ஆனந்த்குமார், விளம்பர வடிவமைப்பு – சிவகுமார்.S, நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, மக்கள் தொடர்பு – ஜான்சன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னையை தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப் பகுதிகளிலும், மைசூர் காட்டுப் பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இந்தப் படத்திற்கான சண்டை காட்சிகளை பிரம்மாண்டமான அளவில் படமாக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை ‘ஆஹா’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘சர்தார்’ appeared first on Touring Talkies.
]]>