The post “அடுத்த படத்திலும் உதயநிதியுடன் இணையவுள்ளேன்” – தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக் குழு நேற்றைக்கு படத்தின் 50-வது நாளை பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினார்கள்.
முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளரான போனிகபூர், நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் போனிகபூர் பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றியை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெஞ்சுக்கு நீதி படக் குழுவுடன் பணிபுரிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் நிறுவனத்தில் வலுவான கதைகள் நிறைந்த படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தமிழில் நிறைய படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் இப்பொழுது பல படங்கள் செய்துவருகிறோம். தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை கொடுக்க உள்ளோம். உதயநிதியுடன் இணைந்து அடுத்து ஒரு படத்தை உருவாக்க உள்ளோம். தமிழில் முக்கியமான நடிகர்களுடன் இணைந்து இயங்கி கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.“ என்றார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசும்போது, “இந்தப் படம் சில மனிதர்களுக்கான, அறிவுரையை கூறும் படமாக அமைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எனது இரண்டாவது திரைப்படம், அதன் 50-வது நாளை கொண்டாடுவதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
இந்தப் படத்தின் தலைப்பு எங்களுக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன். என்னுடன் இதுவரை உடன் பயணித்து வரும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லி கொள்கிறேன். படத்தை உருவாக்க பெரும் துணையாக இருந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், படத்தின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சமூக நீதிக்கான படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்..” என்றார்.
நடிகர் ஆரி பேசும்போது, “எனது திரைப்பயணத்தில் முதல் அங்கீகாரம் உதயநிதி அவர்களால்தான் கிடைத்தது. ‘நெடுஞ்சாலை’ படத்தின் வெற்றி ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் சாத்தியமானது. இப்போது அவருடன் ஒரு நேர்மையான படத்திற்கான வெற்றி விழாவில் நானும் இருப்பது மகிழ்ச்சிதான்.
முதல்முறையாக நான் நடித்த படத்திற்கான 50-வது நாளை கொண்டாடுகிறேன். இந்தப் படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்தை பெரிய வெகுமதியாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் உதயநிதி அவர்களுக்கு நன்றி…” என்றார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “நானும், அருண்ராஜாவும் அடுத்து ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளோம். அருண் உடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் அருண் இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்தார். அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம். நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் இந்தப் படத்திற்காக பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளனர்.
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ராகுல்தான் இந்தப் படம் இந்தளவு வெற்றி பெற காரணம். நல்ல படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்…” என்றார்.
The post “அடுத்த படத்திலும் உதயநிதியுடன் இணையவுள்ளேன்” – தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.
படத்தை பார்த்த பின் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,
வரும் மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
The post ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பட குழுவினரை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Touring Talkies.
]]>