The post மும்பையில் குடிபெயர்ந்தது குறித்து ஜோதிகா விளக்கம்! appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா சமயத்தில் அம்மா – அப்பாவுக்கு 2, 3 முறை கோவிட் வந்தது. அப்போது விமான சேவை இல்லாததால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் யோசித்தேன். 25 வயதிலிருந்து நான் சென்னையில்தான் இருக்கிறேன். மும்பை அம்மா வீடு என்றால் சென்னை எனக்கு அப்பா வீடு மாதிரி இரண்டையும் பிரிக்க முடியாது.
திருமணத்துக்குப் பின் பெண்கள் தங்கள் பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடிவதில்லை. அதன் பிறகு பொறுப்புகள் கூடிவிடுவதால் பெற்றோர்களுடன் நேரம் செலவழிப்பது குறைந்துவிடுகிறது.
சிறிது நாள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதால் மும்பைக்கு மாறினேன். இது ஒரு தற்காலிக முடிவுதான். குழந்தைகளுக்கும் பள்ளி செல்ல வசதியாக உள்ளது. சூர்யா எப்போதும் சப்போர்டாக இருப்பார் என ஜோதிகா கூறியுள்ளார்.
The post மும்பையில் குடிபெயர்ந்தது குறித்து ஜோதிகா விளக்கம்! appeared first on Touring Talkies.
]]>The post மும்பையில் செட்டில் ஆகும் அக்ஷரா ஹாசன்.? appeared first on Touring Talkies.
]]>அவர் நடித்துள்ளஅக்னி சிறகுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர், மும்பையின் கர் பகுதியில் புதிய வீடு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 13 வது தளத்தில் அந்த வீடு அமைந்துள்ளது.
இந்த வீட்டை ரூ.15.75 கோடிக்கு அவர் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பத்திரப்பதிவு செலவு மட்டும் ரூ.94.50 லட்சம் என்கிறார்கள்.
The post மும்பையில் செட்டில் ஆகும் அக்ஷரா ஹாசன்.? appeared first on Touring Talkies.
]]>The post மீண்டும் லால் சலாம் படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற ரஜினி! appeared first on Touring Talkies.
]]>லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இதன் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் சமீபத்தில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post மீண்டும் லால் சலாம் படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post அமிதாப் பச்சன் பதிவால் சர்ச்சை, பரபரப்பு! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே… உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள் என பதிவிட்டு உள்ளார்.
இதற்கு 6 லட்சம் பேர் லைக் தெரிவித்து உள்ளனர். எனினும், இந்த பதிவை கவனித்து சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட், கிழக்கு பெங்களூரு என்ற பெயரில் டுவிட்டரில் வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அமிதாப் பச்சன் பதிவால் சர்ச்சை, பரபரப்பு! appeared first on Touring Talkies.
]]>The post “500 ரூபாயுடன் மும்பை வந்தேன்! மீண்டும் அப்படி ஆகிவிட வாய்ப்பு உண்டு!:: கங்கனா ரணாவத் appeared first on Touring Talkies.
]]>தற்போது ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் இதில் இந்திரா காந்தி வேடத்தில் நடிப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படத்தை தயாரிப்பது குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, “நான் சொந்தமாக ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பொருளாதார பிரச்சினையால் அது நிறைவேறாமல் போனது. தற்போது நான் வசிக்கும் வீடு உள்பட விலைமதிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை தயாரித்து வருகிறேன்” என்றார்.
மேலும்,”ரம்ப காலத்தில் நான் கையில் வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தேன். ஒரு வேளை இந்த படத்தில் நான் முதலீடு செய்த மொத்தத்தையும் இழக்க வேண்டி வந்தால் மும்பை வந்தபோது எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலைக்கு சென்று விடுவேன். ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்க மாட்டேன். சொந்த காலில்தான் நிற்பேன்” என்று சொல்லி இருக்கிறார்.
The post “500 ரூபாயுடன் மும்பை வந்தேன்! மீண்டும் அப்படி ஆகிவிட வாய்ப்பு உண்டு!:: கங்கனா ரணாவத் appeared first on Touring Talkies.
]]>The post நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30-ம் தேதி திருமணம்..! appeared first on Touring Talkies.
]]>பிரபல தென்னிந்திய நடிகையான காஜல் அகர்வாலுக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
நடிகை காஜல் அகர்வால் 2008-ம் ஆண்டு ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். அதன் பின்பு ‘பழனி’, ‘மோதி விளையாடு’, ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘ஜில்லா’, ‘மாரி’, ‘பாயும் புலி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘கவலை வேண்டாம்’, ‘விவேகம்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
காதல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா புரொடெக்சன்ஸ் தயாரித்து வரும் ‘இந்தியன்-2’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பல தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் இருக்கும் அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நாயகியாக நடித்த பெருமை கொண்டவர் காஜல் அகர்வால்.
தற்போது 35 வயதாகும் காஜலுக்கு திருமணம் என்று சமீப காலமாக பலவித செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. இந்த நிலையில் தனது திருமணம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல தனது திருமணம் வரும் அக்டோபர் 30-ம் தேதியன்று மும்பையில் ஒரு எளிமையான நிகழ்ச்சியில் நடைபெறவிருப்பதாக காஜல் அகர்வாலே தெரிவித்துள்ளார்.
காஜல் திருமணம் செய்யப் போகும் மணமகனின் பெயர் கவுதம் கிச்லு. தொழிலதிபர்.
இது குறித்து காஜல் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள செய்தியில், ”வரும் 30 ஆம் தேதி குடும்பத்தினர் மத்தியில் கவுதம் கிச்லுவுடன் மும்பையில் எனக்குத் திருமணம் நடக்கவுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பெருந்தொற்றுக் காலம் எங்கள் வாழ்க்கையில் ஒரு மெல்லிய ஒளியைப் பாய்ச்சியது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்கவுள்ளோம். எங்களுக்காக நீங்கள் அனைவரும் உளப்பூர்வமாக மகிழ்வீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
இத்தனை ஆண்டுகளும் நீங்கள் என் மீது பொழிந்த அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும் நாங்கள் உங்களுடைய ஆசிர்வாதங்களை வேண்டுகிறோம். இப்போது புதிய தேவையுடனும் அர்த்தத்துடனும் நான் தொடர்ந்து என்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பேன். உங்கள் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30-ம் தேதி திருமணம்..! appeared first on Touring Talkies.
]]>