The post ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தியேட்டர்களுக்கு வந்தப் பிரதியில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
கதையின்படி விஜய் பணியாற்றும் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்த பின்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியான கெளரி ஜி.கிஷனை தோற்றுப் போன மாணவனின் தந்தையின் தூண்டுதலால் சில ரவுடிகள் தாக்குவார்கள். விஜய் அவர்களைத் தாக்கி கல்லூரியில் இருந்து வெளியேற்றுவார். காவல்துறையும் அவர்களக் கைது செய்யும்.
இதன் பின்பு நடக்கும் ஒரு காட்சிதான் தியேட்டர்களில் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கப்பட்ட காட்சி ஓடிடி தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்தக் காட்சிதான் விஜய்-மாளவிகா மோகனன் இடையிலான அறிதலுக்கும், புரிதலுக்கும் இணைப்பான காட்சி. தியேட்டர்களில் இந்தக் காட்சியை நீக்கிவிட்டதால் மாளவிகா மோகனன் விஜய்யை தேடி வந்து பேசும் காட்சியில் லாஜிக்கே இல்லாதது போலவும், உயிர்ப்பே இல்லாததாகவும் இருந்ததது.
நீக்கப்பட்ட இந்தக் காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான வசனங்களாகும். சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகளின்போது பல ஆண்களும், பெண்களும் பேசும் பொதுப்படையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் மீதே வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு விஜய் குரல் கொடுத்திருக்கிறார்.
“பெண்களின் உடைதான் அவர்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது…” என்று ஒரு பெண் பேராசிரியரே சொல்வதும், அதற்கு விஜய் விளக்கம் சொல்வதும் அருமை.
‘மாஸ்டர்’ படத்தில் நீளம் காரணமாக குறைக்கப்பட வேண்டிய பல காட்சிகள் இருக்கும்போது உயிர்த் துடிப்பான இந்தக் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏன் நீக்கினார் என்று தெரியவில்லை..?!
The post ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மாஸ்டர்’ படம் ஓடிடியில் வெளியீடு – தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு..! appeared first on Touring Talkies.
]]>“இப்போதும் தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ படம் வெற்றிகரமாக 80 சதவிகித இருக்கைகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் அது அப்படியே தொடரவிருப்பதால் நல்ல வசூல் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எதற்காக ‘மாஸ்டர்’ படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும்…?” என்று தியேட்டர் உரிமையாளர்கள் கேட்கிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு மால் தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டபோது, “இது எங்களுக்கே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நல்லா ஓடிட்டிருக்கும்போது.. அதுவும் படம் வந்த 16-வது நாளிலேயே ஓடிடில படத்தை போடுறதை எங்களால ஏத்துக்க முடியாது.
நாங்க உடனேயே இது குறித்து எங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசினோம். இதுக்கு ஒரு முடிவு கட்டுறதுக்காக நாங்க ஒரு தீர்மானம் போடப் போறோம்.
இனிமேல் பெரிய படங்களை திரையரங்குகளில் வெளிவந்து 50 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் அந்தப் படத்தை வெளியிடுவோம் என்ற உறுதி மொழிப் பத்திரத்தைக் கொடுத்தால்தான், அந்தப் படத்தையே நாங்கள், எங்களுடைய திரையரங்குகளில் வெளியிடுவோம். சின்ன பட்ஜெட் படங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தருவோம்..
இது குறித்து தென்னிந்தியா முழுமைக்கும் உள்ள எங்களது சினிமா தியேட்டர் அதிபர்களிடத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். அவர்களும், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்..” என்றார்.
இந்த அறிவிப்பு நேற்று காலையில் வெளியானதைத் தொடர்ந்து நேற்றைக்கே பல ஊர்களின் மால் தியேட்டர்களில் கணிசமான அளவுக்குக் கூட்டம் குறைந்துவிட்டதாகத் தகவல்கள் வந்ததையடுத்து, நேற்று மாலை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தியேட்டர் அதிபர்களும் பல்வேறுவிதமான கருத்துக்களை முன் வைத்ததால் ஒருமித்த கருத்தினை கொண்டு வர முடியவில்லையாம்.
அடுத்து ஒரு பெரிய பட்ஜெட் படம் வருவதற்குள் இதற்கு ஒரு முடிவு எட்டப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
The post ‘மாஸ்டர்’ படம் ஓடிடியில் வெளியீடு – தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மாஸ்டர்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post “மாஸ்டர்’ வேண்டுமெனில் ‘ஈஸ்வரன்’ படத்தைத் திரையிடக் கூடாது…” – விநியோகஸ்தர்களின் மிரட்டல்..! appeared first on Touring Talkies.
]]>இந்த அறிவிப்பையடுத்து பல தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துவக்கியிருக்கிறார்கள். தமிழக அரசு கடைசி நிமிடத்தில் நிச்சயமாக 100 சதவிகித டிக்கெட்டுகள் விற்பனைக்கும், கூடுதல் சிறப்பு ஷோக்களுக்கான அனுமதியையும் நிச்சயமாக வழங்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், பலத்த நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். தற்போது தியேட்டர்களைத் திறந்தும்கூட எந்தப் படமும் அதிக அளவுக்கு ஓடவில்லை. எதிர்பார்த்த கூட்டமும் தியேட்டருக்கு வரவில்லை. திறந்த வேகத்தில் பாதிக்குப் பாதி தியேட்டர்கள் மூடப்பட்டன.
இந்த நேரத்தில் வரும் பொங்கல் பண்டிகை தினத்தில் ‘மாஸ்டர்’ படமும், ‘ஈஸ்வரன்’ படமும் வெளியாகவிருப்பது அவர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது.
அதே நேரம் ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாரம் தியேட்டர்களை கட்டுப்படுத்துவதுபோல அமைந்துவிட்டது என்பது உண்மைதான்.
“மாஸ்டர்’ படத்தை பொங்கலுக்கு கொண்டு வருவதாக இருந்தால் ‘மாஸ்டர்’ படம் மட்டுமே வெளிவர வேண்டும்…” என்ற கோரிக்கையை அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் முன்பாக முன் வைத்தனர்.
“தியேட்டர்களில் 50 சதவிகிதம் டிக்கெட்டுகளுக்குத்தான் அனுமதி. கொரோனா பீதி. கூட்டமும் வராமல் இருக்கிறது. இந்தச் சூழலில் ‘மாஸ்டர்’ படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பதால் வேறொரு பெரிய பட்ஜெட் படம் அந்த நேரத்தில் வெளியாகக் கூடாது…” என்ற நிபந்தனையை முன் வைத்தார்கள் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்.
இதனை ஆட்சேபிக்கக்கூட தயாரிப்பாளர்கள் இல்லாமல் போனதும் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளர் தானும் பொங்கல் ரேஸில் கலந்து கொள்வதாக அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பிரச்சினையில் தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் சமரசம் செய்ய முயன்றும் முடியாமல் போய்விட்டது. காரணம் ‘ஈஸ்வரன்’ படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரின் பின்னணியில் சமீபத்தில் டி.ராஜேந்தர் உருவாக்கிய தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் இருப்பதுதான்.
‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர். இப்படி “இரண்டுவித தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் நீங்களே சமரசப் பேச்சினை நடத்திக் கொள்ளுங்கள்…” என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நழுவிக் கொண்டனர்.
ஆனால், “எந்த சமரசமும் இதில் இல்லை…” என்று ‘ஈஸ்வரன்’ படத் தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாகச் சொல்லிவிட்டதால் இந்தப் படம் பொங்கலுக்கு வருவது உறுதியானது.
தமிழகத்தில் 700-ல் இருந்து 800 தியேட்டர்கள்வரையிலும் ‘மாஸ்டர்’ ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ‘ஈஸ்வரன்’ படம் 200-ல் இருந்து 300 தியேட்டர்கள்வரையிலும் வெளியாகும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இந்த நேரத்தில் இந்த பொங்கல் ரேஸ் படங்கள் பற்றி சில தியேட்டர் உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பலவித செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் ‘நெல்லை ராம் முத்துராம்’ திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில், “மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலை இருமுறை திரையிட முடிவு செய்திருக்கிறோம்…” என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
அதேபோல் கோயம்பேடு ‘ரோகிணி’ தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில், “மாஸ்டர்’ திருவிழாவை இப்போது ஆரம்பித்து விட்டோம்…” என்று குறிப்பிட்டுள்ளனர்.
குரோம்பேட்டையில் உள்ள ‘வெற்றி’ திரையரங்கின் உரிமையாளரான ராகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜனவரி 13-ம் தேதி ’மாஸ்டர்’ திரைப்படத்தையும், ஜனவரி 14-ம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக” பதிவு செய்தார்.
இந்த டிவிட்டர் செய்தியைப் பார்த்ததும் ‘மாஸ்டர்’ படத்தை சென்னை, செங்கல்பட்டு ஏரியாவில் விற்பனை செய்திருக்கும் பிரபல விநியோகஸ்தரான ‘படூர்’ ரமேஷ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராகேஷின் டிவிட்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்த ‘படூர்’ ரமேஷ், “மாஸ்டர்’ படத்தை திரையிடும்போது, உங்களுக்கு ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கொடுத்தது யார்…? ’மாஸ்டர்’ திரைப்படத்தை வெற்றி காம்ப்ளக்ஸில் இரு திரையரங்குகளிலும் திரையிடாவிட்டால் ’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி தியேட்டருக்குக் கிடையாது…” என்று மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் சூடான வாக்குவாதங்கள் போய்க் கொண்டிருந்த நிலையில், திடீரென்று இருவருமே தங்களது டிவிட்டர் செய்தியை நீக்கிவிட்டனர்.
இது பற்றியறிந்த சிம்புவின் ரசிகர்கள், “ஒரு திரைப்படத்தைக் கொண்டு வருவதற்காக இன்னொரு திரைப்படத்திற்கு தியேட்டரே கொடுக்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் எந்த வகையில் நியாயம்…?” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
2019-ம் வருடம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 10-ம் தேதியன்று ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டுமே வெற்றி பெற்றது போல், இப்போது ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் தியேட்டர்களில் சம அளவு வாய்ப்பு அளித்து இரண்டையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடுநிலையான சினிமா ரசிகர்களும் குறிப்பிட்டு வருகின்றனர்.
என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ.. அதுவே நடக்கும்..!
The post “மாஸ்டர்’ வேண்டுமெனில் ‘ஈஸ்வரன்’ படத்தைத் திரையிடக் கூடாது…” – விநியோகஸ்தர்களின் மிரட்டல்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மாஸ்டர்’ திரைப்படம் 3,000 தியேட்டர்களில் வெளியாகிறதா..? appeared first on Touring Talkies.
]]>‘மாஸ்டர்’ வருமா..? வந்திருமா..? சேதாரமில்லாமல் வந்திருமா…? என்று வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.
ஆனால், விஜய்யின் இந்த ‘மாஸ்டரை’ மிகப் பிரம்மாண்டமான அளவுக்கு கொண்டு போயிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார்.
இந்தப் படத்தின் ஹிந்திப் பதிப்பை ‘B4U’ என்னும் நிறுவனத்திடம் விற்பனை செய்திருக்கிறார் லலித்குமார். அந்த நிறுவனமோ எந்தப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்தப் படத்தை இந்தியா முழுவதுமாக 2000 திரையரங்குகளில் திரையிட இருக்கிறது.
இதனால் ஒட்டு மொத்தமாக ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்திய அளவில் 3000 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்று ஒரு தமிழ்த் திரைப்படம் இத்தனை திரையரங்குகளில் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அதேபோல் விநியோகஸ்தர்களும் இந்தப் படத்திற்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும்போது போடப்படும் வசூல் பிரிப்பு சதவிகிதத்தை மிக அதிக அளவுக்கு உயர்த்தியிருக்கிறார்கள்.
பொதுவாக பெரிய பட்ஜெட் படம் என்றால் விநியோகஸ்தர்களுக்கு 65 சதவிகிதம், தியேட்டர்காரர்களுக்கு 35 சதவிகிதம் என்று வரும். இல்லையென்றால் 69 சதவிகிதம் விநியோகஸ்தர்களுக்கு, 40 சதவிகிதம் தியேட்டர்காரர்களுக்கு என்று ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
ஆனால், இந்த ‘மாஸ்டர்’ படத்திற்கு விநியோகஸ்தர்கள் தங்களுக்கு 80 சதவிகிதம் என்றும் தியேட்டர்காரர்களுக்கு 20 சதவிகிதம் என்றும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இது தமிழ்ச் சினிமாவில் முதல்முறையாக நடக்கும் சம்பவம் என்கிறார்கள் தமிழ்த் திரையுலகப் புள்ளிகள்.
The post ‘மாஸ்டர்’ திரைப்படம் 3,000 தியேட்டர்களில் வெளியாகிறதா..? appeared first on Touring Talkies.
]]>The post ‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..! appeared first on Touring Talkies.
]]>‘மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது’ என்று சிலரும், ‘அமேஸான் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது’ என்று மற்றொரு தரப்பும் செய்தியை பரப்புரை செய்தன.
இதனால் ‘மாஸ்டர்’ படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வைரலாகி பரவ.. விஜய்யின் ரசிகர்களிடையேயும், தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
மிக அதிக விலை கொடுத்து ‘மாஸ்டரை’ வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும், இந்தாண்டில் வரலாறு காணாத அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்திருக்கும் தியேட்டர்காரர்களும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நடுங்கித்தான் போனார்கள்.
செய்தி வதந்திதான் என்றாலும் இதில் பாதி உண்மை.. மீதி பொய்யுரைதான். ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால் நெட்பிளிக்ஸிற்கு அல்ல. அமேஸான் பிரைம் வீடியோ தளத்திற்கு.
கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயைத் தொட்டுவிட்ட படத்தின் பட்ஜெட்டை வெறுமனே 100 கோடிக்குள் விற்பனை செய்து முடித்துவிட முடியாது. ஏனெனில் விஜய் டாப் ஸ்டார்களில் ஒருவர். தியேட்டர் வசூலில் மொக்கையான படமாக இருந்தாலும் 100 கோடியை அலட்சியமாகத் தாண்டக்கூடிய பந்தயக் குதிரை. ஆகவே அவர் மூலம் கிடைக்கவிருக்கும் தியேட்டர் வசூலை இழப்பதற்கு தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ, தியேட்டர்காரர்களோ தயாராக இல்லை.
எனவே ‘மாஸ்டர்’ படத்தை தியேட்டருக்குக் கொண்டு வருவதற்கு மூன்று தரப்பினரும் முனைப்புடன் இருக்கிறார்கள். விஜய் படம் என்றால் அவரது ரசிகர்கள், அடுத்தது குடும்பத்தினர் அனைவருக்கும் தியேட்டருக்கு வந்து குவிந்தால் வசூலும் கூடும். அப்படியே அடுத்தடுத்த படங்களுக்கும் மக்கள் கூட்டம் கூட வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
ஆனால், இன்னொரு பக்கம் அவர்களில் ஒரு சிலரே அந்த நம்பிக்கைக்கு விரோதமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் யார் படம் போட்டாலும் அவ்வளவு கூட்டம் வராது. கொரோனா பயத்தில் மக்கள் குடும்பமாக கண்டிப்பாக வர மாட்டார்கள். விஜய்யின் ரசிகர்கள் மட்டுமே வர முடியும்.
அப்படியே வந்தாலும் 50 சதவிகித இருக்கைகளுக்குதான் அனுமதி என்பதால் ஒவ்வொரு தியேட்டரும் அட்வான்ஸ் தொகையாக விநியோகஸ்தர்களிடத்தில் கொடுத்திருக்கும் தொகையை மீண்டு எடுப்பதற்கு கண்டிப்பாக 6 அல்லது 8 வாரங்களாகும்.
ஒருவேளை ‘மாஸ்டர்’ திரைப்படம் மேக்கிங்கில் நன்றாக இல்லை என்ற செய்தி வெளியானால் ‘புலி’ படத்தின் நிலைமைதான் இதற்கும் வரும்.
‘புலி’ படம் வெளியானபோது படத்தின் இடைவேளையோடு ரசிகர்கள் எழுந்து வெளியேறியதை வீடியோ எடுத்து சிலர் வெளியிட.. அது வைரலாகி.. கடைசியில் ‘படம் நல்லாயில்லை’ என்று நினைத்து குடும்பத்தினரும் ஒட்டு மொத்தமாய் புறக்கணிக்க படம் தோல்வியடைந்தது.
அப்படியொரு சூழல் வருமானால் ‘மாஸ்டர்’ படத்திற்குக் கிடைக்கும் வசூல் ‘புலி’ படத்தில் இருந்து கிடைத்த வசூலில் பாதியாகத்தான் இருக்கும். இதனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இதனாலேயே ‘திக் திக்’ மன நிலையில் தவிப்புடன் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும்.
‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் என்னதான் தியேட்டரில் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்று சொன்னாலும், இந்த களேபரங்களை மனதில் வைத்து அனைத்துத் தரப்பினரும் இதனை சந்தேகக் கண்ணுடனேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வதந்திகளையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி. படத்தின் நாயகனான விஜய் மாஸ்டர் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு விசிட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுதான். அவர் இப்படி தமிழ்நாடு முழுவதும் ஒரு ரவுண்டு வந்தால் கொரோனா பயமில்லாமல் ரசிகர்களும், அவர்களது குடும்பத்தினருக்கும் தியேட்டர்களைத் தேடி, ஓடி வருவார்கள்.
விஜய் மட்டும் அல்ல. அனைத்து ஹீரோக்களும் இதை பாலோ செய்தால் அவரவர் ரசிகர்களும் கொரோனா பயமி்லலாமல் தியேட்டருக்கு வருகை தருவார்கள். மறந்து போன தியேட்டர் பழக்கத்தை மக்களிடையே மீண்டும் கொண்டு வருவதற்கு, இதைவிட்டால் வேறு வழியில்லை..
செய்வாரா விஜய் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி..!
The post ‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post “மாஸ்டர் படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாகும்” – தியேட்டர் அதிபர்களின் உறுதிமொழி..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யுடியூப் நிகழ்ச்சிக்கு திரைப்பட ஆர்வலரும், ஆய்வாளருமான வெங்கட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் சங்கத்தின் நிர்வாகிகளான திருச்சி ஸ்ரீதரும், வெங்கடேஷும் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் பேசும்போது, “தமிழகத்தின் தியேட்டர்களில் தற்போது இருக்கும் டிஜிட்டல் முறையை எங்களிடத்தில் சொல்லி ஏற்கச் சொன்னதே இதே தயாரிப்பாளர்கள். 2008-ம் ஆண்டின் துவக்கத்தில் அவர்களுடைய அறிமுகத்தினால்தான் நாங்கள் இதனை ஏற்றுக் கொண்டோம்.
அப்போதும் அவர்கள்தான் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்டினார்கள். நாங்களாக கேட்கவில்லை. அவர்களே கொண்டு வந்த புதிய தொழில் நுட்பத்திற்கு அவர்கள்தான் பணம் கட்ட வேண்டும். அதுதான் நியாயமானது.
ஒரு சில தியேட்டர்களில் சாதாரண டிஜிட்டல் முறையும், 2-கே புரொஜெக்சன் முறையும் இருக்கிறது. சில தயாரிப்பாளர்களே “நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு அதிகமான செலவுகளை செய்து தரமான படமாக அதனை உருவாக்கியிருக்கிறோம். அதனால் இதனை 2-கே-வில் புரொஜெக்ஸன் செய்யுங்கள்…” என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்லித்தான் நாங்கள் அதனை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் அதற்குரிய பணத்தை அவர்கள்தானே கட்ட வேண்டும்..?
புரொஜெக்டர்களை சொந்தமாக வைத்துக் கொள்வதா, வேண்டாமா என்பது எங்களுடைய பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு ஒரு தயாரிப்பாளர் படம் கொடுக்கும்போது, ‘அந்தப் படம் தயாரிக்க எத்தனை கோடி செலவானது..?’, ‘இந்தப் படத்திற்காக யாரிடம் பைனான்ஸ் வாங்கினீர்கள்..?’, ‘இந்தப் படத்தின் மீது எத்தனை கோடிகள் கடன் இருக்கிறது..?’ என்றெல்லாம் நாங்கள் என்றைக்காவது யாரிடமாவது கேட்டிருக்கிறோமா..? இல்லையே.. அதேபோலத்தான் தயாரிப்பாளர்களும் இந்த விஷயத்தில் எங்களை கேள்வி கேட்க முடியாது.
ஏற்கெனவே தொடர்ந்து திரைப்படங்களை பார்க்க தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கும் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் வந்து போனார்கள். அவர்களுக்கு பார்க்கிங் செலவோ, கேண்டீன் செலவோ பெரிய விஷயமே இல்லை. இனிமேலும் முன்பு போலவேதான் பார்க்கிங் கட்டணமும், கேண்டீனில் விற்கும் திண்பன்டங்களின் விலையும் இருக்கு. அதில் எந்தவித மாற்றமும் இருக்காது.
தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு அரசு என்ன விதிமுறைகளை சொல்லியிருக்கிறதோ அதைப் பின்பற்றும்படி சொல்லுவோம். நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்.
‘மாஸ்டர்’ படம் நிச்சயமாக அடுத்த பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில்தான் வெளியாகும். இதனை நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்..” என்றனர்.
The post “மாஸ்டர் படம் நிச்சயமாக பொங்கலுக்கு வெளியாகும்” – தியேட்டர் அதிபர்களின் உறுதிமொழி..! appeared first on Touring Talkies.
]]>