The post அட.. ‘விடுதலை 2’வில் மஞ்சு வாரியர்?! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாகமஞ்சு வாரியர்நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவருடன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். வெற்றி மாறனுடன் மஞ்சுவாரியர், தினேஷ் இருக்கும் புகைப் படங்கள்சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
The post அட.. ‘விடுதலை 2’வில் மஞ்சு வாரியர்?! appeared first on Touring Talkies.
]]>The post ஆர்யாவின் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் மஞ்சு வாரியர் appeared first on Touring Talkies.
]]>பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்துக்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஜூன் 21) நடைபெற்றது.
இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விபரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
The post ஆர்யாவின் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் மஞ்சு வாரியர் appeared first on Touring Talkies.
]]>The post ” ‘துணிவு’ படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க வேண்டும்”: நடிகை மஞ்சு வாரியர் appeared first on Touring Talkies.
]]>ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் ‘அசுரன்’ படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.
இதன் பிறகு அவர் பேசுகையில், ” முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.
இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரம், வலிமையான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக நடிகை மஞ்சு வாரியார் தன் உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வெற்றியை பெற்றதால் இதனை பகிர்ந்து கொள்ள நாயகன் அஜித் குமார், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் பட குழுவினர் மஞ்சுவாரியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அத்துடன் ‘துணிவு’ படத்திற்கு அபிரிமிதமான ஆதரவை வாங்கியதற்காக கேரள பார்வையாளர்களுக்கு படக்குழுவினர் தங்களுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார். அதே நாளில் அவரது நடிப்பில் தயாரான ‘ஆயிஷா’ எனும் திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் ‘துணிவு: திரைப்படத்தின் கண்மணி எனும் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக ‘ஆயிஷா’ எனும் குணச்சித்திர வேடத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.
இதனிடையே பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியர், ஜனவரி மாதம் இருபதாம் தேதி சென்னையில் நடைபெறும் சூர்ய விழாவில் அவருடைய அண்மைய தயாரிப்பான ‘ராதே ஷ்யாம்’ எனும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ” ‘துணிவு’ படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க வேண்டும்”: நடிகை மஞ்சு வாரியர் appeared first on Touring Talkies.
]]>The post சுடக் கற்றுக்கொடுத்த அஜித்! appeared first on Touring Talkies.
]]>வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து துணிவு படம் உருவாகி இருக்கிறது. துப்பாக்கி சுடும் காட்சிகலில் அஜித் தூள் பறத்தி இருக்கிறார். ஆச்சரியமான விசயம், இதுவரை ஆக்ஷன் படத்திலேயே நடிக்காத மஞ்சு வாரியாரும்
துப்பாக்கியை வைத்து சுடும் காட்சியில் அசத்தி இருக்கிறார்.
இது குறித்து மஞ்சு வாரியார் அளித்த பேட்டியில், “எனக்கு துப்பாக்கி பிடிக்கவே தெரியாது. படங்களில் தான் பார்த்திருக்கிறேன். துப்பாக்கியை கையில் கொடுத்து ஆக்ஷன் என சொல்லிவிட்டார் இயக்குநர். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
உடனே வேறு வழியில்லாமல் வெட்கத்தை விட்டு அஜித் சாரிடம் போய் தான் கேட்டேன். அவர்தான், எப்படி துப்பாக்கி பிடித்து சுடவேண்டும் சொல்லிக் கொடுத்தார். அதுவும் மிகவும் பொறுமையாக நிதானமாக எப்படி பிடிக்க வேண்டும் கையை எந்த இடத்தில் பிடித்து சுட வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார்” என்று சொல்லி இருக்கிறார் மஞ்சு வாரியார்.
The post சுடக் கற்றுக்கொடுத்த அஜித்! appeared first on Touring Talkies.
]]>The post ‘துணிவு’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post நடிகை மஞ்சு வாரியருக்கு மலையாள இயக்குநர் கொடுத்த லவ் டார்ச்சர்..! appeared first on Touring Talkies.
]]>மலையாள சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் சணல்குமார் சசிதரன். ‘Oraalppokkam’, ‘Ozhivudivasathe Kali’ ‘Sexy Durga’, ‘Unmadiyude Maranam’, ‘Ah’r Kayyattam’,’ Vazhakku’, ‘Chozha’ ஆகிய படங்களை இயக்கிய பல்வேறு விருதுகளை வாங்கியவர்.
இவருடைய இயக்கத்தில் உருவான ‘கயாட்டம்’ என்ற படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் நடித்திருந்தார்.
இந்தச் சூழலில் சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் மீது பரபரப்பான புகார் ஒன்றை எழுப்பியிருந்தார் இயக்குநர் சணல்குமார் சசிதரன்.
அதில், நடிகை மஞ்சு வாரியார் காணாமல் போய்விட்டார் என்றும், அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருக்கிறார் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதில் வராமல் போக, தொடர்ந்து 4 நாட்கள் கழித்து மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவொன்றை எழுதினார் சணல்குமார் சசிதரன்.
அதில், “கடந்த ஒரு வார காலமாக காணவில்லை. எனது புகாருக்கு மஞ்சு வாரியரோ, அவர் சம்பந்தப்பட்டவர்களோ விளக்கம் அளிக்கவில்லை. மஞ்சு வாரியர் கந்து வட்டி கும்பலின் பிடியில் சிக்கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மஞ்சு வாரியரை காணவில்லை என அவரது மேனேஜருக்கு டேக் செய்து பதிவு போட்டிருந்தபோதிலும் எந்தத் தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை…” என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார் சணல்குமார்.
மேலும், “மஞ்சு வாரியர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய நான் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. காரணம் எனக்கு சட்டம் மீது நம்பிக்கை இல்லை. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நான் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.
திருநங்கை ஷாலு மரணம் முதல் மஞ்சு வாரியர் வழக்குவரையிலும் பல்வேறு சம்பவங்களில் கேரளாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மேலும் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப், விசாரணை அதிகாரிகளை தாக்குவதற்கு சதி திட்டம் தீட்டியது தொடர்பாக மஞ்சு வாரியர் சாட்சியம் அளித்ததால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. சமூக வலைத்தலங்களில் நான் எழுதும் பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காததால் எனது சந்தேகம் வலுப்பதாகவும்“ சணல்குமார் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நடிகை மஞ்சு வாரியர் கொச்சியில் உள்ள எலமான்கரை போலீஸ் ஸ்டேஷனில் இயக்குநர் சனல்குமார் சசிதரன் மீது புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “இயக்குநர் சணல்குமார் சசிதரன் என்னை குறித்து தொடர்ந்த அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அந்தப் புகாரில் சனல்குமார் சசிதரன் மீது மஞ்சு வாரியர் அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.
அதில், “சனல் குமார் சசிதரன் இயக்கிய ‘கயட்டம்’ திரைப்படத்தில் நடித்தபோது அவர் என்னை காதலிப்பதாக கூறினார், ஆனால், அதை நான் ஏற்க மறுத்து விட்டேன். அதன் பிறகும் அவர் தொடர்ந்து என்னை காதலிப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தார். அவரின் நடவடிக்கையை நான் கண்டித்தேன். ஆனால், அவர் விடாமல் தொடர்ந்து என்னை காதலிப்பதாக கூறி என்னை டார்ச்சர் செய்து வருகிறார்..” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மஞ்சு வாரியரின் இந்தப் புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள இயக்குநர் சணல்குமாரின் வீட்டிற்கு வந்த போலீஸார், அவரைக் கைது செய்து கொச்சிக்கு அழைத்து வந்தனர்.
அப்போது வேண்டுமென்றே தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தச் சம்பவத்தை நேரலை செய்தார் இயக்குநர் சணல்குமார். தன்னை யாரோ கடத்துவதாக அதில் பேசினார். மேலும் தன்னை போலீஸார் துன்புறுத்துவதாகவும் கதறினார்.
கடந்த புதன்கிழமை இரவு 9 மணிக்கு கொச்சியில் உள்ள எலமன்கரா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட சணல்குமாரிடம் வழக்கு பற்றி உயரதிகாரிகள் விசாரித்தனர். பின்பு மறுநாள் வியாழக்கிழமை காலையில் அவரை ஜாமீனில் விடுவிக்க போலீஸார் முடிவெடுத்தனர்.
சணல்குமாரின் உறவினர்கள் ஜாமீன் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் முடித்த பின்பும் சணல்குமார் “நான் ஜாமீனில் போக மாட்டேன். என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்…” என்று அடம் பிடித்திருக்கிறார்.
இதனால் வேறு வழியில்லாமல் போலீஸாரும் ஒரு நாள் தாமதித்து நேற்று காலை அவரை ஆலுவாவில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை பதிவு செய்த சணல்குமார் ஜாமீனில் விடுதலையாகி வெளியேறினார்.
நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய இயக்குநர் சணல்குமார், “நான் மஞ்சு வாரியரை டார்ச்சர் செய்யவில்லை. அவரைக் காதலிப்பதாக நான் சொன்னது உண்மைதான். அதில் ஒன்றும் புதுசில்லையே.. அவருடைய வாழ்க்கை மிகவும் ஆபத்தில் உள்ளது. அதைத்தான் அவருக்குச் சொல்ல முயற்சித்தேன்.
என் இயக்கத்தில் அவர் நடித்த ‘கயாட்டம்’ படம் இன்னும் வெளியாகவில்லை. அதைப் பற்றி அவரிடம் பேசுவதற்கு மிகவும் முயற்சி செய்தேன். அதுவும் முடியவில்லை. போலீஸும், நீதிமன்றமும் இதில் இருக்கும் மர்மத்தை வெளியில் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்..” என்றார்.
The post நடிகை மஞ்சு வாரியருக்கு மலையாள இயக்குநர் கொடுத்த லவ் டார்ச்சர்..! appeared first on Touring Talkies.
]]>