The post தேர்தல் தில்லுமுல்லுகளைச் சொல்லி பரபரப்பாக்கியிருக்கும் ‘மண்டேலா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தின் பெயர் ‘மண்டேலா’. பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபுதான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ‘மண்டேலா’ கேரக்டரில் நடித்திருக்கும் யோகி பாபு சவரத் தொழிலாளியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி மோகனின் ஓப்பன் விண்டோ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், விஷ்பெர்ரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் யோகி பாபுவுடன் சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் – எஸ்.சசிகாந்த், இணை தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமச்சந்திரா, நேரடி தயாரிப்பு – பாலாஜி மோகன், ஒளிப்பதிவு – விது அய்யனா, இசை – பரத் சங்கர், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – ராமு தங்கராஜ், உடைகள் வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், பாடல்கள் – யுகபாரதி, அறிவு, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், விளம்பர வடிவமைப்பு – எஸ்.சிவக்குமார், புகைப்படங்கள் – ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – கைலாஷ் சோமசுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – எல்.மார்ட்டின் ரெக்ஸ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
இப்படத்தை அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய ‘தர்மம்’ என்னும் குறும் படத்திற்கு 2013-ம் ஆண்டு சிறந்த குறும் படத்திற்கான நடுவர்களின் சிறப்பு விருதினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் இருக்கின்ற பல காட்சிகள் இன்றைய தேர்தல் களப் பணிகளை நகலெடுத்ததுபோல இருக்கிறது. அரசியல் கட்சிகள் வாக்குப் பதிவன்று செய்யும் பல்வேறு தவறுகளை சுட்டிக் காட்டுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வெளியூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆட்களை இறக்கி வந்து ஓட்டு போட வைப்பது ஆகிய காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
மேலும், “நோட்டா’வில் வாக்கினை குத்தவும் தனக்கு காசு கொடுக்கவில்லை. காசு கொடுத்தால்தான் ஓட்டு…” என்று யோகிபாபு பேசுவது டீஸரில் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் தியேட்டர்களிலா.. அல்லது ஓடிடியிலா என்பது மட்டும் முடிவாகவில்லையாம்..!
The post தேர்தல் தில்லுமுல்லுகளைச் சொல்லி பரபரப்பாக்கியிருக்கும் ‘மண்டேலா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..! appeared first on Touring Talkies.
]]>கொரோனா காலக்கட்டத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் மட்டுமே தியேட்டர் வசூலை அள்ளியுள்ளது. அதற்குப் பின்பு வெளியான எந்தப் படமும் தியேட்டர்களில் கூட்டத்தை வரவழைக்கவில்லை.
இதனால் தியேட்டர் அதிபர்களும், தயாரிப்பாளர்களும் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். கூட்டத்தை வரவழைக்க என்ன செய்வது என்பதே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுவிட்டு அந்தப் படத்திற்கு வெற்றி கிடைக்குமா.. வசூல் வருமா.. வராதா என்கிற குழப்பத்தில் கோடிக்கணக்கில் பணத்தையும் செலவிட்டு… வசூல் கிடைக்காமல் போனால் நிறைய நஷ்டமாகுமே என்பதால் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டு ஒரே செக்காக கிடைக்கின்ற பணத்தை வாங்கிப் போடுவது நல்லது என்ற நினைப்பிற்கு பல தயாரிப்பாளர்களும் வந்துவிட்டார்கள்.
அதோடு தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது எந்தப் படத்தை தியேட்டர்களுக்கு கொண்டு வந்தாலும் படம் வெளியாகி 30 நாட்களுக்குள் ஓடிடிக்கு இந்தப் படத்தைத் தர மாட்டோம் என்கிற சான்றிதழையும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவும் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலைத் தந்திருக்கிறது.
இதனாலேயே தான் தயாரித்த ‘ஜெகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்த முடிவு படத்தின் நாயகனான தனுஷுக்கு பிடிக்கவில்லையென்றாலும், தயாரிப்பாளர் தன்னுடைய நலனை முன் வைத்து இந்த முடிவையெடுத்துவிட்டார்.
இதற்கிடையில் தான் தயாரித்த ‘ஏலே’ படத்தை நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டார் தயாரிப்பாளர் சசிகாந்த். இந்தப் படம் நேற்று மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
கதை, திரைக்கதை, இயக்கம் என்று அனைத்துமே இந்தப் படத்தில் சிறப்பாக இருந்ததால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தை இதே விஜய் டிவியிலேயே வெளியிட தயாரிப்பாளர் சசிகாந்த் முடிவெடுத்திருக்கிறாராம்.
அந்தப் படம் ‘மண்டேலா’ என்ற திரைப்படம். நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் அநேகமாக ஏப்ரல் 14-ம் தேதியன்று விஜய் டிவியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஏப்ரல் 14-ம் தேதியன்று சன் தொலைக்காட்சியும் தியேட்டர்களுக்கே வராத புத்தம் புதிய படமாக ‘வணக்கம்டா மாப்ளை’ என்ற படத்தையும் வெளியிடவுள்ளதாம்.
ஆக மொத்தத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் தங்களது ரசிகர்களை இழந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.
The post ‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..! appeared first on Touring Talkies.
]]>The post யோகி பாபுவுக்கு ஜோடியான ஷீலா ராஜ்குமார்..! appeared first on Touring Talkies.
]]>‘அழகிய தமிழ் மகள்’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார்.
இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த ‘டூ லெட்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார்.
தமிழில் ‘டூ லெட்’, ‘திரௌபதி’ என ஒரு பக்கம் வெற்றிகளை தட்டிக் கொண்டே… இன்னொரு பக்கம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா ராஜ்குமார்.
சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த சந்தோசத்தில் இருந்தவரிடம் நாம் பேசியபோது, தனது மனதில் இருந்தவற்றை தெளிந்த நீரோடையாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.
“மலையாளத்தில் கடந்த வருடம் நான் நடித்திருந்த “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற படம் மிகச் சிறந்த படமாக கேரள அரசின் விருது பெற்றுள்ளது. ஒரு நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியை மீண்டும் உணர்கிறேன்.
‘டூ லெட்’ படம்தான் ஒரு நடிகையாக எனக்கு ஒரு அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. அந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டபோது, அதைப் பார்த்த மோகன்லாலின் மேனேஜர் மூலமாக எனக்கு இந்த ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
எனக்கு முன்பாகவே மலையாளத்தில் பிரபலமான சில நடிகைகளை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஆடிஷன் செய்துள்ளனர். ஆனாலும், திருப்தியாக அமையாத சமயத்தில்தான் என்னைத்தேடி அந்த கதாபாத்திரம் வந்தது.. ஆடிஷனில் கலந்து கொண்டபோது, முதல் நாளே நான் தேர்வாகி விட்டேன்..
நான் அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு இரண்டு காட்சிகளில் மட்டுமே வசனம் கொடுத்திருந்தார்கள்.. மற்றபடி பல காட்சிகளில் முகபாவங்களிலேயே எனது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்த சக நடிகர்களும் அற்புதமாக நடித்து இருந்தார்கள்.
புதிய முயற்சி என்கிறபோது அதில் நாமும் ஒரு பாகமாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றுதான் அந்தப் படத்தில் நடித்தேன்.
அந்தப் படத்துக்குப் பிறகு பெண்களை மையப்படுத்திய கதைகளாக எனக்குத் தேடி வர ஆரம்பித்தன. தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள ‘மண்டேலா’ என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.
இதுவரை அவர் கதையின் நாயகனாக நடித்த படங்களிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஜானர். இவருக்குள் இப்படி எல்லாம் ஒரு நடிப்புத் திறமை இருக்கிறதா என்பது இந்த படம் வெளியாகும்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
சமீபத்தில் யோகிபாபு பேசும்போதுகூட, ‘நான் என்னைக்குமே காமெடியன்தான்’ என்று கூறியிருந்தார்.. ஆனால், என்னைப் பொருத்தவரை ‘காமெடி நடிகர்கள் எல்லோருமே ஹீரோக்கள்’ என்றுதான் சொல்வேன்.
அவர் சிரிக்க வைக்கவும் செய்வார். அழ வைக்கவும் செய்வார்.. ஒரு காமெடியனாக இருந்து, இந்த அளவிற்கு அவர் வந்து இருக்கிறார் என்றால் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.
அதேசமயம் படத்தில் யோகிபாபுவின் காமெடி பிரதானமாக இருந்தாலும், எனது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதியும்விதமாக தனித்துவமாக உருவாகியிருக்கிறது.
இதுமட்டுமல்ல, க்ரைம் த்ரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் ‘வாஞ்சை’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளேன். ‘இந்தியன்-2’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிவரும் சாய், தற்போது தயாரிக்கும் ஹாரர் படத்தில் நடிக்கிறேன். இது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.
ஏற்கனவே பாதி படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
என்னைப் பொருத்தவரை கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதம் எல்லாம் என்னிடம் இல்லை.. அதேபோல ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை.. எனக்கு நன்றாக நடனம் ஆடவும் தெரியும்.. கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது…” என்றார் ஷீலா ராஜ்குமார்.
The post யோகி பாபுவுக்கு ஜோடியான ஷீலா ராஜ்குமார்..! appeared first on Touring Talkies.
]]>