The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார்.
அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் டைட்டிலுக்கும் ஒரு சம்பந்தமே இல்லாம கில்லின்னு பேர் வைக்கிறானுங்க என்றார்.இந்த படத்துக்கு தான் சரியாக உழைப்பாளர் தினம்னு பெயர் வச்சுருக்காங்க என்றார்.
இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் போன்ற நல்ல பெரிய இயக்குநர்களை பெரிய நடிகர்கள் அழைத்து படம் கொடுக்கிறேன்னு சொல்லி காலி பண்ணிடுறாங்க என பேச அந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பரியேறும் பெருமாள் எனும் நல்ல படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.
அதோபோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாரி செல்வராஜ்க்கு வெற்றியை தேடிதந்தது.இச்சமயத்தில் மாரி செல்வராஜை எந்த நடிகர் அழைத்துச் சென்று காலி செய்தார் என ரசிகர்கள் ராஜ் கபூருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் appeared first on Touring Talkies.
]]>The post உதயநிதி ஸ்டாலின் என்னை காண்காணிக்கிறாரு!: மாரி செல்வராஜ் பகீர் appeared first on Touring Talkies.
]]>இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், “சந்தோசமாக உள்ளது. மாமன்னன் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதுக்கு மக்களே காரணம்” என்றார். அப்போது, நாங்குநேரி சம்பவதுக்கு சாதிய எண்ணம் கொண்ட திரைக்கலைஞர்கள் காரணம் என்று பேச்சு எழுகிறது என்று கேள்வி எழுப்பியதற்கு, “என்னுடைய மூன்று படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எதையும் மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து ரத்னவேலு கதாபாத்திரம் தவறாக கொண்டாடப்பட்டது குறித்த கேள்விக்கு, “தவறாக கொண்டாடியவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் ” என்றார்.
The post உதயநிதி ஸ்டாலின் என்னை காண்காணிக்கிறாரு!: மாரி செல்வராஜ் பகீர் appeared first on Touring Talkies.
]]>The post ‘மாமன்னன்’ பகத்பாசிலுக்கு தேசியவிருது? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அளித்து மக்களிடையே பிரபலமாக விளங்கும் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
அந்த வகையில் அவரிடம்,”பகத்பாசில், மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெறுவாரா” என்று கேட்கப்பட்டது.
அதற்கு சித்ரா லட்சுமணன், “நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பை பகத், வெளிப்படுத்தி இருக்கிறார். அதே பல வடிவேலுவும் சிறப்பாக நடித்து உள்ளார். அவருக்கும் விருது கிடைக்க வாய்ப்பு உண்டு” என்று தெரிவித்து உள்ளார்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
The post ‘மாமன்னன்’ பகத்பாசிலுக்கு தேசியவிருது? appeared first on Touring Talkies.
]]>The post மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு! appeared first on Touring Talkies.
]]>ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார்.
அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர்.
இந்நிலையில், இந்த படத்தை தடை செய்ய வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த போஸ்டரில் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே உதயநிதி நடிப்பில் உருவாகி வந்த ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளரான ராம சரவணன் மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு! appeared first on Touring Talkies.
]]>The post “நான் பயித்தியக்காரன்!”: மாரி செல்வராஜ் appeared first on Touring Talkies.
]]>இதற்கு மாரி செல்வராஜ், “நான் ஹிட்லர் எல்லாம் கிடையாது, பைத்தியக்காரன். உதவி இயக்குநர்களும் தான் என்னை திட்டுவார்கள், அவர்கள் எல்லாருமே என் ஊர்காரர்கள் தான். அதனால் உரிமையோடு திட்டுவேன், ஊரில் என்னை எல்லோரும் பைத்தியக்காரன் என்பார்கள், ஆனால், நான் ஜெயித்த பின்புதான் எல்லாம் மாறியது” என்றார்.
இந்த நிலையில், “என் உதவி இயக்குனர்களை திட்டுகிறேன். அடிக்கிறேன். ஏனெனில் அவர்களால் என்னை திருப்பி அடிக்க இயலாது என்பதால் அதிகாரத்தை செலுத்துகிறேன்” என ஏற்கெனவே மாரி செல்வராஜ் அளித்த பேட்டி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
The post “நான் பயித்தியக்காரன்!”: மாரி செல்வராஜ் appeared first on Touring Talkies.
]]>The post “மீண்டும் நடித்தால்….!”: ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி பேச்சு! appeared first on Touring Talkies.
]]>படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் , “இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக மாமன்னன் இருக்கும்” என்றார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்று, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், நடிகர் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “முழு நேரமாக அரசியலுக்கு வந்துவிட்டதால், இதுதான் என் கடைசி படம் என ஏற்கெனவே அறிவித்து விட்டேன். ஒருவேளை மீண்டும் நடிக்க வந்தால், மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பேன்” என்று பேசினார்.
The post “மீண்டும் நடித்தால்….!”: ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post “என்னமோ செய்யுது”:மாமன்னன் பாடல் குறித்து நடிகர் சூரி ட்வீட் appeared first on Touring Talkies.
]]>படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘ராசா கண்ணு’ பாடல் வெளியானது. நடிகர் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல், தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் “பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
The post “என்னமோ செய்யுது”:மாமன்னன் பாடல் குறித்து நடிகர் சூரி ட்வீட் appeared first on Touring Talkies.
]]>The post மாமன்னன் : மாரிசெல்வராஜ் வெளியிட்ட போட்டோ! appeared first on Touring Talkies.
]]>உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 1ஆம் தேதி வெளியானது. மேலும் ஜூன் மாதம் படம் வெளியாகும் என அதில் படக்குழு தெரிவித்தது.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான், யுகபாரதி உள்ளிட்டோர் இருக்கின்றனர். அந்த பதிவில், “இசைப்புயலுடன் பிரவேசித்த வைகைபுயல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்க்கையில் படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கியுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. இப்படத்தில் வடிவேலு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
The post மாமன்னன் : மாரிசெல்வராஜ் வெளியிட்ட போட்டோ! appeared first on Touring Talkies.
]]>The post பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல் appeared first on Touring Talkies.
]]>இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
The post பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல் appeared first on Touring Talkies.
]]>