The post “இயக்குநர் என்னை ஏன் செலக்ட் பண்ணினார் தெரியுமா..?” – ரகசியத்தை உடைத்த மகிமா நம்பியார் appeared first on Touring Talkies.
]]>இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சரவணன்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகியான மஹிமா நம்பியார் பேசும்போது, “இந்தப் படம் குறித்து இயக்குநர் முதலில் என்னிடம் தொலைபேசியில் 20 நிமிடங்கள் கதை சொன்னார். அப்போதே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதன் பிறகு நானே அவருக்கு போன் செய்து “இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் ஸார்” என்றேன். அவரும் பெரிய அளவில் ஆச்சரியம் காட்டாமல் “அப்படியா?” என்று சொல்லி ஒப்புக் கொண்டார். அதைக் கேட்டதும் ஒருவேளை வேறு யாரிடமோ பேசுவதற்கு பதிலாக தவறிப்போய் என்னிடம் கதை சொல்லிவிட்டாரோ என்றுகூட குழம்பினேன்.
படப்பிடிப்புக்கு சென்றபோது அவரிடம் “என்னை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய என்ன காரணம்..?” என நேரிலேயே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிம்பிளாக, “இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க சில பேரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் போன் செய்து பேசியபோது அதில் எனக்கு மதிப்பளித்து திரும்பவும் பதிலளித்தவர் நீங்கள் ஒருவர்தான். அதனால்தான் உங்களையே கதாநாயகியாக தேர்வு செய்துவிட்டேன்…” என்றார்.
ஒளிப்பதிவாளர் சக்திக்கு மைக்ராஸ்கோப் கண்கள். இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன் அதனால் எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக அழகாக மேக்கப் செய்து கொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம். இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக நீக்க வைத்துவிடுவார். இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். என்னை பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து, பயந்துதான் வேலை பார்த்தேன்.
இந்த படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் திருமண விசேஷ வீடுகளில் ஒலிக்கும்விதமாக ஒரு அருமையான குத்துப் பாடலை கொடுத்துள்ளார்கள். தீனா மாஸ்டர் நடனத்தில் அது அற்புதமான பாடலாக உருவாகியுள்ளது. படத்தில் என்னைவிட தர்ஷன்-இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்ப நிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்” என்றார்.
The post “இயக்குநர் என்னை ஏன் செலக்ட் பண்ணினார் தெரியுமா..?” – ரகசியத்தை உடைத்த மகிமா நம்பியார் appeared first on Touring Talkies.
]]>The post ஐங்கரன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>ஒரே நேரத்தில் 20 குடங்களை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்ற வட்ட வடிவிலான குழாய், சைக்கிள் பெடலை வைத்து கிரைண்டரை இயக்குவது.. டூயல் பேன் என்று விதம்விதமாக இவர் கண்டுபிடித்துக் கொடுத்தாலும் அரசாங்கத்தின் அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் இவரது எந்தக் கண்டுபிடிப்பையும் ஏற்காமல் உதாசீனப்படுத்துகிறது.
இந்த நேரத்தில் பேருந்தில் இவருடன் சண்டையிட்டு ஏமாற்றும் மஹிமா நம்பியாருடன் காதல் பிறந்து அந்தக் காதல் ஒரு பக்கம் ஓடுகிறது.
அதே நேரம் இன்னொரு பக்கம் வட இந்தியாவில் இருந்து பலே கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் நுழைகிறார்கள்.
கோவை, மதுரை, திருச்சி, சென்னை என்ற மிகப் பெரிய நகரங்களில் இருக்கும் நகைக் கடைகளில் நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இதில் கோவை நகைக்கடை கொள்ளை மிகச் சரியாக அரங்கேறுகிறது.
இதைத் தொடர்ந்து மதுரை நகைக்கடையிலும் கொள்ளையடிக்கிறார்கள். பின்பு எல்லா வழிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதால் எப்படி வெளியேறுவது என்று யோசித்தவர்கள் கரூர், நாமக்கல், சேலம் வழியே பெங்களூர் செல்ல முடிவெடுக்கிறார்கள்.
இவர்கள் நாமக்கல் அருகே நடு இரவில் வரும் வழியில் போலீஸ் குறுக்கிட.. நகைகள் இருக்கும் பைகளை வெளியில் தூக்கி எறிகிறார்கள். அந்தப் பை கிணறுக்காக வெட்டப்பட்டிருந்த ஆழ் துளைக்குள் சென்று விழுகிறது.
இந்த இரவில் அதை தன் குரூப்பினரை வைத்து எடுப்பது சாத்தியமில்லை என்று யோசிக்கும்போது ஒரு சிறு குழந்தை அந்தக் குழிக்குள் விழுகிறது.
உடனேயே இவர்களே கத்திக் கூப்பாடு போட்டு கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். விடிவதற்குள் போலீஸ், தீயணைப்புப் படை என்று மொத்த அரசு நிர்வாகமும் அங்கே வந்துவிட குழந்தையைக் காப்பாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.
இனிமேல் நடப்பது என்ன..? இதில் ஜி.வி.பிரகாஷின் பங்களிப்பு என்ன..? அந்தக் குழந்தையை மீட்டார்களா..? நகைகள் என்னவாயின..? என்பதெல்லாம் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியின் திரைக்கதையாகும்.
ஜி.வி.பிரகாஷ் சமீபமாக தனக்குத் தோதான கதைகளில்தான் நடித்து வருகிறார். தன் உருவத்திற்கும், நடிப்புக்கும் ஏற்ற வகையில் ‘செல்பி’ போன்ற படங்களைத் தேர்வு செய்தவர் அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தேர்வு செய்திருக்கிறார். சரியான தேர்வுதான்.
ஆனால் மிகையான நடிப்புக்குத்தான் இதில் இடமே இல்லை. காளி வெங்கட்டை ஏமாற்றுவது.. துப்பறிவது.. அரசு அலுவலகத்தில் பாவமாய் இருப்பது.. அப்பாவிடம் கோபமாய் பேசுவது.. கலெக்டரிடமும், எஸ்.பி.யிடமும் கெஞ்சுவது என்று பல்வேறு வகையான காட்சிகளுக்கேற்ப தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
நாயகியான மஹிமா நம்பியாருக்கு பெரிய ரோல் இல்லை. ஆனால் இருந்த காட்சிகளில் நம்மைக் கவர்கிறார். ஹரீஷ் பெராடியின் வில்லத்தனம்தான் ரசிக்க வைக்கிறது. மனிதரின் புருவம்கூட நடிக்கிறது. சிறப்பான நடிப்புதான். ‘ஆடுகளம்’ நரேன் தனது நேர்மையான குணத்தை நடிப்பில் காட்டியிருக்கிறார். காளி வெங்கட் தனது பரிதாப நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
கொள்ளையர்களில் கூட்டத்தில் கடைசி தத்தியாக இருப்பவன் கவனிக்க வைத்திருக்கிறான். மற்றவர்கள் வழக்கம்போல இயக்குநர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்கள்.
நாமக்கல் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். ஆனால், காட்சியமைப்புகள் அதுபோல் இல்லை என்பதால் ஒளிப்பதிவாளரின் பணி சற்று மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. குழந்தையை மீட்கும் பணிகூட இரவிலேயே நடைபெறுவதால் அந்த விளக்குகளின் வெளிச்ச எல்லைக்குள்ளேயே படத்தைக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஜி.வி.யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். குழந்தை மீட்பு நேரத்தில் திரையில் இருந்த பதட்டத்தை பார்வையாளர்களுக்கும் கொடுக்கிறது பின்னணி இசை.
கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். நகைக் கடை கொள்ளைகளில் சிறப்பாக செட்டுக்களை அமைத்திருக்கிறார்கள். அதேபோல் குழந்தை மீட்பு காட்சிகளிலும் கலை துறையின் பணி சிறப்புதான்.
இந்தப் படத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று ஒரு இளைஞன் கண்டறிந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசுகள் அங்கீகாரம் தராமல் அலட்சியம் காட்டுவது.. இன்னொன்று இந்தக் காலத்திலும் ஆழமான துளைகளில் விழும் குழந்தைகளை மீட்க எந்தவொரு புதிய கருவியும் நம்மிடம் இல்லாதது. இந்த இரண்டையும் ரயில் தண்டவாளம்போல ஒன்றாக, அழகாக இணைத்திருக்கிறார் இயக்குநர் ரவி அரசு.
எப்படியும் குழந்தையை மீட்கத்தான் போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும் அந்த நகைகள் என்னவாகும் என்ற கேள்வியை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தது பாராட்டுக்குரியது. அதேபோல் போலீஸ்-கொள்ளையர்கள் கூட்டணி பற்றிய திரைக்கதையும் கடைசியில் வெளிவருவது எதிர்பாராத டிவிஸ்ட்.
படத்தின் பின் பாதியில் இருந்த வேகத்தை படத்தின் முன் பாதியிலும் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
இந்த ‘ஐங்கரன்’ நிச்சயம் நம்மை சோதிக்கவில்லை. மாறாக அருள் பாலிக்கிறான் என்பதுதான் உண்மை.
RATING : 3.5 / 5
The post ஐங்கரன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்தது appeared first on Touring Talkies.
]]>சேலம் அருகில் இருக்கும் கொல்லிமலை, வரலாற்றில் ‘வல்வில் ஓரி’ என்ற கடையெழு வள்ளல்களில், மன்னர்களில் ஒருவர் ஆட்சி செய்த மலைப்பரப்பாகும். இலக்கியத்தில் குறிஞ்சி நிலப் பகுதியாய் வரும் இந்த கொல்லிமலை, சித்தர்களும் அபூர்வ சக்திகளும் நிரம்பிய இடமாகக் கருதப்படுகிறது.
பெரியண்ணன் கோவில், எட்டுக்கை துர்க்கை அம்மன், அறப்பளீஸ்வரர் என்ற சக்தி மிகு தெய்வங்கள் இங்கு குடி கொண்டுள்ளதாய் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
இந்தக் கொல்லி மலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லி மலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.
சாதாரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத்தான் இந்த அருவிக் கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும்வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி.
இந்த ஆகாய கங்கை அருவியில் முதல்முறையாக ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் புதிய படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை எம்.எஸ்.மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.முருகன் தயாரிக்கிறார்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்திருக்கிறார். மேலும், கலையரசன், நாசர், அர்ஜெய், தீனா, தேவதர்ஷினி, இயக்குநர் நட்டு தேவ், ஜெய்சன் ஜோஸ், சந்தோஷ், முரளி, விஜய், ரேவதி தரண், குஹாசினி, தீபிகா, சுபாஷ், சரவணன், ஸ்ரீராம், அகத்தியர், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் – கே.முருகன், நிர்வாகத் தயாரிப்பாளர் – எஸ்.சரவண ரவிக்குமார் இயக்குநர் – பா.விஜய், ஒளிப்பதிவு – தீபக் குமார் பதி, கலை இயக்கம் – சரவணன், இசை – கணேஷ், படத் தொகுப்பு – சான் லோகேஷ், சண்டை இயக்கம் – கணேஷ், உடைகள் – சாய், ஆடை வடிவமைப்பாளர் – டோரதி, ஒப்பனை – குப்புசாமி, ஸ்டில்ஸ் – அன்பு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
ஆகாய கங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் பயணித்துள்ளனர்.
நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில் நுட்பக் கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்து கொண்டு அருவிக்கரையை 11 மணிக்கு அடைந்து அதன் பின்னர்தான் அன்றைய படப்பிடிப்பையே நடத்த முடிந்திருக்கிறது.
இது போன்று ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கித்தான் அந்த இடத்தில் படப்பிடிப்பினை தொடர்ந்து பல நாட்கள் நடத்தியுள்ளனர். பிரபுதேவா, மகிமா நம்பியார், தேவதர்ஷினி, தினா, அர்ஜே உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.
“உணவு தயாரித்து தரும் தொழிலாளி முதல் உதவி இயக்குநர்கள்வரை அத்தனை பேரும் மிகுந்த ஒத்துழைப்போடு வலிகளையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக வேலை செய்து கொடுத்தது படத்தினுடைய தனி சிறப்பாகும்….” என்று தயாரிப்பாளர் கே.முருகன் சிலாகித்துக் கூறினார்.
The post ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்தது appeared first on Touring Talkies.
]]>The post ‘மகாமுனி’ படத்திற்குக் கிடைத்த சர்வதேச விருது..! appeared first on Touring Talkies.
]]>ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்த திரைப்படம் ‘மகாமுனி’.
இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். இந்துஜா, மஹிமா நம்பியார் என்று இரண்டு நாயகிகளும் நடித்திருந்தனர். மேலும் ரோகிணி, இளவரசு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
‘மெளன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார்தான் இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்திற்கு தற்போது சர்வதேச விருது கிடைத்திருக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட் நகரில் வருடந்தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படமும் கலந்து கொண்டது. இந்த விருது விழாவில் 5 பிரிவுகளின் கீழ் இத்திரைப்படம் போட்டியிட்டது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்திற்கான ஜூரி விருது ஆகிய பிரிவுகளில் இத்திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
விழாவின் முடிவில் இத்திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மஹிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
இதனால் ‘மகாமுனி’ படக் குழுவினருக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
The post ‘மகாமுனி’ படத்திற்குக் கிடைத்த சர்வதேச விருது..! appeared first on Touring Talkies.
]]>