The post லெஜண்ட் சரவணன் எடுக்கும் புதிய அவதாரம்! தயரான இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>எதிர்நீச்சல் மற்றும் கொடி போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், கடந்த மார்ச் மாதமோடே பிரம்மாண்டமான பூஜையுடன் இந்தப் படத்தின் சூட்டிங்கை தொடங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், துரை செந்தில்குமார் கருடன் பட வேலைகளில் பிசியாக இருந்ததால், இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது.
2022ம் ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தில், லெஜண்ட் சரவணன், விவேக், ஊர்வசி ரவுடேலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் உருவாகிய இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். சயின்டிஸ்ட்டாக லெஜண்ட் சரவணன் நடித்த இந்த படம், அவருடைய முதல் படமாக இருந்தது மற்றும் அவரே தயாரித்தார்.சென்னையில் தங்கி, இதற்காக ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அடுத்த மாதத்தில் பிரம்மாண்ட பூஜையுடன் இந்தப் படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்ததால், அவரது இயக்கத்தில் நடிக்க லெஜண்ட் சரவணன் ஒப்புக் கொண்டதாகவும், இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி, படத்திற்கான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.
The post லெஜண்ட் சரவணன் எடுக்கும் புதிய அவதாரம்! தயரான இயக்குனர்… appeared first on Touring Talkies.
]]>The post காக்கா,கழுகு கதையால் யாருக்கும் பயன் இல்லை.’’லெஜண்ட் சரவணன் appeared first on Touring Talkies.
]]>இந்த சூழ்நிலையில்ன் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இதில் நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசியதாவது: “எந்தவொரு நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில்தான் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் இந்த வியாபாரத் துறை மிகமுக்கிய பங்காற்றி வருகிறது. நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால், நம் நாட்டின் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்துக்கு அதில் இருக்கும் உண்மைத்தன்மையும், கடின உழைப்பும் தான் முக்கிய காரணமாக இருக்கும்.
இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா மிக சிறப்பாக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில், காக்கா, கதைகள், இவருக்கு அந்த பட்டம், அவருக்கு இந்த பட்டம் இதில் எல்லாம் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே உயரமுடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும்.என்று லெஜண்ட் சரவணன் பேசினார்.
The post காக்கா,கழுகு கதையால் யாருக்கும் பயன் இல்லை.’’லெஜண்ட் சரவணன் appeared first on Touring Talkies.
]]>The post ‘விஸ்வாசம்’ படத்தின் விநியோகஸ்தர் ஷேர் வெறும் 5,000 ரூபாய்தானாம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படம் கர்நாடகாவில் தமிழ்ப் படமாகவே வெளியாகிறது. அதே நேரம் மலையாளத்திலும், ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதையொட்டி பெங்களூரில் நேற்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பில் இந்தப் படத்தை கர்நாடகாவில் விநியோகம் செய்யும் விநியோகஸ்தரிடம் பத்திரிகையாளர்கள் சராமரியாக கேள்வியெழுப்பினார்கள்.
“பெங்களூரில், சமீபத்தில் வந்த பெரிய படங்கள் அனைத்துமே கன்னடத்தைத் தவிர எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ளன. கன்னட மக்கள் நாங்கள் என்ன பாவம் செஞ்சோம்..? எங்க ஊர்ல.. எங்க மக்கள்.. அவங்க மொழியில பார்க்குற மாதிரி நீங்க ஏன் வேற்று மொழிப் படங்களை கன்னடத்துல டப்பிங் பண்ணி வெளியிடுவதில்லை?” என ஒரு பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த விநியோகஸ்தர், “கன்னட மொழியில் படங்கள் வெளியிடக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஆனால், மற்ற மொழிகளில் கவனம் செலுத்துவதைப்போல கன்னடத்தில் வெளியிட நாங்களும் கவனம் செலுத்திதான் வருகிறோம். ஆனால் மக்கள்தான் அது மாதிரியான டப்பிங் படங்களை வரவேற்பது இல்லை. அவர்களுக்கு ஒரிஜினலில்தான் படம் பார்க்கப் பிடிக்கிறது..” என்றார்.
ஆனாலும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. “யார் சொன்னது? எத்தனை தியேட்டர்களில் எத்தனை டப்பிங் படங்களை வெளியிட்டீர்கள்? நீங்கள் கன்னட மொழியில் டப்பிங் செய்து படங்களை வெளியிடுவது ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் மட்டும்தான். அது வெறும் கண் துடைப்பிற்காக.. ஆனால் பரவலாக நீங்கள் தமிழில், தெலுங்கில், ஹிந்தியில்தான் வெளியிடுகிறீர்களே தவிர, கன்னடாவை நீங்கள் இரண்டாம் பட்சமாகத்தான் பார்க்கிறீர்கள்.. இது முற்றிலும் தவறு…” என்று ஒரு நிருபர் கோபமாய் கேள்வி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அந்த விநியோகஸ்தர், “விஸ்வாசம்’ படம் தமிழில் பெரும் வெற்றியடைந்த படம். இந்தப் படத்தை கன்னட மக்களுக்காக ‘ஜக மல்லா’ என்ற பெயரில் டப்பிங் செய்து ஐம்பது ஸ்கிரீன்களில் வெளியிட்டோம். ஆனால், எங்களுக்கு ஷேராக கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா..? வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான். அதனால்தான் இப்போது யோசிக்கிறோம்.
எப்படி ‘K.G.F.’ என ஒரு கன்னடப் படம் வெளியாகி உலகெங்கும் பரவலான கவனம் பெற்றதோ, அதே போல மற்ற மொழிகளில் வெளியாகும் படங்களும் விரைவில் கன்னடத்தில் கவனம் பெறும் காலமும் வரும்..” என்றார்.
The post ‘விஸ்வாசம்’ படத்தின் விநியோகஸ்தர் ஷேர் வெறும் 5,000 ரூபாய்தானாம்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘தி லெஜண்ட்’ படம் உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>‘லெஜண்ட்’ சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரைலர், ‘மொசலோ மொசலு’ பாடல், ‘வாடிவாசல்’ பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ‘பொ பொ பொ’ பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு ‘லெஜண்ட்’ என அழுத்தமாக தடம் பதித்திருக்கிறார் ‘லெஜண்ட்’ சரவணன்.
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சினிமா பாணியில் சொல்வதென்றால் ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 28-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான விநியோகஸ்தர் என பெயர் எடுத்த ‘கோபுரம் சினிமாஸ்’ ஜி.என்.அன்புச்செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின்படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.
மேலும், தமிழகம் எங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட உள்ளார்.
தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
மலையாள விநியோக உரிமையை மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிஸ்டின் ஸ்டீபன் பெற்றுள்ளார்.
தெலுங்கு உரிமையை ஸ்ரீலட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் திருப்பதி பிரசாத் பெற்றிருக்கிறார்.
கன்னட மொழி உரிமையை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் செந்தில் பெற்றுள்ளார்.
ஹிந்தி விநியோக உரிமையை கணேஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நம்பிராஜன் பெற்றுள்ளார்.
வெளிநாட்டு உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் சஞ்சய் வாத்வா பெற்றுள்ளார்.
தான் நடித்த முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் உலகமெங்கும் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்திருப்பதை பார்த்து தமிழ்ச் சினிமாவுலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.
The post ‘தி லெஜண்ட்’ படம் உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன் appeared first on Touring Talkies.
]]>லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமான செலவில் உருவாகியுள்ளது.
தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக் குழுவினருடன் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபுவும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.
தங்கள் தனி திறமையால் முத்திரை பதித்து அனைத்து மொழியிலும் பிரபலமான தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் ‘தி லெஜண்ட்’ படத்தில் லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.
ரிபீட் ஆடியன்ஸை வரவழைக்கும் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 28-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரெயிலர் 29 மில்லியன் பார்வைகளையும், ‘மொசலோ மொசலு’ பாடல் 14 மில்லியன் மற்றும் ‘வாடி வாசல்’ பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை தமிழகம் எங்கும் விநியோகம் செய்து ராசியான, சக்சஸ்ஃபுல் விநியோகஸ்தர் என பெயர் எடுத்த கோபுரம் சினிமாஸ் ஜி.என்.அன்புச் செழியன், ‘தி லெஜண்ட்’ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “என் கணிப்பின்படி இந்l முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்.
மேலும், தமிழகம் எங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட முடிவு செய்து உறுதி செய்தார்.
முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், மற்றும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று திரைத்துறை மற்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
The post உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்தார் லெஜண்ட் சரவணன் appeared first on Touring Talkies.
]]>