The post கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிவக்குமாரின் படம் திரையிடப்படுகிறது..! appeared first on Touring Talkies.
]]>கேரளாவில் வருடந்தோறும் நடைபெறும் கேரள சர்வதேச திரைப்பட விழா, இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
அது தற்போது வரும் மார்ச் 18-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை இந்த திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. துவக்க விழா வரும் மார்ச் 18-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த திரைப்பட விழாவில் 14 திரையரங்குகளில் சுமார் 180 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. மேலும், கடந்த வருடம் முதல் தற்போதுவரையிலும் மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு உரிய முறையில் அஞ்சலியும் செலுத்தப்பட இருக்கிறது.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மறைந்த பிரபல இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய தமிழ் திரைப்படமான ‘மறுபக்கம்’ இந்த விழாவில் திரையிடப்படுகிறது.
“K.S.சேதுமாதவனின் மலையாளப் படங்கள் பற்றி கேரள ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் அவர் இயக்கிய தேசிய விருதுகள் பெற்ற ‘மறுபக்கம்’ படத்தை பற்றி இங்குள்ள ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படம் இந்த விழாவில் திரையிடப்படுவதாக…” விழாக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
1991-ல் வெளியான இந்த ‘மறுபக்கம்’ படத்தில் சிவகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். ராதா மற்றும் ஜெயபாரதி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது.
மேலும் ‘மறுபக்கம்’ படம் திரையிடப்படும்போது நடிகர் கமல்ஹாசனுக்கும் அதில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படும் என்றும் விழாக் குழுவினர் கூறியுள்ளனர்.
கமல் நடித்த ‘நம்மவர்’ படத்தை கே.எஸ்.சேதுமாதவன்தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிவக்குமாரின் படம் திரையிடப்படுகிறது..! appeared first on Touring Talkies.
]]>