The post நான் கமல் ரசிகனாக இருந்தபோது.? இயக்குனர் அமீர் appeared first on Touring Talkies.
]]>
யோகி படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் சிறந்த நடிகருக்கான அடையாளத்தை அவருக்கு கொடுத்தது. நான் ஆரம்பத்தில் கமலின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஆனாலும் ரஜினி படத்தை நண்பர்களுக்காக பார்த்தேன் என தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் நடிகர் அமீர்.
The post நான் கமல் ரசிகனாக இருந்தபோது.? இயக்குனர் அமீர் appeared first on Touring Talkies.
]]>The post தெலுங்கு வாடை வருது – நாடகங்களில் நடித்து விட்டு வா.! appeared first on Touring Talkies.
]]>பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நாயகியாகவும் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தவர் பி.ஆர் வரலட்சுமி.அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகளில் இதுவரை 600 திரைப்படங்களில் நடித்துள்ளார். பூர்வீகம் தெலுங்கு என்பதால் சினிமாவில் தமிழ் பேசும் போது தெலுங்கு கலந்த தமிழில் பேசியுள்ளார்.
இதைப் பார்த்த இயக்குனர் உனக்கு தெலுங்கு வாடை வருகிறது அதனால் நீ நாடகங்களில் நடித்து விட்டு வா எனக் கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.வீடியோ கீழே….
The post தெலுங்கு வாடை வருது – நாடகங்களில் நடித்து விட்டு வா.! appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திக் – ரோஜா: மொரீசியஸ் நாட்டில் நடந்த சுவாரஸ்யம்! appeared first on Touring Talkies.
]]>“சின்ன ராஜா திரைப்படம் 1999ல் வெளியானது. எனது சகோதரர் சித்ரா ராமு தயாரித்தார். கார்த்திக், ரோஜா ஜோடியாக நடித்தனர்.
இங்கே படப்பிடிப்பு நடந்தால் லைட்மேன், உணவு பரிமாறுபவர் என நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வெளிநாடு.. அதுவும் மிக தூரத்தில் உள்ள நாட்டில் படப்பிடிப்பு. ஆகவே மொத்தம் 20 பேர்தான் சென்றோம்.
அங்கு இரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் எடுத்தோம்.
ரோஜா நடிக்கும்போது, கார்த்திக்தான் ரிப்ளக்டர் பிடிப்பார். அவர் நடிக்கும்போது ரோஜா அந்த வேலையைச் செய்வார். சாப்பாடு பறிமாற தனியாக ஆட்கள் கிடையாது. பப்பே ஸ்டைலில் சாப்பாட்டை வைத்துவிடுவோம்.. அவரவர போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். அல்லது ஒருவருக்கு ஒருவர் பறிமாறுவார்கள்.
அந்த காலகட்டத்தில் கார்த்திக், ரோஜா இருவருமே பெரிய ஸ்டார்கள். ஆனாலும் மிக எளிமையாக முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மறக்க முடியாத அனுபவம் அது” என்றார் சித்ரா லட்சுமணன்.
இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்
The post கார்த்திக் – ரோஜா: மொரீசியஸ் நாட்டில் நடந்த சுவாரஸ்யம்! appeared first on Touring Talkies.
]]>The post கார்திக்குக்கு கட் அவுட் வைத்த இன்னொரு நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>“நடிப்பு ஆர்வத்தில் இரண்டு படங்களில் தோன்றினேன். அடுத்து படம் தயாரிக்கும் ஆர்வம் வந்தது. மறைந்த கவிஞர் கண்ணதாசனின் மகனான கலைவாணன் கண்ணதாசன் என் நண்பர். இருவரும் சேர்ந்து களத்தில் இறங்கினோம்.
அப்படி உருவானதுதான் கண் சிமிட்டும் நேரம் திரைப்படம். 1988 இல் வெளிவந்தது. கலைவாணன் கண்ணதாசன் இயக்க, கார்த்திக் – அம்பிகா ஜோடியாக நடித்தனர். நான் போலீஸ் அதிகாரியாக நடித்தேன்.
இந்தப் படத்தை பிரமோட் செய்ய, தயாரிப்பாளர் என்ற முறையில் சென்னையில் கார்த்திக்குக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைத்தேன்” என்று சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார் சரத்குமார்.
The post கார்திக்குக்கு கட் அவுட் வைத்த இன்னொரு நடிகர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post கல்யாண சீன்! காட்டமான கார்த்திக்! appeared first on Touring Talkies.
]]>90களில் சுந்தர் சி, கார்த்திக் கூட்டணியில் வெளிவந்த படங்கள் வெற்றிவாகை சூடின. ஆகவே, சுந்தர் சி இயக்கிய உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்தின் கதையை கேட்காமலேயே ஓகே சொல்லிவிட்டார் கார்த்திக்.
முதல் நாள் ஷூட்டிங்..
கல்யாண சீன் என சொன்னவுடன், மாப்பிள்ளை போல் தயாராகி வந்தார் கார்த்திக்.
சுந்தர்.சி, “உங்களுக்கு கல்யாணம் கிடையாது. நீங்கள் ஒரு கல்யாணத்துக்கு வருவது போன்ற சீன்” என்றார்.
டென்ஷன் ஆன கார்த்தி, முதலில் கதையை சொல்லுங்கள், அப்புறம் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல…
அதன் பிறகு படப்பிடிப்பு தளத்திலேயே கதையை முழுவதுமாக சொல்லி இருக்கின்றனர்.
இப்படி படப்பிடிப்புக்கு போன பிறகு கதை கேட்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
The post கல்யாண சீன்! காட்டமான கார்த்திக்! appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! appeared first on Touring Talkies.
]]>
ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் கார்த்திக். ஆனால், அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார் எனவும் சில நேரங்களில் படப்பிடிப்பிற்கே வராமல் அறையிலேயே கதவை மூடிக்கொண்டு படுத்துவிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர், “கார்த்திக் டார்ச்சர் செய்வார் என்று நிறைய தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்தார். அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் திருந்திருப்பாரே” என கேட்டிருந்தார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் “கார்த்திக் மட்டுந்தான் தமிழ் சினிமாவில் பிரச்சனை கொடுக்கும் நடிகராக இருந்தாரா என்ன? இப்போது பிரச்சனை கொடுக்கின்ற நடிகர்களே இல்லையா? எத்தனை நடிகர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை கொடுத்து வருகிறார்கள் என உங்களுக்கே நன்றாக தெரியும்.
ஆனாலும் அதை எல்லாம் மீறி அவர்களை வைத்து தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அந்த நடிகருடைய திரைப்படங்கள் ஓரளவு வெற்றிப்பெறுகிறது என்பதால்தான்.
இப்படி பிரச்சனை செய்கின்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெற்றிபெறாத ஒரு நிலை வரும்போது நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அந்த நடிகரை கைவிட்டுவிடுவார்கள். அதன் பிறகு அந்த நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிலைதான் கார்த்திக்கிற்கும் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டது. இன்றைக்கு தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் அப்படி ஒரு நிலை நிச்சயமாக வரும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என பதில் அளித்தார் சித்ரா லட்சுமணன்.
The post கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! appeared first on Touring Talkies.
]]>The post பாத்ரூமில் எனக்கு தைரியம் அதிகம் – நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி.அதைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நீங்கள் பாடுவீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதில் கார்த்தி நான் மணிரத்தினம் சாரிடம் உதவி இயக்குனராக இருந்த சமயத்தில் சார் சாப்பிட வீட்டுக்கு போய் விட்டார். அவர் வருவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதனால் அலுவலகத்தில் அப்படியே மல்லாக்க படுத்துகிட்டு கால்மேல் கால் போட்டு… சத்தமா கண்ணை மூடி குதுகலமா பாட்டு பாடிட்டு இருந்தேன். கண்ணை திறந்த மணி சார் அப்படியே ஷாக் ஆகிட்டேன். அதில் இருந்து வெளியே போன பாட மாட்டேன் பாத்ரூமில் சத்தமா பாடுறது அப்பதான் யாரும் அடிக்க மாட்டாங்க… காமெடியாக அங்க எனக்கு தைரியம் அதிகம் என்றார்.
The post பாத்ரூமில் எனக்கு தைரியம் அதிகம் – நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திகை திட்டிய இளைய ராஜா…! appeared first on Touring Talkies.
]]>அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. நகைசுவை கலந்த கதாநாயகனாகவும் காலப்போக்கில் தனது நடிப்பு மாற்றிக்கொண்டார் கார்த்திக்.
இவரது படத்திற்கு பெரும்பாலும் இளையராஜா தான் இசையமைப்பாளராக இருந்தார். பல வெற்றிப் பாடல்களை கொடுத்தவர். தனது இசையால் ரசிகர்கள் மனதை வசியம் செய்து வைத்துள்ள மாயக்காரர் இளையராஜா.
ஒரு மேடையில் கார்த்திக் நடந்து கொண்டது பிடிக்கமல் இளையராஜா நீ ஒரு ஹீரோ இப்படி காமெடியன் போல் நடந்து கொள்கிறாய். என அனைவரின் முன்னிலையில் அவரை திட்டிவிட்டார்.
கோபத்தில் அக்கரை இருப்பதை புரிந்து கொண்ட கார்த்திக் முகம் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே தலையாட்டினார்.
The post கார்த்திகை திட்டிய இளைய ராஜா…! appeared first on Touring Talkies.
]]>The post அட… இது விஜய் நடிக்க வேண்டிய படமா? appeared first on Touring Talkies.
]]>இது குறித்து செல்வபாரதி கூறும்போது, “முதலில் இந்த படத்தினை விஜயை வைத்து எடுக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவர் வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டார். உள்ளத்தை அள்ளித்தா தயாரிப்பாளர்களுக்கோ படத்தினை பொங்கலில் வெளியிட வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரோ சில மாதங்கள் கழித்து, வெளியிடுங்களேன் என்றார். ஆனால் ஜாதகத்தில் நம்பிக்கை அதிகம் இருந்த தயாரிப்பாளர், தான் குறிப்பிட்ட தேதியிலேயே வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதை தொடர்ந்துதான் கார்த்தி அந்தப் படத்தில் நடிப்பது முடிவானது..” என்றார் செல்வபாரதி
.
The post அட… இது விஜய் நடிக்க வேண்டிய படமா? appeared first on Touring Talkies.
]]>The post என்னை வறுத்தெடுத்த இயக்குனர் பாலா – Producer Azhagan Thamizhmani | Chai with Chithra | Part – 6 appeared first on Touring Talkies.
]]>