Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kantara movie – Touring Talkies https://touringtalkies.co Sun, 30 Oct 2022 18:45:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kantara movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! https://touringtalkies.co/ganthara-movie-that-has-sidelined-ponniyin-selvan-and-vikram/ Sun, 30 Oct 2022 18:44:39 +0000 https://touringtalkies.co/?p=26285 ‘காந்தாரா’ படத்தின் வசூல் ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருப்பதாக திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. ‘கே.ஜி.எஃப்.’ படங்களை தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ நிறுவனம் இந்தக் ‘காந்தாரா’ படத்தை தயாரித்துள்ளது. இதனை ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற மொழிகளில் இதனை டப்பிங் செய்து […]

The post ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா’ படத்தின் வசூல் ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருப்பதாக திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. ‘கே.ஜி.எஃப்.’ படங்களை தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ நிறுவனம் இந்தக் ‘காந்தாரா’ படத்தை தயாரித்துள்ளது. இதனை ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற மொழிகளில் இதனை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ‘காந்தாரா’வின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனமே திகைப்பில் உள்ளது. தெலுங்கு வெர்ஷனில் மட்டும் இந்தப் படத்திற்கு 45 கோடிக்கும் அதிகமாக கலெக்சன் ஆகியுள்ளது. இது ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களின் தெலுங்கு வெர்ஷன் வசூலைவிட அதிகமாகும்.

கர்நாடகத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படமாக ‘காந்தாரா’ மாறியுள்ளது. அந்த வகையில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்தின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி ‘பிரின்ஸ்’, ‘சர்தார்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த நேரத்தில் குறைவான திரையரங்குகளில் ‘காந்தாரா’ படம் திரையிடப்பட்டிருந்தது.பிரின்ஸ்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ‘காந்தாரா’ படத்திற்குக் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் காந்தாரா படம் தற்போது தமிழ்நாட்டில் 100 தியேட்டர்களுக்கும் மேல் திரையிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழக திரையரங்குகளில் ‘சர்தார்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ ஆகிய 3 படங்கள்தான் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

The post ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை ஓரங்கட்டிய ‘காந்தாரா’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை…! https://touringtalkies.co/varaha-roopam-song-from-kantara-banned/ Sat, 29 Oct 2022 14:16:12 +0000 https://touringtalkies.co/?p=26216 கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. பழங்குடியின மக்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் ஒட்டு மொத்த வசூல் தற்போது 150 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது என்று திரைத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த ‘காந்தாரா’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் இடம் […]

The post ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை…! appeared first on Touring Talkies.

]]>
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. பழங்குடியின மக்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் ஒட்டு மொத்த வசூல் தற்போது 150 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது என்று திரைத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த ‘காந்தாரா’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் கேரளாவை சேர்ந்த ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக் குழுவின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘நவரசம்’ என்ற பாடலுடன் ஒத்துப் போவதாகவும், இரண்டு பாடல்களுக்கும் தவிர்க்க முடியாத பல ஒற்றுமைகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ‘வராஹ ரூபம்’ பாடல் ‘நவரசம்’ பாடலின் காப்பி என்பதால் காந்தாரா படக் குழுவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தாய்க் குடம் பிரிட்ஜ் இசைக் குழு தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, “காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும்…” என்று கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ‘தாய்க் குடம் பிரிட்ஜ் இசைக் குழு’ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை விதித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோன்று Amazon, Youtube, Spotify, Wynk Music, JioSaavn போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தப் பாடலைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

The post ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை…! appeared first on Touring Talkies.

]]>
“இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா” – ரஜினி பாராட்டு..! https://touringtalkies.co/kantara-is-a-masterpiece-in-indian-cinema-rajini-praises/ Wed, 26 Oct 2022 15:56:14 +0000 https://touringtalkies.co/?p=26027 “நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’, இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். ‘கே.ஜி.எஃப்.’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் ‘பஞ்சுருளி’ எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை […]

The post “இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா” – ரஜினி பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’, இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

‘கே.ஜி.எஃப்.’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.

கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி’ எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளியானால், அதனை கண்டு ரசித்து படக் குழுவினரை நேரில் வரவழைத்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது வழக்கம்.  

இந்நிலையில் இப்படத்தினைக் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக தன்னுடைய ட்வீட்டரில், “தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது. என்னை புல்லரிக்கச் செய்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. உங்கள் திரைக்கதை, இயக்கம், நடிப்புக்கு என் பாராட்டுகள். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பைச் சார்ந்த அத்தனை நடிகர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார்.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின்
இந்த ‘காந்தாரா’ படம் உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கன்னடத்தில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ படத்தை பார்த்த பார்வையாளர்களைவிட, ‘காந்தாரா’ படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்தப் படம் தமிழகத்தில் இன்றும் 100 திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

The post “இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா” – ரஜினி பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>