Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kannada movie – Touring Talkies https://touringtalkies.co Sat, 28 Oct 2023 02:20:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kannada movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து பாடினேன்’எஸ்.ஜானகி நெகிழ்ச்சி.! https://touringtalkies.co/i-paid-a-bribe-to-god-and-sang-s-janaki-leschi/ Sat, 28 Oct 2023 02:20:20 +0000 https://touringtalkies.co/?p=37297 தனது இனிமையான குரலில் பல மொழி ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தானே எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார். இதுவரை நான்கு முறை தேசிய விருது பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜானகியிடம் தொகுப்பாளர் நீங்கள் கஷ்டப்பட்டு பாடிய பாடல் எது என்று கேட்டார். அதற்கு அவர் ஹேமாவதி என்ற கன்னட படத்தில் எல்.வைத்தியநாதன் இசையில் இரண்டு ராகங்கள் கலந்து வரக்கூடிய பாடல் அது. ஒரு வரி ஒரு ராகத்திலும் இன்னொரு வரி வேறு ராகத்தில் பாட வேண்டும். பாடலின் கடைசி வரி ’ஸ்வரம்’ […]

The post கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து பாடினேன்’எஸ்.ஜானகி நெகிழ்ச்சி.! appeared first on Touring Talkies.

]]>
தனது இனிமையான குரலில் பல மொழி ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தானே எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார். இதுவரை நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜானகியிடம் தொகுப்பாளர் நீங்கள் கஷ்டப்பட்டு பாடிய பாடல் எது என்று கேட்டார். அதற்கு அவர் ஹேமாவதி என்ற கன்னட படத்தில் எல்.வைத்தியநாதன் இசையில் இரண்டு ராகங்கள் கலந்து வரக்கூடிய பாடல் அது. ஒரு வரி ஒரு ராகத்திலும் இன்னொரு வரி வேறு ராகத்தில் பாட வேண்டும். பாடலின் கடைசி வரி ’ஸ்வரம்’ வேகமாக பாட வேண்டும் அது எனக்கு  ரொம்ப கஷ்டமாக இருந்தது.

பயிற்சி பத்து முறை செய்தால் கூட அந்த கடைசி வரி பாடுவது சிரமம். அந்த சூழ்நிலையில் தியாகராஜர் மற்றும் ராகவேந்திர ஸ்வாமி கிட்ட வேண்டிக்கொண்டேன். நான் இந்த பாடலை நன்றாக பாடிவிடவேண்டும். இரண்டு பேருக்கும் ஆளுக்கு ரூ.100 தருகிறேன் என்றேன். அந்த பாடல் தான் நான் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து பாடிய பாடல் என அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் எஸ்.ஜானகி.

The post கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து பாடினேன்’எஸ்.ஜானகி நெகிழ்ச்சி.! appeared first on Touring Talkies.

]]>
கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் https://touringtalkies.co/director-vijay-milton-directs-a-kannada-movie-with-sivarajkumar/ Fri, 20 Nov 2020 05:00:00 +0000 https://touringtalkies.co/?p=10205 ‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு தற்போது கன்னட திரையுலகில் ஒரு இயக்குநராக காலடி எடுத்து வைக்கிறார். இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தை விஜய் மில்டனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் நிறுவனம், பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. தனது முதல் படத்திலேயே கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ் குமாரை இயக்கும் வாய்ப்பைப் […]

The post கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் appeared first on Touring Talkies.

]]>
‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு தற்போது கன்னட திரையுலகில் ஒரு இயக்குநராக காலடி எடுத்து வைக்கிறார்.

இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தை விஜய் மில்டனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் நிறுவனம், பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

தனது முதல் படத்திலேயே கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ் குமாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் விஜய் மில்டன்.

இப்படத்தில் சிவராஜ் குமாருக்கு  ஜோடியாக  அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய் மில்டன். படத்துக்கு ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். மக்கள் தொடர்பு – ஜான்சன்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் நேற்று நடந்தது. வரும் நவம்பர் 23-ம் தேதி முதல்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள இசைக் கல்லூரியில் ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

The post கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் appeared first on Touring Talkies.

]]>