The post அமிதாப் பச்சன்க்கு அப்புறம் இங்க நான் தான்…புகழ்ந்து பேசிய கங்கனா ரனவாத்… கலாய்க்கும் நெட்டிசன்கள்… appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், கங்கனா தன்னை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.கங்கனா மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட போது நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு ஆச்சரியம் தான் ஏற்படுகிறது.
காரணம் அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு மழை பொழிகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான். இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என்று பேசினார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கலாய்த்து வருகின்றனர்.
The post அமிதாப் பச்சன்க்கு அப்புறம் இங்க நான் தான்…புகழ்ந்து பேசிய கங்கனா ரனவாத்… கலாய்க்கும் நெட்டிசன்கள்… appeared first on Touring Talkies.
]]>The post மிரட்டும் கங்கனா ரனாவத்: – ‘சந்திரமுகி 2’ புதிய ட்ரெய்லர்! appeared first on Touring Talkies.
]]>ட்ரெய்லர் எப்படி?
‘17 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணு கங்கா, தன்னைத் தானே சந்திரமுகியா நெனைச்சுட்டு அந்த ஆட்டம் ஆடுச்சு. இப்போ ஒரிஜினல் பீஸே வந்து இறங்கியிருக்கு. என்ன ஆட்டம் ஆடப்போகுதோ…’ என்ற வடிவேலு வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘பேய் பங்களா’ செட் அப், ‘வேட்டையன்’ இன்ட்ரோ, சண்டைக் காட்சி, மிரட்டுகிறது.
கங்கனா ரனாவத் எட்டி உதைப்பது, அவருக்கும் ராகவா லாரன்ஸுக்கும் சண்டை நடப்பது போன்ற காட்சிகளுடன் ட்ரெய்லர் முடிகிறது. மனோ, ஆர்.எஸ்.சிவாஜி ஆகிய மறைந்த நடிகர்களை காண முடிகிறது. வழக்கமான காட்சிகளைத் தாண்டி டீசர் ரசிக்கவைக்கிறது. படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
The post மிரட்டும் கங்கனா ரனாவத்: – ‘சந்திரமுகி 2’ புதிய ட்ரெய்லர்! appeared first on Touring Talkies.
]]>The post “பெண்கள் நாட்டின் கண்கள்!”: கங்கனா ரணாவத் appeared first on Touring Talkies.
]]>பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, ” பெண்கள் மேம்பட அதிகாரம் பெற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு பெரிய நிகழ்வை ஆளும் கட்சியும் பிரதமர் மோடியும் செய்து உள்ளார்கள். பெண்கள் தான் நாட்டின் முன்னுரிமை என்பதை உணர்த்தும் மசோதா இது. “பெண்கள் நாட்டின் கண்கள்!”: கங்கனா ரணாவத்” எனக் கூறினார்.
The post “பெண்கள் நாட்டின் கண்கள்!”: கங்கனா ரணாவத் appeared first on Touring Talkies.
]]>The post நடுராத்திரி.. திகில் பூஜை! கங்கனா ரணாவத் ஒரு கொடூர மந்திரவாதி!: பாலிவுட் நடிகர் குற்றச்சாட்டு! appeared first on Touring Talkies.
]]>கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் பாலிவுட் நடிகர் வீர் தாசுடன் நடித்திருந்தார். படப்பிடிப்பின்போது உதட்டு முத்த காட்சியில் கங்கனா, வீர் தாசை முத்தமிட்டபோது உதட்டை கடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாக ஒரு தகவல் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இதிலும் சர்ச்சையை கிளப்பினார்.
இந்த நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.நடிகர் சேகர் சுமனின் மகன் அத்யாயன் சுமன். இவர் 15 வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு நடிகை ராஸ் படத்தின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஆனால் அடுத்த ஆண்டே பிரிந்தனர்.
அப்போது, அத்யாயன் சுமன் கங்கனா மீது கூறிய குற்றச்சாட்டுகள் பாலிவுட்டையே உலுக்கிவிட்டது.
அவர், “கங்கனா ரனாவத் எனக்கு மந்திரவாதியை வைத்து சூனியம் வைக்க முயன்றார். என்னை வசியப்படுத்த அசுத்த (மாதவிடாய்) இரத்தம் கலந்த உணவை எனக்குத் தெரியாமலேயே ஊட்டினார். மேலும் ஒரு நாள் இரவு 12 மணியளவில் கங்கனா கறுப்பு உடையில் பூஜை செய்து, சில மந்திரங்கள் சொல்லும்படி வற்புறுத்தி அறையில் அடைத்து வைத்தார்” என்றார்.
சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகர் அத்யாயன் சுமன் தனது அந்த குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார். “அந்த உறவை பற்றி பேசுவதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மறுபக்கம் மக்களுக்கு தெரியும். நான் ஒரு முறை அதுகுறித்து பேசினேன், மேலும் அது குறித்து விவாதிக்க விரும்பவில்லை” என கூறினார்.
தற்போது அவரது பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
The post நடுராத்திரி.. திகில் பூஜை! கங்கனா ரணாவத் ஒரு கொடூர மந்திரவாதி!: பாலிவுட் நடிகர் குற்றச்சாட்டு! appeared first on Touring Talkies.
]]>The post தமிழில் மீண்டும் கங்கனா – மாதவன் ஜோடி appeared first on Touring Talkies.
]]>தற்போது டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இண்டியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் மாதவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மாதவனும் கங்கனாவும் ‘தனு வெட்ஸ் மனு’ என்ற இந்தி படத்தில் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தனர். ஆகவே புதிய படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
The post தமிழில் மீண்டும் கங்கனா – மாதவன் ஜோடி appeared first on Touring Talkies.
]]>The post “500 ரூபாயுடன் மும்பை வந்தேன்! மீண்டும் அப்படி ஆகிவிட வாய்ப்பு உண்டு!:: கங்கனா ரணாவத் appeared first on Touring Talkies.
]]>தற்போது ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் இதில் இந்திரா காந்தி வேடத்தில் நடிப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படத்தை தயாரிப்பது குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, “நான் சொந்தமாக ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பொருளாதார பிரச்சினையால் அது நிறைவேறாமல் போனது. தற்போது நான் வசிக்கும் வீடு உள்பட விலைமதிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை தயாரித்து வருகிறேன்” என்றார்.
மேலும்,”ரம்ப காலத்தில் நான் கையில் வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தேன். ஒரு வேளை இந்த படத்தில் நான் முதலீடு செய்த மொத்தத்தையும் இழக்க வேண்டி வந்தால் மும்பை வந்தபோது எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலைக்கு சென்று விடுவேன். ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்க மாட்டேன். சொந்த காலில்தான் நிற்பேன்” என்று சொல்லி இருக்கிறார்.
The post “500 ரூபாயுடன் மும்பை வந்தேன்! மீண்டும் அப்படி ஆகிவிட வாய்ப்பு உண்டு!:: கங்கனா ரணாவத் appeared first on Touring Talkies.
]]>The post “அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள்!”: நடிகை கங்கனா அதிரடி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் தற்போது கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை இடம்பெற்றிருந்தது. அதில் எழுதப்பட்டுள்ள வாசகம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையில், “அத்துமீறி நுழைபவர்கள் சுடப்படுவீர்கள். உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிறரை மிரட்டும் வகையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைப்பது சரிதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
The post “அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள்!”: நடிகை கங்கனா அதிரடி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post ‘தலைவி’ படத்தை வட இந்தியாவில் திரையிடுவதில் சிக்கல் – கங்கனா ரணாவத் கடும் கண்டனம் appeared first on Touring Talkies.
]]>வட இந்தியாவில் மிக அதிகமான மால் தியேட்டர்களைத் தங்கள் கை வசம் வைத்திருக்கும் பி.வி.ஆர்., ஐநாக்ஸ், சினி போலீஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது தியேட்டர்களில் ‘தலைவி’ படத்தைத் திரையிடுவதாக இல்லை என்று சொல்லிவிட்டன.
தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ‘தலைவி’ படத்தை வெளியிட வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நிராகரித்ததே இதற்குக் காரணம்.
‘தலைவி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தனித்தனியே உருவாக்கப்பட்டுள்ளது. தனித்தனியே சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதற்கான மாஸ்டர் பிரிண்ட்டும் தனித்தனியாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன.
‘தலைவி’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமை அமேஸான் பிரைம் வீடியோ தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
ஆனால், ‘தலைவி’ படத்தின் ஹிந்தி உரிமை மட்டும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனையாகியுள்ளது.
தியேட்டர்களின் 4 வார கால இடைவெளி நிபந்தனையை தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமேஸான் நிறுவனம் ஏற்றுக் கொண்டதையடுத்து ‘தலைவி’ படத்தின் தென்னக மொழிகளின் பிரதி அமேஸான் பிரைம் வீடியோ தளத்தில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆனால் இதன் ஹிந்தி பதிப்பை ஓடிடியில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த நிபந்தனையை ஏற்க மறுக்கிறது. 55 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதால் தாங்கள் இதை ஏற்க முடியாது என்று நெட்பிளிக்ஸ் மறுப்புத் தெரிவித்துவிட்டது.
தயாரிப்பாளர்கள் தரப்பும் இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போயுள்ளனர். வேண்டுமென்றால் 55 கோடியைக் கொடுத்துவிட்டு படத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றே நெட்பிளிக்ஸ் நிறுவனம் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டதாம்.
இதனால் வட இந்தியாவில் மிக அதிகத் தியேட்டர்களைக் கையில் வைத்திருக்கும் பி.வி.ஆர்., ஐநாக்ஸ், சினிபோலீஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது தியேட்டர்களில் தலைவியைத் திரையிடுவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையில் இந்தப் பிரச்சினை குறித்து வருத்தப்பட்டிருக்கும் படத்தின் நாயகியான கங்கனா ரணாவத், சமூக வலைத்தளத்தில் மிகவும் வருத்தப்பட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “எந்தத் திரைப்படமும் இன்றைய சூழலில் திரையரங்க வெளியீட்டுக்குச் செல்வதில்லை. விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் போன்ற துணிச்சலான சில தயாரிப்பாளர்கள்தான் பெரிய லாபத்தை வேண்டாம் என்று சமரசம் செய்து கொண்டும், பிரத்தியேக ஓடிடி வெளியீட்டு வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு சினிமாவின் மீது இருக்கும் காதல்.
இந்தக் கடினமான சூழலில் நாம் ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும். துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது. நாங்கள் செய்திருக்கும் படத்தின் முதலீட்டைத் திரும்பச் சம்பாதிக்க வேண்டும் என்பது எங்களின் அடிப்படை உரிமை.
இந்தி பதிப்புக்கு 2 வார கால இடைவெளி இருக்கிறது. தமிழுக்கு 4 வாரங்கள் இருக்கிறது. ஆனாலும், அங்கு மல்டிப்ளக்ஸ் தரப்பில் அனைவரும் எங்களுக்கு எதிராக அணி திரண்டு எங்கள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கிறார்கள்.
மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் இது போன்றதொரு சோதனைக் காலத்தில் இது நியாயமற்ற, கொடூரமான செயல். திரையரங்குகளைக் காப்பாற்ற நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.
The post ‘தலைவி’ படத்தை வட இந்தியாவில் திரையிடுவதில் சிக்கல் – கங்கனா ரணாவத் கடும் கண்டனம் appeared first on Touring Talkies.
]]>The post “பாலிவுட் திரையுலகம் ஒரு சாக்கடை…” – நடிகை கங்கனா ரணாவத் கடும் தாக்குதல்..! appeared first on Touring Talkies.
]]>கடந்த வருடம் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகத்தை மிகக் கடுமையாகக் கண்டித்து வருகிறார் நடிகை கங்கனா ரணாவத்.
“பாலிவுட் ஒரு சாக்கடை..”, “இங்கு வாரிசு அரசியல் அதிகம்”, “மாஃபியா கூட்டங்கள் நிறைந்த கூடாரம் இது” என்று பாலிவுட்டை தொடர்ந்து கடுமையாகத் தாக்கி வரும் கங்கனா, இப்போது மட்டும் சும்மா இருப்பாரா என்ன..? சும்மாவே ஆடுவார்.. இப்போது சலங்கை கட்டிவிட்ட நிலையில் என்னாவாகும்..?
ராஜ் குந்த்ராவின் கைது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் கங்கனா ரணாவத். அந்தச் செய்தியில், “இதனால்தான் பாலிவுட் திரைத்துறையை நான் ‘சாக்கடை’ என்கிறேன். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. எனது அடுத்த தயாரிப்பான ‘டிகு வெட்ஸ் ஷெரூ’ படத்தில், இந்த பாலிவுட்டின் மோசமான முகத்தை நான் வெளிச்சம் போட்டுக் காட்டவிருக்கிறேன். அறநெறிகள் இருக்கும் கண்டிப்பான அமைப்பும், படைப்பாற்றல் துறையில் மனசாட்சியும் இருக்க வேண்டும். கூடவே கண்டிப்பாக ஒரு சாட்டையும் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இனி அடுத்தடுத்து தனது தாக்குதலால் பாலிவுட்டை அதிர வைப்பார் கங்கனா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post “பாலிவுட் திரையுலகம் ஒரு சாக்கடை…” – நடிகை கங்கனா ரணாவத் கடும் தாக்குதல்..! appeared first on Touring Talkies.
]]>