The post லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Touring Talkies.
]]>பின்பு முரளி கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீது இருந்த 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அவர் மீதான 463 பிரிவு குறித்து கீழமை நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்து லதா ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மற்றும் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
The post லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Touring Talkies.
]]>The post விஜய் பே(ஏ)சியது மக்கள் மொழியாம்!: சீமான் விளக்கம்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியானது. இது தற்போது யூட்யூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ட்ரைலரில் விஜய் பேசும் ( தே.ப.) என்ற வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை நீக்கக் கோரி படக்குழுவிற்கு எதிராக இந்து மக்கள் கழகம் சார்பிலும் அகில பாரத் இந்து மகா சபா சார்பிலும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சீமான், “முன்னோட்டத்தில் இருக்கும். தணிக்கையில் அதை மியூட் செய்துவிடுவார்கள். ஒரு படத்தை இயல்பாக எடுக்கும் பொழுது மக்கள் மொழியில் வந்துவிடுகிறது. என் தம்பி வெற்றிமாறன் எடுத்த வடசென்னையில் வந்தது எங்கள் மொழிதான். அதை விட்டுவிட்டு வாருங்கள், அமருங்கள், உட்காருங்கள்… என இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது.
வெப் சீரிஸில் இதைவிட கேவலமான வார்த்தைகள் ரொம்ப கொச்சையாக பேசக்கூடிய வார்த்தைகள் வருகிறது. விஜய் சிகரெட் பிடிப்பதனால் எல்லாரும் பிடிக்கிறார்கள், அவர் சாராயம் குடிக்கிறதனால் எல்லாரும் குடிக்கிறார்கள் எனக் கருத வேண்டியதில்லை. சமூகம் எப்படி கருதுகிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும்.” என்றார்.
The post விஜய் பே(ஏ)சியது மக்கள் மொழியாம்!: சீமான் விளக்கம்! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் – லோகேஷ் இடையே என்ன பிரச்சினை? appeared first on Touring Talkies.
]]>கிளைமாக்ஸை மாற்றச் சொன்னாரா இளையராஜா?
அரவிந்த் சாமி என்ன ஆனார்?
நிகில் முருகன் நடித்த பவுடர் ஓ.டி.டி.யில் வெளியாகிவிட்டதா?
விஜய் புதிய படத்தில் சுதீப் இருக்கிறாரா?
லியோவில் விஜய் – லோகேஷ் இடையே என்ன பிரச்சினை?
இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கான விடைகளை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post விஜய் – லோகேஷ் இடையே என்ன பிரச்சினை? appeared first on Touring Talkies.
]]>The post “உதயநிதிக்கு துணை நிற்கிறேன்”: இயக்குநர் பா.ரஞ்சித் appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அமைச்சர் உதய ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுக்கும் பேச்சு பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் நிகழும் மனித தன்மையற்ற செயல்களும் தான் சனாதன தர்மத்தில் உள்ளது. புரட்சித் தலைவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அயோத்திதாஸ் பண்டிதர், தந்தை பெரியார், மகாத்மா பூலே, துறவி ரவிதாஸ் போன்ற ஜாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதையே வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சரின் பேச்சை திரித்து இனப்படுகொலைக்கான அழைப்பு என்று தவறாகப் பயன்படுத்தும் கேடுகெட்ட அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைச்சரின் மீது அதிகரித்து வரும் வெறுப்பும் வேட்டையும் மிகவும் கவலையளிக்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் கருத்துக்கு துணை நிற்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
The post “உதயநிதிக்கு துணை நிற்கிறேன்”: இயக்குநர் பா.ரஞ்சித் appeared first on Touring Talkies.
]]>The post “காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் appeared first on Touring Talkies.
]]>இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு, “படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா” என கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இயக்குநர் லெனின் பாரதி, “பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மனிதனை மலம் அள்ள வைக்கும் இந்து மதத்தின் அடிப்படைவாதத்தை தனது படைப்பின் மூலம் கேள்விக்குள்ளாக்கிய விடுதலை சிகப்பிக்கு துணை நிற்போம்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மேலும் இயக்குநர் சீனு ராமசாமி, “தம்பி விடுதலை சிகப்பியின் மீதான வழக்குகள் வாபஸ் பெற வேண்டுகிறேன். காயம்பட்ட பறவைகள் கதைக்க/ கவிபாட/ இசைக்க/ அட எழுதி கிறுக்க ஊர் உண்டு/ உறவுண்டு/ நிலமுண்டு/ நீண்டு வாழ வாழ்வுண்டு/ உரிமையுண்டு/ அடியேனும் அதற்கு துணையுண்டு.. இழிவு செய்யும் நோக்கமில்லை. இளைஞன் அவன் இன்னல் செய்யாதீர்..” எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post “காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் appeared first on Touring Talkies.
]]>The post “யார் யாரை ஒதுக்குறது”: ஆவேசமான விஜய்சேதுபதி! appeared first on Touring Talkies.
]]>படத்தை பார்க்க டிக்கெட் வாங்கியும் அந்த பெண்ணையும், குழந்தைகளையும் திரையரங்கு வாசலிலேயே கெஞ்ச விட்டுள்ளார் அந்த ஊழியர். இதனை தட்டி கேட்கும் பொருட்டு அங்கிருந்த இளைஞர் ஒருவர், தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இந்த பதிவு வந்த சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை கொந்தளித்து தீண்டாமை ஒழிப்பு குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேட்டியில் பேசியுள்ளார். அதில் யாரும் யாரையும் ஒதுக்கப்படுவதை தன்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர், இதுபோன்ற சம்பவம் எங்கு நடந்தாலும் ஏற்கக்கூடியது அல்ல என கூறினார். மேலும் பேசிய விஜய் சேதுபதி மனிதர்கள் ஒன்றாக வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்டிருக்கிறது என அவரது பாணியில் பதிலளித்தார்.
The post “யார் யாரை ஒதுக்குறது”: ஆவேசமான விஜய்சேதுபதி! appeared first on Touring Talkies.
]]>The post “வாரிசுடு”: ரிலீஸ் தேதி மாற்றம்? appeared first on Touring Talkies.
]]>தமிழ் வாரிசு படத்துக்க தணிக்கை சன்றிதழ் கிடைத்துவிட்டது. அடுத்து படம் வெளியாக உள்ள வெளிநாடுகள் சிலவற்றில் தணிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், படத்தின் பிரதி முழுமையாக தயாராகவில்லை என்ற காரணத்தினால் தணிக்கைகுழு, சான்றிதழ் அளிக்க தாமதமாகும் என கூறப்படுகிறது.
தவிர ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை என்றும் அதற்கான தணிக்கை நாளை – திங்கட்கிழமை – நடைபெறவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் 11ஆம் தேதி வெளியாகவுள்ள வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு, வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெலுங்கு சினிமா இணைய இதழ்களில் தகவல் வெளியாகி உள்ளது.
The post “வாரிசுடு”: ரிலீஸ் தேதி மாற்றம்? appeared first on Touring Talkies.
]]>The post தனுஷின் “ வாத்தி “பட சர்ச்சை! appeared first on Touring Talkies.
]]>இந்த விவகாரம் குறித்த வழக்கு நீதியரசர் சரவணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விநியோகாஸ்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்தின் விநியோக உரிமை ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனத்திடம் உள்ளதாகவும், உரிமை தொகையை உடனடியாக நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்தது.
தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்தை வேறு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டதால் ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” நிறுவனத்திற்கு வழங்க முடியாது என வாதிட்டார்.
தங்களிடம் விநியோக உரிமை இருந்து வருவதால் காப்புரிமை சட்டப்படி வேறு ஒருவருக்கு படத்தை விற்க முடியாது என்று ஆரண்யா சினி கம்பைன்ஸ் வழக்கறிஞர் மறுத்து வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காப்புரிமை சட்டப்படி ஒருவரிடம் காப்புரிமை உள்ள நிலையில் வேறொருவருக்கு எப்படி விற்க முடியும் என்று இடைமறித்து கருத்தை தெரிவித்து வழக்கை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
23ம் தேதி நடக்க உள்ள இறுதி வாதங்களை பொறுத்து வாத்தி பட விநியோக உரிமை யாருக்கு என்பது தெரியவரும்.
இந்த விவகாரம், திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post தனுஷின் “ வாத்தி “பட சர்ச்சை! appeared first on Touring Talkies.
]]>