The post விஜய் படத்திற்கு ஹைதராபாத்தில் பிர்ம்மாண்ட செட்! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. அடுத்து, ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்துள்ளனர். அங்கு டிச.2-ம் தேதி முதல் சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதை முடித்துவிட்டு,படக்குழு துருக்கி செல்கிறது.
The post விஜய் படத்திற்கு ஹைதராபாத்தில் பிர்ம்மாண்ட செட்! appeared first on Touring Talkies.
]]>The post கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! appeared first on Touring Talkies.
]]>அதற்க்கு பிறகு ஜீவா, ரெமோ, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் நடித்தார் ஸ்ரீதிவ்யா.
ஆனால், தற்போது ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அதுவும் இல்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா இன்ஸ்டாகிரமில் தனது போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் கிராமத்தின் போட்டோவையும் வெளியிட்டு உள்ளார்.
ஸ்ரீதிவ்யா விரைவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
The post கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! appeared first on Touring Talkies.
]]>The post ஆஸ்கார் விருதுக்கு பின் ஐதராபாத் திரும்பினார் ராம்சரண்! appeared first on Touring Talkies.
]]>இதனால், இந்த முறை இந்திய திரை துறைக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்து உள்ளன.
இதனை தொடர்ந்து, ஆர்.ஆர்.ஆர். பட குழுவினர் நாடு திரும்பினர். இயக்குனர் ராஜமவுலி, அவரது மனைவி ரமா, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஐதராபாத்துக்கு நேற்று காலை திரும்பினர். எனினும், ஆர்.ஆர்.ஆர். படத்தில் நாயகர்களில் ஒருவராக நடித்த நடிகர் ராம்சரண் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை வந்திறங்கினார்.
அவர் வந்தபோது, ரசிகர்களின் கூச்சல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, டெல்லியிலேயே அவர் தங்கினார். இதன்பின்பு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோர் சந்தித்தனர். இதுபற்றி மந்திரி அமித்ஷா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆர்.ஆர்.ஆர். படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி மற்றும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது ஆகியவற்றுக்காக ராம்சரணுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன் என கூறினார்.
அதன்பின்பு நேற்றிரவு வரை டெல்லியிலேயே தங்கிய நடிகர் ராம்சரண், அதன்பின்பு நள்ளிரவில் ஐதராபாத் நகருக்கு வந்து சேர்ந்து உள்ளார். அவரை காணவும், வரவேற்கவும் அவரது ரசிகர்கள் திரண்டு வந்து இருந்தனர்.
திறந்த நிலையிலான காரில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தபடியே வந்த அவர் மீது ரசிகர்கள் சார்பில் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
The post ஆஸ்கார் விருதுக்கு பின் ஐதராபாத் திரும்பினார் ராம்சரண்! appeared first on Touring Talkies.
]]>The post ஜெயிலர் படப்பிடிப்பு: ஹைதராபாத் பறந்த ரஜினி! appeared first on Touring Talkies.
]]>ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அதே போல, மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் எஞ்சிய படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.
காரில் இருந்து இறங்கி ரஜினி செல்லும் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
The post ஜெயிலர் படப்பிடிப்பு: ஹைதராபாத் பறந்த ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை வரலட்சுமி ஹைதராபாத்தில் குடியேறுகிறார்..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சென்னையில் தனது தாயார் சாயா மற்றும் தங்கை பூஜாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென்று தான் ஹைதராபாத்தில் குடியேறப் போவதாக தனது சமூக வலைத்தளத்தில் நேற்றைக்கு வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.
அந்த வீடியோவில் இது குறித்து வரலட்சுமி பேசுகையில், “எனக்கு எப்போதும் சிறந்த பிறந்த நாள்தான். நல்லது, கெட்டது மற்றும் பல சங்கடமான நேரங்களில், எனக்காக எப்போதும் என்னுடன் இருந்த அற்புதமான மனிதர்களுக்கு நன்றி. என்னுடைய கடைசி வார இறுதி நாட்களை அவர்களுடன் சென்னையில் கழித்ததே பெருமையாக இருக்கிறது.
இது என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம். ஹைதராபாத். ஆமாம், நான் ஹைதராபாத்தில் குடியேறப் போகிறேன். அதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் இப்போது பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறேன் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. நான் அதிகமாக உங்களை நேசிக்கிறேன். இது என் குடும்பம். என் வாழ்க்கை. அனைவரும் எனது ஒரே குடும்பம் என்பதால் உங்கள் அனைவரின் ஆசியும், அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வேண்டும்…” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வரலட்சுமி தெலுங்கில் நடித்து வெளியான ‘கிராக்’ மற்றும் ‘நந்தி’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்று வரலட்சுமிக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. இதனால் தற்போது தெலுங்குப் படவுலகில் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனவாம்.
தற்போது சமந்தாவுடன் ‘யசோதா’, சந்தீப் கிஷானுடன் ‘மைக்கேல்’, ‘அனுமான்’, ‘ஆத்யா’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.
The post நடிகை வரலட்சுமி ஹைதராபாத்தில் குடியேறுகிறார்..! appeared first on Touring Talkies.
]]>The post “தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஏன் நடக்கிறது?” – இயக்குநர் பவித்ரன் கேள்வி..! appeared first on Touring Talkies.
]]>‘வசந்த காலப் பறவை’, ‘சூரியன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பவித்ரன். இவர் நேற்று ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது, “தமிழ்ச் சினிமாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தமிழகத்தில் நடத்தப்படுவதே இல்லை.
அனைத்துப் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஸ்டூடியோவில்தான் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் இருக்கும் திரைப்பட தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறி போகிறது. இதைப் பற்றி எந்த பெரிய ஹீரோவும் கவலைப்படுவதே இல்லை.
தற்போது ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்காக மிகப் பெரிய அளவுக்கு செட் போட்டு படமாக்கி வருகிறார்கள். எத்தனை தொழிலாளர்கள் அதில் பணியாற்றுகிறார்கள்..? அந்த வாய்ப்பு சென்னையில் கிடைத்திருந்தால் இங்கேயிருக்கும் எத்தனை தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்திருக்கும்..?
ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோ இருந்த இடம் பெரும் பாறைகள் மிகுந்த பகுதி. அதையெல்லாம் தகர்த்துவிட்டு இப்படியொரு ஸ்டூடியோவை அவர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். அதேபோல் சென்னையிலும் அரசிடம் சொல்லி ஏதாவது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே ஒரு மிகப் பெரிய ஸ்டூடியோவை தமிழ்த் திரையுலகம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் என்ன வளம் இல்லை. எல்லாமே இங்கே இருக்கிறது.. ஆனால் இதை எடுத்துச் சொல்லி செய்வதற்குத்தான் ஆள் இல்லை.. தமிழ்த் திரையுலகத்தின் அனைத்து சங்கங்களும் ஒன்றுகூடி இதற்கு முடிவெடுக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.
The post “தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஏன் நடக்கிறது?” – இயக்குநர் பவித்ரன் கேள்வி..! appeared first on Touring Talkies.
]]>The post ‘வலிமை’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ‘தல’ அஜீத்..! appeared first on Touring Talkies.
]]>கொரோனா பாதிப்பிற்குப் பின்னர் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட முதல் பெரிய நடிகர் என்னும் பெயரைத் தட்டிச் சென்றுள்ளார் ‘தல’ அஜீத்.
ஹைதராபாத்தில் இன்று ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டுள்ளார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.
இந்தப் படத்தை பிரபல ஹிந்தி படவுலக தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். எச்.வினோத் இயக்கி வருகிறார்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்டார்.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்ப்டடு அங்கு ராமோஜிராவ் ஸ்டூடியோவில் செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அஜீத் அதில் கலந்து கொள்ளாமலேயே இருந்தார்.
ஏனெனில் சமீப நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் துவங்கியிருந்தன. அதிலும் குறிப்பாக ஹைதராபாத்தில் வைரஸ் பரவல் இரட்டிப்பானது. இதன் காரணமாகவே ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கும் ரஜினியே வராமல் போக.. அந்தப் படத்திற்காகப் போடப்பட்டிருந்த செட்டுகளும் காத்தாடிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் இன்று ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டிருக்கிறார் என்ற உண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. ரஜினியைும் இதில் முந்தியுள்ளார் ‘தல’ அஜீத் என்பதால் ‘தல’யின் ரசிகர்களுக்கு இந்த நிகழ்வு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
The post ‘வலிமை’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ‘தல’ அஜீத்..! appeared first on Touring Talkies.
]]>