The post தி கோட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள கங்கை அமரன்!!! appeared first on Touring Talkies.
]]>தளபதி விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.இப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விஜய்யின் புதிய கீதை படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்யோடு இணைந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கோட் படத்தின் அப்டேட் கேட்ட போது அதற்கு சொல்ல முடியாது என்று சிரித்துக்கொண்டே பேசினார்.மேலும், இந்த முறை மனசுல க்ளியரா இருக்கேன். பேச்சு கிடையாது வீச்சுதான்.எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.ஒட்டுமொத்த படக்குழுவினரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். படத்தின் பின்னணி இசையும் நீண்ட காலம் பேசப்படும் என்று கணிக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.
தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வந்துள்ளது அது என்னவென்றால், யுவன் சங்கர் ராஜா இசையில் கங்கை அமரன் ஒரு பாடலை எழுதியிருப்பதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே பல பாடல்களை இட்டாக கொடுத்த கங்கை அமரன் இந்தப் பாடலையும் சிறப்பாக எழுதி இருப்பார் என இப்பாடலின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
The post தி கோட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள கங்கை அமரன்!!! appeared first on Touring Talkies.
]]>The post வாழைப்பழ காமெடி காப்பிதான்: கங்கை அமரன் ஒப்புதல் appeared first on Touring Talkies.
]]>“ பலரும் அந்த வாழைப் பழம் காமெடி ரொம்ப அருமையாக இருக்கிறது. அதை நீங்கள் எப்படி யோசித்து எடுத்தீர்கள் தயவு செய்து சொல்லுங்கள் என கேட்பார்கள். அதற்கான விடையே இப்போது சொல்கிறேன். நாம் நமது முன்னோர்கள் இல்லாமல் எதையும் சொல்லவோ, செய்யவோ முடியாது. எனால் அவர்கள் நமக்கு நிறைய விஷயங்கள் விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
அப்படி தான் எனக்கும் , என் முன்னோர்கள் நிறைய விட்டுச் சென்று இருக்கின்றனர். நீங்கள் , ‘ தில்லானா மோகனாம்பாள் ‘ படம் பார்த்து இருப்பீர்கள். அதை போலே தான் கரகாட்டக்காரன் படமும். அந்த படத்தில் கதாநாயகன் நாதஸ்வரம் வாசிப்பவராகவும் , நாயகி பரத கலைஞராகவும் நடித்து இருப்பார்கள்.
இருவருமே நடன கலைஞராக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கரகாட்டக்காரன் படத்தை எடுத்து முடித்தேன். நான் வாழைப்பழம் நகைச்சுவையைச் சிறு வயதில் , மலையாள வெளியான படத்தில் பார்த்து ரசித்து இருக்கிறேன்..
அதனால் அது என் கற்பனையில் உருவாகவில்லை . எனக்கு அந்த வெற்றி உழைக்காமல் கிடைத்தது” என்று கங்கை அமரன் கூறினார்.
இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post வாழைப்பழ காமெடி காப்பிதான்: கங்கை அமரன் ஒப்புதல் appeared first on Touring Talkies.
]]>The post இல்லாத பூவை எழுதிய கங்கை அமரன்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் இதில் புகழ் பெற்ற, ‘செந்தூரப்பூவே..’ பாடலை எழுதியது யார் என்று பலருக்கும் தெரியாது.
அவர்.. கங்கை அமரன்.
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் ஒரு அற்புதமான பாடலாசிரியரும்கூட.
இந்தப் பாடல்தான் திரையில் அவர் எழுதிய முதல் பாடல்.இது குறித்து, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “செந்தூரப்பூ என்று ஒரு பூ, தமிழ்நாட்டில் கிடையாது. அதனால் இலக்கியங்களிலோ, புராணங்களிலோ இந்த பெயரே இருக்காது.
நான்தான் முதன் முதல் செந்தூரப்பூ என்று எழுதினேன்” என்றார்.
உண்மைதான்..
செந்தூரப் பூ மரம் வட இந்தியாவில் மட்டுமே உண்டு. 16 வயதினிலே படம்.. செந்தூரப்பூவே பாடல்.. வெளியானது 1977ம் ஆண்டு. ஆனால் 45 வருடங்கள் கழித்து, கடந்த (2022)ம் ஆண்டுதான் முதன் திருச்சியில் செந்தூரப்பூ மரக்கன்று நடப்பட்டது
சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து விதைகள் கொண்டுவரப்பட்டு, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் செந்தூரப்பூ மரக்கன்று நடப்பட்டது.
தமிழ்நாட்டில் இல்லாத பூவை பாடலில் கொண்டு வந்த கங்கை அமரன் ஆச்சரிய கவிஞர்தான்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
https://www.youtube.com/watch?v=PfTZhwHNR2k&t=453s
The post இல்லாத பூவை எழுதிய கங்கை அமரன்! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் பிரபுவை மிரட்டிய பிரபல இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>“ஏற்கெனவே கோழி கூவுது, கும்பக்கரை தங்கையா உள்ளிட்ட படங்களில் கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடித்து உள்ளார். அடுத்து மீண்டும் இருவரும் இணைய இருந்தனர்.
அப்போது பிரபுவிடம் ஒரு கதை சொன்னார் கங்கை அமரன். அது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. அடுத்தடுத்து சொன்ன இரு கதைகளும் அவருக்கு பிடிக்கவில்லை. நான்காவதாக ஒரு கதை சொன்னார். அதைக் கேட்டு பிரபு பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
இதனால் டென்சன் ஆன கங்கை அமரன், “பிரபு நீங்க கதை வச்சிருந்தா சொல்லுங்க.. அல்லது உங்களுக்கு யாராவது கதை சொல்லி இருந்தாலும் சொல்லுங்க.. அந்த கதையை இயக்குறேன்! ஆனா அடுத்தவங்க கதையில என்னால ஈஸியா டிராவல் பண்ண முடியாது.
அதனால படம் துவங்கறதுக்கு முன்னால, ‘இது பிரபுவின் கதை.. படத்தின் வெற்றி தோல்விக்கு நான் பொறுப்பு அல்ல’ அப்படினு சொல்லிடுறேன்” என்றார்.
அவ்வளவுதான், மிரண்டு போய்விட்டார் பிரபு. “நீங்க முதல்ல சொன்ன கதையையே எடுத்திரலாம்” என்று உடனடியாக சொன்னார் பிரபு.
அந்த சின்னவர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
The post நடிகர் பிரபுவை மிரட்டிய பிரபல இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>The post கே.பி. – இளையராஜா பிரிவுக்கு அச்சாரம் போட்ட சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>இதுதான் பலரும் சொல்வது.
அதேநேரம் அதற்குமுன்பே அதாவது பாலச்சந்தர் சிந்து பைரவி எடுத்த போதே இருவருக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டதாக டாக்டர் காந்தராஜ் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். சாதி தொடர்பாக பாலச்சந்தர் பற்றி கங்கை அமரன் அடித்த கமெண்ட் பாலச்சந்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை அவர் வெளியே கட்டிக்கொள்ளவில்லை. அதன்பின்னரும் சில படங்களில் ஒருவரும் ஒன்றாக வேலை செய்தனர். ஆனால், ரஹ்மானை அறிமுகம் செய்து பாலச்சந்தர் தான் யார் என காட்டிவிட்டார்’ என காந்தராஜ் கூறியிருந்தார்.
The post கே.பி. – இளையராஜா பிரிவுக்கு அச்சாரம் போட்ட சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post தனி அறையில் கனகா!: கலங்கும் கங்கை அமரன்! appeared first on Touring Talkies.
]]>இதுகுறித்து கங்கை அமரன் அளித்துள்ள பேட்டியில், “கரகாட்டக்காரன் படத்தில் கனகாவை அறிமுகப்படுத்தினேன். ரொம்ப நல்ல பொண்ணு. தற்போது கனகா தனி அறையில் வாழ்ந்து வருவதை கேள்விப்பட்டேன். தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை. அதன் பிறகு ‘உன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா…’, என்று பாடல் வரிகளை பாடி, ‘நான்தான் கங்கை அமரன் பேசுகிறேன், தயவு செய்து போன் பண்ணுமா…’ என்று குரல் பதிவு அனுப்பினேன்.
அப்போதும் கூட கனகா போன் பண்ணவில்லை. தனிமையிலேயே இருக்க வேண்டும் என கனகா முடிவு செய்துவிட்டார். அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த தோல்வி காரணமாக, விரக்தி அடைந்து எனக்கு யாரும் தேவையில்லை என்ற முடிவுக்கு கனகா வந்துவிட்டார். எனக்கு அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இது மாதிரியான சூழலில்தான் அவருக்கு ஆதரவு தேவை. கனகா எனக்கு போன் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவரை நேரில் பார்க்கச் சென்றும் சந்திக்க முடியவில்லை. மெயின் கேட்டை பூட்டி விட்டார். வீட்டுக்கு முன்பாக உள்ள கேட்டையும் பூட்டி இருக்கிறார். வீட்டின் கடைசியில் உள்ள ஒரு அறையில் மட்டுமே இருந்து வருகிறார். அவரது வீட்டுக்கு யாரும் வரமாட்டார்கள். பால்காரர் மட்டும் வந்து பால் பாக்கெட்டுகளை போட்டு விட்டு செல்கிறார். அதை எடுக்க மட்டும்தான் கனகா வாசல் வரை வருகிறார்.
அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்? என்று தெரியவில்லை. கனகா மனதை எப்படியாவது மாற்றி நன்றாக சாப்பிட வைத்து, எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசை இருக்கிறது” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
The post தனி அறையில் கனகா!: கலங்கும் கங்கை அமரன்! appeared first on Touring Talkies.
]]>The post “நன்றி மறந்த கவுண்டமணி!”: வருத்தப்பட்ட கங்கை அமரன் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், கவுண்டமணி குறித்து பழைய சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் கங்கை அமரன்.
“நான் இயக்கி, தயாரித்த கோயில் காளை படத்திலும் கவுண்ட மணிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்தேன். பட தயாரிப்பின் போது பணப்பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தெரிந்துகொண்ட கவுண்டமணி ‘பணத்தை கொடுத்தால் தான் டப்பிங் வருவேன்’ என்று என் மேனேஜரிடம் சொல்லிவிட்டார். இதை என்னிடம் நேரடியாக சொல்லவில்லை.
சிரமப்பட்டு பணம் புரட்டி சம்பளத்தைக் கொடுத்தேன். அவருக்கு பல படங்களில் வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தேன். அதை எல்லாம் மறந்து இந்த படத்திற்கு கொஞ்சம் கூட நன்றியை இல்லாமல் என்னை அசிங்கப்படுத்தி விட்டார்” என்று மிகவும் வருத்தத்துடன் கூறி இருக்கிறார் கங்கை அமரன்.
The post “நன்றி மறந்த கவுண்டமணி!”: வருத்தப்பட்ட கங்கை அமரன் appeared first on Touring Talkies.
]]>The post கங்கை அமரனை வெளியில் விரட்டிய இளையராஜா! appeared first on Touring Talkies.
]]>அதை தொடங்கி இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக, இவர் இயக்கிய கரகாட்டம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
இவருக்கும் இவரது அண்ணனும், இசை அமைப்பாளருமான , இளையராஜாவிற்கும் இடையே பல ஆண்டு காலமாக பனி போர் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லை.
இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அது இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியை அளித்து இருந்தது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தான் இசையமைப்பாளராக ஆனதற்கு இளையராஜா செய்த காரியம் குறித்து கங்கை அமரன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில் அவர், “என்னுடைய நண்பர் மலேசியா வாசுதேவன் கதையில் ஒரு படம் உருவாக இருந்தது. அந்த படத்தில் அவர்தான் கதாநாயகன். இசை யாரை இசையமைக்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இளையராஜா என்று பேசிட்டு கொண்டிருந்தார்கள்.
ஆனால், மலேசியா வாசுதேவன் இளையராஜா வேண்டாம். அவர் மிகவும் காஸ்ட்லி. அவர் போடும் டியூன் எல்லாம் கங்கை அமரன் தான் கொடுக்கிறார். அதனால் அவரைப் போடுவோம் என்று சொல்லி பிக்ஸ் பண்ணிட்டு என்னிடம் வந்து சொன்னார்கள்.
ஆனால், எனக்கு மியூசிக் பத்தி ஒன்னுமே தெரியாது என்று சொல்லியும் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். ஒரு புரொடியூசர் கிடைச்சிருக்காரு வா என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார். அங்கே போயிட்டு அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். இந்த விஷயம் செய்தித்தாளில் எல்லாம் வந்துவிட்டது.
கங்கை அமரன் இசையமைப்பாளர் என்ற செய்தியை என் அண்ணன் இளையராஜா பார்த்துவிட்டார்.
‘என்னடா இசையமைக்க போறியாமே?’ என்று கேட்டார். ‘ஆமாம், அண்ணா இவங்கதான் கூட்டிட்டு போய் இப்படி பண்ணாங்க’ என்று சொன்னேன். ‘உனக்கு ம்யூசிக் பற்றி என்னடா தெரியும்? கிட்டார் தூக்கிக்கிட்டு ஓடு’ என்று விரட்டி அடித்தார். நானும் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
அதன் பிறகு அண்ணாவின் குரு ஜி கே வெங்கடேசன் வந்து, ‘நீ தனியா மியூசிக் பண்ண போனப்ப என் குரூப்பை விட்டு விலக்கினேனா’ என்று கேட்டார். அவன் இல்லை என்றார். ‘அந்த படத்திற்கு வேறு யாராவது மியூசிக் பண்ண போறாங்க. அதற்கு அவன் பண்ணா என்ன’ என்று கேட்டவுடன் தான் அண்ணா ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அந்த படத்திற்கு நான் இசையமைத்தேன். படமும் நன்றாக ஓடி வெற்றி அடைந்தது” என்று கூறினார்.
The post கங்கை அமரனை வெளியில் விரட்டிய இளையராஜா! appeared first on Touring Talkies.
]]>The post பொ.செ. திரைப்படத்தை உருவாக்க இருந்த வெங்கட் பிரபு! appeared first on Touring Talkies.
]]>இடையில், அஜித் – விஜய் கூட்டணியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது என்கிற புதிய தகவைச் சொல்லி இருக்கிறார் ஊடகவியலாளர் ஆர்.எஸ். அந்தணன்.
இவர் ஒரு பேட்டியில், “ஒரு முறை வெங்கட் பிரபு, அஜித்திடம், ‘உங்களையும் விஜயையும் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் தயாரிக்கிறேன். நீங்கள் இருவரும் அதில் நடிக்க வேண்டும்’ என்றார். இதற்கு அஜித்தும் ஒப்புக்கொண்டார். விஜயும் ஒப்புக்கொண்டார்.
வெங்கட் பிரபு இந்த விசயத்தை தனது தந்தையும் இயக்குநருமான கங்கை அமரனிடம் கூற, அவர், ‘இருவரையும் வைத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கலாம்’ என ஐடியா கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஏனோ அது நிறைவேறாமல் போய்விட்டது” என்றார் அந்தணன்.
The post பொ.செ. திரைப்படத்தை உருவாக்க இருந்த வெங்கட் பிரபு! appeared first on Touring Talkies.
]]>The post யேசுதாசுக்கும் எனக்கும் எழுந்த மோதல் – Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -6 appeared first on Touring Talkies.
]]>