தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் புளோரா சயினி. விஜயகாந்தின் ‘கஜேந்திரா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், தொடர்ந்து குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது வெப்சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் சிறு வயதில் தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “அப்போது எனக்கு 20 வயது. பத்தி படங்களில் நடித்திருந்த நான் மாடலாகவும் நிறைய டிசைனர்களுடன் பணியாற்றி இருந்தேன். . அப்போது ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னை காதலிப்பதாக கூறினான். நானும் நம்பி பழகினேன்.
ஆனால் அவர் என்னிடம் கொடூரமாக நடந்து கொண்டார். என் முகத்திலும் அந்தரங்க இடத்திலும் அடித்து துன்புறுத்தினார். தொடர்ந்து 14 மாதங்களாக யாரிடமும் பேசவிடாமல் சித்திரவதை செய்தார். ஒரு கட்டத்தில், அங்கிருந்து ஓடி வந்து அம்மா, அப்பாவுடன் வசிக்க ஆரம்பித்தேன். இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆனது” என தெரிவித்து உள்ளார்.
The post பாலியல் தொல்லை!: தயாரிப்பாளர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு! appeared first on Touring Talkies.
]]>