The post G.V.பிரகாஷ், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கவிதாலயா தயாரிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும், அனஸ்வரா ராஜன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
மேலும் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோ நாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சௌந்தர், பேபி மேக்னா சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
‘ஹிருதயம்’ உள்ளிட்ட பல மலையாள வெற்றிப் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, யு.கே.வசந்தகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். படத் தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். ஷிவா யாதவ் கலை வடிவமைப்பு பணிகளை செய்கிறார். பாடல்களை பார்வதி மீரா எழுதியுள்ளார், சண்டை பயிற்சி பணிகளை ஜி.என்.முருகன் கையாள்கிறார்.
இப்படத்தை ‘நாளை’, ‘சக்கர வியூகம்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவரும், ‘ஃபேமிலி மேன் -2’, ‘ஆஃபிஸ்’ உள்ளிட்ட தொடர்களிலும், பல வெற்றிப் படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை – திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இவரின் கதை – திரைக்கதையில் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘சாந்தி நிலையம்’ தொடர் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், அவரின் 6 வயதான அக்கா மகளுக்கும் இடையில் நடைபெறும் பாச உணர்வினை அழகிய குடும்ப பின்னணியில் விவரித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாகிறது இப்படம்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.
The post G.V.பிரகாஷ், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கவிதாலயா தயாரிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>The post வடிவேலு வில்லனாக நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.
]]>வடிவேலு தன்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் பல்வேறு வகையான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒரே ஒரு கேரக்டரில் மட்டும் இதுவரையிலும் நடித்ததேயில்லை. அது வில்லன் வேடம்.
தற்போது அவருக்கு அந்தக் குறையையும் விட்டுவைக்காமல் வில்லன் கதாப்பாத்திரத்திலும் வடிவேலு நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில்தான் வடிவேலு வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலாதான் இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.
வடிவேலு நடிக்கவிருக்கும் இந்த வில்லன் கதாப்பாத்திரம் நிஜமான வில்லனா அல்லது காமெடி கலந்த வில்லனா என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.
The post வடிவேலு வில்லனாக நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.
]]>The post ‘அமீகோ கேரேஜ்’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்-சிவாங்கி இணைந்து பாடிய பாடல்..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, G.M.சுந்தர் தசரதி, தீபா பாலு, ஆதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் ஆகியோர் முக்கியக் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமச்சந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG மூவரும் இணைந்து இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, கு.கார்த்திக் படத்தின் அனைத்து பாடல்களையும் இயற்றியுள்ளார். விஜயகுமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத் தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இருவரும் இணைந்து ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.
சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா இப்படத்தின் முதல் பாடலை ஏற்கெனவே பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இருவரும் இணைந்து இப்படத்தின் இரண்டாவது மெலோடி பாடலை பாடியுள்ளனர்.
திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் காந்தக் குரலும், ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கியின் வசீகர குரலும் இணைந்து, இப்பாடலை மிக அற்புத அனுபவமாக மாற்றியுள்ளது.
அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் அருமையான மெலடி கீதமாக, விரைவில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது.
ஒரு கேங்ஸ்டரின் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது இந்த அமீகோ கேரேஜ் படம்.
தற்போது இந்தப் படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
The post ‘அமீகோ கேரேஜ்’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்-சிவாங்கி இணைந்து பாடிய பாடல்..! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் சேதுபதியுடன் போட்டி போடும் ஜி.வி.பிரகாஷ்குமார்..! appeared first on Touring Talkies.
]]>விஜய் சேதுபதியின் கைவசம் இருக்கும் படங்களின் எண்ணிக்கை கை விரல்களின் எண்ணிக்கையையும் தாண்டி போயிருக்கிறது. அதேபோல் குறைவான சம்பளம், பந்தா செய்யாதது.. சின்ன வயது தோற்றம் இதெல்லாம் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் ப்ளஸ் பாயிண்ட்டாக இருப்பதால் அவரும் கை வசம் அதே அளவு படங்களை வைத்திருக்கிறார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் தன் கையில் ‘ஐங்கரன்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’, ‘4ஜி’, ‘காதலைத் தேடி நித்யானந்தா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘பேச்சிலர்’, ‘வாடா மாப்ளை’, மதிமாறன் புகழேந்தி இயக்கும் படம், ஹாலிவுட் படமான ‘டிராப் சிட்டி’ என்று கிட்டத்தட்ட 11 படங்கள் உள்ளது.
இதில் முதல் படமாக ‘வாடா மாப்ளை’ வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘பேச்சிலர்’, ‘ஜெயில்’ படங்களும் கியூவில் நிற்கின்றன. ‘4ஜி’ படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில் வசந்தபாலனின் புதிய படம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கும் வேலையையும் ஜி.வி.பிரகாஷ்குமார் செய்து வருகிறார்.
‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ என்பது தமிழ்ச் சினிமாவில் மட்டும் ‘நேரம் நன்றாக இருக்கும்போதே அள்ளிக் கொள்ள வேண்டும்’ என்பதாக மாறியுள்ளது..!
The post விஜய் சேதுபதியுடன் போட்டி போடும் ஜி.வி.பிரகாஷ்குமார்..! appeared first on Touring Talkies.
]]>