The post முதன்முறையாக இணையும் ஜீ.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் appeared first on Touring Talkies.
]]>தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது.
‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிருபாகரன் பட தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாட்சி பணியாற்றும் இந்த படத்தில் இடம் பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதுகிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து மலையாளத்தில் வெளியாகி, வெற்றிப் பெற்ற ‘தி டீச்சர்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கும் நட்மெக் புரொடக்ஷன்ஸ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘மாணிக்’ எனும் படத்தையும் தயாரித்திருக்கிறது.
தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.மேலும் இந்நிறுவனம், நடிகை ஐஸ்வர்யா ராஜேசுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறது.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் க்யூப் நிறுவனத்தைச் சார்ந்த சதீஷ் மற்றும் அனில், ‘கட்டப்பாவ காணோம்’ பட இயக்குநர் மணி, ‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ், ‘ஓ மணப்பெண்ணே’ பட இயக்குநர் கார்த்திக் சுந்தர், எஸ் பி சினிமாஸ் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதைப் பெற்ற ‘காக்கா முட்டை’ படத்திற்கு இசையமைத்தவர் ஜீ.வி. பிரகாஷ் குமார். இந்த இரண்டு திறமைசாலிகளும் முதன்முறையாக இணைந்து நடிக்கவிருப்பதால் இப்படத்தின் அறிவிப்பின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
The post முதன்முறையாக இணையும் ஜீ.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் appeared first on Touring Talkies.
]]>The post தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் இசை கூட்டணி்யில் உருவாகும் ‘வாத்தி’ படம் appeared first on Touring Talkies.
]]>சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் வெளியிடுகின்றனர்.
நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா ஆகியோர் நடிக்கின்றனர்.
யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கி அட்லூரி படத்தை இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
பள்ளி ஆசிரியராக தனுஷ் நடிக்கும் இந்தப் படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
நாளை நவம்பர் 10-ம் தேதி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று படக் குழு அறிவித்துள்ள நிலையில் ஒரு வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில்… ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ‘வா வாத்தி…..’ என்ற பாடலின் ஒரு சில வரிகளை பாடி வெளியிட்டுள்ளார் தனுஷ். தமிழ் & தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார்.
இத்திரைப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.
The post தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் இசை கூட்டணி்யில் உருவாகும் ‘வாத்தி’ படம் appeared first on Touring Talkies.
]]>The post ‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…! appeared first on Touring Talkies.
]]>கவிப் பேரரசரின் புலமையும், ஜி.வி.பிரகாசின் அழகிசையும் காலமுள்ளவரை ஒலிக்கும். பத்தே நிமிடத்தில் பாட்டு தயரானது.
பட்டாம்பூச்சிக்கு
பட்டுத்துணி போட்டது போல
சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டி
விட்டது யாரு?
சீனிக்கட்டியில செலை ஒன்னு
செஞ்சு வச்சது போல
எட்டா ஒயரத்தில் எச்சி ஊற
விட்டது யாரு?
வன்னித் தமிழா வாய்யா
உனக்கு வாச்சப் பொருளைத் தாயா
பச்ச முத்தம் ஒண்ணு கொடுத்தா
பற்றிக் கொள்வேன் தீயா
அடி வஞ்சிக்கொடியே வாடி
வளர்த்த பொருளத்தாடி
பாசத்த உள்ள வச்சுப்
பாசாங்க வெளிய வச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறும் வாய மெல்லுறியே
மாவீரன் மண் காக்க
மானமுள்ள பெண் காக்க
அஞ்சாறுப் புலிக்குட்டி
அவசரமா வேணுமடி.
இன்னும் இன்னும் திகட்ட இப்படி நீள்கிறது பாடல்…
“இந்த ‘மாவீரா’ படம் மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை இரண்டாவதாக இந்தப் பாடலும் உறுதிப்படுத்தியுள்ளது. பேராளுமைகள் இருவருக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.” என்கிறார் படத்தின் இயக்குநரான வ.கௌதமன்.
The post ‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…! appeared first on Touring Talkies.
]]>The post ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் நடித்த ’13’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.
]]>தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், இயக்குநர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ’13’ படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக் கூடிய இந்த டீசர் புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டைலிஷான கெளதம் வாசுதேவ் மேனன் என இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் கதைக்கு வலுவூட்டி உள்ளனர். இவர்கள் இருவரும் திரையில் இணைந்து வருவதை பார்வையாளர்கள் தவற விடக்கூடாது எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டீசரில் கெளதம் வாசுதேவ் மேனன், ‘ஆறு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது’ எனத் தெரிவித்து கதையின் முன்னுரையை பார்வையாளர்களுக்குச் சொல்லி கதைக்கான ஆர்வத்தையும் கணிப்பையும் விதைத்துள்ளார்.
அன்ஷூ பிராபகர் ஃபிலிம்ஸூடன் இணைந்து மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை K.விவேக் எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதித்யா கதிர், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா மற்றும் ஐஷ்வர்யா ஆகிய மற்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் குழு விவரம்:
இசை: சித்துகுமார்,
DOP: C.M. மூவேந்தர்,
எடிட்டர்: JF காஸ்ட்ரோ,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஷங்கர்,
கலை இயக்குநர்: நாஞ்சில் P.S. ராபர்ட்,
பாடல் வரிகள்: மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா,
நடனம்: சந்தோஷ்,
ஸ்டைலிங் மற்றும் உடை: ஹீனா,
சண்டைப் பயிற்சி: ‘ஸ்டண்ட்’ ராம்குமார்,
DI: Accel Media,
ஒலி வடிவமைப்பு & கலவை: ஜெய்சன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One
The post ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் நடித்த ’13’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.
]]>The post ‘சர்வம் தாள மயம்’ ஜப்பானிய மொழியில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>2018-ம் ஆண்டு வெளியான இந்த ‘சர்வம் தாள மயம்’ திரைப்படம் இசைக் கலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், குமரவேல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் தற்போது ஜப்பானிய மொழியில் வெளியாகவிருப்பதாக ஏ,ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஜப்பானிய மொழியில் இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “#சர்வம்தாளமயம் ஜப்பானில் வெளியிடப்படும் @gvprakash @dirreajivmenon” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ‘சர்வம் தாள மயம்’ ஜப்பானிய மொழியில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post ‘பேட்டரி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடல் பதிவானது..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை, அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார் அம்மு. ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக் கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவரது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அப்போது அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாகப் பாடுகிறார்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய –
“நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே
என்னில் ஏதோ ஆனது நீதானே..
காதலே நீதானே..
பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா..“ –
என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி. வி. பிரகாஷ்குமார், சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் பாடியிருக்கிறார்கள்.
மணிபாரதியின் இயக்கத்தில், கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டது.
‘பேட்டரி’ திரைப்படம் வரும் 2022 மே மாதம் திரைக்கு வருகிறது.
The post ‘பேட்டரி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடல் பதிவானது..! appeared first on Touring Talkies.
]]>The post ‘இடி முழக்கம்’ படத்தில் பாடல் பாடியிருக்கும் மலையாள நடிகர் வினீத் சீனிவாசன் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் G.V.பிரகாஷ் குமார் நடிக்கிறார். காயத்ரி சங்கர், நாயகியாக நடிக்கிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், M.S.பாஸ்கர், அருள்தாஸ் உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.
இயக்குநர் சீனு ராமசாமியுடன் ‘தென்மேற்கு பருவக் காற்று’ மற்றும் ‘நீர் பறவை’ போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.
இந்த ‘இடி முழக்கம்’ திரைப்படத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய
“பூ மலரும் காலம் எது
யார் அறிவார்
அன்பூ மலரும் இதயம்
எது யார் அறிவார்”
என்ற பாடலை பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.
இது பற்றி இயக்குநர் சீனு ராமசாமி கூறுகையில் “இசையமைப்பாளர் ரகுநந்தன் தந்த டியுனுக்கு “வினித் பாடினால் நன்றாக இருக்கும்” என்றேன். இசையமைப்பாளர் ரகுநந்தன் என் கருத்தை ஏற்றுக் கொண்டார்.
ஒரு கலைஞனாக வினித் ஸ்ரீனிவாசன் மீது மிகுந்த அன்பு கொண்டவன் நான். அவரை நினைத்தாலே என் மனம் இனம் புரியாத சந்தோசம் கொள்ளும். ‘இடி முழக்கம்’ படத்தில் பாடுவதற்கு வினித் ஸ்ரீனிவாசனை அணுகினேன். அவரும் என் மீது அன்பு கொண்டிருக்கிறார். என் படங்களின் வழியாக என்னை நன்கு அறிந்திருக்கிறார் என்பதை தெரிந்து நெகிழ்ந்தேன்.
நான் கேட்டதும் உடனே வந்து இந்தப் பாடலை பாடிக் கொடுத்தார். வினித் ஸ்ரீனிவாசன் பாடிய இந்த மெலடி அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும்…” என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.
The post ‘இடி முழக்கம்’ படத்தில் பாடல் பாடியிருக்கும் மலையாள நடிகர் வினீத் சீனிவாசன் appeared first on Touring Talkies.
]]>The post ‘அழகிய கண்ணே’ படத்திற்காக பாடல் பாடிய G.V.பிரகாஷ் குமார்…! appeared first on Touring Talkies.
]]>அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இயக்கம் – R.விஜயகுமார், தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ (எஸ்தல் எண்டர்டெய்னர்), பாடல்கள் – வைரமுத்து, இசை – N.R.ரகுநந்தன், ஒளிப்பதிவு – A.R.அசோக் குமார், படத் தொகுப்பு – சங்கத் தமிழன், நடன இயக்கம் – ராதிகா, சண்டை இயக்கம் – மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா, தயாரிப்பு மேற்பார்வை – இளையராஜா செல்வம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.
இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் R.விஜயகுமார் இயக்குகிறார்.
N.R.ரகுநந்தன் இசையமைப்பில் இப்படத்திற்காக நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த G.V.பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
The post ‘அழகிய கண்ணே’ படத்திற்காக பாடல் பாடிய G.V.பிரகாஷ் குமார்…! appeared first on Touring Talkies.
]]>The post ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ருத்ரன்’ appeared first on Touring Talkies.
]]>நடிகர் ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த படத்திற்கு ’ருத்ரன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை பைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கதிரேசன் தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான செல்வா இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இதுவொரு திகில் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் மற்றைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ருத்ரன்’ appeared first on Touring Talkies.
]]>