The post மேனேஜருடன் மோதலா? விளக்கம் அளித்த ராஷ்மிகா! appeared first on Touring Talkies.
]]>தற்போது இந்தியில் அனிமல் என்ற படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் ரெயின்போ, தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் ராஷ்மிகா சினிமாவுக்கு வந்த தொடக்க காலத்தில் இருந்து தன்னிடம் மானேஜராக பணியாற்றி வந்தவரை நீக்கிவிட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ராஷ்மிகா “நானும், மானேஜரும் சுமுகமாகவே பேசி பிரிந்தோம். மோதல் எதுவும் இல்லை. இனிமேல் நாங்கள் இருவரும் சுதந்திரமாக வேலை செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
The post மேனேஜருடன் மோதலா? விளக்கம் அளித்த ராஷ்மிகா! appeared first on Touring Talkies.
]]>The post பொன்னியின் செல்வன்: விளக்கம் கொடுக்கும் மணிரத்னம் appeared first on Touring Talkies.
]]>அதாவது கல்கி தன்னுடைய நாவலில் எழுதி இருந்த பல விஷயங்களை மணிரத்தினம் திரைப்படத்தில் மாற்றி இருப்பதாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திலும் சில முரண்பாடான காட்சிகள் ரசிகர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது.
அந்த வகையில் மணி சார் கல்கியின் நாவலுக்கு நியாயம் சேர்க்கவில்லை எனவும் ரசிகர்கள் தங்கள் நெற்றிக்கண்ணை திறந்துள்ளனர். இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் படத்துக்கு எதிரான சில கருத்துக்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் நாவலையும், திரைக்கதையையும் பார்த்து குழம்பிப் போயிருக்கும் ரசிகர்களுக்காக மணிரத்தினம் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது “நாவலில் சொல்வது போன்று சினிமாவில் ஒரு கதையை சொல்லிவிட முடியாது. அதில் பல சவால்கள் இருக்கிறது. நாவலுக்கு முடிவு என்பது எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். ஆனால் சினிமாவிற்கு அது உச்சத்தில் இருக்க வேண்டும். அதனாலேயே இதில் கிளைமேக்ஸ் காட்சியில் சில மாறுதல்களை ஏற்படுத்த வேண்டி இருந்தது.
இது சிரமமாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை சரியாக சொல்லி இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
The post பொன்னியின் செல்வன்: விளக்கம் கொடுக்கும் மணிரத்னம் appeared first on Touring Talkies.
]]>The post ” நான் அப்படி சொல்லவே இல்லை”: மறுப்பு தெரிவித்த நடிகை சமந்தா! appeared first on Touring Talkies.
]]>அதில் கலந்துகொண்ட, சமந்தாவிடம் நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டது. அந்த நேர்காணலில் விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய நடிகை சமந்தா, “யார் யாரோடு சேர்ந்து டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என கடுமையாக விமர்சித்ததாக செய்திகள் வெளியானது.
ஆனால் இதனை சமந்தா முற்றிலுமாக மறுத்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது முன்னாள் கணவரின் டேட்டிங் குறித்த எந்த கருத்தையும் தான் கூறவில்லை என மறுத்துள்ளார். தற்போது சமந்தாவின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
சமந்தாவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
The post ” நான் அப்படி சொல்லவே இல்லை”: மறுப்பு தெரிவித்த நடிகை சமந்தா! appeared first on Touring Talkies.
]]>