The post அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>தெலுங்கில் வெளியான ‘நின்னு கோரி’ என்ற படம் தமிழில் ‘தள்ளிப் போகாதே’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்டம் திரைக்கு வரத் தயாராக உள்ள நிலையில் இதற்கடுத்த படமாக ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கையும் படமாக்கி முடித்துவிட்டார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
இந்நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் இந்தப் படம் குறிப்பிட்ட அந்தத் தேதியில் வெளியாக முடியாமல் போனது.
தற்போது இப்படம் வருகிற டிசம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நாளிலாவது தள்ளிப் போகாமல் இந்த ‘தள்ளிப் போகாதே’ வெளியாகட்டும்..!
The post அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post மணிரத்தினத்திடம் நான் கேட்ட வில்லங்கமான கேள்வி! Director R. Kannan appeared first on Touring Talkies.
]]>The post ‘காசேதான் கடவுளடா’ படம் ரீமேக் செய்யப்படுகிறது appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படத்தினை இயக்குநர் R.கண்ணன் அவர்களின் Masala Pix நிறுவனம் MKRP Productions நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
தமிழின் க்ளாசிக் திரைப்படமான, இந்தக் ‘காசேதான் கடவுளடா’ படத்தில் தமிழின் புகழ்மிக்க மூத்த நடிகர்களான, முத்துராமன், லட்சுமி, அசோகன், தேங்காய் சீனிவாசன், ஆச்சி மனோரமா மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
தற்போது மீண்டும் உருவாகும், இப்படத்தின் ரீமேக் வடிவத்தில், முத்துராமன் கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகிபாபுவும், ஆச்சி மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசி அவர்களும் நடிக்கவுள்ளார்கள்.
நடிகர் கருணாகரன் உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கவிருக்கிறார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, ‘காதலிக்க நேரமில்லை’, ‘காசேதான் கடவுளடா’ மற்றும் சில ரொமான்ஸ் காமெடி படங்கள் மட்டுமே காலம் கடந்து, எப்போது பார்த்தாலும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மனதிற்கு நிறைவு தரும் படைப்புகளாக இருக்கின்றன.
அந்த வகையில் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கச்சிதமான படைப்பு, எனவே இப்படத்தின் மறு உருவாக்கத்திற்கான முறையான அனுமதியை பெற்று, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ரீமேக் செய்யவுள்ளோம்.
மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி மேடம், கருணாகரன் போன்ற அற்புத திறமை வாய்ந்த எங்கள் குழுவினர், இப்படத்தை மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவார்கள் என மிக ஆழமாக நம்புகிறேன்.
அப்படம் 1960-களில் வெளியானபோதே, அப்போதைய காலத்தை தாண்டிய முதிர்ச்சி மிகுந்த படைப்பாகத்தான் இருந்தது. எடுத்துக்காட்டாக ATM அறிமுகம் ஆகாத அந்தக் காலத்தில், ஒரு காட்சியில், பூட்டை திறக்க 4 டிஜிட் கடவு எண் தேவைப்படும் என்று காட்சி வைத்திருக்கிறார்கள். இப்படி காலத்தை விஞ்சிய படைப்பாகவே அப்படம் இருக்கிறது.
ஆதலால், இப்படத்தை இப்போதைய காலகட்டத்திற்கு மாற்றுவதென்பது, அத்தனை கடினமான பணி ஒன்றும் இல்லை. இதிலிருக்கும் மிகப் பெரிய சவால், மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்த அப்படத்திற்கு, நியாயம் செய்யும் வகையில், தற்போதைய படைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், நாங்கள் மிக ஆவலுடன் அப்பணிகளை மேற்கொள்ள காத்திருக்கிறோம்.
இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை 15 அன்று துவங்கி, ஒரே கட்ட படப்பிடிப்பாக 35 நாட்கள் தொடர்ந்து நடத்தவுள்ளோம். படத்தில் பங்கு பெறவுள்ள, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்…” என்றார்.
The post ‘காசேதான் கடவுளடா’ படம் ரீமேக் செய்யப்படுகிறது appeared first on Touring Talkies.
]]>The post “ஐஸ்வர்யாவைத் தவிர வேறு திறமையான நடிகைகளே இல்லை…” – இயக்குநர் ஆர்.கண்ணனின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>நாயகியைப் பிரதானப்படுத்திய இந்தக் கதையில் மலையாளத்தில் நடித்தவர் நிமிஷா சஜயன். அந்தக் கதாபாத்திரமாகவே அவர் மாறிவிட்டார் என்று மலையாள சேட்டன்களும், சேச்சிகளும் இன்றுவரையிலும் நிமிஷாவைக் கொண்டாடி வருகிறார்கள்.
அப்பேர்ப்பட்ட முக்கியக் கதாபாத்திரத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். “இவரால் அந்தக் கதாபாத்திரத்தை சுமக்க முடியுமா..? எதற்காக ஐஸ்வர்யாவை தேர்வு செய்தீர்கள்..?” என்று இயக்குநர் ஆர்.கண்ணனிடம் கேட்டதற்கு, “ஒரிஜினல் கேரக்டரைவிடவும், ரீமேக் கேரக்டரில் கூடுதல் அழுத்தத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்திருக்கிறார்..” என்றார்.
அவர் இது பற்றி மேலும் பேசும்போது, “ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கெனவே ‘காக்கா முட்டை’, ‘க/பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.
அந்தப் படங்களில் அவரது பிரமிப்பான நடிப்பைப் பார்த்துவிட்டுத்தான் இந்த நிமிஷாவின் கதாபாத்திரத்தில் நடிக்க… ஐஸ்வர்யாவைவிட்டால் தமிழில் வேறு நடிகைகளை இல்லை என்பதை உணர்ந்து அவரையே ஒப்பந்தம் செய்தேன்.
ஒப்பந்தமாவதற்கு முன்பு ஐஸ்வர்யா அந்த மலையாளப் படத்தைப் பார்த்தார். பிறகு அந்தப் படத்தில் நான் செய்யவிருக்கும் மாற்றங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்புதான் இந்தப் படத்தில் நடிக்க சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டார்.
படத்தில் சமையலறை வேலைகள்தான் பிரதான காட்சிகளாக இருக்கும். அது ஐஸ்வர்யாவுக்கு இயல்பாகவே வருகிறது. நாசூக்கான படுக்கையறைக் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. கதையின் ஜீவன் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் அந்தக் காட்சி தமிழிலும் இடம் பெற வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் சொன்னேன். அதற்கும் ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டு அந்தக் காட்சிகளில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இது ரீமேக் படமாகவே இருந்தாலும் ஐஸ்வர்யாவின் சினிமா கேரியரில் இதுவொரு முக்கியமான படமாக அமையும்..” என்றார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
The post “ஐஸ்வர்யாவைத் தவிர வேறு திறமையான நடிகைகளே இல்லை…” – இயக்குநர் ஆர்.கண்ணனின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ தீபாவளிக்கு வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நடிக்கிறார்கள்.
மேலும், ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம்.
இசை – ரதன், ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – ராஜ்குமார், சண்டை இயக்கம் – ஹரி, நடன இயக்கம் – சதீஷ், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர், தயாரிப்பு – ஆர்.கண்ணன், எழுத்து, இயக்கம் – ஆர்.கண்ணன்.
ஏற்கெனவே இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ ஆகிய படங்களில் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், சந்தானத்தை கதாநாயகனாக வைத்து கண்ணன் படம் இயக்குவது இதுவே முதல் முறை.
பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார்.
சந்தானம் தோன்றும் ராஜபார்ட் காட்சிகள் படத்தில் அரை மணி நேரம் இடம் பெறுகின்றன.
அந்தக் காட்சிகளுக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் சந்தானம் ராஜா வேடத்தில் நடித்து அசத்தினார்.
படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது. அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம். வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும்.
இப்படத்தில் இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்கொடுத்தார்.
இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன. காட்சிகள் பெயிண்டிங்கில் போல் வந்துள்ளன. அந்தக் கால பெயிண்டிங் போன்றவற்றை வைத்து ஓவியங்கள் போல் ஒளி அமைப்பு செய்து ’96’ படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலக் கட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான் இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம் பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சம காலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020-க்கான காட்சிகள் அமைந்திருக்கும்.
இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும் மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்.
சந்தானம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும். கொரோனா முடக்கத்துக்குப் பிறகு அனைவருக்கும் ஒரு மன அழுத்தம் இருக்கிறது. அந்த அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற வைக்கும் வகையில் பெரிய மன நிம்மதி அளிக்கும்படியான கலகலப்பான காமெடி படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும்.
இந்த படத்திற்காக சந்தானம் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. இப்படத்தில் இடம் பெறும் களரிச் சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷிடம் களரி கற்றுக் கொண்ட பிறகுதான் நடித்தார்.
சௌகார் ஜானகி ‘தில்லு முல்லு’ படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்தில் சந்தானத்தின் பாட்டியாக வருகிறார். நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். சந்தானத்துடன் ஏற்கெனவே ‘A1’ படத்தில் நாயகியாக நடித்த தாரா அலிஷா பெர்ரி ஒரு நாயகியாகவும், ‘மிஸ் கர்நாடகா’ விருது பெற்ற ஸ்வாதி முப்பாலா இன்னொரு நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
அது மட்டுமல்ல ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், சிவசங்கர், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார்கள்…” என்றார்.
இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர்.ரவீந்திரன் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
The post சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ தீபாவளிக்கு வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>The post தீபாவளிக்கு வெளியாகுமா சந்தானத்தின் ‘பிஸ்கோத்’..? appeared first on Touring Talkies.
]]>சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிசா நடித்துள்ள இந்தப் படத்தில் சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ள டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி, வரும் தீபாவளிக்கு இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தீபாவளிக்கு புதிய திரைப்படங்களை வெளியிடுவது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே நடக்கின்ற பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை என்றாலும் நிச்சயமாக தீபாவளிக்கு உள்ளே ஒரு சுமுகமான முடிவு ஏற்படும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ரவி.
The post தீபாவளிக்கு வெளியாகுமா சந்தானத்தின் ‘பிஸ்கோத்’..? appeared first on Touring Talkies.
]]>The post ‘தள்ளிப் போகாதே’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>